Showing posts with label நம்மாழ்வார். Show all posts
Showing posts with label நம்மாழ்வார். Show all posts

Friday, August 3, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ள மனம் தவிர்த்தே


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ள மனம் தவிர்த்தே 


சில சமயம் சிறந்த பக்தர்களுக்குக் கூட இறைவன் மேல் சந்தேகம் வரும்..."கடவுள் என்று ஒருவன் இருந்தால் எனக்கு ஏன் இவ்வளவு துன்பம் வருகிறது...நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்..ஒருவேளை இந்த கடவுள், வேதம் எல்லாம் பொய் தானோ" என்று சந்தேகம் வரும். 

கடவுளை நம்பாத நாத்திக வாதிகள் கூட சில சமயம் "ஒரு வேளை கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரோ" என்ற சந்தேகம் வரலாம்.

சந்தேகம் யாருக்கு வந்தாலும், அவனை. வள்ளலே, மணி வண்ணனே என்று வெளிக்கு சொல்லி வைத்துக் கொள்வார்கள். இது எல்லாம் கடவுளுக்குத் தெரியாதா என்ன ?

"நானும் அப்படித்தான் இருந்தேன்...உன்னை உள்ளன்போடு புகழாமல், வெளிக்கு புகழ்ந்து உன்னையும் ஏமாற்றினேன்...பின், என் கள்ள மனம் தவிர்த்து, உன்னை கண்டு கொண்டேன், இனி உன்னை விடமாட்டேன்" என்கிறார் நம்மாழ்வார்...


Thursday, July 19, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை


நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை


வீட்டில் காவலுக்கு நாய் வைத்து இருப்பவர்கள் "நாய் ஜாக்கிரதை" என்று போர்டு மாட்டி இருப்பார்கள்.

"இங்கு காவலுக்கு நாய் இருக்கிறது. பார்த்து வாருங்கள். ஜாக்கிரதையாய் இருங்கள்" என்று வருபவர்களை எச்சரிக்கை விடுவார்கள்.

பேருந்து நிலையம், புகை வண்டி நிலையம் போன்ற பொது இடங்களில் "பிக் பாக்கெட் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்து இருப்பார்கள். 

நம்மாழ்வார் அது மாதிரி "பெருமாள் ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை விடுகிறார்.

இந்த பெருமாள் இருக்கிறாரே அவரிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்.

உங்கள் மனதையும், உயிரையும் நீங்கள் அறியாமலே அவன் எடுத்துக் கொள்வான், சரியான கள்வன்.

மனதை திருடுவது மட்டும் அல்ல, திருடிய பின், அந்த இடத்தில் தன்னை இட்டு நிரப்பி விடுவான்.

உங்களுக்கு நீங்கள் இழந்தது கூட உங்களுக்குத் தெரியக் கூட தெரியாது....எனவே அவனிடம் ஜாக்கிரதையாய் இருங்கள். என்று அன்பாக எச்சரிக்கார்...

அந்தப் பாசுரம் 

Sunday, April 8, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம்மாழ்வார் - vaccination


ஏதோ இந்த தேவாரம், திருவாசகம், பிரபந்தம் எல்லாம் ரொம்ப கடினமான விஷயம், நம்மால் அதை படித்து புரிந்து கொள்ள முடியாது என்று நினைப்போம்.

அது அப்படியல்ல.

சில பல பாடல்கள் கஷ்டம் தான், இல்லை என்று சொல்வதற்கில்லை.

ஆனால் , நிறைய பாடல்கள் மிக மிக எளிமையானவை...படித்தால் சட்டென்று புரியும், அட, நல்லா இருக்கே என்று நம்மை ஆச்சரியபட வைக்கும்.

அப்படிப்பட்ட பாட்டு ஒன்று, நாலாயிர திவ்ய பிரபந்தந்தில், நம்மாழ்வார் அருளிச் செய்த இரண்டாவது திருமொழியில் முதல் பாசுரம்.