Showing posts with label தனிப் பாடல். Show all posts
Showing posts with label தனிப் பாடல். Show all posts

Wednesday, May 8, 2013

தனிப் பாடல் - வைகை ஏன் கடலில் கலக்கவில்லை ?


தனிப் பாடல் - வைகை ஏன் கடலில் கலக்கவில்லை ?



நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும் வைகை கடலில் கலக்காமல் ஒரு பெரிய ஏரியில் போய் கலக்கும் விஷயம்.

ஏன் வைகை நதி கடலில் கலக்கவில்லை ?

பாற்கடலை கடைந்த போது, அந்த கடல் சிவனுக்கு நஞ்சை கொடுத்தது. அந்த பாற் கடலுக்கு இந்த கடல் எல்லாம் உறவுதானே என்று நினைத்து, இப்படி பட்ட கடலுக்கு நாம் ஏன் நீர் தரவேண்டும் என்று வைகை நதி தன்னிடம் உள்ள நீரை எல்லாம் வரும் வழியில் இரு புறமும் உள்ள வயல்களுக்குத் தந்து விட்டு மீதி உள்ள கொஞ்ச நீரை ஒரு ஏரியில் கொண்டு செலுத்தி விடுவதாக புகழேந்திப் புலவர் கற்பனை செய்கிறார்.....

பாடல்

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.



பொருள் 

Friday, September 7, 2012

தனிப் பாடல் - தமிழுக்காக தலை கொடுத்த வள்ளல்


தனிப் பாடல் - தமிழுக்காக தலை கொடுத்த வள்ளல்


குமணன், அவன் தம்பியால் நாட்டை விட்டு விரட்டப் பட்டு காட்டில் இருக்கிறான். குமணனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசு அறிவித்து இருக்கிறான் அவன் பாசக்கார தம்பி.

அப்போது, குமணனிடம்  தன் வறுமையை சொல்கிறான் ஒரு புலவன். குமணனிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. யோசிக்கிறான். தன்னிடம் இல்லை என்று வந்தவனை எப்படி வெறும் கையோடு அனுப்பவுது என்று அவன் மனம் வருந்துகிறது. 

புலவனிடம் சொல்லுவான் "புலவரே, என் தம்பி என் தலைக்கு விலை வைத்து இருக்கிறான். என் தலையை வெட்டி கொண்டு போய் கொடுத்தால் உங்களுக்கு நல்ல சன்மானம் கிடைக்கும். என் தலையயை எடுத்துக் கொள்ளுங்கள்"என்று தலையும் தந்தான்....

பாடல் 

Monday, August 20, 2012

தனிப் பாடல் - சொல்லின் செல்வி


தனிப் பாடல் - சொல்லின் செல்வி


காதலித்தது ஒரு பெண்ணை. மணந்தது இன்னொருத்தியை. 
அவன் காதலியோ மிக மிக அழகானவள். மனைவி அவ்வளவு அழகில்லை.
அவளை நினைத்து ஏங்குகிறான் காதலன்....

தனிப் பாடல் - நெஞ்சை விட்டு போகாதவள்


தனிப் பாடல் - நெஞ்சை விட்டு போகாதவள் 


அவர்கள் காதலர்கள். இன்னும் பேசிக் கொள்ளவில்லை. எல்லாம் கண் ஜாடை தான்.

அவள் போகும் இடம் எல்லாம் அவனும் போகிறான். அவள் கண் படும்படி நிற்கிறான்.
 
அவளுக்குத் தெரியாமல் இல்லை. அவள் மனத்திலும் அவன் மேல் சினாதாய் ஒரு காதல் துளிர் விடுகிறது. 

ஒரு நாள் அவள் கோவிலுக்குப் போகிறாள். அவனும் வழக்கம் போல் அவளை தொடர்ந்து போகிறான்.
 
கோவில் வாசல் வந்து விட்டது.

அவனுக்கு கண் காட்டுகிறாள்....""இங்கேயே இரு, வந்து விடுகிறேன்" என்று கண் ஜாடை காட்டி விட்டுப் போகிறாள்.

அவள் கண்ணை விட்டுப் போய் விட்டாள்...நெஞ்சை விட்டுப் போகவில்லை....