Tuesday, December 18, 2012

பெரிய புராணம் - அன்பினால் வணங்கினார்


பெரிய புராணம் - அன்பினால் வணங்கினார்



ஒரு நாள் இறைவன் பக்தன் முன் தோன்றி, "பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம், உனக்கு என்ன வேண்டுமோ கேள்" என்றான்.

பக்தன்: ஒண்ணும் வேண்டாம் இறைவா 

இறைவன்: என்ன, ஒண்ணும் வேண்டாமா ?

பக்தன்: ஆம், ஒண்ணும் வேண்டாம். 

இறைவன்: உனக்கு எவ்வளவு செல்வம் வேண்டுமானாலும் தருகிறேன்...கேள் 

பக்தன்: தங்கமும், வைர வைடூரிய செல்வங்களும், வீடு கட்டும் ஓடும் ஒண்ணு தான் எனக்கு. அதெல்லாம் வேண்டாம் இறைவா. 

இறைவன்: ஹ்ம்ம்...சரி அதை விடு, உனக்கு சொர்க்கம் வேண்டுமா...தருகிறேன். 

பக்தன்: அதுவும் வேண்டாம்

இறைவன்: ஒண்ணுமே வேண்டாம் என்றால், பின்ன எதற்க்காக என்னை வணங்குகிறாய்?

பக்தன்: ஓ...அதுவா...எனக்கு உன் மேல் அன்பு, காதல்....உன்னை வணங்கனும் போல இருந்தது...மத்தபடி எனக்கு ஒண்ணும் வேண்டாம்....

பாடல்: 

Monday, December 17, 2012

பட்டினத்தார் - உருகும் மொழி


பட்டினத்தார் - உருகும் மொழி


உபதேசம். பட்டினத்தார், அருணகிரியார், மாணிக்க வாசகர் என்று எல்லோரும் அவர்களுக்கு இறைவன் உபதேசம் பண்ணியதாகவே சொல்கிறார்கள். அருணகிரியார் ஒரு படி மேலே போய், முருகன் தனக்கு உபதேசம் மட்டும் அல்ல ஜெப மாலையும் சேர்த்து தந்ததாக கூறுகிறார் ("ஜெப மாலை தந்த சற் குருநாதா, திருவாவினன் குடி பெருமாளே).

இங்கே பட்டினத்தார் தனக்கு இறைவன் உபதேசம் செய்ததாக கூறுகிறார். அந்த உபதேச மொழியையை கேட்டால் ...


தேவாரம் - தென்றல் அடி வருட


தேவாரம் - தென்றல் அடி வருட


நாள் எல்லாம் அலைந்து, களைத்துப் போய் வீடு வருகிறீர்கள். கால் எல்லாம் அப்படி வலிக்கிறது. அப்பாட என்று நாற்காலியில் கால் நீட்டி உட்காருகிறீர்கள். அப்போது, உங்கள் மனம் கவர்ந்தவரோ/ளோ வந்து, air conditioner ஐ ஆன் பண்ணி, உங்களுக்கு பிடித்த இசையை காற்றில் இழைய விட்டு, சுட சுட ஒரு காப்பியும் கொண்டு வந்து தந்து, உங்கள் அருகில் அமர்ந்து உங்கள் காலை மெல்ல அமுக்கி விட்டால் எப்படி இருக்கும் உங்களுக்கு...

திருவையாறு என்ற ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலைகளில் குயில்கள் கூவி இனிய ஒலியை எழுப்புகின்றன, மலர்களில் இருந்து இனிய நறுமணம் காற்றில் மிதந்து வருகிறது, ஜிலு ஜிலு என்று தென்றல் பாதம் வருடிப் போகிறது...அந்த தென்றல் காற்றில் கரும்பு வயலில் கரும்புகள் லேசாக அங்கும் இங்கும் ஆடுவதைப் பார்க்கும் போது ஏதோ இந்த காற்றில் அவை சொக்கிப் போய் கண் மூடி தலை ஆட்டுவதைப் போல இருக்கிறது....

திருஞான சம்பந்தரின் பாடல் 

Sunday, December 16, 2012

திருக்குறள் - சூதும் உயிரும்

திருக்குறள் - சூதும் உயிரும் 


சூதாட்டத்தில் தோர்க்க தோர்க்க, விட்டதை பிடிக்க வேண்டும் என்ற வெறி வரும். இந்த குதிரை மேல் கட்டலாமா, அந்த குதிரை மேல் கட்டலாமா என்று மனம் அலை பாயும். அதிர்ஷ்டம் எப்படியாவது ஒருதடவை அடித்தால் போதும், காசை அள்ளிரலாம் என்று இழக்க இழக்க சூதின் மேல் மேலும் மேலும் காதல் வரும். அதை விட்டு விட்டு வர மனம் இருக்காது. 

அது எப்படி இருக்கிரதென்றால்...

இந்த உடல் எவ்வளவுக்கு எவ்வளவு துன்பப் படுகிறதோ, இந்த உயிருக்கு அந்த உடல் மேல் மேலும் மேலும் ஆசை பெருகிக் கொண்டே இருக்கும். வயதாக வயதாக உடல் பலம் குன்றி நோய் வாய்ப் படும். நைந்து போன உடலை உயிர் விட்டு விட்டு போய் விடாது. நோயோடு போராடும். வாழுகின்ற ஆசை உடல் தேய தேய கூடிக் கொண்டே போகும். 

வயதானவர்களைப் பார்த்தால் தெரியும்...அவர்களுக்கு எல்லாவற்றிலும் ஆசை கூடி கொண்டே போகும்...நல்ல சாப்பாடு, நாலு இடம் பார்க்க வேண்டும், எல்லா விழாக்களிலும் பங்கு பெற வேண்டும் என்ற ஆசை...முடியவில்லையே என்று விடுவது கிடையாது.

சர்க்கரை வியாதி உள்ளவனுக்கு இனிப்பின் மேல் தோன்றும் ஆசை போல...

சரி இவ்வளவு பணம் போச்சே, இதை இனியாவது விட்டு தள்ளுவோம் என்று சூதை யாரும் விடுவது கிடையாது. 

பாடல்

இராமாயணம் - தீராக் காதலன்


இராமாயணம் - தீராக் காதலன்


இராமன் இருப்பதோ சிறிய குடில். அயோத்தியில் இருந்து வந்து இருக்கிறான். கங்கை கரையில் பெரிய வீடு ஒன்றும் இருக்க சாத்தியமில்லை. அங்குள்ள முனிவரிகள் ஏதாவது ஒரு சிறய குடில் அமைத்து தந்திருக்கலாம் அல்லது தங்களது குடிசை ஒன்றை தந்திருக்கலாம். குகனோ தன் பரிவாரங்களோடு வந்து இருக்கிறான். அவர்களை எங்கு தங்க வைப்பது ? அதை மிக நாகரீகமாக குகனுக்கு உணர்த்தினான் இராமன் " நீ போய் உன் சுற்றத்தாரோடு இரவு தங்கிவிட்டு நாளை காலை வா" என்றான். 

கேட்டால் தானே ? குகனுக்கு புரியவில்லை. உன்னை விட்டு போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். 

இராமனுக்கு தர்ம சங்கடம். இருக்கிறேன் என்று சொல்பவனை எப்படி போகச் சொல்வது ? சரி இரு என்று சொன்னால், எங்கு தங்க வைப்பது ? 

நம் வீடுகளில் பார்த்து இருக்கிறோம். மனைவியிடம் முன்ன பின்ன சொல்லாமல், கணவன் சில நண்பர்களை அழைத்து வந்து விடுவான். " எல்லாருக்கும் காபி டிபன் பண்ணு " இல்லை என்றால் " அவங்க  எல்லாம் இன்னைக்கு இரவு இங்க தான் சாப்பிடப் போகிறார்கள், உணவு தயார் பண்ணிவிடு" என்று சொல்லவதை கண்டிருக்கிறோம்.  மனைவிக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. என்ன செய்வது. சங்கடப் படுவார்கள். 

இராமன் அப்படி பட்டவன் அல்ல. குகன் இருக்கிறேன் என்று சொன்னவுடன், சீதையின் முகத்தை பார்க்கிறான். அவள் கண்ணாலேயே சரி என்று சொல்லி இருக்க வேண்டும். அப்புறம் லக்ஷமணனை பார்க்கிறான். அவனும் " சரி அண்ணா, சமாளித்துக் கொள்ளலாம் " என்று ஜாடையால் உணர்த்துகிறான். 

சீதை சாப்பாடு தயார் பண்ணிவிடுவாள், இலக்குவன் தங்க வசதி பண்ணி விடுவான் என்று அறிந்த பின் அவர்களிடம் "இந்த குகன் தீராத காதலன்" என்று சொல்லி விட்டு , குகனை நோக்கி " யாதினும் இனிய நண்பனே, நீ எங்களோடு இரு" கருணையோடு சொன்னான். 


தீராத காதலன் - இராமன் குகனுக்கு தந்த அடை மொழி.

யாதினும் இனிய நண்ப - இதுவும் இராமன் குகனுக்குத் தந்த அடை மொழி. யாதினும் என்பது அஹ்ரினை. யாரினும் என்று சொல்லி இருந்தால் எல்லோரையும் விட என்று பொருள் தரும். கம்பன் அப்படி சொல்லவில்லை. யாதினும் என்று சொன்னான். மனிதர்கள் சில நேரம் நட்பாய் இருப்பார்கள், சில சமயம் அவர்களே நட்பில்லாமலும் போய் விடலாம். யாதினும் என்பது எல்லாவற்றையும் விட என்று பொருள் தரும். மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகள், பொருள்கள், பிடித்தமான உணவு, இசை, பொழுது, தத்துவம், நம்பிக்கை, உடை, என்று எல்லாம் அந்த "யாதினும்" என்ற சொல்லில் அடங்கும். எல்லாவற்றையும் விட இனிய நண்பனே என்று இராமன் குகனை அழைக்கிறான்.


Friday, December 14, 2012

குறள் - ஆத்திசூடி - சூது


குறள் - ஆத்திசூடி - சூது


வெல்வது சர்வ நிச்சயம் என்று தெரிந்தால் கூட, சூதாடாதே. சூதில் வரும் வெற்றி என்பது தூண்டிலில் உள்ள இரையை கவ்விய மீனின் வெற்றியை போன்றது. முதலில் நன்றாக இருக்கும், கொஞ்சம் கடித்தவுடன் முள் வாயில் ஏறி வேதனை செய்யும், அதில் இருந்து தப்பிக்க வேகமாக அங்கும் இங்கும் துள்ளும் போது அந்த முள் இன்னும் ஆழமாகத் தைக்கும். இரத்தம் வரும். தூண்டிலில் மீன் துள்ளுவதைப் கண்டு தூண்டில் போட்டவன் அதை மேலே இழுப்பான். நீரை விட்டு வெளியே வந்த மீன் மூச்சு முட்டி இறந்து போகும். அதுபோல சூதில் வரும் வெற்றி. முதலில் சுகமாகத் தோன்றினாலும் பின்னால் மிகுந்த துன்பத்தை தரும் எனவே சூதாடக் கூடாது என்கிறார் வள்ளுவர். 

பாடல் 

Thursday, December 13, 2012

இராமாயணம் - வைத்த கண்ணை எடுக்காமல்


இராமாயணம் - வைத்த கண்ணை எடுக்காமல் 


நீ போய் உன் சுற்றத்தாருடன் இரவு தங்கி விட்டு நாளை காலை கங்கையின் அக்கறை செல்ல படகு கொண்டு வா என்று குகனிடம் இராமன் கூறினான். 

குகனுக்கு போகவே மனம் இல்லை. 

இராமா உன்னை பார்த்த கண்ணை என்னால் எடுக்க முடியவில்லை. உன்னை விட்டு போகவே முடியவில்லை. உன் கூடவே இருந்து உனக்கு உதவி செய்கிறேனே என்று கெஞ்சுகிறான். 

இன்னொரு பொருள், எப்படி சக்கரவர்த்தியாய் இருக்க வேண்டிய நீ இப்படி தவ கோலத்தில் இருக்கும் கோலத்தை பார்த்த பின்னும் அந்த கண்ணை பிடுங்கி எரியாமல் இருக்கும் நான் உன் மேல் அன்பு கொண்டவன் போல் நடிக்கும் பெரிய கள்வன். 

ஈர்த்தல் என்ற சொல்லுக்கு கவர்தல், பிடுங்குதல், வசப்படுதல் (காந்தம் இரும்பை ஈர்க்கும்). 

குகனால் இராமனை விட்டு பிரிய முடியவில்லை. அவ்வளவு காதல்.


பாடல்