Saturday, March 31, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பெனும் மலையுள் அகப்படும் மலை

இறைவனை பக்தியால் கட்டிப் போட முடியும் என்று பலப் பல பாடல்களில் நம்
பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.


--------------------------------------------------------------------------------------------
பேரே யுறைகின்ற பிர ¡ன் இன்று வந்து
பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்
ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே
-------------------------------------------------------------------------------------------------


சீர் பிரித்தபின்


-------------------------------------------------------------------------------------------------
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரென் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகும் உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே


-----------------------------------------------------------------------------------------------------


பொருள்:


பேரே = திருப் பேரூர் என்ற ஊரில்

உறைகின்ற பிரான் = இருக்கின்ற பிரான்

இன்று வந்து = இன்று வந்து

பேரென் என்று = பெயர்ந்து போக மாட்டேன் என்று (என் கிட்ட ஒரு சல்லி பேராது
என்று சொல்லக் கேள்வி பட்டு இருக்கீர்களா)

என் நெஞ்சு நிறையப் புகுந்தான் = என் மனத்தில் நிறைய புகுந்தான்

கார் ஏழ் = ஏழு மேகங்கள்

கடல் ஏழ் = ஏழு கடலும்

மலை ஏழ் = ஏழு மலைகளையும்

உலகும் = இந்த உலகை எல்லாம்

உண்டும் = உண்டும் , சாப்பிட்ட பின்னும்

ஆரா வயிற்றானை = பசி ஆறாத வயிற்றானை

அடங்கப் பிடித்தேனே = வேறு எங்கும் போகாதபடி அடங்கும் படி பிடித்தேனே

வில்லிபுத்துராழ்வார் பாரதம் - மாபாரதம் வாராமல் காக்க

பாரதப் போருக்கு முன், கிருஷ்ணன் பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்த போரை
எப்படி தவிர்ப்பது என்று கேட்டான்.

தருமன்: அவர்களிடம் ஐந்து நாடு கேள், கொடுக்காவிட்டால் ஐந்து ஊர் கேள்,
அதுவும் கொடுக்காவிட்டால் ஐந்து வீடு கேள், சமாதனாமாய் போய் விடுவோம் என்றான்.

அர்ஜுனன்: Nothing doing, we want war என்றான்.

பாஞ்சாலி: ஒன்றும் சொல்லவில்லை. தன் விரித்த கூந்தலை காட்டினாள். கிருஷ்ணன்
புரிந்து கொண்டான்.

சகாதேவன்: அவன் ஒரு பெரிய ஞானி. அவன் சொல்லவான் "கிருஷ்ணா, நீ இந்த போரை நடத்த
முடிவு செய்து விட்டாய்...எதற்கு எந்த நாடகம் ... "

கிருஷ்ணன்: என்ன சகாதேவா இப்படி சொல்கிறாய். இந்தப் போரை நிறுத்த முடியும்
என்றால், நான் ரொம்ப சந்தோஷப் படுவேன். இந்தப் போரை நிறுத்த
உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா ? என்று கேட்டான்.

சகாதேவன்: இருக்கு கிருஷ்ணா. கர்ணனுக்கு முடி சூட்டி, அர்ஜுனனை கொன்று,
பாஞ்சாலியை மொட்டை அடித்து, உன்னையும் கட்டி போட்டால், வாராமல் காக்கலாம் இந்த மா
பாரதப் போர் என்றான்.


கிருஷ்ணன்: ஹ்ம்ம்...மத்தது எல்லாம் செய்ய முடியும் என்றே வைத்துக்
கொள்வோம்....என்னை எப்படி கட்டி போடுவாய் என்று கேட்டான் ?

சகாதேவன்: அது ரொம்ப சுலபம்...என் அன்பால், என் பக்தியால் உன்னை கட்டிப்
போடுவேன் என்றான்.

கிருஷ்ணன்: எங்க என்னை கட்டு பார்ப்போம் என்று ஆயிரம் ஆயிரம் உருவம்
எடுத்தான்... சகாதேவன் அவனை தன் பக்தியால் கட்டிப் போட்டான். சகாதேவா,
"ஒத்துக் கொள்கிறேன்..என்னை உன் பக்தியால் கட்டிப் போட முடியும்
என்று...தயவுசெய்து கட்டுகளை அவிழ்த்து விடு" என்றான்.


சகாதேவன்: எங்களுக்கு வெற்றி கிடைக்க அருள் புரிந்தால், கட்டை அவிழ்த்து
விடுகிறேன் என்றான்.

கிருஷ்ணனும் அப்படியே அருள் புரிய, அவன் கட்டுகளை அவிழ்த்து விட்டான்.


வில்லி புத்துராழ்வார் எழுதிய பாரதத்தில் இருந்து அந்தப் பாடல்


----------------------------------------------------------------------------------------------------------------------
பாராளக் கன்னனிகற்பார்த்தனைமுன்
கொன்றணங்கின்காரார் குழல்களைந்துகாலிற் றளைபூட்டிநேராகக்
கைப்பிடித்துநின்னையும்யான் கட்டுவனேல்வாராமற் காக்கலா
மாபாரதமென்றான்
------------------------------------------------------------------------------------------------------------------------


கொஞ்சம் சீர் பிரிக்கலாம்:


--------------------------------------------------------------------------------------------------------------------------
பார் ஆளாக் கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று
அணங்கின்
காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி
நேராகக் கைப் பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்வாராமற் காக்கலாம்
மாபாரதம் என்றான்
---------------------------------------------------------------------------------------------------------------------------


பொருள்:


பார் ஆளக் கன்னன் = கர்ணன் இந்த உலகை ஆள (இரண்டு
சுழி "ன்" போட்டால் கர்ணன்)

இகல் பார்த்தனை = பகைமை கொண்ட அர்ஜுனனை

முன் கொன்று = அதற்க்கு முன்னால் கொன்று

அணங்கின் = பாஞ்சாலியின்

காரார் குழல் களைந்து = கருமையான முடியை களைந்து
மொட்டை அடித்து

காலில் தளை பூட்டி = காலில் விலங்கு பூட்டி
நேராகக் கைப் பிடித்து = உன் கைகளையும் பிடித்து

நின்னையும் யான் கட்டுவனேல் = உன்னையும் நான்
கட்டினால்
வாராமற் காக்கலாம் மாபாரதம் என்றான் = இந்த மா
பாரதப் போர் வராமல் காக்கலாம் என்றான்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பெனும் வலைக்குள் அகப்படும் மலையே என்பார் மாணிக்க வாசகர்.

இறைவன் அன்புக்கு கட்டுப் படுபவன்.

கம்ப இராமாயணம் அளவுக்கு புகழ் பெறாவிட்டாலும், வில்லிபுத்தூர் ஆழ்வார் அருளிச்செய்த மகாபாரதம் ரொம்ப அருமையான
பாடல்களை கொண்டது. படிக்க கொஞ்சம் கஷ்டம்.

கம்ப இராமாயணம் அளவுக்கு எளிமை அல்ல.

அதுவும் காரணமாய் இருக்கலாம்.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம்மாழ்வார் - கிளரொளி

"கிளர் ஒளி இளமை " என்பது நம்மாழ்வாரின் பிரசித்தமான ஒரு பத பிரயோகம்.

இளமை எவ்வளவு இனிமையானது.

அப்போது நிறைய உடலிலும் , மனத்திலும் வலு இருக்கும். நாள் ஆக ஆக
தளர்ச்சி வந்து சேரும் .

வயது ஆக ஆக குடும்ப பொறுப்பும் கூடிவிடும்.

இறைவனை பற்றி சிந்திக்க கூட நேரம் இருக்காது.

எனவே, இளமையிலேயே இறைவனை பற்றி அறிந்து அவன் பால்
சேர்ந்து இருப்பது புத்திசாலி தனம் என்கிறார் நம்மாழ்வார்...(சொன்னா எங்கய
கேக்குராங்க்ய ... கடவுள் இல்லை , இருந்தா காமி பாப்போம் அப்படின்னு வாதம்
பன்றாங்க்ய ... தருதல புள்ள குட்டிக தாயே )

கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்,
வளரொளி மாயோன் மருவிய கோயில்,
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை,
தளர் விலராகிச் சார்வதுசதிரே.


கிளரொளியிளமை = கிளர் ஒளி இளமை

கெடுவதன் முன்னம் = முடியுமுன் (முதுமை வருவதற்கு

முன்னால்)வளரொளி = வளரும் ஒளி, வளர்ந்த ஒளி, வளரும் ஒளி

மாயோன் = கண்ணன், திருமால்

மருவிய கோயில் = உள்ள கோயில் வளரிளம் = வளர் இளம்

பொழில் = பூங்கா

சூழ் = சூழ்ந்த

மாலிருஞ்சோலை = மால் இருக்கும் சோலை தளர்

விலராகிச் = தளர்ச்சி இல்லாமல்

சார்வதுசதிரே = சார்வது சதிரே = சேருவது மேலும் புத்திசாலிதனம்

கந்தர் அலங்காரம் - சுடும் காமம்

காமம் சுடும்.

காமம் தீ. அது ஊனை உருக்கும். உயிரை உருக்கும்.

காமம் மனிதர்களை தடம் புரட்டி போட்டிருக்கிறது. இராஜியங்களின் எல்லை கோடுகளை
மாற்றி எழுதி இருக்கிறது.

தீ நெருங்கினால் தான் சுடும். காமம் விலகி நின்றாலும் சுடும் என்பார்
வள்ளுவர்.

தொடிர் சுடின் அல்லது காம நோய் போல
விடிர் சுடல் ஆற்றுமோ தீ ?


காமத்தை போல விட்டு விலகியபின்னும் தீயால் சுடமுடியுமா என்று கேட்கிறார்
வள்ளுவர்.


கந்தர் அலங்காரத்தில் அருணகிரி நாதர் காமத்தை கடல் என்கிறார். நீந்தி கரை சேர
முடியாத கடல்.


---------------------------------------------------------------------------------------------------
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான் கடந்தேன் சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே
----------------------------------------------------------------------------------------------------


சீர் பிரித்த பின்


------------------------------------------------------------------------------------------------------
கடத்தில் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தத்
திடத்தில் புணை என யான் கடந்தேன் சித்திர மாதர் அல்குல்
படத்தில் கழுத்தில் பழுத்த செவ் வாயில் பனையிலும் உந்தி
தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங் காம சமுத்திரமே
----------------------------------------------------------------------------------------------------


கடத்தில் = குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்ற

குறத்தி = குற வள்ளி

பிரான் = பிரியான் என்பதன் மரூவு. வள்ளியை விட்டு எப்போதும் பிரியாதவன்.

அருளால் = அவனுடைய அருளால்

கலங்காத = கலக்கம் இல்லாமல்

சித்தத் திடத்தில் = திட சித்தத்தில். உறுதியான புத்தியால். சித்தம் என்பதற்கு
புத்தி என்பது சிறந்த அர்த்தம் இல்லை என்றாலும் வேறு வார்த்தை எனக்கு
தெரியவில்லை.

புணை என = அந்த உறுதியான புத்தியை தெப்பமாக கொண்டு

யான் கடந்தேன் = நான் கடந்தேன். எதை கடந்ததாக சொல்கிறார் ?

சித்திர மாதர் = சித்திரம் போன்ற அழகிய பெண்களின்

அல்குல் படத்தில் =

கழுத்தில் = கழுத்தில்

பழுத்த செவ் வாயில் = பழம் போன்ற சிவந்த இதழ்களில்

பனையிலும் = பனை மரம் போன்ற அழகிய தோள்களில்

உந்தி தடத்தில் = வயிற்றில்

தனத்தில் = அழகிய மார்பில்

கிடக்கும் வெங் காம சமுத்திரமே = கிடக்கும்
வெம்மையான காம சமுத்திரமே

இராவணின் புத்திர சோகம் - 1

புத்திர சோகம் இராவணனை படுத்துகிறது.

எவ்வளவு பெரிய வீரன்.

உலகை எல்லாம் வென்றவன். அவன் அழுகிறான். தரையில்
கிடந்து புரளுகிறான்.

நடக்க கூட முடியாமல் காலை இழுத்துக் கொண்டு
நகர்கிறான்.

அது என்னவோ அவன் நிலத்தை உழுவது போல இருக்கிறது.

அவன் சோகத்தை கம்பன் பிழிந்து தருகிறான்.

படிக்கும் நமக்கு இராவணன் மேல் ஒரு பரிதாபம்
வருகிறது. ஐயோ பாவம் என்று ஒரு பச்சாதாபம் எழுகிறது.

-------------------------------------------------------------------------------
எழும்;
இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று
அழும்; அரற்றும்;அயர்க்கும்;
வியர்க்கும், போய்
விழும்; விழிக்கும்;முகிழ்க்கும்;
தன் மேனியால்,
உழும் நிலத்தை; உருளும்;
புரளுமால்.
------------------------------------------------------------------------------------------

மிக எளிமையான பாடல். இந்த பாட்டுக்கு எல்லாம் அர்த்தம்
கேட்டால், உங்களையும் CSJK வையும் ஒரே காரில் அனுப்பி அதில் 80 -s வந்த
பாடல்களையும் போட்டு விடனும். ....:)

எழும்;
= எழுந்து நிற்பான்

இருக்கும்; = நிற்க கூட முடியாமல் உட்காருவான்

இரைக்கும்; = அப்படி அடிக்கடி எழுந்து உட்கார்ந்ததால் மூச்சு இறைப்பான்.
அவ்வளவு வலிமை குன்றி விட்டான்.

இரக்கம் உற்று அழும்; = சுய பச்சாதாபத்தில் இரக்கம் கொண்டு
வாய் விட்டு அழுவான்

அரற்றும்; = அர்த்தம் இல்லாமல் அரற்றுவான்

அயர்க்கும்; = சோர்ந்து போவான்

வியர்க்கும் = பலம் குன்றியதால்
வியர்ப்பான்

போய் விழும்; = இருக்கவும் முடியாமல், நிற்கவும்
முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் போய் விழுவான் (மெத்தை மேல்
?)

விழிக்கும்; = என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பான்

முகிழ்க்கும்; = ஒன்றும் தெரியாமல் கண்ணை மூடுவான் (முகிழ்த்தல் = கண்களை மூடுதல்
)
தன் மேனியால் உழும் நிலத்தை; = அவன் காலை இழுத்து இழுத்து
நடப்பது நிலத்தை உழுவது போல இருக்கிறது

உருளும்; புரளுமால். = தரையில் கிடந்து உருளுவான்,
புரளுவான்