நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனதினால் நினைக்கலாமே
நம் வாழ்க்கை பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.
நிற்கவோ, யோசிக்கவோ எதற்குமே நேரம் இல்லை.
இதில், கோவிலுக்குப் போக எங்கே நேரம் இருக்கப் போகிறது. அதிலும் ஸ்ரீரங்கம் போன்ற சிறந்த புண்ணிய தலங்களுக்குப் போக நேரம் இருக்கவே இருக்காது.
நேரம் இல்லை என்ற சாக்கு இன்று நேற்று அல்ல, தொண்டரடிப் பொடியாழ்வார் காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது.
கோவிலுக்குப் போக நேரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இறைவனை மனதினால் நினைக்கலாமே ? அதற்க்குக் கூடவா நேரம் இருக்காது என்று கேட்கிறார்.
பாசுரம்