Showing posts with label Ramanujar Nootrandhaandhi. Show all posts
Showing posts with label Ramanujar Nootrandhaandhi. Show all posts

Monday, May 17, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - என் பெய்வினை

இராமானுசர் நூற்றந்தாதி - என் பெய்வினை 


தர்மத்தை பசுவுக்கு ஒப்பிட்டுச் சொல்லும் போது, அந்த பசு கிருத  யுகத்தில் நான்கு கால்களில் நின்றதும் என்றும், திரேதா யுகத்தில் மூன்று கால்களில் நின்றதும் என்றும், துவாபர யுகத்தில் இரண்டு கால்களில் நின்றது என்றும், இப்போது கலி காலத்தில் ஒரு காலில் நிற்கிறது என்றும் சொல்லுவார்கள். 


பசு, கால் என்பதெல்லாம் ஒரு குறியீடு. அதாவது, தர்மம் தன் நிலை இழக்கும் என்பது அர்த்தம். ஒரு காலில் ஒரு பசு எவ்வாறு உறுதியாக நிற்க முடியும். 


கலி காலத்தில் அறம் தேய்ந்து, மறம் ஓங்கி நிற்கும். கலியின் ஆதிக்கம் ஓங்க ஓங்க, நாட்டில் அநீதியும், அதர்மமும் தலையெடுக்கும். 


யார் இதை தடுத்து நிறுத்துவது? அறத்தை யார் எடுத்துச் சொல்வது? மக்களை யார் நல் வழிப் படுத்துவது ? 


அவ்வப்போது பெரியவர்கள் தோன்றி அறத்தை உபதேசித்து மக்களை நல் வழிப் படுத்துகிறார்கள். 


அப்படி தோன்றிய பெரியவர்களில் ஒருவர் இராமானுஜர். 


அவர் தன்னுடைய தவ வலிமையால், இந்த பூமியை பீடித்த கலியை வென்று வீழ்த்தினார். அப்படி செய்த பின்னும், இந்த உலகம் ஒளி பெற்று விளங்கவில்லை. காரணம், கலியின் கொடுமை தணிந்தாலும், நாம் செய்த வினைகளின் பலன் நம்மை விட்டுப் போகாது. இராமானுஜர் அதையும் விடவில்லை. கலியின் கொடுமையை அழித்த அவருக்கு நம் வினையின் தொகுதியை அழிப்பது என்ன பெரிய காரியமா? அதையும் அழித்தார் அவர். அவர் பெருமை சொல்லவும் முடியுமோ என்கிறார் திருவரங்கத்து அமுதனார்.


பாடல்  


நிலத்தைச்  செறுத்துண்ணும்  நீசக் கலியை,  நினைப்ப‌ரிய- 

ப‌லத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,  என் பெய்வினைதென்- 

புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின்* 

நலத்தைப் பொறுத்தது*  இராமானுசன் தன் நயப்புகழே


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_17.html


(please click the above link to continue reading)


நிலத்தைச் = பூமியை 

செறுத்துண்ணும் = கோபித்து அழிக்கும் 

நீசக் கலியை = மோசமான கலியின் 

நினைப்ப‌ரிய = நினைபதற்கு முடியாத பெரிய 

ப‌லத்தைச்  = பலத்தை 

செறுத்தும் = அடக்கியும் 

பிறங்கியதில்லை =இந்த உலகம் ஒளி விடவில்லை 

 என் = என்னுடைய் 

பெய்வினை = பெய் வினைகள் 

தென் புலத்தில் = தெற்கு திசையில் 

பொறித்த = எழுதப்பட்ட 

அப்புத்தகச் சும்மை = அந்த புத்தகத்தை 

பொறுக்கியபின் = எடுத்து மாறிய பின்  

நலத்தைப் பொறுத்தது = நலத்தை தருவது 

இராமானுசன் தன் நயப்புகழே = இராமானுசன் தன் நவிலக் கூடிய புகழே 


பெய் வினை: அதாவது, வினைகளை ஒவ்வொன்றாக செய்யவில்லையாம். 

மழை பெய்வது போல மொத்த வினையும் ஒன்றாக செய்து விட்டாராம். அவ்வளவு வினைகள ஒன்றாகச் செய்து விட்டால், எப்போது அவற்றை அனுபவித்து தீர்ப்பது? அதற்கு எத்தனை பிறவி வேண்டுமோ? அதை எல்லாம் ஒருங்கே அழித்தார் இராமனுசர்.


"தென் புலத்தில் பொறித்த அப்புத்தகம்" எமனுடைய துணையாள் சித்திர குப்தன் நாம் செய்யும் நல் வினை தீ வினைகளை எழுதி வைப்பான் என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் புத்தகத்தில் உள்ள நம் வினையின் தொகுதிகளை அழித்து நமக்கு நல்லது செய்வார் என்பது கூற்று. 


என்னே குருபக்தி 




Saturday, May 15, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - காரேய் கருணை இராமானுச

 இராமானுசர் நூற்றந்தாதி - காரேய் கருணை இராமானுச 


ஒரு சில நாட்களாய் பயங்கர வயிற்று வலி. மருத்துவரிடம் போகிறோம். அவர் சோதனை எல்லாம் செய்து விட்டு, ஒரு மாத்திரை தருகிறார். அதை சாப்பிட்ட சில மணி நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். 


பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு. ஓரிரு நாட்களில் திருமணம். எதிர்பாராத செலவு வந்து விட்டது. கையில் காசு இல்லை. யார் யாரிடமோ கேட்டாகி விட்டது. கடைசி நிமிடத்தில் எல்லோரும் கை விரித்து விட்டார்கள். என்ன செய்வது என்று ஒரே தவிப்பு. கடைசியாக ஒரு நண்பரிடம் சென்று கேட்கிறோம். அவரோ, "இதை ஏன் முதல்லியே என் கிட்ட சொல்லல " என்று கோபித்துக் கொண்டு, நாம் எதிர் பார்த்ததை விட அதிகமாகவே தந்து, "முதல்ல போய் கல்யாணத்தை நல்ல படியா முடி...மத்தது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என்று நம்மை அனுப்பி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 


நம் மனம் எவ்வளவு சந்தோஷப் படும். 


இப்படி நமக்கு வரும் ஒவ்வொரு துன்பத்தையும் யாரோ ஒருவர் வந்து உதவி பண்ணி நம்மை கை தூக்கி விடுகிறார். 


எல்லாம் குருவருள். 


மேகத்தின் தன்மை மழை பொழிவது. 


அது எங்கே பொழிய வேண்டும், இந்த நிலத்துக்கு சொந்தக்காரன் நமக்கு வேண்டியவன், அங்கே கொஞ்சம் நிறைய பொழிவோம். இந்த நிலத்துக்காரன் மோசமானவன், அவன் நிலத்தில் பெய்யக் கூடாது என்று பாகுபாடு எல்லாம் பார்ப்பது இல்லை. 


எல்லோருக்கும் பொதுவாக அது பொழிகிறது. விருப்பு வெறுப்பு கிடையாது. நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு கிடையாது. 


இராமானுசரே, உம்முடைய கருணை அந்த கார் மேகத்தைப் போன்றது. உம்முடைய அந்த கருணை உள்ளத்தை யார் அறிவார்கள்? யாரும் அறிய மாட்டார்கள்.  எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு துன்பத்தைப் பற்றிக் கொண்டு தவிக்கின்றேன் நான். நான் அந்த துன்பங்களை பிடித்துக் கொண்டிருக்கிறேன் இல்லை என்றால் அது என்னைப் பிடித்துக் கொள்கிறது.  எப்படியோ இந்த துன்பங்கள் என்னை தேடி வந்து அடைந்து விடுகின்றன. வருவது மட்டும் அல்ல, என் கூடவே நிரந்தரமாய் தங்கியும் விடுகின்றன. ஒண்ணு போனா இன்னொன்னு வந்து விடுகிறது.  நீர் வந்து என்னை இந்தத் துன்பக் கடலில் இருந்து கரை ஏற்றிய பின், உன்னுடைய பெருமைகளை எல்லாம் நினைக்கும் போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் திருவரகத்து அமுதனார். 


பாடல் 


காரேய் கருணை இராமானுச! இக்கடலிடத்தில்

ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை?! அல்லலுக்கு

நேரே உறைவிடம் நான்! வந்து நீ என்னை உய்த்த பின் உன்

சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_15.html


(please click the above link to continue reading)


காரேய் = நீர் கொண்ட கரிய மேகம் 


கருணை இராமானுச! = கருணை கொண்ட இராமானுசரே 


இக்கடலிடத்தில் =  இந்தப் பிறவி என்ற கடலில் 


ஆரே அறிபவர் = யார் அறிவார்கள் 


நின்னருளின் தன்மை?! = உன் அருளின் தன்மையை 


அல்லலுக்கு = துன்பத்துக்கு 


நேரே உறைவிடம் நான்! = எப்போதும் இருப்பிடம் நான் 


வந்து நீ என்னை  = நீ வந்து 


உய்த்த பின் = என்னை காப்பாற்றிய பின் 


உன் சீரே  = உன் பெருமைகளை 


உயிர்க்குயிராய் = உயிருக்கும் உயிராய் 


அடியேற்கு இன்று தித்திக்குமே! = அடியேனாகிய எனக்கு இன்று தித்திகின்றது 




Friday, May 14, 2021

இராமானுசர் நூற்று அந்தாதி - அரண் யார் ?

இராமானுசர் நூற்று அந்தாதி - அரண் யார் ?


எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். மக்கள் உய்த்தேற உபதேசம் செய்து இருக்கிறார்கள். நல் வழி காட்டி இருக்கிறார்கள். அறம் போதித்து இருக்கிறார்கள். 


அப்படி செய்ததால் அவர்களுக்கு பாவம் வரும், அவர்கள் வீடு பேறு பெற முடியாது என்று யாரும் சொல்லாவில்லை. அப்படி சொன்ன பின்னும், எனக்கு தீங்கு வந்தாலும் பரவாயில்லை, மக்களுக்கு நன்மை வந்தால் போதும் என்று தான் அறிந்த உண்மையை உலகுக்குச் சொன்னவர் இராமானுசர். 


இறைவனை தொழுவதும், அவன் நாமத்தை சொல்வதற்கும் உங்களுக்கு உரிமை இல்லை, நீங்கள் அப்படி செய்தால் பாவம் என்று சொல்லி வந்த போது, அப்படி அல்ல, வாருங்கள், நீங்களும் இறைவனின் திருவடியை தொழலாம், நீங்களும் இறைவனின் பிள்ளைகள் தான் என்று அனைவரையும் ஒன்று சேர்த்தவர் இராமானுஜர். 


அவர் மட்டும் இல்லை என்றால், அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு யார் காவல் என்று கேட்கிறார் திருவரங்கத்து அமுதனார்.


பாடல் 

 

சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை

மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த

கரண வையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்கு

அரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_14.html


(please click the above link to continue reading)


சரணம் அடைந்த = சரணம் அடைந்த 


தருமனுக்காப் = தருமன் முதலிய பஞ்ச பாண்டவர்களுக்காக 


பண்டு = முன்பு 


நூற்றுவரை = கௌரவர்களை 


மரணம் அடைவித்த = மரணம் அடையச் செய்த 


மாயவன் தன்னை = திருமால் தன்னை 


வணங்க வைத்த = வணங்க வைத்த 


கரணவையு = கரணம் இவை  (கரணம் என்றால் உறுப்புகள். வணங்கும் தலை, கூப்பும் கைகள்) 


உமக் கன்று = உமக்கு அன்று 


என்று = என்று 


இ ராமா னுசன் = இராமானுசன் 


உயிர்கட்கு = உயிர்களுக்கு 


அரணங் கமைத்தில னேல் = அரண் அங்கு அமைத்திலனேல் = அரணம் அமைக்கவில்லை என்றால் 


அர ணார் = அரண் ஆர் 


மற்றிவ் வாருயிர்க்கே? = மற்று இவ் ஆருயிற்கே ?


குறிப்பிட்ட மக்கள் மட்டும்தான் இறைவனை தொழ முடியும்; வீடு பேறு அடைய முடியும் என்று சொல்லி வந்த காலத்தில், அப்படி அல்ல  எல்லோரும் இறைவனை தொழ முடியும் என்று "வான் கருணை" யை வியந்து பாராட்டுகிறார் திருவரங்கத்து அமுதனார். 



Friday, January 22, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - பின்னையும் பார்க்கில் நலமுளதே ?

 இராமானுசர் நூற்றந்தாதி - பின்னையும் பார்க்கில் நலமுளதே ?


சில் பள்ளிக்கூடங்கள், அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். படிக்கிற பிள்ளை எங்கும் படிக்கும். பின், பரீட்சை எல்லாம் முடிந்த பின், தங்கள் பள்ளி நூறு சதவீதம் வெற்றி பெற்று விட்டதாக விளம்பரம் செய்வார்கள். இதில் அவர்கள் பெருமை என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. 


அது போல, 


ஆரவமுதனார் சொல்கிறார், 


"இராமானுசரே, நான் ஒன்றுக்கும் உதவாதவன். என்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை. இனி மேலும் நல்லது செய்ய வாய்ப்பு இல்லை. ஆனால், அதற்காக நீர் எனக்கு அருள் செய்யாமல் போனால், மற்றவர்கள் உம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? நல்லவர்களுக்கு மட்டும் தான் நீர் அருள் செய்வீர். எம்மை போன்ற கதி அற்றவர்களை நீர் கண்டு கொள்ள மாட்டீர் என்று உம்மைத்தான் பரிகாசம் செய்வார்கள். எனவே, நீர் எனக்கு அருள் செய்வதுதான் உமக்கு நல்லது"


என்று நகைச்சுவைப் பட இராமானுசரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார். 


அதாவது, சரண் என்று அடைந்து விட்டால், அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு அருள் செய்வது இராமனுசரின் இயல்பு என்று எளிமையாக கூறுகிறார். 


பாடல் 


என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த

உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்

பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை

தன்னையென் பார்ப்பர் இராமா னுச! உன்னைச் சார்ந்தவரே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_22.html

Click the above link to continue reading


என்னையும் பார்த்தென் = என்னையும் பார்த்து என் 

இயல்வையும் பார்த்து = என் குணத்தையும் பார்த்து 

எண்ணில் = எண்ண முடியாத 

பல்குணத்த = பல குணங்களை கொண்ட 

உன்னையும் = உன்னையும் (இராமானுசரையும்) 

பார்க்கில் = பார்த்தால் 

அருள் செய்வதே நலம் = நீர் எனக்கு அருள் செய்வதே நல்லது 

அன்றியென்பால் = மாறாக, என் பால் 

பின்னையும் பார்க்கில் = மேலும் பார்த்துக் கொண்டே இருந்தால் 

நலமுள தே? = நல்லாவா இருக்கு 

உன் பெருங்கருணை = உன்னுடைய பெரும் கருணை 

தன்னையென் பார்ப்பர் = தன்னை என்ன என்று நினைத்துப் பார்ப்பார்கள்? 

இராமா னுச! = இராமானுசரே 

உன்னைச் சார்ந்தவரே? = உன்னுடைய அடியவர்கள் 


பணக்காரனுக்குத் தான் உதவி செய்வேன் என்றால், அது உதவியா? அவனுக்கு தேவை இல்லை. பிச்சை காரனுக்குத்தான் பசிக்கும், உணவு வேண்டும். சீ சீ , நீ பிச்சைகாரன், உனக்கு எல்லாம் உதவி செய்ய முடியாது என்றால் நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? 


ஆரவமுதனார் சொல்கிறார்,


என்னைப் பார்த்து

என் இயல்பைப் பார்த்து 

பின்னும் பார்த்து 


என்று. 


அதாவது, நான் இப்போது மோசம். இனிமேல் ஏதாவது நல்லது செய்யக் கூடிய வாய்ப்புள்ள குணம் ஏதாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சரி, இப்ப இல்லை, பின்னாளில் வருமா என்றால் வராது. 


எனவே, இராமானுசரே, பேசாமல் யோசிப்பதை விட்டு விட்டு எனக்கு நீர் அருள் செய்யும்.இல்லை என்றால், எனக்கு ஒன்றும் இல்லை. உம் அடியவர்கள் உம்மைப் பற்றி வேறுவிதமாக நினைப்பார்கள் என்கிறார். 


அருமையான பாடல். எவ்வளவு மோசமான ஆளுக்கும் அருள் செய்வார் என்பது பொருள். 


மூல நூலை தேடித் பிடித்துப் படியுங்கள். தேன் சொட்டும் பாடல்கள். 



Tuesday, April 28, 2020

இராமானுஜர் நூற்றந்தாதி - தகவெனும் சரண் கொடுத்தே

இராமானுஜர் நூற்றந்தாதி - தகவெனும் சரண் கொடுத்தே 


வகுப்புக்கு ஒழுங்கா வருகிற மாணவனைத்தான் ஆசிரியர் நிறைய கேள்வி கேட்பார், பரீட்சை வைப்பார், வீட்டுப் பாடம் தருவார். போட்டு படுத்தி எடுப்பார். வகுப்புக்கு வரமால், ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இருப்பவனை ஆசிரியர் கண்டு கொள்ள மாட்டார்.

ஒழுங்கா வருகிறவனைப் போட்டு படுத்துகிறார். ஊரு சுற்றுபவவனை ஒன்றும் சொல்வதில்லை. இது சரியில்லையோ என்று தோன்றும்.

ஆனால், கேள்வி, பரீட்சை, வீட்டுப் பாடம் என்று போட்டு படுத்தி எடுத்த மாணவனுக்கு முதல் வகுப்பில் தேர்ச்சி என்று பட்டம் கிடைக்கும்.

தகுதி இருக்கானு பாக்கணும் இல்ல.

அது  போல, இறைவனும், முக்தி தருவதற்கு முன்னால் பக்தர்களை போட்டு படுத்தி எடுத்து விடுவான்.

ஞானம், பக்தி, என்று கிடந்து அல்லாட வேண்டும். அப்புறம் தான் முக்தி தருவான்.

ஆனால், ஒரு தாய் என்பவள் அப்படி அல்ல. பிள்ளை படிச்சானா, வேலை செஞ்சானா என்றெல்லாம் பார்ப்பது இல்லை. ஐயோ , என் பிள்ளைக்கு பசிக்குமே என்று சோறிடுவாள்.

திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்


"ஞானம் பெற்று, நல்லது செய்து, பக்தியால் நாளும் உள்ளம் நைந்து உருகுபவர்களுக்குத்தான் திருமால் முக்தி கொடுப்பான். ஆனால், இராமானுஜரோ, அவரிடம் வந்தவர்களுக்கு, அவர்கள் உள்ளத்தில் உள்ள அழுக்கை எல்லாம் அகற்றி, தன்னுடய கருணையினால் அவர்களுக்கு முக்தி கொடுப்பார் "

என்று.


பாடல்


ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வி னை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்
தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே.


பொருள்

ஞானம் கனிந்த  = ஞானத்தை முழுமையாகப் பெற்று

நலங்கொண்டு = நல்லவற்றை செய்து

நாடொரும் = ஒவ்வொரு நாளும்

-நைபவர்க்கு = பக்தியால் உருகுபவர்க்கே

வானம் கொடுப்பது = முக்தி தருவது

மாதவன் = மாதவனான திருமாலின் வழி

வல்வி னை யேன்மனத்தில் = கொடிய வினைகள் கொண்ட என் மனத்தில்

ஈனம் கடிந்த = கீழான எண்ணங்களை மாற்றி

 இராமா னுசன் = இராமானுஜன்

தன்னை எய்தினர்க்குத் = தன்னை அடைந்தவர்களுக்கு

தானம் கொடுப்பது = தானமாக கொடுப்பது

தன்தக வென்னும் = தன்னுடைய சான்றாண்மை என்ற

சரண் கொடுத்தே. = திருவடிகளை கொடுத்தே


சும்மா இருக்கிற புத்தகத்தை எல்லாம் படிச்சா போதாது. படித்து தெளிந்த ஞானம் பெற வேண்டும்.

பின், பெற்ற ஞானத்தால் பிறருக்கு  உதவ வேண்டும்.

பின், பக்தியால் மனம் தினமும் உருக வேண்டும்.

இப்படி எல்லாம் செய்தால், திருமால் முக்தி தருவார்.

விடிஞ்சிரும்.

இராமாநுஜரிடம் இப்படி எல்லாம் ஒரு கெடு பிடியும் கிடையாது.

நீயே சரண் என்று அவரை பிடித்து விட்டால் போதும், நேரே சுவர்க்கம் தான்.

point to point service மாதிரி.

எது வசதி?


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_71.html

இராமானுஜர் நூற்றந்தாதி - சுடரொளியால் இருளை துரத்தி

இராமானுஜர் நூற்றந்தாதி - சுடரொளியால் இருளை துரத்தி 



ஒவ்வொரு கால கட்டத்திலும், மக்கள் எது அறம், எது அறம் அல்லாதது என்று வழி தெரியாமல் தவித்து இருக்கிறார்கள்.

ஓரினத்தில் திருமணம் செய்து கொள்வது அறமா, அறம் அற்ற செயலா ?

பல பெண்களை மணந்து கொள்வது சரியா தவறா ?

மாமிசம் உண்பது சரியா, தவறா ?

சூதாடுவது சரியா, தவறா?

வட்டி வாங்குவது சரியா, தவறா ?

இப்படி பல குழப்பங்களில் மக்கள் தடுமாறி இருக்கிறார்கள். தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி, மக்கள் திசை தெரியாமல் தவிக்கும் போது, பெரியவர்கள் தோன்றி மக்களை வழி காட்டி இருக்கிறார்கள்.

 திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்

"கடல் போல அஞ்ஞான இருள் உலகமெங்கும் சூழ்ந்து இருந்த போது, இராமானுஜர் மட்டும் வந்து நான்கு வேதத்தின் சாரத்தை எடுத்து அறிவொளி தந்து இருக்கா விட்டால், இந்த ஆன்மாக்களை உடையவன் நாராயணன் என்று  யாருமே உற்று உணர்ந்து அறிந்து இருக்க மாட்டார்கள்"

பாடல்


கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.

பொருள்

கடலள வாய = கடல் அளவான

திசையெட்டி னுள்ளும் = திசை எட்டினுள்ளும்

கலியிருளே = கலி புருஷனின் இருள். அதாவது அஞ்ஞான இருள்

மிடைதரு காலத்தில் = அடர்ந்து இருந்த காலத்தில்

இராமா னுசன் = இராமானுஜன்

மிக்க = சிறந்த

நான்மறையின் = நான்கு வேதத்தின்

சுடரொளியால் = சுடர் ஒளியால்

அவ் விருளைத் = அந்த இருளை

துரத்தில னேல் = துரத்தி இருக்காவிட்டால்

உயிரை = உயிரை

உடையவன் = உடையவன்

நாரணன் = நாராயணன்

என்றறி வாரில்லை = என்று அறிவாரில்லை

உற்றுணர்ந்தே = உற்று உணர்ந்தே

முதலாவது,  குழப்பத்தில் இருந்த மக்களை வழி காட்டி நடத்த அவர் வந்தார்.

இரண்டாவது, என்ன குழப்பம்?  மக்களுக்கு புரியவில்லை. யார் இறைவன், யாரை வழிபடுவது போன்ற குழப்பங்கள். ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கடவுளை சொல்கின்றன.   ஒரே மதத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. ஆளுக்கு ஒரு மதம்,  மதத்துக்கு ஒரு கடவுள் என்ற குழப்பங்கள்.

மூன்றாவது, அவர் இருளை விலகினார். உடனே எல்லோருக்கும் புரிந்து விட்டதா?  இல்லை. ஒரு அறையில் நல்ல  புத்தகம் இருக்கிறது. ஆனால், அறை முழுவதும்   ஒரே இருள். இராமானுஜர் வந்து விளக்கை ஏற்றி வைத்தார். புத்தகம் இருக்கிற இடம் தெரிகிறது. ஆனால், புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டியது நம் பொறுப்பு.  "அறிவாரில்லை உற்று உணர்ந்தே" என்கிறார்.

அறியவும் வேண்டும். உணரவும் வேண்டும்.

அறிவது எளிது. உணர்வது கடினம்.

இரண்டையும் அடைய இராமானுஜர் ஞான ஒளி ஏற்றினார்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_28.html

Saturday, September 14, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - திரித்தன் றெரித்த திருவிளக்கை

இராமானுஜர் நூற்றந்தாதி - திரித்தன் றெரித்த திருவிளக்கை


வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றுவார்கள். அதற்கு திரி திரித்து போடுவார்கள். பஞ்சில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளை எடுத்து அதை திரியாக திரித்து , எண்ணெயில் நனைத்து விளக்கு ஏற்றுவார்கள்.

ஒரே பஞ்சை போட்டால் என்ன? எரியாதா ?

எரியும். ஆனால் சீக்கிரம் கரிந்து விடும்.

இரண்டு அல்லது மூன்று பஞ்சை சேர்த்து திரிக்கும் போது, அந்த திரிகளுக்கு நடுவில் ஒரு மெல்லிய குழாய் போன்ற அமைப்பு உருவாகும். அதன் மூலம் எண்ணெய் வேகமாக மேலேறும். தமிழில் தந்துகி கவர்ச்சி என்பார்கள். ஆங்கிலத்தில் capillary effect என்று சொல்லுவார்கள்.

எப்படி திரி திரிப்பதால் எண்ணெய் நன்றாக மேலேறி வருகிறதோ, அது போல உண்மை என்ற எண்ணெய் மேலேறி வந்து உலகுக்கு எல்லாம் வெளிச்சம் காட்ட வேதத்தையும், தமிழையும் திரித்து உலகுக்கு  அளித்த பொய்கை ஆழ்வாரின் பாசுரங்களை மனதில் எப்போதும் வைத்திருக்கும் இராமானுஜன் , அவரே என் தலைவன், இறையவன் என்று அமுதனார் பாடுகிறார்.


பாடல்


வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே.

பொருள்

வருத்தும்  = வருத்தம் தருகின்ற

புறவிருள் = புற இருள்

மாற்ற = மாற்ற, போக்க

எம் பொய்கைப்பி ரான் = பொய்கை பிரானான பொய்கை ஆழ்வார்

மறையின் = வேதத்தின் 

குருத்தின் = வெளிப்படும் உண்மை

பொருளையும் = அதன் பொருளையும்

செந்தமிழ் = தமிழ்

தன்னையும் = அதையும்

கூட்டி = சேர்த்து

ஒன்றத் = ஒன்றாக

திரித்தன் றெரித்த = திரித்து எரித்த, ஏற்றிய

திருவிளக் கைத் = திருவிளக்கை

தன் = தன்னுடைய

திருவுள்ளத்தே = மனதில்

இருத்தும் = எப்போதும் வைத்திருக்கும்

பரமன் = தலைவன்

இராமா னுசனெம் இறையவனே. = இராமானுசன் எம் இறையவனே

புற இருள் என்றால் என்ன ?

வெளியே ஏதோ இருக்கிறது என்று நாம் தேடி அலைகிறோம். இன்பம், செல்வம், புகழ், செல்வாக்கு, நட்பு, உறவு, என்று எதை எதையோ தேடி அலைகிறோம். கடைசியில் கையில் மிஞ்சுவது ஒன்றும் இல்லை. என்ன வேண்டும் என்றே தெரியாமல் தேடுகிறோம்.  எதைத் தொலைத்தோம் என்று தெரியாமலே தேடுகிறோம்.

எனவே, அதை இருட்டில் தேடுவது போல என்று புற இருள் என்றார்.

விளக்கை ஏற்றின்னால், இருள் அகன்று விடும்.

இங்கே இருள், வெளிச்சம் என்பது அறியாமை, ஞானம் என்பதைக் குறிக்கும்.

இராமானுஜர் நூற்றந்தாதியில் இப்படி பல அருமையான பாடல்கள் இருக்கின்றன.

படித்துப் பாருங்கள்.

நல்ல விஷயங்களுக்கு கொஞ்ச நேரம் ஒதுக்கினால்தான் என்ன?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_72.html

Tuesday, October 13, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து 


நாம் ஒரு காரியம்  செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.

அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.

நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.

ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

அது ஏன் ?

ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது.

அது ஏன் ?

விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.

உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.

சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.

இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

அமுதனார் சொல்கிறார் ...

"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "

பாடல்


என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.



சீர்  பிரித்த பின்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு  ஏதும் சிதைவில்லையே.

பொருள் 

என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்

ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி

அருள் சுரந்த = அருள் பொழிந்து

முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை

வேரறுத்து = வேரோடு அறுத்து

ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை

பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய

இராமானுசன் = இராமானுசன்

பரன் = தொன்மையானவன் , பெரியவன்

பாதமும் = பாதங்களை

என்  = என்னுடைய

சென்னித் = தலையில்

தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்

எனக்கு  ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே

சரி, இதில் நிறைய புரியவில்லையே...

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

சிந்திப்போம்....



Friday, September 25, 2015

இராமனுசர் நூற்றந்தாதி - இயல்பான பக்தி

 இராமனுசர் நூற்றந்தாதி - இயல்பான பக்தி 



பக்தி செய்யும் போது மனதில் உள்ள ஆணவம், அகத்தை அழிய வேண்டும். சில பேர் பக்தி செய்வதிலேயே கூட கர்வம் கொள்வது உண்டு ...

"திருமலை பெருமாளுக்கு இத்தனை இலட்சம் நன்கொடை தந்தேன் "

"தினப்படி இரண்டு நேரம் பூஜை பண்ணுகிறேன், சுலோகம் எல்லாம் எனக்கு அத்துப்படி "

என்று பக்தி செய்வதில் ஒரு அகந்தை வந்து விடுகிறது. நான் அவனை விட அதிகம் பக்தி செய்கிறேன், நான் அவனை விட அதிகம் கோவில்களுக்குச் செய்கிறேன் என்று.

இந்த பக்தியால் ஏதாவது பலன் உண்டா ?

பக்தி என்பது இயல்பாக , மூச்சு விடுவது போல, கண் இமைப்பதுபோல இயல்பாக இருக்க வேண்டும்..

அந்த பக்தி எப்படி இயல்பாக வரும் ?

பக்தி இல்லாதவர்களை விட்டு நீங்கி இருக்க வேண்டும். பக்தர்கள் மத்தியில் இருந்தால் பக்தி என்பது ஒரு இயல்பான ஒன்றாக ஆகி விடும்.

பாடல்

கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே.


பொருள்



கள் ஆர் மொழில் தென் அரங்கன்

கள்ளார் = தேன் நிறைந்த

பொழில் = பூங்காவனங்கள் சூழ்ந்த

தென் னரங்கன் = திருவரங்கத்தில் பள்ளி கொண்ட அரங்கனின்

கமலப் பதங்கள் = தாமரை போன்ற பாதங்களை

நெஞ்சிற் = மனதில்

கொள்ளா = வைக்காத

மனிசரை = மனிதர்களை

நீங்கிக் = விட்டு நீங்கி

குறையல் பிரானடி = திருமங்கை மன்னனுடைய திருவடிகள்

கீழ் = அடியில்

விள்ளாத அன்பன் = என்றும் நீங்காத அன்பன்

இராமா னுசன் = இராமானுசன்

மிக்க சீலமல்லால் = உயர்ந்த குண நலன்களைத் தவிர

உள்ளாதென் னெஞ்சு = உள்ளாது என் நெஞ்சு = நினைக்காது என் நெஞ்சு

ஒன்றறியேன் = இதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது

எனக்குற்ற பேரியல்வே.= எனக்கு அமைந்த இயல்பு அது

இயல்பான பக்தி. இயல்பான ஒரு மரியாதை.