Showing posts with label aingurunooru. Show all posts
Showing posts with label aingurunooru. Show all posts

Wednesday, April 8, 2020

ஐங்குறுநூறு - நீங்கினளோ என் பூங்கணோளே

ஐங்குறுநூறு - நீங்கினளோ என் பூங்கணோளே


பிள்ளைகளை விட்டு பிரிவது என்பது மிக மிக கடினமான காரியம்.

பிள்ளைகள் வீட்டை விட்டு வெளிய போகத்தன் துடித்துக் கொண்டு இருப்பார்கள். பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த வலி.

ஏதோ ஒரு காரணத்துக்காக பிள்ளகைள் வீட்டை விட்டு சென்று விடுகிறார்கள்...மேல் படிப்புக்கோ, வேலை நிமித்தமோ, திருமணம் ஆன பின்னோ...வீட்டை விட்டுப் போய் விடுகிறார்கள்.

அவர்கள் போன பின், அவர்கள் இருந்த அறை , அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்கள், எல்லாம் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

"அந்த பய ஓட்டிக் கொண்டிருந்த சைக்கிள்...."

"அவ ஆசை ஆசையா வாங்கின படம்..."

வீட்டில் ஒவ்வொன்றும் பிள்ளைகளை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். அதெல்லாம் அந்த குழந்தைகளுக்குத் தெரியாது. வீட்டில் பெற்றோர் படும் பாடு, அவர்களின் ஞாபகம் படுத்தும் பாடு...

இந்த உணர்ச்சிகளை சங்கப்பாடலான ஐங்குறுநூறு என்ற தொகுப்பில், ஓதலாந்தையார் என்ற கவிஞர் படம் பிடித்து காட்டுகிறார்.

மகள், திருமணம் ஆகி, கணவனோடு சென்று விட்டாள் .  இங்கே வீட்டில் அம்மா கிடந்து மருகுகிறார்கள்.

"இது என் மகள் வைத்து விளையாடிய பொம்மை. இது என் மகள் கொஞ்சிய கிளி. இப்படி எதைப் பார்த்தாலும் அவள் ஞாபகமே வருகிறது. எப்படித்தான் என்னை விட்டு விட்டுப் போனாளோ "

பாடல்

இது என் பாவை பாவை, இது என்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
காண் தொறும் காண் தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங்கணோளே.


பொருள்

இது என் பாவை = இது பொம்மை போன்ற என் மகள் விளையாடிய

பாவை = பொம்மை

இது என் = எது என்

அலமரு நோக்கின் = அலை பாயும் கண்களை உடைய

நலம்வரு சுடர் நுதல் = நல்ல சுடர் விடும் நெற்றியைக் கொண்ட

பைங்கிளி எடுத்த = கிளி போன்ற என் மகள் எடுத்து விளையாடிய

பைங்கிளி = பச்சைக் கிளி

என்றிவை = என்று இவை

காண் தொறும்  காண் தொறும்  = பார்க்க பார்க்க

கலங்க = என் மனம் கலக்கம் அடைய

நீங்கினளோ = என்னை விட்டுப் போய் விட்டாளே

என் பூங்கணோளே. = என்னுடைய பூ போன்ற அழகிய கண்களை உடைய என் மகள்

மகள் வைத்து புழங்கிய ஒவ்வொன்றைப் பார்த்தும் மருகுகிறது அந்தத் தாய் மனம்.

எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்.

உலகம் எவ்வளவோ மாறி விட்டது.

ஆனாலும், அந்த அடிப்படை மனித உணர்ச்சிகள் இன்றும் அப்படியே இருக்கிறது.   ஆச்சரியம்.

எவ்வளவு எளிய பாடல்.

எவ்வளவு அழுத்தமான, ஆழமான  உணர்ச்சிகள்.

சங்க இலக்கியத்தை படிக்கும் போது, நம் முன்னவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரியும்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, பிள்ளைகள் பெற்றோரின் பாசத்தை  புரிந்து கொள்வதே இல்லையோ?


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_8.html

Saturday, October 26, 2019

ஐங்குறு நூறு - இனிது மன்ற அவர் கிடக்கை

ஐங்குறு நூறு - இனிது மன்ற அவர் கிடக்கை 


என்ன எப்பப் பார்த்தாலும், தேவாரம், திருவாசகம், திருக்குறள் என்று ஒரு பக்தி, ஒழுக்கம், அறம் என்று தமிழ் இலக்கியம் என்றால் இவ்வளவுதானா என்று சிலர் நினைக்கலாம்.

இல்லை. தமிழ் இலக்கியம் மனித உறவின் நுணுக்கங்களை, அதன் சிக்கல்களை, அதன் நெளிவு சுளிவுகளை, யதார்த்தத்தை அப்படியே படம் பிடிக்கிறது.

அது ஒரு சிறிய வீடு. கணவன், மனைவி அவர்களின் சிறிய மகன் மூவர் மட்டும் இருக்கிறார்கள். ஒரே ஒரு படுக்கை அறை தான்.

ஒரு நாள் இரவு, கணவனும் மனைவியும் சற்று இன்பமாக இருக்கலாம் என்று நினைத்து ஆவலோடு படுக்கை அறையில் நுழைகிறார்கள். அவர்கள் படுத்ததுதான் தாமதம், எங்கிருந்தோ அந்த பையன் ஓடி வந்து அவர்கள் இருவருக்கும் நடுவில் படுத்துக் கொள்கிறான்.  அவள் , அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே பிள்ளையின் தலை கோதி இருப்பாள்.

அவர்கள் தவிப்பு அவனுக்கு எங்கே தெரிகிறது.


இருந்தும், அவர்களுக்கு பிள்ளை மேல் கோபம் இல்லை. சந்தோஷமாக அவனை கட்டி அணைத்துக் கொண்டு உறங்கிப் போனார்கள்.

அது எப்படி இருக்கிறது என்றால், மான் ஜோடிகளுக்கு நடுவில் படுத்துக் கிடக்கும் மான் குட்டியைப் போல இருக்கிறதாம்.

இல்லறத்தின் நுணுக்கமான உணர்வுகளை விளக்கும் பாடல்.

பாடல்

"மறி இடைப் படுத்த மான் பிணை போலப்
புதல்வன் நடுவணனாக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி
நீல் நிற வியல் அகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே"


பொருள்

"மறி  = மான் குட்டி

இடைப் படுத்த = இடையில் படுத்து இருந்த

மான் பிணை  = ஜோடி மான்களைப்

போலப் = போல

புதல்வன் = மகன்

நடுவணனாக = நடுவில் இருக்க

நன்றும் = நல்லது

இனிது  மன்ற =  இனிது என்று

அவர் கிடக்கை = அவர்கள் (கணவனும் மனைவியும்) படுத்துக் கிடந்தது

முனிவு இன்றி = கோபம் இன்றி

நீல் நிற வியல் = நீல நிறம் கொண்ட ஆகாயத்தின் கீழ்

அகம் = உள்ள உலகம்

கவைஇய = சூழ்ந்து உள்ள

ஈனும் = இன்றும் , இங்கும்

உம்பரும் = தேவர்களும் , மறு உலகிலும்

பெறலரும் = பெறுவதற்கு அரிதான

குரைத்தே" = உரைத்தல், சொல்லுதல்

அருகில், அன்பான மனைவி (/கணவன்) , பிள்ளை இவர்களை கட்டிக் கொண்டு கிடப்பது எவ்வளவு சுகம்  என்கிறது பாடல்.

இங்கு மட்டும் அல்ல, ஸ்வர்கத்திலும் இது போன்ற சுகம் கிடைக்காது என்கிறது பாடல்.

உண்மைதானே ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_26.html

Saturday, August 24, 2019

ஐங்குறுநூறு - புகுந்த வீட்டு பெருமை

ஐங்குறுநூறு - புகுந்த  வீட்டு பெருமை 


பிறந்த வீட்டு பெருமை பேசாத பெண் யார் இருக்கிறார்கள். ஒன்றும் இல்லாவிட்டாலும், "எங்க வீட்டுல ...." என்று ஆரம்பித்தால் எளிதில் முடிக்க மாட்டார்கள்.

என்ன செய்வது ? எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்த பெண், பெருமையையாவது பேசி விட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான்.

ஐங்குறுநூறு இதை வேறு ஒரு கோணத்தில் காட்டுகிறது.

ஒரு பெண். திருமணம் ஆகி, கணவன் வீட்டுக்குப் போய் சிறிது நாள் இருந்து விட்டு பின் தாய் வீட்டுக்கு வருகிறாள்.

அம்மாவுக்குத் தெரியும் , அங்கே ஒண்ணும் பெரிய சிறப்பு கிடையாது என்று. ஏதோ காதல், கத்தரிக்காய் என்று இந்தப் பெண் திருமணம் முடித்து போய் விட்டாள்.

தாய் கேட்டிருப்பாள் போல இருக்கு , "உன் புருஷன் வீடெல்லாம் எப்படி இருக்கு" னு.

அவளுக்கு கணவன் வீட்டை வீட்டுக் கொடுக்க முடியவில்லை. ஆனால், அது ஏழ்மையான வீடு என்ற உண்மையையும் மறைக்க முடியவில்லை.

அந்தப் பெண் சொல்கிறாள்

"அவங்க வீட்டு கொல்லை பக்கத்துல குப்பை கூளம் நிறைந்த தோட்டம் ஒன்று இருக்கிறது. சரியாக பராமரிக்காமல் விட்ட தோட்டம்தான். அதில் உள்ள குழியில் கொஞ்சம் நீர் தேங்கி இருக்கிறது. அது கலங்கிய நீர். சேரும் சகதியுமாக இருக்கும். அந்த நீரை மான்கள் பருகும். அந்த நீரானது, நம் வீட்டு தோட்டத்தில் நீ தரும் தேன் கலந்த பாலை விட சிறந்தது" என்கிறாள்.

பாடல்


அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத் 
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு 
உவலை கூவல் கீழ 
மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே 

பொருள்

அன்னாய்  = அன்புத் தோழியே (தோழியிடம் சொல்வது போல அமைந்த பாடல்)

வாழி வேண்டு = நீ நீண்ட நாள் வாழ வேண்டுகிறேன்

அன்னை = நம் அன்னை

நம் படப்பைத் = நம் தோட்டத்தில்

தேன்மயங்கு = தேன் கலந்து தரும்

பாலினும் = பாலை விட

இனிய = இனிமையானது

அவர் = அவர் (என் கணவர்)

நாட்டு  = நாட்டில் (அவரது வீட்டில்)

உவலை = சருகுகள்

கூவல் = நீர் கட்டிக் கிடக்கும் குழி

கீழ = அதில்

மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே  = மான் உண்டது போக மிஞ்சிய கலங்கிய நீர்

 இங்க தேனும் பாலும் இருக்கு. ஆனால், அவளுக்கு கணவன் இருக்கும் இடம்தான் பெரிதாகத் தெரிகிறது.

மான் எல்லாம் வந்து தண்ணி குடிக்கும் என்றால், அவ்வளவு அன்பும் அரவணைப்பும் அங்கே   இருக்கிறது என்று அர்த்தம்.

செல்வம் அல்ல மகிழ்ச்சியைத் தருவது, அன்பும் அரவணைப்புமே இன்பம் தரும்.

எங்கோ இருந்து வந்த மான்கள் பயம் இல்லாமல் அவங்க வீட்டு தோட்டத்தில்  நீர்  குடிக்கும் என்றால், எனக்கு அங்கு ஒரு பயமும், கவலையும் இல்லை என்று  சொல்ல வருகிறாள்.

கணவனின் அன்பு  மட்டும் இருந்துவிட்டால் போதும், ஒரு பெண் எந்த இடத்திலும்  இனிமையாக குடும்பம் நடத்துவாள் என்பது செய்தி.

பிறந்த வீடு பெருமை பேசி, புகுந்த வீட்டை மட்டம் தட்டும் பெண்களுக்கு இது ஒரு  பாடம்.

அந்தக் காலத்தில் நம் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று காட்டும் பாடல் இது.

முடிகிறதோ இல்லையோ, எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என்று தெரிந்து கொள்வதில்  ஒன்றும் தவறில்லையே.....

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_24.html


Wednesday, March 26, 2014

ஐங்குறுநூறு - பைங்கிளி எடுத்த பைங்கிளி

ஐங்குறுநூறு - பைங்கிளி எடுத்த பைங்கிளி 



மகளுக்கும் தாய்க்கும் இடையில் காதலன்.

மகள் தாயை மறந்து காதலன் பின் சென்று விட்டாள்.

தலைவி, தலைவனோடு சென்று விட்டாள் .

தாய் கிடந்து தவிக்கிறாள்.  எல்லா இடத்திலும் தேடிவிட்டாள் . எங்கும் காணவில்லை.

என்னை விட்டு போய் விட்டாளா என்று கலங்குகிறாள்.

தன் மகள் உபயோகப் படுத்திய பொருள்கள் எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்க்கிறாள். ஒவ்வொன்றும், அந்தத் தாய்க்கு தன் மகளை நினைவு படுத்துகிறது.

வருவோர் , போவோர் எல்லோரையும் பார்த்து கண் கலங்குகிறாள்....என் மகளைப் பார்த்தீர்களா, என் மகளை பார்த்தீர்களா என்று கேட்டு பரிதவிக்கிறாள்.

அந்தத் தாயின்  பரிதவிப்பை, வீட்டை விட்டுப் போன மகளின் பிரிவை இந்தப் பாடல் பதிவு  செய்கிறது.

பாடல்


இதுவென் பாவை பாவை யிதுவென் 
   அலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற் 
   பைங்கிளி யெடுத்த பைங்கிளி யென்றிவை 
   காண்டொறுங் காண்டொறுங் கலங்க 
   நீங்கின ளோவென் பூங்க ணோளே.


Saturday, September 15, 2012

ஐங்குறு நூறு - Extra Marital Relationship


ஐங்குறு நூறு - Extra Marital Relationship


Extra marital relationship - இதற்கு தமிழ் என்ன என்று தெரியவில்லை. திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு என்று சொல்லலாமா ?

அவன் தன்னுடைய மனைவியை விட்டு விலகி வேறு ஒரு பெண்ணுடன் வாழுகிறான். ஒரு நாள், மனைவியை வழியில் எங்கோ பார்த்து விடுகிறான். அவர்கள் பேசுகிறார்கள். 

இந்த விஷயம் எப்படியோ அந்த "மற்ற" பெண்ணின் காதுக்கு சென்று விடுகிறது. அவளுக்குப் புரிந்து விட்டது. இனிமேல் அவன் அவளோடு இருக்க மாட்டான் , அவன் மனைவியை தேடி போய் விடுவான் என்று...அவளே சொல்லுகிறாள்...

கொக்கின் குஞ்சு, கூட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் லேசாக சப்தம் போடும். ஆனால் அந்த சப்தம் வயல் எல்லாம் கேட்கும். எல்லோரும் புரிந்து கொள்வார்கள் இந்த கொக்கு குஞ்சு இனிமேல் இந்த கூட்டில் இருக்காது என்று. அது போல் நீயும் போய் உன் மனைவியுடன் சந்தோஷமாய் இரு

பாடல் 

Friday, September 7, 2012

ஐங்குறுநூறு - அவன் தந்த நோய்


ஐங்குறுநூறு - அவன் தந்த நோய் 


அம்மா: என்னடி உடம்பு கிடம்பு சரி இல்லையா ? ஏன் ஒரு மாதிரி இருக்க ?

அவள்: இல்லையே, நான் நல்லாதான இருக்கேன்

அம்மா: என்ன நல்லா இருக்கியோ போ...சரியா சாப்டிறது இல்ல...தூக்கம் இல்ல...ஆளு நாளுக்கு நாள் மெலிஞ்சிக்கிட்டே போற...டாக்டர் கிட்ட கேட்டாலும் ஒண்ணும் இல்லேன்கிறார்...உன்னைய நாளைக்கு பூசாரிகிட்டதான் கூட்டிகிட்டு போய் மந்திரிச்சு தாயத்து வாங்கி கட்டணும்....

அப்ப அங்க வர்ற தோழி சொல்லுவாள் " உங்க அம்மாவுக்கு எங்க தெரிய போகுது இது காதல் நோய்..அவன் கிட்ட இருந்து வந்ததுனு சொல்லிறவா" .....

பாடல்: