Thursday, March 20, 2014

திருப்புகழ் - இளமை அழகு - பாகம் 1

திருப்புகழ் - இளமை அழகு   



இளமையும் அழகும் எவ்வளவு நாள் ? வெகு வேகமாக இளமை கரையும். முதுமை வந்து சேரும். அதைத் தொடர்ந்து மரணம் வரும்.

அது வருமுன்னே அவனை நினை என்று அறிவுறுத்துகிறார் அருணகிரி.

ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

வாழ்வின் நிலையாமை புரியும்.


கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
        இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
        கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்         முறையோடே

 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ

 பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
        முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
        பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
        நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
        சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை            பெருமாளே.


பொருள்


கட்டழகு விட்டுத் = கட்டழகு விட்டு 

தளர்ந்தங் கிருந்து = தளர்ந்து அங்கு இருந்து.

முனம் = முன்பு

இட்டபொறி தப்பிப் = இருந்த புலன்கள் நம்மை விட்டு தப்பிப் போய்

 பிணங்கொண்ட தின் = பிணம் என்று ஆன பின்

சிலர்கள் = சிலர்

கட்டணமெ டுத்துச் = கட்டணம் எடுத்து. கூலிக்கு

சுமந்தும் = சுமந்து சென்று

பெரும்பறைகள் = பெரிய பறைகள்

முறையோடே = முறைப் படி



(தொடரும்)

No comments:

Post a Comment