Thursday, April 25, 2013

திருக்குறள் - துகில்


திருக்குறள் - துகில் 


இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும் - உடலால் மட்டும் அல்ல உள்ளத்தாலும்.

தேவதையோ, மயிலோ, மனிதப் பெண்ணோ என்று சந்தேகம் தெளிந்து, அருகில் செல்கிறார் ஹீரோ.

அவளின் கண்ணைப் பார்க்கிறார். முடியல. உயிர் உண்ணும் கண்கள்.

அதை விடுத்து கொஞ்சம் மேலே புருவத்தை பார்க்கிறார்...அதுவும் முடியல...உயிரை நடுங்க வைக்கும் கண்களுக்கு அந்த புருவங்கள் துணை போகின்றன.

கொஞ்சம் பார்வையை கீழே இறக்குகிறார்....

அது அப்படியே நிற்கட்டும்.....

போருக்குச் செல்லும் யானைகளின்  முகத்தில் ஒரு பெரிய கவசத்தை போர்த்தி இருப்பார்கள்.

அந்த கவசத்திற்கு பல உபயோகங்கள் உண்டு.

முதலாவது, எதிரிகள் வீசும் ஈட்டி, அம்பு இவற்றில் இருந்து அது அந்த யானையை காக்கும்

இரண்டாவது, அந்த கவசத்தில் சில கூர்மையான பாகங்கள் இருக்கும். பலமான கோட்டை கதவுகளை முட்டி திறப்பதற்கு உதவும்

மூன்றாவது, அந்த யானை சுற்றி நடக்கும் போரின் குழப்பங்களை கண்டு மிரண்டு போய்  விடாமல் பாகன் நடத்தும் வழி செல்ல உதவும்.

தன்னை காக்க வேண்டும், எதிரிகளை தாக்க வேண்டும்.

இதை பார்த்த வள்ளுவருக்கு....வள்ளுவருக்கு ... ஒன்று தோன்றுகிறது.

பெண்கள் தங்கள் மார்பை மறைக்க உடுத்தும் துகில் நினைவுக்கு வருகிறது.

பெண்களின் மானத்தை, கற்பை அந்த துகில் காக்கிறது.

ஆண்களின் மனத்தை தாக்குகிறது.

பாடல்  

கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.


பொருள்


இராமாயணம் - நெறியின் புறம் செல்லா


இராமாயணம் - நெறியின் புறம் செல்லா


இராமாயணம் படிப்பவர்களும், சொல்பவர்களும் பொதுவாக அதன் கதை போக்கு, கதை மாந்தர் பற்றி படிப்பார்கள், சொல்லுவார்கள்.

ஊர் வர்ணனை பற்றி யாரும் அதிகமாக கவனம் எடுத்துக் கொள்வது இல்லை. என்ன வர்ணனை தானே, அதை படிக்காவிட்டால், சொல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்....கதையின் போக்குக்கு இவை ஒரு முட்டு கட்டை என்று நினைப்பாரும் உண்டு.

ஊர் வர்ணனை, அங்கு ஓடும் ஆறு, குளம், ஏறி, வீடு வாசல்கள், பொது மக்கள் இவை பற்றிய குறிப்புகள் மிக சுவாரசியமானவை.

இன்னும் சொல்லப் போனால் கதையின் சில சூட்சுமங்கள் இவற்றில் அடங்கி இருக்கின்றன.

என்ன, கொஞ்சம் பொறுமையும், நேரமும் வேண்டும்....நிதானமாக படிக்க வேண்டும்.

கோசல நாடு.

கோசலம் என்றால் மயில். மயில்கள் நிறைய உள்ள நாடு. மயில் நிறைய இருக்கிறது என்றால், மழை நன்றாக பெய்கிறது என்று அர்த்தம். மழை பெய்தால், பயிர் விழையும், பசி இருக்காது, கலையும் பக்தியும் நிறைந்து இருக்கும். சண்டை சச்சரவு இருக்காது.

அந்த ஊரில், சில விஷயங்கள் நெறி பிறழாமல் இருக்கின்றன.

அவை எவை ?

மனிதர்களை குற்றங்களுக்கு உட்படுத்துவது புலன்கள். அவை தூண்டும் ஆசைகள். கோசலத்தில் சலனம் தரும் ஐம்புலன்களும் நெறியில் நின்றன.

எல்லை தாண்டாமல் ஒரு கட்டுக்குள் இருந்தன.

புலன்கள் அதற்குரிய பொருளை பார்த்துவிட்டால் உடனே அம்பு போல் பாயும்.  பாய்கின்ற அம்பு  இலக்கை தைக்கும். விட்ட அம்பை திருப்பி பிடிக்க முடியாது. ஐம்பொறிகளை அம்பு என்கிறார் கம்பர். தைப்பதால். விட்டால், பிடிக்க முடியாது என்பதால். வேகமாக செல்வதால்.

எல்லோருக்கும் ஐம்புலன்களும் சலனம் தந்தாலும், பெண்களுக்கு கண்கள் ஒரு படி மேலே. அலை பாயும். மயக்கும். ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும். உயிர் உண்ணும் கண்கள் என்பார் வள்ளுவர்.

பெண்களின் கண்களும் ஒரு நெறியில் நின்றன. பெண்களின் கண்கள் நெறியில் நிறக்கா விட்டால், ஆண்களின் ஐம்பொறிகளும் நிலையில் நில்லாது.



பாடல்

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்:

பொருள்


Wednesday, April 24, 2013

நளவெண்பா - தெரிந்ததும் தெரியாததும்

நளவெண்பா - தெரிந்ததும் தெரியாததும் 



நான் சில பல  ஊர்களில் கடைத் தெருவில் பார்த்திருக்கிறேன்...ஏதேதோ கடைகள் இருக்கும்...ஒரு நல்ல புத்தக கடை இருக்காது....இருந்தாலும் ஏதோ பேருக்கு சில புத்தகங்கள் இருக்கும்.

என்ன அர்த்தம்...ஊரில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு.


நள சக்கரவர்த்தி ஆளும் ஊரை வர்ணிக்கிறார் புகழேந்தி.


அந்த ஊரில் தெரிவது எல்லாம் புத்தகங்களும், படிப்பவர்களும் தான். எங்கு பார்த்தாலும் ஒரே புத்தகங்கள்.

தெரியாதது ஒன்று இருக்கிறது அந்த ஊரில்...அது பெண்களின் இடையாம்.....தேடினாலும் கிடைக்காது....அவ்வளவு சின்ன இடை.

அந்த ஊரில் இல்லாதாது ஒன்று உண்டு - பிச்சைகாரர்கள். பிச்சைக்காரர்களே கிடையாது.

அந்த ஊர் மக்கள்  ஒன்றே ஒன்று மட்டும் கற்றுக் கொள்ளவில்லை - அது தான் வஞ்சம்.

பாடல்  



தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவும் கரவு.



பொருள்


திருக்குறள் - புருவம்


திருக்குறள் - புருவம் 


துன்பங்கள் பலவகை.

உடல் உபாதை, பணக் கஷ்டம், மனக் கஷ்டம் என்று பல துன்பங்கள். இவற்றை கண்டு நாம் நடுங்குவது இல்லை. ஆனால், அவளோட கண்கள் இருக்கே, அதைப் பார்த்தால் நடுக்கம் வருகிறது. உடல் உதறுகிறது.

கூற்றுவனை நேரில் பார்த்தால் நடுக்கம் வருமா, வராதா ?

அவளோட கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியாது. உயிரை உண்டு விடும் கண்கள் அவை.

அவளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் பார்வையை சற்று விலக்கி   மேலே பார்க்கிறேன்.

அந்த புருவம். ஐயோ. அது அந்த கண்ணை விட கொடியதாய் இருக்கிறதே.

நல்லது செய்யணும் என்ற எண்ணமே கிடையாது அந்த புருவங்களுக்கு.

 நல்லது செய்ய வேண்டும் என்றால் எப்படி இருக்க வேண்டும் ? நேராக இருக்க வேண்டும், வளையாமல் இருக்க வேண்டும். அந்த புருவம் இருக்கிறதே என்னமா வளைந்து இருக்கிறது. பாத்தாலே தெரியுது, இது ஒண்ணும் சரி இல்லை என்று.

இந்த புருவம் மட்டும் வளையாமல் நேரா இருந்திருந்தா, இவளோட கண்கள் இப்படி நான் நடுங்கும் துன்பத்தை தந்து இருக்காது.

அவளுடைய புருவத்தில் நிறைய முடி இருக்கிறது. ஆனால் எல்லாம் குட்டி குட்டியா இருக்கு. இன்னும் கொஞ்சம் நீளமாக வளர்ந்து, அவளுடைய கண்ணை கொஞ்சம் மறைத்தால், எனக்கு இந்த நடுக்கம் குறையும்ல....

மொத்தத்தில் அவளுடைய கண்ணும் புருவமும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ணுகின்றன என்கிறார் வள்ளுவர்


பாடல்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.


பொருள்


Tuesday, April 23, 2013

நள வெண்பா - எங்கட்கு இறை


நள  வெண்பா - எங்கட்கு இறை 


வெண்பாவிற்கு ஒரு புகழேந்தி என்பார்கள். வெண்பா என்ற பா வடிவம் புகழேந்தியிடம் அப்படி விளையாடுகிறது

புகழேந்தி பாடிய நளவெண்பாவில் இருந்து சில பாடல்கள் ....

முதலில் யாரும் அழைக்காமலே தானே பன்றியாக வந்து  அவதரித்தான்.

பிரகலாதன் என்ற சிறுவன் அழைத்ததற்காக தூணில் நரசிம்மமாகத் தோன்றினான்

அவ்வளவு ஏன், ஒரு யானை ஆதி மூலமே என்று கூப்பிட்ட உடன் ஏன் என்று கேட்டான் எங்கள் இறைவன் என்று திருமாலை கொண்டாடுகிறார் புகழேந்தி. யானை கூப்பிட்டபோது வந்தவன், நீங்கள் கூப்பிட்டால் வரமாட்டானா ?



பாடல்


ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப
என்என்றான் எங்கட் கிறை.

பொருள்


பிரபந்தம் - மூப்பு வரு முன்


பிரபந்தம் - மூப்பு வரு முன் 


மூப்பு என்பது ஏதோ ஒரு நாள் வரப்போகிறது என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வரும்போது பார்த்துக் கொள்ளலாம். நான் இப்போது திடமாகத்தானே இருக்கிறேன் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்

 அது என்ன ஒரு நாளில் வருவதா ?

அடுத்த வரும், ஜனவரி மாதம் இருபதாம் தேதியில் இருந்து  நீ வயதானவன் ஆகிவிடுவாய் என்று யாரவது சொல்லுவார்களா நம்மிடம் ?

இல்லை.

மூப்பு என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் வயதானவர்கள் ஆகிக் கொண்டே இருக்கிறோம்.

மூப்பு ஒரு நாளில்  நிகழ்வது இல்லை...வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பதற்கு.


 பாடல்

முற்றமூத்துக்கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல்தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை
வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே.(968)


 பொருள்


அபிராமி அந்தாதி - பெண் எனும் சீதனம்


அபிராமி அந்தாதி - பெண் எனும் சீதனம் 


பெண் கொண்டு வருவது அல்ல, அவளே ஒரு சீதனம்.

அவளை விடவா இன்னொரு பெரிய சீதனம் இருக்க முடியும் ?

திருமணம் முடித்து, முதன் முதலாய் மனைவியின் கை பிடித்து நடக்கும் போது  எப்படி இருக்கும் ?

இவள் என்னவள். எனக்கே உரியவள் என்ற சந்தோஷம் உடல் எல்லாம் படரும் அல்லவா. 

இவ்வளவு அழகானவள், இவ்வளவு இனிமையானவள் என் மனைவியா. சில சமயம் நம்ப முடியாமல் கூட இருக்கும்....

சின்ன நெற்றி, அதில் புரளும் ஓரிரண்டு முடி கற்றைகள், குழந்தை போன்ற மொழி, சில்லென்ற கை விரல்கள்....இவள் என் மனைவியா...என்னோடு இருக்கப் போகிறவளா...என்று மீண்டும் மீண்டும் மனதில் அலை அடிக்கும் அல்லவா....

அபிராமியை கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. 

பட்டுச் சேலை, கன்னத்தில் வெட்கம், காதில் கம்மல்...புகுந்த வீடு போகிறாள்....

நடந்தது என்றோ...அபிராமி பட்டர் நினைத்துப் பார்க்கிறார்...

பாடல் 

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன் 
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த 
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம், 
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே


பொருள்