Showing posts with label viveka chinthamani. Show all posts
Showing posts with label viveka chinthamani. Show all posts

Monday, February 12, 2024

விவேக சிந்தாமணி - உறவும் நட்பும்

 விவேக சிந்தாமணி - உறவும் நட்பும்


உறவும் நட்பும் நல்லதா?


நமக்கு நாலு பேரு வேண்டாமா? அவரச ஆத்திரத்துக்கு ஒரு மனுஷாள் துணை வேண்டாமா?   தனி மரம் தோப்பாகுமா?  என்றெல்லாம் நாம் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


நிறைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அப்படி இல்லாதவர்கள் தனிமையில் வாடுகிறார்கள் என்று நினைக்கிறோம்.


அது சரிதானா? 


நட்பினாலும், உறவினாலும் அழிவு வருவது இல்லையா? என்று விவேக சிந்தாமணி கேள்வி எழுப்புகிறது. 


பாடல் 



அருமையும் பெருமை தானு மறிந்துடன் படுவர் தம்மால்

இருமையு மொருமை யாகி யின்புறற் கேதுவுண்டாம்

பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் நட்பால்

ஒருமையி னரக மெய்து மேதுவே யுயரு மன்னோ


சீர் பிரித்த பின் 


அருமையும் பெருமைதானும்  அறிந்து உடன் படுவர் தம்மால்

இருமைம் ஒருமையாகி இன்புறற்கு  ஏதுவுண்டாம்

பரிவிலாச் சகுனி போலப் பண்பு கெட்டவர்கள் நட்பால்

ஒருமையில்  நரகம் எய்தும் ஏதுவே வேய் உயரு மன்னோ


பொருள் 


அருமையும் = அருமையான, சிறப்பான 

பெருமைதானும் = பெருமைகளும் 


அறிந்து = அறிந்து 


உடன் படுவர் தம்மால் = நட்பாக இருப்பவர்களால் 


இருமையும் = இந்தப் பிறவியும், மறு பிறவியும் 


ஒருமையாகி = ஒன்றாகி 


இன்புறற்கு  = இன்பம் அடைவதற்கு 


ஏதுவுண்டாம் = வழி உண்டு 


பரிவிலாச் = பரிவு, பாசம் இல்லாதா 


சகுனி போலப் = சகுனியைப் போல 


பண்பு கெட்டவர்கள் நட்பால் = பண்பு இல்லாதவர்கள் நட்பினால் 


ஒருமையில் = உறுதியாக 


 நரகம் எய்தும் ஏதுவே = நரகத்தை அடையும் வழி அதுவே 


 வேய் உயரு மன்னோ = மூங்கில்கள் உயர்ந்த காட்டினை உள்ள நாட்டினை ஆளும் அரசனே 


அறிவும், பெருமையும் உள்ள நண்பர்களால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சகுனி போன்ற நண்பர்கள் வாய்த்தால் வாழ்க்கை நரகமாகி விடும். 


நாம் அந்த எல்லைகைளைத் தொட வேண்டாம். 


இன்றைய சகுனிகள் நம் நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பவர்கள். கண்ட கண்ட whatsapp ஐ forward செய்பவர்களும் சகுனிகள்தான். நம் நேரத்தை வீணடிப்பவர்கள். நாம் அந்த நேரத்தை வேறு நல்ல வழியில் செலவிட்டு இருந்தால், நமக்கு நன்மைகள் கிடைத்து இருக்கும். அதை தடுப்பவர்கள் அந்த சகுனிகள். 


வெட்டிப் பேச்சு, அரட்டை, தவறான செய்திகளை பரப்புவது, பேசுவது இதெல்லாம் கூட சகுனித்தனம் தான். 


நாம் அப்படி ஏதாவது செய்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். நம்மால் நம் நண்பர்கள் பயன் அடைகிறார்களா என்று சிந்திக்க வேண்டும். அவர்கள் வாழ்வை நாம் இனிமையாக்குகிரோமா என்று சிந்திக்க வேண்டும். 





Friday, January 19, 2024

விவேக சிந்தாமணி - அறிந்தோம் அம்மம்மா!

விவேக சிந்தாமணி - அறிந்தோம் அம்மம்மா!

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_19.html


தெருவில் பிச்சைக் காரர்களை பார்த்து இருக்கிறோம். பசி. வறுமை. அழுக்குத் துணி. குளித்து எத்தனை நாளோ. இருக்க இடம் இல்லை. குளிர், வெயில் கொடுமைகள். போதாக்குறைக்கு தெருவில் சென்றால் நாய்கள் எல்லாம் அவர்களை பார்த்துக் குரைக்கும், கடிக்க வரும். எல்லார் முகத்தையும் பரிதாபமாக பார்த்து பிச்சை கேட்க வேண்டும். சிலர் போடுவார்கள், சிலர் முகம் சுளிப்பார்கள். ஒன்றும் செய்ய முடியாது. 


ஏன் சிலர் இப்படி இருக்கிறார்கள்? யாரும் பிச்சைக்கார்களாய் பிறப்பது இல்லை. பின் ஏன் இப்படி வருந்துகிறார்கள். 


விவேக சிந்தாமணி சொல்கிறது. 


ஒரு காலத்தில், முன் பிறவிகளில், அன்பான மனைவி பால் சோறை (அன்னத்தை) பொன் கிண்ணத்தில் கொண்டு வந்து அன்போடு ஊட்டிய போது, அதை சுவைத்து உண்டு கொண்டு, பசி என்று வந்தவர்களுக்கு ஒன்று ஈயாமல் விரட்டி அடித்தவர்கள் இருக்கிறார்களே, அவர்கள்தான் இந்தப் பிறவியில்  பிச்சைக்கார்களாய்  பிறந்து துன்பப் படுகிறர்கள் 


என்கிறது. 


பாடல் 



 மண்ணார் சட்டி கரத்து ஏந்தி

     மறநாய் கௌவும் காலினராய்

அண்ணாந்து ஏங்கி இருப்பாரை

     அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா!

பண்ணார் மொழியார் பால் அடிசில்

     பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட

உண்ணா நின்ற போது ஒருவர்க்கு

     உதவா மாந்தர் இவர்தாமே!


பொருள் 


மண்ணார் = மண்ணால் செய்த 


சட்டி = சட்டியை 


கரத்து ஏந்தி = கையில் ஏந்தி 


மறநாய் = கொடூரமான நாய்கள் 


கௌவும் = கவ்வும் 


காலினராய் = கால்களை உடையவர்களாய் 


அண்ணாந்து = தெருவில் அமர்ந்து போவோர் வருவோர் முகங்களை அண்ணாந்து பார்த்து 


 ஏங்கி இருப்பாரை = யார் நமக்கு பிச்சை போடுவார்கள் என்று ஏங்கி இருப்பவர்களை பற்றி 


அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா! = அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும், தெரியும் 


பண்ணார் = இசை போன்ற இனிய 


மொழியார் = குரலை உடைய மனைவி 


பால் அடிசில் = பால் சோறை 


பைம்பொன் = சிறந்த தங்கப்  


கலத்தில் = பாத்திரத்தில் வைத்து  


பரிந்து ஊட்ட = பாசத்தோடு ஊட்டும் போது 


உண்ணா நின்ற போது = அவற்றை உண்டு கொண்டு இருந்த போது 


ஒருவர்க்கு = பசி என்று வந்த ஏழைக்கு 


உதவா மாந்தர் இவர்தாமே! = உதவாத மனிதர்கள்தான் இந்தப் பிச்சைக்காரர்கள் 


விவேக சிந்தாமணி சொல்லும் கருத்து ஒருபுறம் இருக்கட்டும். 


இனி வரும் நாட்களில் பிச்சைக்கார்களே இருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. 


எந்த ஊரில் மனைவிகள் இனிமையாக பேசிக் கொண்டு, தங்கப் பாத்திரத்தில், பால் சோறை அன்போடு கணவனுக்கு ஊட்டுகிறார்கள். அது அந்தக் காலம். :)


நகைச்சுவையை தவிர்த்து, இன்றைய சூழ்நிலையோடு ஓட்டிப் பார்த்தால், இவ்வளவு செல்வம் இருந்தும், மற்றவர்களுக்கு ஒரு உதவி செய்யாமல் இருப்பவர்கள் மறு பிறவியில் துன்பப்படுவார்கள் என்று பயம் காட்டுகிறது விவேக சிந்தாமணி. 



Wednesday, July 28, 2021

விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடியது போல

 விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடியது போல 


ஒரு ஊர்ல ஒரு கழுதை இருந்தது. அந்தக் கழுதை இராத்திரி ஆனா, ஊருக்கு வெளியே உள்ள ஒரு காட்டுக்குப் போய், சத்தம் போட்டு தன்னுடைய இனிய குரலால் பாடும்.  அந்தக் காட்டுல ஒரு பேய் இருந்து வந்தது. அந்த பேய்க்கு இந்த கழுதையின் பாட்டு ரொம்ப பிடித்துப் போய் விட்டது. 


"ஆஹா, கழுதையாரே உன்னுடைய குரல் வளமே வளம். என்ன அருமையா பாடுற...இன்னும் கொஞ்சம் பாடு " என்று இரசித்துக் கேட்கும். 


அதைக் கேட்ட உடன், கழுதைக்கு பெருமை தாங்காது. நம்மை விட்டா இனிமையா பாட இந்த உலகத்ல யாரும் இல்லைன்னு பெருமிதம் கொள்ளுமாம். 


ஊருக்குள்ள இப்படி நிறைய கழுதைகளும், பேய்களும் இருக்கின்றன. 


முட்டாளை பெரிய ஆள் என்று போற்றுவதும், அதைக் கேட்ட அந்த முட்டாள், நம்மை விட பெரிய புத்திசாலி இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது என்று நினைப்பதும், நாளும் நடப்பது தானே....


பாடல் 


கழுதை காவெனக் கண்டுநின் றாடிய வலகை

தொழுது மீண்டுமக் கழுதையைத் துதித்திட வதுதான்

பழுதி லாநமக் கார்நிக ராமெனப் பகர்தல்

முழுது மூடரை மூளர்கொண் டாடிய முறைபோல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_28.html



(pl click the above link to continue reading)


கழுதை  = கழுதை 


'கா' வெனக் = காள் காள் என்று பாடியதைக் 


கண்டு  = கண்டு 


நின் றாடிய = நின்று, அந்தப் பாட்டுக்கு ஆடிய 


வலகை = பேய் 


தொழுது = அந்தக் கழுதையை தொழுது 


மீண்டும் = மீண்டும் 


அக் கழுதையைத் = அந்தக் கழுதையை 


துதித்திட = போற்றிட 


அதுதான் = அந்தக் கழுதையும் தான் 


பழுதி லா = குற்றமில்லாத 


நமக் கார் = நமக்கு யார் 


நிக ராமெனப் = நிகராம் என 


பகர்தல் = சொல்லி 


முழுது மூடரை = முழு முட்டாளை 


மூளர்கொண் டாடிய முறைபோல் = முட்டாள் கொண்டாடியது போல 


சங்கீதம்னா என்ன என்று கழுதைக்கும் தெரியாது, பேய்க்கும் தெரியாது. 


நாட்டுக்குள்ள நிறைய பேய்கள், பல கழுதைகளை பாராட்டிக் கொண்டு இருக்கின்றன. 


இத்தனை பேய்கள் பாராட்டுகிறதே, அது தப்பாவா இருக்கும் என்று மற்றவர்களுக்கும் ஒரு சந்தேகம் வரத் தான் செய்யும். 


எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதல்ல முக்கியம். 


பாராட்டுபவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். 


ஒரு முட்டாளை இன்னொரு முட்டாள் பாராட்டினால் பாராட்டி விட்டுப் போகட்டும். 


நமக்கு என்ன?



Thursday, December 19, 2019

விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்

விவேக சிந்தாமணி -  மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்


நாம் எப்படிப்பட்ட ஆள் ? நம் அறிவின் வீச்சு என்ன? ஆழம் என்ன? நம் திறமை என்ன ? நம் ஆளுமை (personality ) என்ன ?

இதெல்லாம் நாம் எப்படி அறிந்து கொள்கிறோம். நம்மைச் சுற்றி உள்ளவர்கள் சொல்வதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம். நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மைப் பற்றி புகழ்ந்து சொன்னால், நாம் அது சரிதான் என்று மகிழ்ச்சி அடைகிறோம். நம்மை இகழ்ந்தால், அது சரி அல்ல என்று நினைத்து, சொன்னவர் மேல் கோபம் கொள்கிறோம்.

சொல்பவர் யார் என்று பார்க வேண்டும். நம்மை விட அறிவில் தாழ்ந்தவன் நம்மை அதி புத்திசாலி என்றுதான் சொல்லுவான். அவன் சொன்னதால், அது சரி என்று ஆகி விடுமா?

ஒரு காட்டில் ஒரு கழுதை இருந்தது. அது இரவு நேரங்களில் பெரிய குரலில் கனைக்கும். அதே காட்டில் ஒரு பேய் வசித்து வந்தது. அதற்கும் பொழுது போக வேண்டாமா? அப்பப்ப இந்த கழுதை கத்துவதை கேட்க வரும். அப்படி வந்த ஒரு நாளில், அந்த பேய் சொன்னது "கழுதையே , உன் குரல் தான் எவ்வளவு இனிமையாக இருக்கிறது...நீ நன்றாகக் பாடுகிறாய் " என்றது. அதைக் கேட்ட கழுதைக்கு ஒரு மகிழ்ச்சி. நம்மை விட சிறந்த பாடகர் இந்த வையகத்தில் கிடையாது என்று எண்ணி மகிழ்ந்தது.

கழுதைக்கு பேய் கொடுத்த பட்டம் போல, நமக்கும் பலர் பட்டம் தரலாம், புகழ்ந்து சொல்லலாம்...அதை எல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டு  பெருமை  கொள்ளக் கூடாது.  உண்மையிலேயே நம்மைவிட உயர்ந்தவர்கள் நம்மை பாராட்டும் படி வாழ வேண்டும்.

பாடல்



கழுதை கா எனக் கண்டு நின்றாடிய அலகை
தொழுது மீண்டும் அக்கழுதையைத் துதித்திட அதுதான்
பழுதிலா நமக்கு ஆர் நிகர் மெனப் பகர்தல்
முழுது மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்

பொருள்


கழுதை = கழுதை

கா எனக் கண்டு = "கா" என்று கத்திய பாடியதைக் கண்டு

நின்றாடிய அலகை = நின்று ஆடிய பேய்

தொழுது = அந்தக் கழுதியை வணங்கி

மீண்டும் = மீண்டும்

அக்கழுதையைத் துதித்திட = அந்தக் கழுதையை போற்றிட

அதுதான் = அந்தக் கழுதையும்

பழுதிலா = குற்றமில்லாத

 நமக்கு = நமக்கு

ஆர் நிகர் மெனப் = யார் நிகர் ஆவார்கள் என்று

 பகர்தல் = சொல்லுவது

முழுது மூடரை  = முழு மூடரை

மூடர் கொண்டாடிய முறைபோல் = இன்னொரு மடையன் பெருமையாக சொன்னது போல

"என் மகனைப் போல உண்டா ?"

"என் மகள் பெரிய திறமைசாலி "

"என் கணவர் சகலகலா வல்லவர் "

"என் மனைவி பேரழகி "

இவற்றை எல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டு திரியக் கூடாது. அவை எல்லாம் அன்பினால் சொல்லப்படுபவை, பலன் கருதி சொல்லப் படுபவை.

பெரியோரின் பாராட்டுதான் முக்கியம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_19.html


Monday, July 1, 2019

விவேக சிந்தாமணி - நற்போதம் வாராது

விவேக சிந்தாமணி - நற்போதம் வாராது 


நான் நிறைய பேரை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்...நிறைய படிக்க வேண்டும் என்று ஆவல் இருக்கும், சிரத்தையாக படிப்பார்கள், படிக்க முடியாவிட்டால் கூட படித்தவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள். அடடா என்ன உயரிய கருத்துகள் என்று உணர்ந்து உண்மையாகவே பாராட்டுவார்கள்.

ஆனால், அதை கடை பிடிப்பார்களா என்றால், மாட்டார்கள். கேட்டால், அது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது, வறட்டு வேதாந்தம் என்று ஏதாவது சொல்லிவிட்டு படிப்பதற்கு முன் எப்படி இருந்தார்களோ, அப்படியே இருப்பார்கள்.

உடம்பில் ஒரு நோய் வந்து விட்டது என்றால் மருத்துவரைப் போய் பார்க்கிறோம். அவரும் நோய் இன்னது என்று அறிந்து கொண்டு மருந்து எழுதித் தருகிறார். காசு கொடுத்து கடையில் போய் வாங்கி வருகிறோம்.

வந்தபின், அந்த மருந்தை உண்பது கிடையாது. கேட்டால் அது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது என்று சொல்லி விடுவது.

எனக்கு இது புரிந்ததே இல்லை.

உண்ணப் போவது இல்லை என்றால், எதற்கு மருத்துவரை பார்க்க வேண்டும், காசு போட்டு மருந்தை வாங்க வேண்டும்? நேரமும் பணமும் மிச்சப் படுத்தலாமே...ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்து யோசித்து களைத்துப் போனேன்.

விவேக சிந்தாமணியில் இதற்கு விடை கிடைத்தது.

ஏன் சிலர் இப்படி இருக்கிறார்கள் என்று அது கூறுகிறது.

"நல்ல விளை நிலத்தில் நறுமணம் வீசும் கற்பூரத்தில் பாத்தி கட்டி, கஸ்தூரி மானின் இடம் இருந்து வரும் மணம் மிக்க எருவைப் போட்டு, மணம் வீசும் நல்ல நீரை பாய்ச்சினால், வெங்காயச் செடியில் இருந்து வெங்காய வாடைதான் வரும். அதில் இருந்து கற்பூர வாசமோ, கஸ்தூரி புனுகின் வாசமோ வராது. அது போல சிலர். அவர்களுக்கு என்னதான் நல்லது சொன்னாலும், எவ்வளவுதான் நல்லதை அவர்கள் படித்தாலும், அவர்களுடைய இயல்பான குணம் மாறாது."

பாடல்


”கற்பூர பாத்தி கட்டி கஸ்தூரி எருப் போட்டுக் கமழ் நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும்
சொற்போதையர்க்கு அறிவு இங்கு இனிதாக வருமெனவே சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே”


பொருள்


”கற்பூர பாத்தி கட்டி = கற்பூரத்தில் பாத்தி கட்டி

கஸ்தூரி எருப் போட்டுக் = கஸ்தூரி மானின் எருவைப் போட்டு

கமழ் நீர் பாய்ச்சி =  வாசம் தரும் பன்னீர் போன்ற நீரைப் பாய்ச்சி

பொற்பூர = அழகாக

உள்ளியினை  = வெங்காயத்தை

விதைத்தாலும் = விதைத்தாலும்

அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும் = அதன் குணத்தை அது பொருந்தும்படி காட்டும்

சொற்போதையர்க்கு  = சொல்லில் தடுமாற்றம் உள்ளவர்களுக்கு (புத்தி இல்லாதவர்களுக்கு)

அறிவு = அறிவு

இங்கு = இங்கு

இனிதாக வருமெனவே = இனிமையாக வரும் என்று

சொல்லினாலும் = நினைத்து என்ன சொன்னாலும்

நற்போதம் வாராது = நல்ல புத்தி வராது

அங்கு  = அங்கு

அவர் குணமே மேலாக நடக்கும் தானே” = அவர்களின் இயற்கை குணமே மேலோங்கி நிற்கும்

நடு கடலுக்குப் போனாலும், நாய்க்கு நக்கு தண்ணிதான் என்று சொல்லுவார்கள்.

குணத்தை மாற்றாமல் படித்து ஒரு புண்ணியமும் இல்லை.

நேர மற்றும் பண விரயம் தான் ஆகும்.

படித்த பின், சிந்தியுங்கள்.  படித்தது ஏதாவது விளைவை உங்களில் ஏற்படுத்தியதா என்று.

இல்லை என்றால், படிப்பதை நிறுத்துவது நலம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_1.html

Sunday, September 9, 2018

விவேக சிந்தாமணி - உறவும் சுற்றமும்

விவேக சிந்தாமணி - உறவும் சுற்றமும் 


நாம் தனியாக வாழ முடியாது. உறவும், சுற்றமும், நட்பும், வேண்டும். இந்த உறவும், சுற்றமும், நட்பும் ஒரு பலம். இவை வாழ்க்கைக்கு இனிமை சேர்ப்பவை. வாழுவுக்கு வளம் சேர்ப்பவை.

எப்படி இந்த உறவையும், நட்பையும் பெறுவது. எப்படி சிலருக்கு மட்டும் இது நன்றாக வாய்க்கிறது. சிலருக்கு  அவ்வளவாக வாய்ப்பதில்லை. ஏன் ?

ஒரு பெரிய ஏரி. நீர் நிறைந்து இருக்கிறது. கரை எல்லாம் பசுமை. மரங்கள் உயர்ந்து செழிப்பாக வளர்ந்து இருக்கின்றன. ஏராளமான பறவைகள் அந்த மரங்களில் வந்து தங்கி இருக்கின்றன. கூடு கட்டி , குஞ்சு பொரித்து, இன்பமாக வாழ்கின்றன.

கோடை வந்தது. நீர் எல்லாம் வற்றிப் போனது. மரங்கள் இலைகளை உதிர்த்து கிளை விரல் நீட்டி வானம் பார்த்து நின்றன.

அங்கிருந்த பறவைகள் எல்லாம் வேறிடம் தேடிப் போய் விட்டன.

உறவும், நட்பும், சுற்றமும் அப்படித்தான். பறவைகளை வா வா என்று என்று அந்த ஏரி அழைக்கவில்லை. நீர் வற்றிய பின், போ போ என்றும் சொல்லவில்லை.

உங்களிடம் செல்வமும், இனிய சொல்லும், இருந்தால் நட்பும், சுற்றமும் தானே தேடி வரும். இல்லை என்றால், அவை தானே போய் விடும்.


பாடல்

ஏரிநீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம்,
மாரிநீர் மறுத்த போது வந்து அதில் இருப்பது உண்டோ?
பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்தபோதே
யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே.       


பொருள்

ஏரிநீர் நிறைந்த போது  = ஏரியில் நீர் நிறைந்து இருக்கும் போது

அங்கு இருந்தன பட்சி எல்லாம் = அங்கு பறவைகள் எல்லாம் வந்து இருந்தன

மாரிநீர் மறுத்த போது = மழை நீர் பெய்வது நின்ற போது

வந்து அதில் இருப்பது உண்டோ? = அந்தப் பறவைகள் அங்கு இருக்குமா ? (இருக்காது)

பாரினை ஆளும் வேந்தன் = உலகை ஆளும் அரசனாக இருந்தாலும்

பட்சமும் = அன்பும்

மறந்தபோதே = இல்லாது போனால்

யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே = அவனோடு இருக்காமல் எல்லோரும் போய் விடுவார்கள்

அரசன் கதி என்றால், நாம் எல்லாம் எந்த மூலை.

நல்ல குணம், செல்வம், அன்பு, இனிய சொல்லால் உங்களை நிறைத்து வையுங்கள்.

உறவும் நட்பும் தானே உங்களைத் தேடி வரும்.

Sunday, December 4, 2016

விவேக சிந்தாமணி - செருப்பாலே அடிப்பவருக்கு

விவேக சிந்தாமணி - செருப்பாலே அடிப்பவருக்கு 


பொருள் கிடைப்பது கடினம்.  கிடைத்த பொருளை என்ன செய்ய வேண்டும் ? அல்லது பெரும்பாலனோர் என்ன செய்கிறார்கள் ? வீடு வாங்குவது, மனை வாங்குவது, நகை நட்டு வாங்குவது, வங்கியில் போட்டு வைப்பது என்று ஏதோ செய்கிறார்கள். தங்கத்தின் விலை கீழே போகும். வட்டி விகிதம் குறையும். சில சமயம் முதலுக்கே மோசம் ஆகும். என்ன செய்யலாம் ?


பாடல்

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்பாலிடை மூழ்கிப் புறள்வர்கீர்த்தி
யருட்பாலர் மறப்பாலைக் கனவிலுமே விரும்பார்க ளறிவொன்றில்லார்
குருப்பாலர்க் கடவுளர்பால் வேதியர்பால்பு ரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே யடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்தீவார்.

பொருள்

பொருட்பாலை விரும்புவார்கள்  = பொருள் சேர்ப்பதை விரும்புவார்கள்

காமப்பாலிடை மூழ்கிப் = காமத்தில் மூழ்கி

புறள்வர் = புரளுவார்கள்

கீர்த்தி = புகழ்

யருட்பாலர்= அருள்தரும்

அறப்பாலைக் = அறச் செயல்களை

கனவிலுமே =  கனவில் கூட

விரும்பார்கள் = விரும்ப மாட்டார்கள்

அறிவொன்றில்லார் = அறிவில்லாதவர்கள்

குருப்பாலர்க் = நல்ல குருமார்களிடம்

கடவுளர்பால் = கடவுளிடம்

வேதியர்பால் = வேதியர்களிடம்

புரவலர்பால் = அரசனிடம்

கொடுக்கக் கோரார் = கொடுக்க நினைக்க மாட்டார்கள்

செருப்பாலே யடிப்பவர்க்கு = செருப்பால் அடிப்பவர்க்கு

விருப்பாலே = விருப்பமுடன்

கோடி = கோடி

செம்பொன் = உயர்ந்த  பொன்னை

சேவித்தீவார் = வணங்கி தருவார்கள்


பணம்  இருந்தால் முதலில் அதை வைத்து என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று  பார்க்க வேண்டும். குருவிடம் தருவது என்றால் , வித்தை கற்றுக் கொள்ள பணத்தை  செலவிட வேண்டும். வித்தை என்றால் ஏதோ பாடம் படிப்பது பட்டும் அல்ல. உடற் பயிற்சி கற்றுக்  கொள்ளுவது, நல்ல உணவு முறைகளை கற்றுக் கொள்ளுவது, ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொள்ளுவது, நம் ஆளுமையை (personality ) முன்னேற்றக் கற்றுக் கொள்ளுவது, குழந்தை வளர்ப்பு,  என்று பல விதங்களில் நம்மை உயர்த்திக் கொள்ள பணத்தை செலவிட வேண்டும்.

அடுத்து, கடவுளுக்கு தர வேண்டும். கடவுளுக்கு தருவது என்றால் ஏதோ கடவுள் பணம்  இல்லாமல் நம்மிடம் கையேந்தி நிற்கிறார் என்று அர்த்தம் அல்ல. தர்ம காரியங்களுக்கு செலவிட வேண்டும்.

அடுத்து, வேதியற்கு. உயர்ந்த வேதங்கள்,  தேவாரம்,திருவாசகம், பிரபந்தம்  போன்றவை யாரும்  வாசிக்காமல் , பாடாமல் நாளடைவில் தேய்ந்து நலிந்து போகும். அவை வழக்கொழிந்து போனால் மிகப் பெரிய நட்டம் நமக்கும்  நம் வருங்கால சந்ததிக்கும். அவை அப்படி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் , வேதியர்களை போற்றி, அவர்களுக்கு பொருள் கொடுத்து  காக்க வேண்டும்.

அடுத்து, செல்வாக்கு உள்ளவர்களை பரிச்சியம் செய்து கொள்ள பணம் செலவிட  வேண்டும். பெரிய இடத்தில் உள்ளவர்களின் தொடர்பு நமக்கு மிகுந்த நன்மையைத் தரும்.

அடுத்து, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை ஒழுங்காக செலுத்த வேண்டும்.

இப்படி எல்லாம் செய்யாமல் , கேளிக்கைகளில், மது, மாது என்று தீய வழிகளில்  பணத்தை செலவிட்டால், பின் தீயவர்கள் சகவாசம் ஏற்பட்டு, அவர்கள்  நம் பணத்தை நம்மிடம் இருந்து நம்மை துன்பப்  படுத்தி பிடுங்கிக் கொள்வார்கள்.

யோசித்துப் பாருங்கள், உங்கள் வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று.

சம்பாதிப்பது மட்டும் அல்ல , சரியான வழியில் செலவழிப்பதும் ஒரு கலை.

அதையும் கற்றுக்  கொள்ளுங்கள்.

விவேக சிந்தாமணி உங்களை அந்த திசையில் சிந்திக்க தூண்டுகிறது.

சிந்தியுங்கள்.


Friday, April 3, 2015

விவேக சிந்தாமணி - விருந்தினர்களை உபசரிக்கும் முறை

விவேக சிந்தாமணி - விருந்தினர்களை உபசரிக்கும் முறை 


விருந்தினர்களை உபசரிப்பது என்பது தமிழரின் பண்பாடு. விருந்தோம்பல் என்று அதற்கு ஒரு அதிகாரமே வைத்திருக்கிறார்  வள்ளுவர். விருந்தோம்புதலை ஒரு அறம் என்றே நம் முன்னவர்கள் கொண்டார்கள்.

இன்று நம் பிள்ளைகளுக்கு விருந்தினரை எப்படி உபசரிப்பது என்று தெரிவதில்லை.

வீட்டிற்கு ஒருவர் வந்தால் கூட, அவர்கள் பாட்டுக்கு அவர்கள் அறையில் இருக்கிறார்கள். ...அவர்களின் கை பேசி, கணணி, youtube , facebook என்று இருக்கிறார்கள்.

இப்படி ஒரு இரண்டு தலைமுறை சென்றால் விருந்து என்ற ஒன்றே இல்லாமல் போய்  விடும்.

அவர்களை விட்டு விடுவோம். எதற்கு எடுத்தாலும் இளைய தலைமுறையையே ஏன் குற்றம் சொல்ல வேண்டும். எப்படி விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் என்று  நமக்கே சரியாகத் தெரியுமா ? நமக்குத் தெரிந்தால் அல்லவா  அதை பிள்ளைகளுக்குச் சொல்லி தர.

விவேக சிந்தாமணி சொல்லித் தருகிறது....எப்படி விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் என்று.

முதலில் விருந்தினரை ஆவலோடு, ஆச்சரியத்தோடு, வியந்து நோக்க வேண்டும்.

இரண்டாவது, நல்ல வார்த்தைகளை இனிமையாக சொல்ல வேண்டும்.

மூன்றாவது, அவர்களை நன்றாகப் பார்க்க வேண்டும். முகத்தை எங்கேயோ வைத்துக் கொண்டு, டிவி பார்த்துக் கொண்டு, கை பேசியில் chat பண்ணிக்கொண்டு "ம்ம்..சொல்லுங்க...அப்புறம் " என்று விருந்தினர்களோடு பேசக் கூடாது. சில பேர் விருந்தினர்களை அழைத்துக் கொண்டு உயர்ந்த உணவு விடுதிக்குப் (hotel ) போவார்கள்..அங்கு போய் அமர்ந்து கொண்டு, ஆளாளுக்கு ஒரு   கை பேசியில் (cell போன்) குறுஞ் செய்தி (sms ) அனுப்பிக் கொண்டு இருப்பார்கள். எல்லார் கவனமும் அவர்களின் கை பேசி மேல். அப்படி அல்ல, வந்த விருந்தினர்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும்.

நான்காவது, அவர்களை "வாருங்கள்" என்று அழைக்க வேண்டும்

ஐந்தாவது, அவர்களை எழுந்து சென்று வரவேற்க வேண்டும். இருந்த இடத்தில் இருந்து கொண்டே "வாங்க" என்று சொல்லக் கூடாது.

ஆறாவது, அவர்களோடு முன்னாளில் எப்படி எல்லாம் மகிழ்வாக இருந்தோம் என்று நினைவு படுத்த வேண்டும்.

ஏழாவது, விருந்தினர்களின் அருகில் இருக்க வேண்டும். அவர்களை விட்டு விலகக் கூடாது. "இது தான் உங்கள் அறை ...ஏதாவது வேண்டும் என்றால் கூப்பிடுங்கள் " என்று சொல்லிவிட்டு நாம் பாட்டுக்கு நம் வேலையை பார்க்கக் போய் விடக் கூடாது.

எட்டாவது, அவர்கள் செல்லும் போது அவர்கள் கூடவே கொஞ்ச தூரம் போய் வழி அனுப்ப வேண்டும். "சரி, கிளம்புறீங்களா, அப்புறம் பாக்கலாம், போகும் போது அந்த கதவை அப்படியே சாத்தி விட்டு போங்க " என்று சொல்லக் கூடாது.

ஒன்பதாவது, அவர்கள் போகும் போது நல்லதாக அவர்கள் மனம் மகிழும்படி சில நல்ல வார்த்தைகளை சொல்லி அனுப்ப வேண்டும் "நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்....அடிக்கடி வந்து போங்க...வீட்டுல எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுங்க..பத்திரமா போயிட்டு வாங்க " என்று சில நல்ல வார்த்தைகளை சொல்லி அனுப்ப வேண்டும்.

பாடல்

"விருந்தின னாக ஒருவன்வந் தெதிரில்
வியத்தல்நன் மொழியினி துரைத்தல்
திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்
எழுதல்முன் மகிழ்வன செப்பல்
பொருந்துமற் றவன்தன் அருகுற இருத்தல்
போமெனிற் பின்செல்வ தாதல்
பரிந்துநன் முகமன் வழங்கலிவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடு பண்பே."


பொருள்

"விருந்தின னாக = விருந்தினனாக

ஒருவன் = ஒருவன்

வந் தெதிரில் = எதிரில் வந்தால்

வியத்தல் = முக மலர்ச்சியுடன் வரவேற்றல்

நன் மொழியினி துரைத்தல் = நல்ல வார்த்தைகளை இனிமையாக உரைத்தல்

திருந்துற நோக்கல் = நன்றாக அவர்களை பார்த்தல்

வருகென வுரைத்தல் = "வருக" என்று உரைத்தல்

எழுதல் = இருந்த இடத்தை விட்டு எழுந்திரித்தித்தல்

முன் மகிழ்வன செப்பல் = முன்பு மகிழ்ந்த நிகழ்வுகளை சொல்லுதல்

பொருந்து = பொருந்தும்படி

மற் றவன்தன்  அருகுற இருத்தல் = அவர்கள் அருகில் இருத்தல்

போமெனிற் = திரும்பி போகின்ற போது

பின்செல்வ தாதல் = பின்னால் போதல்

பரிந்து = அன்போடு

நன் முகமன் வழங்கல் = நல்ல புகழுரைகளை கூறுதல்

இவ் வொன்பான் =  இந்த ஒன்பது

ஒழுக்கமும் = ஒழுக்கமும்

வழிபடு பண்பே. = விருந்தினர்களை போற்றும் முறை

இதை ஒரு ஒழுக்கமாகவே சொல்லி இருக்கிறார்கள் நம்  முன்னவர்கள்.



Sunday, September 21, 2014

விவேக சிந்தாமணி - அமுதம் என்று அளிக்கலாமே

விவேக சிந்தாமணி - அமுதம் என்று அளிக்கலாமே 


அமுதம் வேண்டும் என்று தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மேரு மலையை மத்தாகவும், வாசுகியை நாணாகவும் கொண்டு கடைந்தார்கள்.

எவ்வளவு பெரிய வேலை அது.

அமுதத்திற்கு ஏன் இவ்வளவு அலைய வேண்டும் ?

என் காதலியின் வாயில் ஊறும் நீரை விடவா அந்த அமுதம் சிறந்தது ?

பாடல்

வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி 
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி வாயின் ஊறல் 
கண்டு சர்க்கரையோ தேனோ கனியடு கலந்த பாகோ 
அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே! 

பொருள்

வண்டு மொய்க்கும் குழல். காரணம் அதில் உள்ள பூக்கள். அப்போதுதான் பறித்த பூக்கள். வண்டுகளுக்குத் தெரியாது அது செடியில் இருக்கிறதா அல்லது அவள் தலையில் இருக்கிறதா என்று. அத்தனையும் புத்தம் புதிய பூக்கள். இன்னும் அதில் தேன் வடிந்து கொண்டிருக்கிறது. வண்டுகள் மொய்க்கின்றன. அப்படி என்றால் அதில் இருந்து வரும் மணம் எப்படி இருக்கும் .....




கெண்டையோடு ஒத்த கண்ணாள்

கெண்டை மீனைப் போன்ற கண்கள். மீன் போல் நீரில் தவழும் கண்கள். மீன் போல் அங்கும் இங்கும் அலையும் கண்கள்.


கிளிமொழி = கிளி போன்ற குரல்


வாயின் ஊறல் = வாயில் ஊற்றெடுக்கும் அமுதம்

கண்டு = அதைக் கண்டு

சர்க்கரையோ  = சர்க்கரையோ

தேனோ = தேனோ

கனியடு கலந்த பாகோ = கனிகளில் இருந்து எடுக்கப்பட்ட பாகோ

அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே! = இதையே அமுதம் என்று அளிக்கலாமே



Thursday, September 18, 2014

விவேக சிந்தாமணி - சேலை கட்டிய மாதர் 


ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம் 
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம் 
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம் 
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே! 

எவ்வளவோ அறங்களை எடுத்துச் சொல்லும் நம் தமிழ் இலக்கியங்கள், பெண்களின் ஆற்றலை குறைத்தே மதிப்பிடுகிறதோ என்று தோன்றுகிறது.

ஏன் பெண்களை நம்பக் கூடாது ?

மற்ற அனைத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு, ஒரு குணம் உண்டு, அவை அப்படித்தான்  இருக்கும்.

பெண்கள் அப்படி அல்ல.  அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன அவர்களின் தேவை என்று அவர்களுக்கே தெரியுமோ  என்னவோ.

 அவர்களை நம்பி ஒரு காரியம் செய்யப் போனால் , இடையில் அவர்கள் மனம் மாறி விட்டால் ?

ஒரு வேளை அப்படி அலை பாயும் மனதை நினைத்துதானோ என்னவோ இந்தப் பாடலை எழுதி இருப்பார்கள் ?




Tuesday, September 16, 2014

விவேக சிந்தாமணி - தேவை இல்லாதது

விவேக சிந்தாமணி - தேவை இல்லாதது 


எல்லோரும் ஒரு கால கட்டத்தில் தேவை இல்லாதவர்களாகப் போய் விடுகிறோம்.

நம்மிடம் இருந்து ஏதாவது பலன் கிடைக்கும் வரை தான் உலகம் நம்மை வேண்டும்,  விரும்பும்.அதற்குப் பின், தூக்கிப் போட்டு  விடும்.

எப்படி எல்லாம் என் பின்னால் சுற்றினார்கள், இப்போது ஒரு நாதியும் இல்லை எனக்கு என்று சொல்லும் ஒரு காலம் எல்லோருக்கும் வரும். அப்போது வருத்தப் படக் கூடாது என்று இப்போதே நம்மை தயார் படுத்துகிறது விவேக சிந்தாமணி.

பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி விட்டால் பெற்றோரின் சொல்லை கேட்க  .மாட்டார்கள்.  வயதானால் மனைவி கணவனை மதிக்க மாட்டாள். எல்லா வித்தையும் கற்ற பின்னால் சீடன் ஆசிரியனை மதிக்க  மாட்டான். நோய் குணமாகி விட்டால் நோயாளி மருத்துவனை மதிக்க மாட்டான்.

இது உலக இயற்கை. உலகம்  சுயநலமானது. நம்மால் உபயோகம் இருக்கும் வரைதான் உலகம் நம்மை  மதிக்கும். அது தகப்பனாக இருந்தாலும்  சரி, கணவனாக இருந்தாலும் சரி, ஆசிரியனாக இருந்தாலும் சரி, மருத்துவனாக இருந்தாலும் சரி....எல்லோருக்கும் இதே கதிதான்.

இவர்கள் தான் உலகம் என்று உடல் பொருள் ஆவி அனைத்தையும்   அவர்களுக்காக   செலவிடுவது உசிதமா ?

பாடல்


பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான் 
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள் 
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான் 
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்

(பண்டிதர் , இங்கே மருத்துவர் )

Monday, September 15, 2014

விவேக சிந்தாமணி - செவிக்கு கண் உரைத்த செய்தி

விவேக சிந்தாமணி - செவிக்கு கண் உரைத்த செய்தி 


(கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும். மற்றவர்கள் தயவு செய்து இதைப் படிக்க  வேண்டாம். பெண்ணின் உடல் அழகை வர்ணிக்கும் பாடல். கொஞ்சம் அதிகப்  படியாகவே. வெளிப்படையான வர்ணனைகளில் முகம் சுளிப்பவர்கள் படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்)



அவளின் தொப்புளில் இருந்து கீழே செல்லும் வழியில் மெல்லிய கரிய முடி, கீழே செல்லச் செல்ல அடர்ந்து கருப்பாக உள்ளது. அது ஏதோ கரிய நாகம் படம் எடுத்து ஆடுவது போல இருக்கிறது. அந்த நாகம் கீழே இருந்து அவளின் முகத்தை பார்த்தது. அந்த முகம் நிலவு போல இருந்தது. நிலவைக் கண்டு நாகம் படம் எடுத்து ஆடியது.

ஆனால், அந்த நிலவை இரண்டு மலைக் குன்றுகள் மறைத்தன. உடனே அந்த கரு நாகம், அந்த தடையை அவளுடைய கண்களிடம் சொல்லியது. அந்த கண் நீண்டு காதுவரைப் போய் அந்த செய்தியை காதிடம் சொன்னது.

பாடல்

உந்தியின் சுழியின் கீழ் சேருரோமமாம் கரியநாகம் 
சந்திரன் எனவே எண்ணித் தையலாள் முகத்தை நோக்க 
மந்திர கிரிகள் விம்மி வழிமறித் திடுதல் கண்டு 
சிந்துரக் கயற் கண்ணோடிச் செவிதனக்கு உரைத்ததம்மா

பொருள்

உந்தியின்  = வயிற்றின்

சுழியின் = தொப்புளில்

கீழ் = கீழே

சேருரோமமாம் = சேருகின்ற ரோமங்கள்

கரியநாகம் = கரிய நாகம் படம் விரித்து ஆடுவதைப் போல இருக்கிறது

சந்திரன் எனவே = சந்திரன் என்று

எண்ணித் = நினைத்து

தையலாள் முகத்தை நோக்க = அந்த பெண்ணின் முகத்தை நோக்க

மந்திர கிரிகள் = மந்திரம் போன்ற இரண்டு மலைகள்

விம்மி = விம்மி

வழிமறித் திடுதல் கண்டு = பார்க்கும் வழியை மறைப்பது கண்டு

சிந்துரக்  = சிவந்த

கயற் = மீன் போன்ற

கண்ணோடிச்  = கண்ணோடு சொல்ல. அது

செவிதனக்கு உரைத்ததம்மா = செவியிடம் சொன்னது



Saturday, September 13, 2014

விவேக சிந்தாமணி - தெய்வம் எனலாமே

விவேக சிந்தாமணி - தெய்வம் எனலாமே 


காதலியின் வரவுக்காக காத்திருக்கிறான் காதலன்.

தூரத்தில் அவள் வருவது தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் இருக்கும் இடம் நோக்கி வருகிறாள்.

கிட்ட வர வர அவன் இதயத் துடிப்பு எகிறுகிறது. உள்ளம் உருகுகிறது.

இன்னும் அருகில் வந்து விட்டாள் .  அவள் கூந்தல் காற்றில் அலை பாய்வது தெரிகிறது. அவள் கரிய  கூந்தல் அவன் மனதை  மயக்குகிறது. மயில் போல சாயல்.  பெரிய தனங்கள். இடையோ  சிறியது. சிறு குழந்தை போன்ற  முகம்.

அவளின் அழகைப் பார்க்கும் போது கை எடுத்து கும்பிடலாம் போல இருக்கும் அழகு.

அப்படி ஒரு தெய்வீக அழகு !


பாடல்

அருகில் இவளருகில் இவளருகில் வர உருகும் 
கரிய குழல் மேனியவள் கானமயில் சாயல் 
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ 
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே

Tuesday, June 5, 2012

விவேக சிந்தாமணி - தெருவில் நின்ற தேவதை


விவேக சிந்தாமணி - தெருவில் நின்ற தேவதை


பேருந்து நிலையத்தில் அவளுக்காக காத்திருக்கும் நேரம்.
இப்ப வந்துருவா.

அதோ தூரத்தில் வருவது அவ மாதிரி தான் இருக்கு.

அவளே தான்.

நெருங்கி வர வர இதயத் துடிப்பு எகிறுகிறது.

அந்த கரிய நீண்ட குழல், மயில் போன்ற சாயல், குழந்தை போல் களங்கமில்லா முகம்...

கையெடுத்து கும்பிடலாம்....தெய்வம் நேரில் வந்த மாதிரி இருக்கிறது....

விவேக சிந்தாமணியின் 107 ஆவது பாடல்....

Monday, June 4, 2012

விவேக சிந்தாமணி - பெண்களை நம்பாதே


விவேக சிந்தாமணி - பெண்களை நம்பாதே


தமிழ் இலக்கியம் ஆண் சார்ந்ததாகவே இருந்து வந்து இருக்கிறது.

மனைவியை சந்தேகித்த இராமனை இந்த நாடு கடவுள் என்றே போற்றுகிறது.

விலை மகள் பின்னால் போய், சொத்தை எல்லாம் அளித்த கோவலனை கோவிக்காமல் ஏற்றுக் கொண்ட கண்ணகியை கற்ப்புக்கு அரசி என்று கொண்டாடுகிறது தமிழ் கூறும் நல் உலகம்.

மனைவியை வைத்து சூதாடிய யுதிஷ்டிரன், தர்ம ராஜா

மனைவியை விற்ற அரிச்சந்திரன், சக்ரவர்த்தி

நாடு கானகத்தில் மனைவியின் சேலை தலைப்பை திருடிக்கொண்டு அவளை தவிக்க விட்டு சென்ற நளன், மகாராஜா

கவி பாட பாரதி, குனிந்து கும்மி அடிக்க நாங்கள் என்று பெண்கள் குரல் கொடுத்தாலும், ஆணாதிக்கம்தான் ஆல மரமாய் விரிந்து கிடக்கிறது தமிழ் இலக்கியம் எங்கும்.

பெண்களை தெய்வம் என்று போற்றிக் கொண்டே, அவர்களை கீழே தள்ளி எட்டி உதைக்கிறது இந்த சமூகம்....

விவேக சிந்தாமணி, பெண்களைப் பற்றி பேசுகிறது இங்கே....

Saturday, June 2, 2012

விவேக சிந்தாமணி - முன்னும் பின்னும்


விவேக சிந்தாமணி - முன்னும் பின்னும் 


விவேக சிந்தாமணி தமிழ் நீதி நூல்களில் சற்று வித்தியாசனமான நூல்.

பொதுவாகவே நீதி நூல்கள் அதை செய், இதை செய்யாதே என்று பெருசுக மாதிரி அட்வைஸ் பண்ணும். 

விவேக சிந்தாமணி அப்படி பட்ட நூல் அல்ல. ரொம்ப ப்ராக்டிகல். அதில் இருந்து ஒரு பாடல்: