Showing posts with label naan mani kadigai. Show all posts
Showing posts with label naan mani kadigai. Show all posts

Monday, October 30, 2023

நான் மணிக்கடிகை - செய்யக் கூடாத நான்கு

 நான் மணிக்கடிகை - செய்யக் கூடாத நான்கு 


நான் மணிக்கடிகை என்ற நூல் நான்கு மணி போன்ற விடயங்களை எடுத்துக் கொண்டு, அவற்றைக் கோர்த்து மாலை போல் தருகிறது. 


மிகவும் பயனுள்ள, வாழ்க்கைக்குத் தேவையான, சில சமயம் நாம் மறந்தோ அல்லது தெரியாமலோ செய்துவிடும் விடயங்கள். 


ஒரு முறை நினைவு படுத்திக் கொள்வது பயன் தரும். 


நம்மைவிட செல்வத்தில், படிப்பில், பதவியில், அறிவில் குறைந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களை நாம் தினமும் சந்திப்போம். 


நம்மைவிட எளியவர்கள் தானே என்று ஒரு போதும் அவர்களை ஏளனம் செய்து விடக் கூடாது. காரணம், காலம் யாரை எப்போது எங்கே கொண்டு வைக்கும் என்று தெரியாது. 


கூனி தானே, வயதானவள், பெண், கூன் விழுந்தவள், பணிப்பெண் நானோ சக்கரவர்த்தி திருமகன் என்று இராமன் நினைத்து அவள் மேல் விளையாட்டாக மண் உருண்டையை அடித்தான். 


அவள் நேரம் பார்த்து தாக்கினாள். இராமன் அரசை இழந்து, காட்டில் பதினாலு வருடம் துன்பப் பட்டான். அதை அவனே சுக்ரீவனிடம் சொல்கிறான். 


இரண்டாவது, எவ்வளவு நல்ல பொருள் என்றாலும், தீயவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடாது. காரணம், இன்று உயர்ந்த பொருளை கொடுத்தவன் பதிலுக்கு நாளை ஏதாவது தீய செயலில் நம்மை இழுத்து விட்டுவிடுவான். எவ்வளவு அவசரமாக இருந்தாலும்,  தீயவர்களிடம் இருந்து  ஒரு பொருளை பெற்றுக் கொள்ளக் கூடாது. 


மூன்றாவது,  தாழ்ந்தவர்கள் நம் உள்ளம் சுடும்படி பேசினாலும் பதிலுக்கு பேசக் கூடாது. காரணம், அவன் நிலைக்கு அவன் பேசுகிறான். நாம் ஏன் நம் நிலையை தாழ்த்திக் கொள்ள வேண்டும். நாய் குரைக்கிறது என்றால் பதிலுக்கு குரைக்க வேண்டுமா?  


நான்காவது,  கூறக் கூடாத சொற்களை ஒரு போதும் கூறிவிடக் கூடாது. கோபத்தில் வார்த்தை விழுந்து விட்டால் பின் அதை மீட்க முடியாது. மிகப் பெரிய துன்பத்தில், உறவில் பெரிய குழப்பத்தை அது ஏற்படுத்தி விடும். வார்த்தைகளை பேசும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தீய சொற்கள், சுடு சொற்கள், உண்மை அல்லாத சொற்கள், புறம் சொல்லும் சொற்கள் போன்றவற்றை ஒரு காலும் பேசக் கூடாது. 


பாடல் 


எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்

கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்

சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க

கூறல் லவற்றை விரைந்து.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_30.html


(pl click the above link to continue reading)



எள்ளற்க = ஏளனம் செய்யாமல் இருக்க 


என்றும் = எப்போதும் 


எளியாரென் = எளியவர் என்று எண்ணி, நினைத்து 


என் பெறினும் = எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் 


கொள்ளற்க = பெற்றுக் கொள்ளக் க் கூடாது 


கொள்ளார்கைம் மேலவா = பெற்றுக் கொடுக்கும் தகுதி இல்லாதவர் கை மேலே இருக்கும் படி 


உள்சுடினும் = உள்ளம் சுட்டாலும் 


சீறற்க = கோபிக்கக் கூடாது 


சிற்றிற் பிறந்தாரைக் = சின்ன + இல்லத்தில் + பிறந்தவரை = அதாவது தாழ்ந்தவர்களை, ஏழைகளை, வசதி இல்லாதவர்களை 


கூறற்க = சொல்லக் கூடாது 


கூறல் லவற்றை = கூறக் கூடாதவற்றை 


விரைந்து = விரைவாக 


சில சமயம் மற்றவர்கள ஏதாவது பேசும் போது, அது நம்மை சுட்டு விடலாம். கோபித்து, உடனே பதிலுக்கு நாம் ஏதாவது சொல்லிவிடுவோம்.  பொறு. கொஞ்சம் பொறுமையாக இரு. அவசரப்படாதே. 


"விரைந்து" சொல்லாதே.  ஆறப் போடு என்கிறது செய்யுள். 


யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வில் இந்தத் தவறுகளை எவ்வளவு செய்து இருக்கிறோம் என்று தெரியும். 


கிண்டல் செய்கிறேன், சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் என்று எதையாவது சொல்லி சிக்கலில் மாட்டி இருப்போம்.


கோபத்தில் வார்த்தையை விட்டு, பின்னால் வருந்தி இருப்போம். ச்சே, அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்று நாமே நம்மை கண்டித்து இருப்போம். 


அலுவலகத்தில் நமக்கு கீழே இருக்கும் ஒருவரை பற்றி நாம் ஏதோ சொல்லப் போக, அதை அவர் மனதில் வைத்துக் கொண்டு, நம்மை பற்றி மேலிடத்தில் இல்லாததும் பொல்லாததும் சொல்லி நமக்கு ஒரு சங்கடத்தை உண்டாக்கி இருப்பார். 


இது எல்லாம் ஏதோ நமக்கு மட்டும் நிகழ்வது என்று நினைக்கக் கூடாது. எல்லோருக்கும் எப்போதும் நிகழும் ஒன்று.  எனவேதான் அதை ஒரு நீதியாக போதிக்கிறது இந்த நூல். 


மொத்தம் நூற்றி நான்கு பாடல்கள் இருக்கின்றன. 


எல்லாவற்றையும் ஒரு முறை வாசித்து விடுங்கள். நல்ல விடயம்தானே. 



Wednesday, June 15, 2022

நான்மணிக்கடிகை - 6 - அறிவார் யார்?

 நான்மணிக்கடிகை -  6 - அறிவார் யார்? 


நான்மணிக்கடிகை என்ற நூல், வாழ்க்கையின் அனுபவத்தை, சாரத்தை வடித்துத் தரும் நூல். தங்கள் அனுபவத்தில் கண்டதை, நமக்கு உதவும் பொருட்டு எழுதி அருளிய நூல். 


தவறுகள் செய்து, அடிபட்டு, அனுபவங்களை சேகரித்து நாம் அந்தத் தவறுகளை செய்யாமல் இருக்கவும், அந்தத் துன்பங்களை அடையாமல் இருக்கவும், நம் மீது கருணை கொண்டு எழுதித் தந்த நூல். 


வீட்டில், பிள்ளையிடம் அம்மா சொல்லுவாளே "மழையில நனையதடா, காய்ச்சல் வரும்" என்று. அந்த அன்போடு, கரிசனத்தோடு கூறும் நூல். அம்மா ஒன்றும் மருத்துவர் கிடையாது. அவள் அனுபவம் சொல்கிறது மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று. 


அது போல உலக இயல்பை கவனித்து, யாதார்த்தை முழுவதும் உள்வாங்கி, இந்த உலகம் இப்படித் தான் இருக்கிறது. இது தான் இந்த உலகின் வரைபடம். இதை வைத்துக் கொண்டு நீ விரும்பிய இடத்தை அடையலாம் என்று நமக்கு ஒரு வழிகாட்டும் ஓரூர் நூல். 


ஏறக்குறைய நூறு பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு அனுபவத் தெளிவு. 


அதில் சில பாடல்களை பகிர்ந்து கொள்ள ஆசை.


நாம் சிலபேரை அவர்கள் தோற்றம், அவர்கள் பொருளாதார நிலை, அவர்கள் உடுத்தும் உடை, பேசும் பேச்சு, அவர்கள் நிறம், அவர்கள் பிறந்த குலம் இவற்றை வைத்து எடை போடுவோம். 


அது சரியல்ல. 


ஒருவரை சரியாக எடை போடவேண்டும் என்றால் அவரோடு பழகி, அவரின் அறிவு, குணம், ஒழுக்க, செயல் இவற்றை அறிந்து பின் முடிவு செய்ய வேண்டும். 


இந்த குடியில் பிறந்தவன் உயர்ந்தவன், இந்த குடியில் பிறந்தவன் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்று முடிவு செய்யக் கூடாது. எதையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்கிறது நான்மணிக்கடிகை. 


பாடல் 


கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று

ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்

பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,

நல் ஆள் பிறக்கும் குடி?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_15.html


(Pl click the above link to continue reading)




கள்ளி = கள்ளி மரத்தின் 


வயிற்று இன்  = உள்ளே 


அகில் பிறக்கும் = அகில் என்ற வாசனைப் பொருள் தோன்றும் 


மான் வயிற்று = மானின் வயிற்றில் 


ஒள் அரிதாரம் பிறக்கும்  = முகத்தில் பூசும் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும் 


பெருங் கடலுள் = குடிக்க முடியாத, ,உப்பு நிறைந்த கடலின் இடையே 


பல் விலைய முத்தம் பிறக்கும் = விலை மதிக்க முடியாத பல வித முத்துக்கள் பிறக்கும் 


அறிவார் யார், = யாருக்குத் தெரியும் ?


நல் ஆள் பிறக்கும் குடி? = நல்ல மனிதர்கள் பிறக்கும் இடம் 


நல்ல மனிதர்கள் எங்கும் தோன்றலாம். இங்குதான் தோன்ற வேண்டும், இங்கு தோன்ற முடியாது என்று நினைக்கக் கூடாது. நல்லது எங்கும் இருக்கலாம். ஒரு திறந்த மனத்தோடு உலகை அணுகினால் எல்லோரும் நட்பாவார்கள், பகை என்பது இருக்காது. யாரையும் உதாசீனம் செய்யும் எண்ணம் வராது, யாரையும் தவறாக நல்லவர்கள் என்று எடை போட்டு ஏமாற மாட்டோம். 


மிக எளிய, நடை முறையில் உள்ள உதாரணங்கள் மூலம், உயர்ந்த அனுபவத்தை சொல்லும் பாடல். 




Sunday, October 31, 2021

நான்மணிக்கடிகை - கெட்டறிப கேளிரான் ஆய பயன்

நான்மணிக்கடிகை - கெட்டறிப கேளிரான் ஆய பயன்


யார் உறவு, யார் உறவு அல்லாதார் என்று நமக்கு ஒரு துன்பம் வரும் போதுதான் தெரியும். 


நன்றாக இருக்கும் காலத்தில் எல்லோரும் நட்பாக உறவாக இருப்பார்கள். துன்பம் வந்தால், எங்கே நம்மிடம் ஏதாவது கேட்டு விடுவானோ என்று எண்ணி மெதுவாக நகன்று விடுவார்கள். 


அதிலும் ஒரு நன்மை இருக்கிறது. உண்மையான உறவும் நட்பும் அப்போதுதான் தெரியும். 


உலகில் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. 


நவமணிகளின் தரம் அறிய அவற்றை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒரு குதிரை எப்படி இருக்கிறது என்று அறிய அதன் மேல் சேணம் அமைத்து, ஓட்டிப் பார்த்து அறியலாம். பொன் எவ்வளவு உயர்ந்தது என்று அறிய அதை உருக்கிப் பார்க்க வேண்டும். உறவினர்களின் தரம் நாம் துன்பத்தில் இருக்கும் போது தெரியும். 


பாடல் 


மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து

எறிய பின்னறிப மாநலம் மாசறச்

சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப

கேளிரான் ஆய பயன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_31.html


(Please click the above link to continue reading)



மண்ணி யறிப மணிநலம்  = கழுவி சுத்தம் செய்து அறிக நவமணிகளின் தரத்தை 


பண்ணமைத்து = சேணம் கடிவாளம் இவற்றை அமைத்து 

எறிய = ஏறி அமர்ந்த 


பின்னறிப = பின்னால் அறிக 


மாநலம் = குதிரையின் தரம் 


மாசறச் = குற்றமற்ற 


சுட்டறிப = உருக்கி அறிக 


பொன்னின் நலங்காண்பார் = தங்கத்தின் தன்மை அறிய வேண்டுபவர் 


கெட்டறிப = கெட்ட பின், அதாவது துன்பம் வந்த காலத்து அறிக 


கேளிரான் ஆய பயன் = உறவினர்களால் உண்டாகும் பயன். 



நல்ல நாளில் நமக்கும் உறவின் அருமை தெரியாது. 


உடம்புக்கு முடியவில்லை என்று படுத்துக் கொண்டால் கணவன் அல்லது மனைவியின் அருமை அப்போது தான் தெரியும். மத்த நாளில் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். உடம்புக்கு முடியவில்லை என்றால் தான் ஒருவரின் அருமை மற்றவருக்குத் தெரியும். 


அது  இரண்டு விதத்திலும் தெரியும். 


உருக்கமாக கவனித்துக் கொண்டால் அருமை தெரியும். 


கண்டு கொள்ளாமல் இருந்தால்,அது அவ்வளவுதான் என்று தெரியும். 


எப்படி என்றாலும் உறவின் தரம் துன்பத்தில் தெரியும். 


இதையே வள்ளுவரும்,


"கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்" என்றார். 


கெடுதலிலும் ஒரு நன்மை இருக்கிறது. அது உறவினர்களை அளக்கும் ஒரு அளவு கோல் என்றார். 



Friday, September 17, 2021

நான்மணிக்கடிகை - எதைச் செய்யக் கூடாது ?

 நான்மணிக்கடிகை - எதைச் செய்யக் கூடாது ?


சில சமயம் நமக்கு சில செயல்களை செய்வதில் ஒரு தயக்கம் இருக்கும். இதைச் செய்யலாமா கூடாதா, இதைச் சொல்லலாமா கூடாதா என்று ஒரு தயக்கம் இருக்கும்.  சரி போலவும் தெரியும், தவறு போலவும் தெரியும். செய் என்று ஒரு மனம் கூறும். செய்யாதே என்று இன்னொரு மனம் கூறும். 


எப்படி முடிவு எடுப்பது?


அந்த நேரத்தில், ஒரு நொடியில் முடிவு எடுக்க வேண்டி இருக்கும். 


அது பற்றி முன்பே சிந்தித்து இருந்தால், பழக்கம் இருந்தால் முடிவு எடுப்பது எளிதாக இருக்கும். இல்லை என்றால் தட்டுத் தடுமாறி ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு, அது சரிதானா என்று குழம்பிக் கொண்டே இருப்போம். 


அந்த மாதிரி சமயங்களில் நமக்கு உதவி செய்ய தமிழில் ஆயிரம் நூல்கள் இருக்கின்றன. அவற்றை நன்றாகப் படித்து இருந்தால், தேவையான சமயத்தில் குழப்பம் இல்லாமல் முடிவு எடுக்க முடியும். 


நம்முடைய நண்பர் ஒருவர், அவருடைய நண்பரின் வீட்டு விசேடத்துக்கு அழைத்துச் செல்கிறார். நண்பரின் நண்பரோ பெரிய அரசியல் செல்வாக்கு உள்ள நபர். போன இடத்தில் நமக்கு ஒரு பெரிய பரிசு தருகிறார். அதை ஏற்றுக் கொள்ளலாமா கூடாதா? 


அலுவலகத்தில் கீழே வேலை பார்ப்பவர். ஏதோ ஒரு நெருக்கடியில் நம்மைப் பற்றி கொஞ்சம் தரக் குறைவாக பேசி விட்டார். அவரோடு சண்டை போட்டு, அவரை வேலையை விட்டு தூக்கி விடலாமா?


நமக்கு, நம்முடைய நண்பரின் பையனைப் பற்றி ஒரு செய்தி வருகிறது. அது நல்ல செய்தி அல்ல. அந்த செய்தி சரியா தவறா என்று நம்மால் தீர்மானிக்க முடியவில்லை. அந்தச் செய்தியை நண்பரிடம் சொல்லலாமா கூடாதா? 


பாடல் 



எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்

கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்

சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க

கூறல் லவற்றை விரைந்து.


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_17.html


(Please click the above link to continue reading)



எள்ளற்க = கேலி பேசாமல் இருக்க 


என்றும் = எப்போதும் 


எளியாரென் றென்பெறினும் = நம்மை விட எளியவர் ஏதாவது சொன்னாலும் 


கொள்ளற்க = பெற்றுக் கொள்ளக் கூடாது 


கொள்ளார்கைம் மேலவா  = பெறக் கூடாதவர்கள் கையில் இருந்து 


உள்சுடினும் = உள்ளம் சுட்டாலும் 


சீறற்க  = கோபம் கொள்ளக் கூடாது 


சிற்றிற் பிறந்தாரைக் = வறுமை உள்ள குடும்பத்தில் பிறந்தவரை 


கூறற்க = சொல்லாமல் இருக்க 


கூறல் லவற்றை விரைந்து = எதைச் சொல்லக் கூடாதோ அதை அவசரப் பட்டு 


நம்மை விட வலிமை குன்றியவர்களை பார்த்து ஏளனம் செய்யக் கூடாது. பணத்தில், பதவியில், படிப்பில் நம்மை விட கீழே உள்ளவர்களைப் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது. 


தீயவர்களிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது. இன்று ஒரு பொருளைக் கொடுப்பான். நாளை அதற்கு பதிலாக சட்டத்துக்கு புறம்பான காரியம் ஒன்றைச் செய்யச் சொல்வான். எவ்வளவு பெரிய விலை மதிக்க முடியாத பொருளாக இருந்தாலும், தீயவர்கள் கையில் இருந்து அதைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. விலை மதிக்க முடியாத பொருளையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்றால், அஞ்சுக்கும் பத்துக்கும் அவர்கள் கையை எதிர் பார்க்கலாமா? தீயவர்கள் எதையாவது கொடுத்து மயக்கி விடுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


வறுமையில் பிறந்தவர்கள் தங்கள் ஆற்றாமையில் ஏதாவது சொல்லி விடலாம். அதை பெரிது படுத்திக் கொண்டு அவர்களோடு மலுக்கு நிற்கக் கூடாது.  பாவம், அவன் வறுமை அவனை அப்படி பேசச் சொல்கிறது என்று பரிதாப்பட்டு மேலே சென்று விட வேண்டும். 


நல்ல செய்தி இல்லை என்றால் அதை அவசரப்பட்டு சொல்லக் கூடாது. ஆற அமர யோசித்து, அதன் தன்மை அறிந்து, தெளிவாக சொல்ல வேண்டும். மோசமான செய்திகளை யாரும் விரும்புவது இல்லை. 


இப்படி ஒரு நூறு பாடல்கள் இருக்கின்றன. 


மெனக்கெட்டால் ஓரிரு மணியில் படித்து முடித்து விடலாம். 


படித்து விடுவீர்கள்தானே ?



Wednesday, July 29, 2020

நான்மணிக் கடிகை - உலக இயற்கை

நான்மணிக் கடிகை  - உலக இயற்கை 


கடிகை என்றால் துண்டு. மணி கடிகை என்றால் மணிகள் அமையப்பெற்ற துண்டு. இந்த நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நல்ல கருத்துக்களை அழகாகச் சொல்லுவதால் இது நான் மாணிக்கடிகை என்று பெயர் பெற்றது.

இனிமையான, அனுபவ மொழிகள்.

நமக்கு இப்போது  சில வலிமைகள் இருக்கும். உடல் நன்றாக இருக்கும். ஞாபகம் சரியாக இருக்கும். நம் வேலையை நாமே செய்து கொள்ளக் கூடிய வலு இருக்கும்.

ஆனால், இந்த வலிமை அப்படியே இருக்காது. ஒரு நாள் கட்டாயம் குன்றும். எழுந்திருக்க முடியாமல் போய் விடலாம். நினைவு குறைந்து பல விட்டுப் போகலாம்.

அதை நினைக்க வேண்டும். என்றும் நாம் இதே வலிமையோடு இருப்போம் என்று நினைக்கக் கூடாது.

உடல் வலிமை மட்டும் அல்ல. எல்லா வலிமையையும் ஒரு நாள் குன்றும்.

உலகம் அனைத்தையும் ஆண்ட சர்வாதிகாரிகள் எங்கே? அவர்கள் கட்டிய அரசாங்கம் எங்கே? உலகிலேயே பெரிய நிறுவனம் என்று சொல்லிக் கொண்டிருந்த சில நிறுவனங்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

எல்லா வலிமையையும் ஒருநாள் குன்றும்.

அது போல, பிறந்த உயிர்கள் எல்லாம் கட்டாயம் ஒரு நாள் அழியும். சந்தேகமே இல்லை.

அது போல, செல்வம். ஓரிரு தலைமுறைகள் இருக்கும். பின் விட்டுச் சென்று விடும்.  செல்வோம் என்பதால் அது செல்வம்.

இளமை அப்படியே இருக்குமா? இளமை மாறி முதுமை வருவது கட்டாயம்.

இதை எல்லாம் உணர்ந்து என்றும் அறம் செய்ய வேண்டும்.

பாடல்

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் - மூவாது
இளமை யிசைந்தாரும் இல்லை - வளமையிற்
கேடுஇன்றிச் சென்றாரும் இல்.

பொருள்

(click the link below to read further)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_64.html

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம் = பிறந்த உயிர்கள் சாகாமல் இருக்க முடியாது.


தாவாத இல்லை வலிகளும்  = எல்லாம் வலிமையையும் ஒரு நாள் குன்றும்.

மூவாது இளமை யிசைந்தாரும் இல்லை = மூப்பு அடையாமல் எப்போதும் இளமையோடு இருப்பவர் யாரும் இல்லை

வளமையிற் கேடுஇன்றிச் சென்றாரும் இல். = செல்வச் செழிப்போடு இருந்தாலும், அந்தச் செல்வம் நீண்ட நாள் நிற்காமல் போய் விடும்.


பிறந்தது இறக்கும், வலிமைகள் குன்றும், இளமை போய் முதுமை வரும், செல்வம் ஒரு நாள் போய் விடும்.

யாக்கை நிலையாமை
இளமை நிலையாமை
செல்வத்தின் நிலையாமை
வலிமையின் நிலையாமை

இந்த நிலையாமைகளைப் பற்றி ஒரே செய்யுளில் சொல்கிறது நான்மணிக் கடிகை.

இந்த நூலில் உள்ள மற்ற பாடல்களையும் படித்துப் பாருங்கள். 

Sunday, November 20, 2016

நான்மணிக் கடிகை - ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன

நான்மணிக்  கடிகை - ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன


எவ்வளவோ காரியங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது. சிலவற்றை உடனடியாகச் செய்கிறோம். மற்றவற்றை பின்னால் செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைக்கிறோம்.

தள்ளி வைத்த காரியங்கள் குவிந்து கொண்டே போகின்றன. நமக்கு நிறைய காலம் இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

காலம் இருக்கத்தான் செய்கிறது. இல்லை என்று சொல்வதற்கில்லை. இருந்தும், அந்தக் காலங்கள் அனைத்தும் உருண்டோடி விடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் , கடைசியில் ஒன்றும் இருக்காது.  எனவே தள்ளிப் போடும் காரியங்கள் எவை எவை என்று பாருங்கள்.

முடிந்தவரை தள்ளிப் போடாமல் செய்யப் பாருங்கள்.


பாடல்

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.

சீர் பிரித்த பின்


ஊழியும் ஆண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.

பொருள்


ஊழியும் = ஊழிக் காலமும்

ஆண்டு = ஆண்டுகளால்

எண்ணி = எண்ணிக்கையில்

யாத்தன = செய்யப் பட்டன. யாத்தல் என்றால் கட்டுதல் என்று பொருள்.

யாமமும் = யாமமும்

நாழிகையானே = நாழிகையால்

நடந்தன = நடந்து முடியும்

தாழீயா = காலம் தாழ்த்தாமல்

தெற்றென்றார் கண்ணே  = தெளிந்தவரிடம் சென்று

தெளிந்தனர் = தெளிவு பெற்றனர்

வெட்கென்றார் = அறிவு இல்லாதவர்கள்

வெஞ் சொலால் = பயனில்லாத சொற்களால்

இன்புறுவார் = இன்பம் அடைவார்கள்

ஊழிக் காலம் இருந்தாலும், ஒவ்வொரு வருடமாய் தேய்ந்து, பின் அது கொஞ்சம்  யாமங்களாக மாறும். பின் அந்த யாமங்கள் குறைந்து குறைந்து நாழிகையாகி பின்  அதுவும் இல்லை என்று ஆகிவிடும்.

அறிவுள்ளவர்கள் , காலம் நிறைய இருக்கிறது, பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்க மாட்டார்கள். எதை முதலில் செய்ய வேண்டும், எதை பின்னால்  செய்ய வேண்டும் என்று மற்ற படித்து தெளிந்தவர்களிடம் சென்று  கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி நடப்பார்கள்.

அறிவில்லாதவர்கள், வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு அதில் இன்பம் காண்பார்கள்.

"தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்" . நாமே எல்லா புத்தகங்களையும் படித்து  தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. அனைத்து புத்தகங்களையும் படித்து முடிக்க  ஒரு ஆயுள் போதாது. அப்படியே படித்து விட்டாலும், தெளிவு பிறக்காது . படிக்க படிக்க குழப்பம் அதிகரிக்கும்.

பின் எப்படி தெளிவு பெறுவது ?

எதைப் படிப்பது, எப்படி படிப்பது, எப்போது படிப்பது , அவற்றின் சாரம் அல்லது அர்த்தம் என்ன என்று படித்து தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலம் இருக்கிறதே என்று நல்ல காரியங்களை தள்ளிப் போடக் கூடாது. காலம் கரைந்து விடும்.




Wednesday, January 6, 2016

நான்மணிக்கடிகை - பெரிய அறன் ஒக்கும்

நான்மணிக்கடிகை -  பெரிய அறன் ஒக்கும் 



திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு. 

திரு ஒக்கும் , தீது இல் ஒழுக்கம் பற்றி முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

அடுத்து, "பெரிய அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்" என்றால் என்ன என்று பார்ப்போம்.

அற நெறியில் வாழ வேண்டும், அறத்தை பின் பற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்லப் படுகிறது.

அற நெறி என்றால் என்ன ? அது எந்தப் புத்தகத்தில் இருக்கிறது ?

நம் பெரியவர்கள் அறத்தை இரண்டாகப் பிரித்தார்கள்

- இல் அறம் = இல்லறம்
- துறவு + அறம் = துறவறம்

துறவறம் தூய்மையானது. பற்று அற்றது. ஆசைகளை துறந்தது. ஆனால் அது எல்லோராலும் முடியாது .

எல்லாவற்றையும் விட்டு விட்டுப் போவது என்றால் நடக்கிற காரியமா ?

இல்லறத்தில் இருந்து அதை ஒழுங்காக நடத்திக் கொண்டு சென்றால் அதுவே தூய்மையான துறவறத்துக்கு ஒப்பானது.

பெரிய அறம் = துறவறம். அது பெரியது. ஏன் என்றால் அதை செய்வது கடினம்.

பெரிய அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகுதல் ...

ஆற்றின் ஒழுகுதல் என்றால் சிறப்பான முறையில் இல்லறத்தை நடத்திக் கொண்டு செல்வது.

அது எப்படி ஆற்றின் ஒழுகுதல் என்றால் வழியே செல்லுவது என்றுதானே அர்த்தம் ? ஆறு என்றால் வழி என்று தானே பொருள் என்று நீங்கள் கேட்கலாம்.

வள்ளுவர் சொல்கிறார்...

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.

இதற்கு பொருள் சொன்ன பரிமேலழகர் ....

இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் = ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவானாயின்;

புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன் = அவன் அதற்குப் புறமாகிய நெறியிற் போய்ப்பெறும் பயன் யாது?

இல்லறத்தில் இருந்து, அதை அற வழியில் செலுத்துபவனுக்கு , துறவறத்தில் என்ன கிடைக்கப் போகிறது ? ஒன்றும் இல்லை.

அது என்ன அற வழியில் இல்லறம் ? ஒரு குடும்பத்தை எப்படி நல்ல வழியில் செலுத்துவது ?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல் வாழ்கை பண்பும் பயனும் அது

என்பார் வள்ளுவர்.

பழிக்கு அஞ்சி, பகுத்து உண்டல் இல் வாழ்வின் அறம் .

இல்லறத்தில் அன்பு இருக்க வேண்டும்.

இல்லறத்தில் அறம் இருக்க வேண்டும்.

இல்லறத்தில் வாழ்பவன் யார் யாரை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று பெரிய பட்டியல் தருகிறார் வள்ளுவர்.  அதை பின் ஒரு நாள் பார்ப்போம்.

இப்போதைக்கு பெரிய அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல்....




Monday, December 21, 2015

நான்மணிக்கடிகை - எது, எதற்குச் சமம் ?

நான்மணிக்கடிகை - எது, எதற்குச் சமம் ?



திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு. 

செல்வம் வேண்டுமா ?

செல்வம் வேண்டாம் என்று யாரவது கூறுவார்களா ?

அந்த செல்வத்தைத் தேடித்தானே இத்தனை அலைச்சல்.

எப்படி அந்த செல்வத்தை அடைவது ?

படிக்க வேண்டுமா ? அதிர்ஷ்டம் வேண்டுமா ? பெரிய ஆட்களின் நட்பு வேண்டுமா ? எது இருந்தால் செல்வத்தை அடையலாம் ?

இது ஒண்ணும் வேண்டாம்.

குற்றம் இல்லாத ஒழுக்கம் இருந்தாலே செல்வம் தானாக வந்து சேரும் என்கிறது நான்மணிக்கடிகை.

அந்த ஒழுக்கமே செல்வத்திற்கு ஒப்பானது.

எப்படி என்று அறிவதற்கு முன்னால், ஒழுக்கம் என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம்.

ஒழுக்கம் என்றால் ஒழுகுதல்.

வீட்டின் கூரையில் ஒரு சிறு ஓட்டை இருந்தால் அதில் இருந்து நீர் ஒழுகுவதைப் பார்த்து இருப்பீர்கள்.

வீட்டில் குளியல் அறையில் உள்ள குழாய் சரியாக மூடாவிட்டால் நீர் ஒழுக்கிக் கொண்டே இருக்கும்.

அதே போல் நீங்கள் எதை விடாமல் செய்து கொண்டு இருக்கிரீர்களோ அது உங்களது ஒழுக்கம்.

காலையில் எழுந்தவுடன் காபி தினமும் காப்பி குடிக்கிறீர்களா ? அது உங்கள் ஒழுக்கம்.

தினமும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்கிறீர்களா ? அதுவும் உங்கள் ஒழுக்கம்.

சரி, நான் தினமும் "தண்ணி" அடிக்கிறேன். அதுவும் ஒழுக்கமா ?

நான் தினமும் திருடுகிறேன் ? அதுவும் ஒழுக்கமா ?

மீண்டும் நம் உதாரணத்துக்குப் போவோம்.

நீர் எங்கிருந்து எங்கே ஒழுகுகிறது ? உயர்ந்த இடத்தில் இருந்து தாழ்ந்த இடம் இடம் நோக்கி ஒழுகுகிறது. தாழ்ந்த இடத்தில் இருந்து உயர்ந்த இடம் நோக்கிப் போவது இல்லை.

அதுபோல, சான்றோர், உயர்ந்தோர் செய்த செயல்களை நாம் திரும்ப திரும்பச் செய்தால் அது ஒழுக்கம்.

அந்த ஒழுக்கம் செல்வத்திற்கு இணையானது.

ஒரு மாணவன் தினமும் 2 மணிநேரம் படிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்...அவன் கட்டாயம் நல்ல மதிப்பெண்கள் பெறுவான், நல்ல கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைக்கும், நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும். செல்வம் கிடைக்கும். அதற்க்கு காரணம் என்ன - ஒழுக்கம்.

ஒருவன் தினமும் பாடல் பயிற்சி செய்கிறான், ஒரு விளயாட்டில் பயிற்சி செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம் ...செய்து கொண்டே இருந்தால் அவன் அந்தத் துறையில் சிறந்து விளங்குவான்.

அப்படி சிறந்து விளங்கினால், அவனுக்கு செல்வமும், பேரும் புகழும் கிடைக்கும் அல்லவா.

எனவே தான்,

திரு ஒக்கும் , தீது இல் ஒழுக்கம்

என்கிறது நான் மணிக்கடிகை.

நான் தினமும் தண்ணி அடிக்கிறேன், புகை பிடிக்கிறேன் என்றால் அதுவும் ஒழுக்கம் தான்.   ஆனால் அது தீய ஒழுக்கம். அது செல்வத்தைத் தராது.

இன்னும் சிந்திப்போம்





Monday, April 13, 2015

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது 


நிறைய செல்வம் இருந்தால் நமக்கு என்ன என்ன இன்பம் எல்லாம் கிடைக்கும் ?

புகழ், மதிப்பு, இன்பம், துன்பம் இல்லா வாழ்க்கை, பயமற்ற வாழ்க்கை, பெரிவர்களின் தொடர்பு ...இது போன்றவை கிடைக்கும் அல்லவா ?

அது போல, நல்ல ஒழுக்கத்தில் வாழ்ந்தால் இவை எல்லாம் கிடைக்கும். நல்ல ஒழுக்கம் வாழ்வில் முன்னேற்றம் தரும், நல்லவர்களின் தொடர்பைத் தரும், வாழ்கை சுகமாக இருக்கும், யாரைப் பற்றியும் பயம் இருக்காது, அது நம்மை முன்னேற்றி செல்வமும் தரும். எனவே, நல்ல ஒழுக்கம் செல்வத்தைப் போன்றது. செல்வம் இருந்தால் தான் வாழ்க்கை என்று சிலர் ஒழுக்கம் அற்ற வழியில் அதை தேட முயல்கிறார்கள். அது தவறான வழி. ஒழுக்கமான வாழ்வே செல்வம் நிறைந்த வாழ்வை போன்ற திருப்தியும் நிம்மதியும் தரும்.

துறவறம் இனிமையானது. எதிலும் பற்று இல்லாமல் இருப்பது. இதற்காக எல்லாவற்றையும் விட்டு விட்டு கானகம் போக வேண்டிய அவசியம் இல்லை. இல்லறத்தில் இருந்து, எதையும் அளவோடு அனுபவித்து வாழ்வது துறவம் போன்றது. எதிலும் நிதானம். எதிலும் ஒரு அளவு. கிடைக்கும் போது அளவோடு அனுபவிப்பது. கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருந்துவது இல்லை. இது துறவறம் போன்றது ஆகும்.

ஒருவரிடம் நடப்பாக இருக்கும் போது அவர் தன்னைப் பற்றியும், தனக்கு நிகழும் நல்லது கெட்டது பற்றியும் நம்மிடம் சொல்லி இருப்பார். பின், அந்த நட்பு முறிந்து விலக நேரிட்டால், அவர் சொன்ன அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்வது அவரை கொலை செய்வது போன்றது ஆகும்.

நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றி சொல்வது, இழிவான செயலாகும்.

பாடல்

திருவொக்குந் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு.

பொருள்


திருவொக்குந் = திரு ஒக்கும். செல்வத்தை போன்றது.

தீதில் ஒழுக்கம் = தீது இல்லாத ஒழுக்கம்

பெரிய அறனொக்கும் = பெரிய அறத்தைப் போன்றது. அது என்ன பெரிய அறம் ? துறவறம் உள்ள அறங்களில் பெரிய அறம்

ஆற்றின் ஒழுகல் = முறையோடு வாழ்தல்.  முறையோடு வாழ்தல் என்பது இல்லறத்தில் இருந்து முறைப் படி வாழ்தல்.

பிறனைக் கொலையொக்குங் = பிறனை + கொலை + ஒக்கும் = பிறனை கொலை செய்வதற்கு ஒப்பாகும்

கொண்டு = முதலில் நட்பு கொண்டு

கண் மாறல்= பின் அது மாறி, நடப்புக்கு எதிரான செயல்களை செய்வது

புலையொக்கும் = இழிவானதாகும்

போற்றாதார் முன்னர்ச் செலவு = நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றிச்  சொல்வது


அது எப்படி ஒழுக்கமாக இருப்பது செல்வத்திற்கு ஒப்பாகும் ? இன்னும் சொல்லப் போனால் ஒழுக்கமாக வாழ்பவன் செல்வம் இல்லாமல் துன்பப் படுவதைப் பார்க்கிறோம். ஒழுக்கம் இல்லாதவன் அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்த்து  சந்தோஷமாக இருப்பது கண்ணெதிரில் தெரிகிறது. அப்படி இருக்கும் போது இதெல்லாம் நம்பும் படி இல்லை. கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடை முறைக்கு ஒத்து வராது ...என்று நாம் நினைக்கலாம்.

இது பற்றி நாளை மேலும் சிந்திப்போம்.





Saturday, April 11, 2015

நான் மணிக்கடிகை - சிறியவர்களை ஏளனம் செய்யாதே

நான் மணிக்கடிகை - சிறியவர்களை ஏளனம் செய்யாதே 


நான் மணிகடிகை  நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நல்ல கருத்துகளை உள்ளடக்கி    இருக்கிறது.

சிறியவர்களை ஏளனம் செய்யக் கூடாது.

எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும் கெட்டவர்களிடம் இருந்து வாங்கக் கூடாது.

நம்மை விட தாழ்ந்தவர்கள் நம்மைப் பற்றி தவறாகச் சொன்னாலும் அவர்கள் மேல் சீறி விழக் கூடாது

எப்போதும் நல்லன அல்லாதவற்றைக் கூறக் கூடாது.


பாடல்

எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

சீர் பிரித்த பின்

எள்ளற்க என்றும் எளியார் என் பெறினும் 
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

பொருள்

எள்ளற்க = குறை சொல்லாதே

என்றும் எளியார் = எப்போதும் எளியவரை

என் பெறினும் = என்ன ஆனாலும்

கொள்ளற்க = பெற்றுக் கொள்ளாதே

கொள்ளார்கைம் மேலவா = பெறக் கூடாதவர்களிடம் இருந்து

உள்சுடினும் = உள்ளம் சுடினும்

சீறற்க = கோபம் கொள்ளாதே

சிற்றில் பிறந்தாரை = கீழ் குடியில் பிறந்தவர்களை

கூறற்க = சொல்லதே

கூறல் லவற்றை விரைந்து.= சொல்லக் கூடாதவற்றை

சரி.

இது என்ன பெரிய விஷயமா. மத்தவங்களை கேலி பேசாதே, கெட்டவங்ககிட்ட எதையும் வாங்காதே,  கீழ் குடியில் பிறந்தவர்கள் தவறாக பேசினாலும் சீறி விழாதே, சொல்லக் கூடாததை சொல்லாதே என்பதெல்லாம் ஒரு  அறிவுரையா. இது யாருக்குத்தான் தெரியாது என்று நாம் நினைக்கலாம்.

கேட்க என்னவோ எளிதாகத்தான் இருக்கிறது.

நடை முறை சிக்கல் எவ்வளவு இருக்கிறது தெரியுமா.

சக்கரவர்த்தியின் மகன். அதுவும் மூத்த மகன். சின்ன பிள்ளையாக இருந்த போது , அரண்மனையில் வேலை பார்த்த ஒரு கூன் விழுந்த கிழவியின் முதுகில் மண் உருண்டை வைத்த அம்பால் அடித்து விளையாடினான்.

அவள் என்ன செய்தாள் ?

பதினாலு வருடம் இராமனையும், அவன் மனைவியியையும், தம்பியையும் காட்டுக்கு  விரட்டினாள். அங்கே சீதை சிறை பிடிக்கப் பட்டு இராவணனிடம் சிறை இருந்தாள். இத்தனையும்  எதனால் ? எளியவள் என்று கூனியை ஏளனம் செய்து அவள் முதுகில் அம்பு அடித்ததால்.

கானகம் போனது இராமனுக்கு வருத்தமா என்றால், ரொம்ப வருந்தினான்.

வருந்தியது மட்டும் அல்ல, சிறியவர்களை இகழாதே. அப்படி இகழ்ந்ததால் நாடிழந்து, காட்டுக்கு வந்து படாத பாடு படுகிறேன் என்று சுக்ரீவனிடம் சொல்லி  வருந்தினான் இராமன்.

சிறியர் என்று இகழ்ந்து நோவு
    செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகந்து, யான் ஓர் தீமை
    இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய
    கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின்,
    வெம் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.

சிறியர் என்று இகழ்ந்து மற்றவர்களை நோகச் செய்யாதே. இதை மறந்து நாம் ஒரு  தீமை செய்ததால் கூனியின் செயலால் வெந்துயர் கடலில் விழுந்தேன் என்று  நொந்து  கூறுகிறான்.

கேட்க என்னவோ எளிய அறம் தான். எல்லாம் தெரிந்த இராமன் அதை கடை பிடிக்கவில்லை. கஷ்டப் பட்டான். கஷ்டம் என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை. 

இதெலாம் எனக்குத் தெரியாதா என்று அப்படி எளிதாக  தள்ளி விடாதீர்கள்.

சரி, அது மட்டும் அல்ல, 

வள்ளுவர் கூறுகிறார்.....

பீலி பெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்று. 

அளவுக்கு அதிகமாக சேர்த்தால் மயில் இறகு கூட ஒரு வண்டியின் அச்சை முறித்து  விடும்.

இது எங்களுக்குத் தெரியாதா என்று நினைக்கக் கூடாது.

வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், எளியவர்கள்தானே என்று ஏளனம் செய்து  சின்ன சின்ன பகைகளை தேடிக் கொண்டால், ஒரு நாள் அவை எல்லாம்  ஒன்றாகச் சேர்ந்து உன்னை அழித்து விடும் என்கிறார். 

உலகம் யாரை  எப்போது எங்கே கொண்டு சேர்க்கும் என்று தெரியாது. 

யாரையும் ஏளனம் செய்யாமல் இருப்பது நலம். 

இராமனுக்கே அந்த கதி என்றால் , நாம் எம்மாத்திரம் ?





Thursday, October 30, 2014

நான்மணிக் கடிகை - இன்பம் பிறக்கும் இடம்

நான்மணிக் கடிகை - இன்பம் பிறக்கும் இடம்  


நான்மணிக் கடிகை என்ற நூல், ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகளை உள்ளடக்கியது.

அதில் இருந்து சில பாடல்கள்.


மணிகள் மலையில் பிறக்கும்
உயர்ந்த இன்பம் காதலியின் சொல்லில் பிறக்கும்
மென்மையான அருளில் இருந்து அறம் பிறக்கும்
அனைத்து இன்பங்களும் செல்வத்தில் இருந்து பிறக்கும்


பாடல்

கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி
சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று1
அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளிற் பிறந்து விடும்.

பொருள்

கல்லிற் = மலையில்

பிறக்குங் = தோன்றும்

கதிர்மணி = ஒளி வீசும் மணிகள்

காதலி = காதலியின்

சொல்லிற் பிறக்கும் = சொல்லில் பிறக்கும்

உயர்மதம் = சிறந்த களி கொள்ளும் இன்பம் (மதம் பிடிக்குமோ )

மெல்லென்று = மென்மையான

அருளிற் பிறக்கும்  = அருள் நெஞ்சத்தில் இருந்து பிறக்கும்

அறநெறி = அற நெறி

எல்லாம் = மற்றைய அனைத்து இன்பங்களும்

பொருளிற் பிறந்து விடும் = செல்வத்தில் இருந்து பிறக்கும்




Saturday, June 16, 2012

நான்மணிக்கடிகை - அனுபவ ஞானம்


நான்மணிக்கடிகை - அனுபவ ஞானம்


எல்லாம் அறிந்தாரும் இல்லை.

ஏதும் அறியாதாரும் இல்லை

எல்லா நல்ல குணங்களும் உள்ளவரும் இல்லை

ஒரு நல்ல குணம் கூட இல்லாதவரும் இல்லை.

மனிதர்களுக்குள் அறிந்ததும், அறியாததும், நல்லதும், கெட்டதும் கொஞ்சம் கூட குறைய இருக்கும்...மத்தபடி எல்லாரும் ஒண்ணுதான்

Thursday, June 14, 2012

நான் மணி கடிகை - தூக்கம் இல்லாதவர்கள்


நான் மணி கடிகை - தூக்கம் இல்லாதவர்கள்


நான் மணி கடிகை என்பது பதினெண் கீழ் கணக்கு நூல்களுள் ஒன்று.

கடிகை என்றால் உயர்ந்த ரத்தினம் என்று பொருள். நான் மணி கடிகையில் ஒவ்வொரு பாடலும் நாலு உயர்ந்த கருத்துகளை கொண்டுள்ளது.

யார் யாருக்கு தூக்கம் வராது என்று ஒரு பாடல்...

திருட நினைப்பவர்களுக்கு, காதல் வயப் பட்டவர்களுக்கு, சொத்து சேக்கணும் என்று நினைப்பவர்களுக்கு, சேர்த்த சொத்தை காபந்து பண்ண நினைப்பவர்களுக்கு தூக்கம் வராது.