Showing posts with label Thiru vaasagam. Show all posts
Showing posts with label Thiru vaasagam. Show all posts

Sunday, June 3, 2012

திருவாசகம் - பொம்மலாட்டம்


திருவாசகம் - பொம்மலாட்டம்


இந்த உலகம், வான், மண், காற்று, ஒளி எல்லாவற்றையும் பார்க்கும் போது இதை எல்லாம் யாரோ படைத்து இருப்பார்களோ என்று மனதிற்கு தோன்றுகிறது.

ஆனால், அறிவை கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்தால் அப்படி யாரும் இருப்பதாய் தோன்றவில்லை.

என்ன தான் செய்வது? அவன் உண்மையா? அல்லது உண்மை இல்லாதவனா? 

இரண்டும் தான் என்கிறார் மணி வாசகர்.

பொம்மலாட்டம் நடக்கிறது. அறியாத குழந்தைகளுக்கு ஏதோ அந்த பொம்மைகள் தானே எல்லாம் செய்வது போல தோன்றும்.

அறிந்த பெரியவர்களுக்குத் தெரியும் அந்த பொம்மைகளை ஆட்டுவிப்பது வேறு யாரோ என்று.

சில சமயம் பொம்மைகளே நாம் தான் எல்லாம் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்....

இது என் சொத்து, என் மனைவி, என் பிள்ளைகள் என்று மனிதர்கள் நினைப்பது அப்படிதான் என்கிறார் மணி வாசகர்...

Sunday, April 22, 2012

திருவாசகம் - சிவன் சுமந்த சுமைகள்


திருவாசகம் - சிவன் சுமந்த சுமைகள்


நாம் மட்டும் தானா சுமைகளை சுமக்கிறோம்? அந்த இறைவனையும் சுமக்க வைக்கிறோம்.

சிவன் சுமந்த சுமைகளை மாணிக்க வாசகர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் இங்கே.

Tuesday, April 3, 2012

திரு வாசகம் - திருச் சாழல்

கோவிலுக்குப் போகிறோம்.
கூட்ட நெரிசல் ஒரு புறம்.
பணம் பிடுங்கும் கூட்டம் மறுபுறம்.
வீடு நினைப்பு, வேலை, பிள்ளைகள், என்று ஆயிரம் கவலை.
இதில் பக்தி எங்கே வரும்.

ஏதோ பக்தி உள்ளவர்கள் போல நாமும் போகிறோம்.

இது நமக்கு மட்டும் அல்ல, மாணிக்க வாசகருக்கும் தான்..

-------------------------------------------------------------------------------
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்
ஆடகசீர் மணிக் குன்றே இடையறா அன்பு உனக்கு என்
ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள் எம் உடையானே
--------------------------------------------------------------------------------


நானும் உன் அடியார் போல நடித்து அவங்களுக்கு நடுவே நானும் சொர்க்கம் (வீடு )
புக எண்ணி ரொம்ப வேகமா வருகிறேன். உன் மேல் இடைவிடாத
அன்பு என் உள் இருக்க அருள் புரியேன் என்று வேண்டு கிறார்.

மணி வாசகருக்கே இந்தப் பாடு என்றால் நாம் எல்லாம் எம் மாத்திரம் ?

திருச் சாழல் என்ற திருவாசகத்தில் உள்ளது மேல் சொன்ன பாடல்.