Sunday, September 22, 2013

குறுந்தொகை - இப்படி இல்லாமலும் நிறைய பேர் இருப்பாங்களா ?

குறுந்தொகை - இப்படி இல்லாமலும் நிறைய பேர் இருப்பாங்களா ?


காதல் - உயிர்களின் ஜீவ நாடி.

காதலுக்காக ஏங்குவதும், காதலைப் பகிர்ந்து கொள்ளவும் விரும்பாத உயிர்கள் இருக்குமா என்ன ?

ஆனால், சுத்தி முத்தும் பார்த்தால் அப்படி காதலுக்காக உருகுபவர்கள் நிறைய இருப்பது மாதிரி தெரியவில்லை.

பணம், பொருள், பதவி, அறிவு என்று பலவற்றை தேடுபவர்கள்தான் அதிகமாகத் தெரிகிறார்கள்.

அன்பு யாருக்கு வேண்டும் ?

தான் அன்பு செலுத்துபவர்களின் வரும் வழி பார்த்து , விழி சோர நிற்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் ?

மழை தேடும் மண்ணைப் போல மனம் தேடும் மக்கள் எத்தனை ?

காதலிக்காக காதலனுக்காக கால் கடுக்க நடந்தவர்கள், காத்துக் கிடந்து கால் தேய்ந்தவர்கள் எவ்வளவு பேர் ?

பாடல்

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

பொருள்


Saturday, September 21, 2013

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 




அந்தக் காலம். 

 ஒரு சின்ன கிராமம். 

 மின்சாரம் கிடையாது. மழையை நம்பிய விவசாயம். விவசாயம் இல்லை என்றால் வருமானம் இல்லை, வேலை இல்லை. சாப்பாட்டுக்கு  வழி இல்லை. 

மக்கள் என்ன செய்வார்கள் ? ஊரைக் காலி செய்துவிட்டு போய் விடுவார்கள். வீடுகளை அப்படியே விட்டு விட்டுப்  போய் விடுவார்கள்.

காலி வீட்டை ஏன் பூட்டி வைக்க வேண்டும் ? அப்படியே திறந்து கிடக்கும்.

வெயில். கொளுத்தும் வெயில். பட்டுப் போன மரங்கள். சூடு தாங்காமல் மரத்தில் உள்ள அணில்கள் அங்குள்ள வீடுகளின் மேல் உள்ள ஓடுகளில் தாவி தாவி இறங்கி வீட்டு முற்றத்தில் இறங்கி நிழல் தேடி வரும். வீட்டில் சிதறி கிடக்கும் சில பல தானிய மணிகளை உண்ணும். வீட்டிற்குள் அங்கும் இங்கும் எங்கும் ஓடும்...உணவைத் தேடி.

முற்றத்தை தாண்டிக் குதித்து வாசலுக்கு ஓடும். அங்கிருந்து முற்றம் வழியாக பின் வாசலுக்கு ஓடும்.  

அங்குள்ள வீடுகளில் அணில்களின் ஓட்டத்தைத் தவிர வேறு ஒரு உயிரும் இல்லை. 

ஆனால் , முன்பு அப்படி அல்ல. 

தேரும் திருவிழாவுமாக அந்த ஊர் ஒரே கோலாகாலமாக  இருக்கும்.வான வேடிக்கை, இசைக் கருவிகளின் இசை, கடைத் தெருக்களில் வாங்கவும் விற்கவும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.  

அந்த  வீட்டுகளுக்கு வருத்தம் இருக்குமா ? கணவனும், மனைவியும், பிள்ளைகளும் ஒன்றாக வாழ்ந்து அவர்கள் சுக துக்கங்களைப் பார்த்த அந்த வீடுகளுக்கு, இப்போது தனிமையில் இருப்பது கொஞ்சம் வருத்தமாய் இருக்குமோ ?


அந்த வீடுகளைப் பார்த்து பெருமூச்சு விடுகிறாள் அந்தப் பெண். அவள் காதலனும் பஞ்சம் பிழைக்க வெளியூர் போய் விட்டான். அவனோடு இருந்த காலத்தில் விழாக் கோலம் பூண்ட ஊர் போல சந்தோஷமாக  இருந்தேன்.ஆனால் இன்றோ அவனைப் பிரிந்து அணில்கள் விளையாடும் வெற்று ஊர் போல இருக்கிறது என் வாழ்க்கையும் 


 பாடல் 

காதலர் உழைய ராகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரில் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.


பொருள் 


இராமாயணம் - பரதன் கங்கை கரை அடைதல்

இராமாயணம் - பரதன் கங்கை கரை அடைதல்



இராமனை மீண்டும் அழைத்து வந்து அரியணையில்  அமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு பரதன் கங்கைக் கரையை  அடைந்தான்.

முதல் பாடலிலேயே கம்பன்  உருகுகிறான்.

பூ விரிந்தது போன்ற அழகிய பாதங்களைக் கொண்ட பரதன், ஒப்பிட்டு கூற முடியாத அளவிற்கு உயர்ந்த சேனைகளை கொண்டவன்,  காவிரி நாடு போல உயர்ந்த அயோத்தியை விட்டு எல்லா உயிர்களும் பார்த்து இரக்கப் படும்படி கங்கைக் கரையை அடைந்தான்.

பாடல்

பூ விரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான்.


பொருள்


Wednesday, September 18, 2013

இராமாயணம் - உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்

இராமாயணம் - உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான் 


நம் மனம் அல்லது உயிர் எத்தனையோ விஷயங்களுக்கு ஆசைப்  படுகிறது. மனம் விரும்பும் விதம் எல்லாம் உடல்  சென்று அது வேண்டும் இன்பங்களை புலன்கள் மூலம் பெற்று மனம் மகிழ்ச்சி அடைய  உதவுகிறது.

இதைப் பார்த்த கம்பனுக்கு ஒன்று தோன்றியது.

மக்கள் எல்லாம் உயிர்  போலவும்,தசரதன் உடல் போலவும் தோன்றியது.

உயிர் வேண்டியதை எல்லாம் உடல் தேடித் பிடித்து அது அனுபவிக்கத் தருவதைப் போல தசரதன் மக்களுக்கு சேவை  செய்தான்.

பாடல்

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால்.
செயிர் இலா உலகினில். சென்று. நின்று. வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்.

பொருள்

வயிர = வைரம் வைத்து செய்யப் பட்ட

வான் பூண் அணி  = உயர்ந்த பூண் கொண்ட அணிகலன்களை அணிந்த

மடங்கல் மொய்ம்பினான் = சிங்கம் போன்ற உடலைக் கொண்டவன்

.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால் = எல்லா உயிர்களையும் தன்  உயிர் போல நினைத்து காப்பதால்

செயிர் இலா உலகினில் = குற்றம் இல்லாத இந்த உலகில்

சென்று. நின்று. வாழ் = சென்று நின்று வாழும்

உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான் = எல்லா உயிர்களும் வாழும் உடம்பு போல  ஆயினான்




Tuesday, September 17, 2013

நற்றிணை - நீர் இன்றி அமையா உலகு

நற்றிணை - நீர் இன்றி அமையா உலகு 


நற்றிணை , 400 தனிப் பாடல்களை கொண்டது. அந்த கால தமிழர்களின் வாழ்கையை படம் பிடித்து  காட்டும்  நூல்.

அதில் ஒரு பாடல்.....

தலைவி அவளுடைய தோழியிடம் கூறுகிறாள்.

"..அவன் சொன்ன சொல் தவற மாட்டான். எப்போதுமே இனியவன். கட்டி அணைக்கும் என் தோள்களை என்றும் பிரியாதவன். தேன் போல இனிமையானவன். எப்படி இந்த உலகம் நீர் இல்லாமல் வாழ முடியாதோ, அது போல அவன் இல்லாமல் நான் வாழ முடியாது என்று அவன்  அறிவான். அவன் என்னை பிரியும் அந்த சிறுமையான செயலை ஒரு போதும் செய்ய மாட்டான். "

பாடல்


நின்ற சொல்லர் நீடு தோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே;
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!


பொருள்

நின்ற சொல்லர் = சொன்ன சொல் தவறாதவன். அவன் சொன்ன சொல் என்றும் நிலைத்து இருக்கும்.  ஒரு தடவை ஒன்று சொன்னால் அதில் இருந்து மாற மாட்டான்.

நீடு தோறு இனியர் = ரொம்ப இனிமையானவன். நீடு என்றால் நீண்ட, ரொம்ப நாள், என்று பொருள். 

என்றும் என் தோள் பிரிபு அறியலரே = என் தோள்களை விட்டு பிரியவே மாட்டான்


தாமரைத் = தாமரை மலரில் 

தண் = குளிர்ச்சியான

தாது ஊதி = மகரந்தப் பொடிகளை ஊதி. ஊதி என்றால் துளைத்து, நுழைந்து, உறிஞ்சி  என்று பொருள்

மீமிசைச் = உயர்ந்த இடத்தில்

சாந்தில் = சந்தன மரத்தில்

தொடுத்த தீம் தேன் போல = சேர்த்து வைத்த சுவையான தேனைப் போல

புரைய மன்ற = நிச்சயமாக உயர்ந்தது

புரையோர் கேண்மை = உயர்ந்த அவனின் நட்பு அல்லது உறவு

நீர் இன்று அமையா உலகம் போலத் = நீர் இல்லாமல் அமையாத உலகம் போல

தம் இன்று = அவன் இன்றி


அமையா நம் நயந்தருளி = அமையாத நம்முடைய நன்மையைக் கருதி, அருள் செய்து

நறு நுதல் பசத்தல் அஞ்சிச் = என் நெற்றி பசலை நிறம் அடையும் என்று அஞ்சி

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! = என்னை பிரியும் அந்த சிறிய செயலை  செய்வானா ? அவனுக்கு அதைச் செய்யத் தெரியாது

சந்தன மரத்தில் உள்ள தேன் போல அவன் காதல் உயர்ந்தது. கெட்டுப் போகாதது. 

இராமாயணம் - வெட்கப்பட்ட திருமால்

இராமாயணம் - வெட்கப்பட்ட திருமால் 



சீதையை தேடி கண்டடைந்த அனுமன், அவளுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டுகிறான். அந்த உருவத்தை கம்பன் சில பாடல்களில் விவரிக்கிறான். அதில் ஒரு பாடல்...

"இதை ஒரு வலிமை இல்லாத குரங்கு என்று நினைக்க முடியாது. உலகுக்கோர் அச்சாணி போன்றவன் இந்த அனுமன். இவனுடைய பெருமை சொல்ல முடியாது. இவனுடைய விஸ்வரூபத்தைப் பார்த்தால், அந்த உலகளந்த திருமாலும் வெட்கப் படுவான் "

என்கிறார் கம்பர்.

பாடல்

‘ஏண் இலதுஒரு குரங்கு ஈது’ என்று எண்ணலா
ஆணியை, அனுமனை,அமைய நோக்குவான்,
‘சேண் உயர்பெருமை ஓர் திறத்தது அன்று’ எனா,
நாண் உறும்-உலகுஎலாம் அளந்த நாயகன்.

பொருள்


Monday, September 16, 2013

இராமாயணம் - இராமன் அம்பா ? காமன் அம்பா ?

இராமாயணம் - இராமன் அம்பா ? காமன் அம்பா ?


மாரீசனை ஏதோ கெட்டவன் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். கம்பன் அப்படிச் சொல்லவில்லை. அவனை மிக நல்லவனாக காட்டுகிறான்.

மாரீசன், எவ்வளவோ எடுத்துச் சொல்லுகிறான். இராவணன் கேட்டான் இல்லை. கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்று.

கடைசியில், நீ போகவில்லை என்றால் உன்னை கொல்வேன் என்றான் இராவணன்.

வேறு வழியில்லாமல் மாரீசன் ஒத்துக் கொண்டான்.

இராவணனுக்கு ஒரே குஷி.....மாரீசனை அப்படியே கட்டிக் கொண்டு, கோபம் எல்லாம் நீங்கி,  "மலை போல் உயர்ந்த தோள்களை கொண்டவனே, மன்மதனின் கொதிக்கும் அம்பால் அழிவதை விட, இராமனின் அம்பால் இறப்பது எவ்வளவோ பெருமை தருவது அல்லவா ? எனவே, தென்றலை விட மென்மையான சீதையை தருவாய்" என்று கூறினான்.

பாடல்

என்றலும், எழுந்து புல்லி, ஏறிய வெகுளி நீங்கி,
'குன்று எனக் குவிந்த தோளாய்! மாரவேள் கொதிக்கும் அம்பால்
பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ?
தென்றலைப் பகையைச் செய்த சீதையைத் தருதி' என்றான்.

பொருள்