Showing posts with label Arunagiri Naathar. Show all posts
Showing posts with label Arunagiri Naathar. Show all posts

Friday, May 4, 2012

கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்


கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்


கோயில்கள் காலப் பெட்டகங்கள்.

அதன் பிரகாரங்களில் எத்தனையோ பேர் கொட்டிய கவலைகள், கனவுகள், பாவ மன்னிப்புகள் சிதறிக் கிடக்கின்றன.

அங்குள்ள சிற்பங்கள் எத்தனை பேரை பார்த்திருக்கும்.

எத்தனை பிரார்த்தனைகளை, முணுமுணுப்புகளை கேட்டிருக்கும், எத்தனை சந்தோஷங்களை, துக்கங்களை கண்டிருக்கும்.

மனிதனின் கடைசி நம்பிக்கை கோயில்.

'உன் பற்று அன்றி ஒரு பற்றிலேன் இறைவா கச்சியேகம்பனே' என்று எல்லாம் விட்டு அவனே சரண் என்று அடையும் இடம் கோயில்.

திருசெந்தூர் கோயில்.

கடல் அலை தாலாட்டும் கோயில்.

கோயிலுக்கு இரண்டு கிலோ மீட்டர் வரை இங்கே ஒரு கோயில் வரப் போகிறது என்று சொன்னால் நம்ப முடியாது.

அருணகிரி நாதர் திரு செந்தூர் கோயிலில் உள்ள முருகனைப் பார்க்கிறார்.

அழகு அப்படியே அவரை கொள்ளை கொள்கிறது. வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை.

அப்படி ஒரு அழகு. பார்த்து கொண்டே இருக்கலாம்.

எவ்வளவு பார்த்தாலும் போதவில்லை.

அடடா , இந்த அழகைப் பார்க்க இரண்டு கண்ணுதானே இருக்கு...

இன்னும் கொஞ்சம் கண்கள் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஆதங்கப் படுகிறார்...

Tuesday, May 1, 2012

திருப்புகழ் - காலன் முதுகில் ஒரு அறை



திருப்புகழ் - காலன் முதுகில் ஒரு அறை

முருகனின் பக்தர்களை காலன் அணுகும் போது, முருகன் அவன் முதுகில் ஒரு அறை வைப்பாராம்.

அதில் அவன் முதுகு இரண்டா விரிந்த மாதிரி ஆயிருமாம்...என்ன ஒரு அழகான கற்பனை.




பாண மலரது தைக்கும் ...... படியாலே
 பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே
 நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே
 நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான்
 சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா
 தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா
 காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா
 காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.


பதம் பிரிக்காமல் அருணகிரிநாதரின் பாடல்களை புரிந்து கொள்ளவது எளிதல்ல....


பாண மலர் அது தைக்கும் படியாலே
பாவி இளமதி கக்கும் கனலாலே
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே
நானும் மையலில் இளைக்கும் தரமேதான்
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா
தேவர் மகுடம் மணக்கும் கழல் வீரா
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா
காலன் முதுகை விரிக்கும் பெருமாளே




பாண மலர் = மன்மதனின் மலர் அம்புகள் (பாணம் = அம்பு)


அது தைக்கும் படியாலே = அது என் மார்பில் தைக்கும் படியாகவும்


பாவி இளமதி = இரக்கமிலாத அந்த இளைய நிலா

கக்கும் கனலாலே = பொழியும் கனலாலே (வெப்பத்தாலே)

நாணம் அழிய = வெட்கம் போக

உரைக்கும் குயிலாலே = கூவும் குயிலாலே

நானும் = அருணகிரியான நான் (தன்னை ஒரு பெண்ணாக நினைத்து எழுதுகிறார்)

மையலில் இளைக்கும் தரமேதான் =காதலில் இளைக்கும் படியாக

சேணில் அரிவை = சேய்மையில் (விண்ணுலகில்) உள்ள பெண்ணை (தெய்வ நாயகியை) 

அணைக்கும் திரு மார்பா = கட்டி அணைக்கும் திரு மார்பனே

தேவர் மகுடம் = தேவர்களின் மகுடம்

மணக்கும் கழல் வீரா = அவர்கள் எப்போதும் முர்கனின் காலில் விழுந்து வணங்குவதால், 
அவர்கள் மகுடத்தில் உள்ள மணம் (பூ, சந்தனம் போன்ற பொருள்களின் மணம்) முருகனின் காலில் மணக்கிறது

காண = காணக்கூடிய

அருணையில் நிற்கும் கதிர் வேலா = திருவண்ணாமலையில் நிற்கும் கதிர்வேலா

காலன் = காலனின்

முதுகை விரிக்கும் பெருமாளே = முதுகை விரிக்கும் பெருமாளே


Sunday, April 29, 2012

கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்


கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்


இருக்கப் போறதே கொஞ்ச நாள். அதில் படிக்க ஒதுக்கும் நேரம் மிக மிக அற்பமான நேரம். அதிலும் கவிதை படிக்க கிடைக்கும் நேரம் அரிதிலும் அரிது. அந்த சிறிய நேரத்திலாவது நல்ல கவிதை படியுங்கள் என்கிறார் அருணகிரி நாதர்....போகும் வழிக்கு புண்ணியம் தேடுங்கள் என்கிறார் இந்தப் பாடலில்....

Saturday, April 28, 2012

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

கடைசிக் காலத்தில் எமன் வந்து தன்னை இழுத்துக்கொண்டு போகும் போது, நம்முடைய அம்மா, அப்பா, மனைவி, மக்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்து அழுவார்கள், அப்போது, முருகா, நீ எமனிடம் "பாத்துப்பா, இவர் நம்ம ஆளு, நமது அன்பன்" னு நீ வந்து சொல்லனும்னு அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகோள் வைக்கிறார் இந்தப் பாடலில்.....

Monday, April 23, 2012

திருப் புகழ் - முதுமையின் சோகம்

திருப் புகழ் - முதுமையின் சோகம்


இளமையாய் இருக்கும் போது எல்லாம் இனிமையாய் இருக்கும். முதுமை வரும் போது துன்பங்களும் கூட வரும்.


திருப் புகழ் சந்தக் கவியால் ஆனது. படிக்க சற்று கடினம். சீர் பிரித்தால் தான் அர்த்தம் புரியும்.


கீழ் கண்ட பாடலில், முதுமையின் கஷ்டத்தை கூறி, அந்த முதிய காலத்தில் நீ வந்து என்னை காக்க வேண்டும் என்கிறார் அருணகிரி பெருமான்....



Tuesday, April 10, 2012

கந்தர் அலங்காரம் - தலை எழுத்தை அழிக்க



 
இந்த தலை எழுத்து அப்படின்னு சொல்றாங்களே அத அழிக்க எதாவது eraser இருக்கா?

அதை எப்படி அழிப்பது ?
 
இருக்கே ... அதுக்கும் ஒரு eraser இருக்கு அப்படின்னு அருணகிரிநாதர் சொல்றார்

அது .....

கந்தர் அலங்காரம் - Quality Stamp


முருகனுக்கு பல பெயர்கள் உண்டு.

அதில் கந்தன் என்று பெயர் மிகச் சிறப்பு வாய்ந்தது.

ஏறக் குறைய அனைத்து முருகன் பற்றிய இலக்கியங்களும் கந்தன் பெயரிலே அமைந்துள்ளன.

கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் கலி வெண்பா, கந்த புராணம், கந்தர் சஷ்டி கவசம், கந்த குரு கவசம், என்று பல நூல்கள் கந்தன் என்ற பெயரிலேயே அமைந்துள்ளன.

கந்தர் அலங்காரம்.

கந்தனை அலங்காரம் பண்ணிப் பார்க்கும் பாடல்கள். அதில் இருந்து ஒரு இனிய பாடல் .....

கந்தர் அலங்காரம் - சேற்றில் ஆடிய குழந்தைகள்


 

நம் குழந்தைகள் எங்காவது விளையாடச் செல்லும்.

சில சமயம் கீழே விழுந்து சேற்றை வாரி பூசிக்கொண்டு வந்து நிற்கும்.

அப்போ, தாய் என்ன செய்வாள்?

நிறைய தண்ணிய விட்டு குளிக்க வைப்பாள்.

அந்த சேறு போக வேண்டும் அல்லவா ?
 
 
ஒரு குழந்தையாய் இருந்தால் பக்கெட்டில் தண்ணி பிடித்து குளிபாட்டிவிடலாம்.

நிறைய இருந்தால் ?
 
இறைவனுக்கு எத்தனை குழந்தைகள் ?

ஒண்ணு மாத்தி ஒண்ணு இப்படி அழுக்கா வந்து நிக்குது.

எனவே அவன் தலையின் மேலேயே ஆற்றை வைத்து கொண்டு இருக்கிறான். நம் சேற்றை கழுவ அவன் ஆற்றை வைத்து கொண்டு இருக்கிறன்.
 
அது என்ன சேறு ? அருணகிரி நாதர் சொல்லுகிறார்....

Tuesday, April 3, 2012

கந்தர் அநுபூதி - மணம் கமழும் திருவடி

அம்மா மடியில தல வச்சு படுத்து இருக்கீங்களா ?
சின்ன பிள்ளையா இருக்கும் போது மடில போட்டு தூங்க பண்ணி இருப்பாங்க.

அது இல்ல நான் சொல்றது.

விவரம் தெரிந்த பின், அம்மா மடில தல வச்சு படுத்தது உண்டா ?

அம்மா மடிக்கே ஒரு வாசம் உண்டு.

அனுபவித்தவர்களுக்கு தெரியும்..

அது மாதிரி, முருகன் காலடி பட்ட இடம் எல்லாம் மணம் கமழ்கிறது.

எங்கெல்லாம் அவன் திருவடி பட்டது ?

சொர்கத்தில அவன் காலடி பட்டது.

அப்புறம் ?

தேவர்களின் தலையில்

அப்புறம் ?

வேதங்களின் மேல்

அப்புறம் ?

வள்ளியை மணக்க வேண்டி காடும் மேடும் சுத்திக் கொண்டு திரிந்ததனால், அந்த காட்டிலும், மேட்டிலும் அவன் காலடி பட்டது .

அப்படி பட்ட திருவடி தனக்கு கிடைத்தது என்கிறார் அருணகிரி.

"சரிங்க, கிடைச்சது அப்படிங்கறீங்க, சரி, அதுனால என்ன பிரயோஜனம்"

அப்படின்னு கேட்டா அவரால சொல்ல முடியல. அனுபவிச்சால் தான் தெரியும்.

அந்த சுகத்தை சொல்ல முடியுமா என்று நம்மை திருப்பி கேட்கிறார் ?

----------------------------------------------------------------------
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே

------------------------------------------------------------------------

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே
---------------------------------------------------------------------------

சாடும் = அழிக்கும். விரைந்து சென்று அழிக்கும்.

தனி வேல் = என் வழி தனி வழி மாதிரி , அது ஒரு தனி வேல். எல்லார் கிட்டயும்
இருக்காது.

முருகன் சரணம் = அவனுடைய சரணார விந்தங்கள், திருவடி

சூடும் படி தந்தது = தலையில் படும் படி தந்தது

சொல்லுமதோ ? = சொல்ல முடியுமா ?

வீடும் = வீடாகிய மோக்ஷத்தையும்

சுரர் மாமுடி = சுரர்ணா தேவர்கள். அ-சுரர் அப்படினா அரக்கர்கள். தேவர்களின்
முடி மேலும்

வேதமும் = வேதத்தின் மேலும்

வெங் காடும் = வெம்மையான காடும்

புனமும் = புனை தினம் வளரும் அந்த இடங்களும் (எல்லாம் வள்ளியை செட் up பண்ணத் தான் )

கமழும் = மனம் வீசும்

கழலே = திருவடிகளே