Tuesday, April 10, 2012

திருப்பாவை - மனதுக்குள் மழை


திருப்பாவை


உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களின் பெயரைக் கேட்டால் உங்களுக்கு மனதுக்குள் மழை அடிக்குமா ?
 
ஆண்டாளுக்கு அடிக்கிறது.
 
உள்ளம் புகுந்து குளிர்கிரதாம்.
 
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்




புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ!
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

 
நம் வாழ்க்கை சக்கரம் நம்மை எங்கெங்கோ இட்டு செல்கிறது.

பல சமயம் நல்ல வழியில்.

சில சமயம் வழி அல்லா வழியிலும் இட்டு செல்லும்.

அது அப்படி செல்லாமல் தடுத்து அதை நல வழியில் செலுத்துவது எது ?

அவனின் திருவடி தான்.
 
புள்ளும் = பறவைகளும்

சிலம்பினகாண் = சிலம்பு போல் சப்தித்தன

புள்ளரையன் = பறவைகளின் தலைவன், கருடன் 

கோயிலில் = கோவிலில்

வெள்ளை = வெண்மையான 

விளிசங்கின் = விளிக்கின்ற, சப்திகின்ற சங்கின் 

பேரரவம் = பெரிய சப்தத்தை 

கேட்டிலையோ = கேட்கவில்லையோ
பிள்ளாய்! எழுந்திராய் = பிள்ளை போன்ற மனம் கொண்டவளே, எழுந்திராய் 

பேய்முலை நஞ்சுண்டு = பூதகியின் நஞ்சை உண்டு 

கள்ள சகடம் கலக்கழிய காலோச்சி

சகடம் = சக்கரம்

கள்ள சகடம் = கெட்ட (வழியில் செல்லும் )
சக்கரம்

கலக்கழிய = அந்த வழியில் சென்று அழியாமல்

கால் ஓச்சி = ஓச்சி என்றால் ஆளுதல் என்று 
பொருள். கோல் ஓச்சி என்றால் அரசு ஆளுதல்.

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை


வெள்ளத்து = வெள்ளம் போல் உள்ள பார் கடலில்


அரவில் = பாம்பின் மேல்

துயில் = உறங்கிய

அமர்ந்த = இருந்த

வித்தினை = விதையை, மூலத்தை

உள்ளத்துக் கொண்டு = உள்ளத்தில் கொண்டு

முனிவர்களும் யோகிகளும் = முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து = அரக்க பறக்க அல்ல, மெல்ல எழுந்து

அரியென்ற பேரரவம் = அரிஎன்ற உச்சரிக்கும் ஒலி

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!


 

No comments:

Post a Comment