Sunday, April 8, 2012

திருவாசகம் - மாணிக்கவாசகரின் வருத்தம்

வாழ்க்கைல நாம எதுக்கு அச்சப்படுவோம் ? எதுக்கு வருத்தப் படுவோம் ?


நமக்கு வேண்டியவங்களுக்கு உடம்பு சரி இல்லேனா, போட்ட முதல் ஊத்திக்குமோ என்று சந்தேகம் வரும் போது, பிள்ளைங்க படிக்கனுமே என்று, அதுகளுக்கு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி குடுக்கணுமே என்று, அவங்களுக்கு நல்ல வேலை கிடைக்கணுமே என்று, நம்ம வேலை போயிற கூடாதே என்று, சில சமயம் சாவை கண்டு ... இப்படி பல வருத்தம் / அச்சம் நமக்கு இருக்கு


மாணிக்க வாசகருக்கு என்ன வருத்தம்/அச்சம் பாருங்க


நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம்மாழ்வார் - vaccination


ஏதோ இந்த தேவாரம், திருவாசகம், பிரபந்தம் எல்லாம் ரொம்ப கடினமான விஷயம், நம்மால் அதை படித்து புரிந்து கொள்ள முடியாது என்று நினைப்போம்.

அது அப்படியல்ல.

சில பல பாடல்கள் கஷ்டம் தான், இல்லை என்று சொல்வதற்கில்லை.

ஆனால் , நிறைய பாடல்கள் மிக மிக எளிமையானவை...படித்தால் சட்டென்று புரியும், அட, நல்லா இருக்கே என்று நம்மை ஆச்சரியபட வைக்கும்.

அப்படிப்பட்ட பாட்டு ஒன்று, நாலாயிர திவ்ய பிரபந்தந்தில், நம்மாழ்வார் அருளிச் செய்த இரண்டாவது திருமொழியில் முதல் பாசுரம்.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இராகவனே தாலேலோ


குல சேகர ஆழ்வார் இராமன் மேல் மிகுந்த ஈடிபாடு உள்ளவர். 

இராமன் எவ்வளவோ துன்பங்களை தாங்கி இருக்கிறான். 

அரசாட்சியை துறந்தான், கானகம் சென்றான், மனைவியை மாற்றான் கவர்ந்து சென்றான், கல்லிலும் முள்ளிலும் தேடி அலைந்தான்...

அப்படி துன்பப் பட்ட இராமனுக்கு வால்மீகியும் சரி, கம்பனும் சரி ஒரு தாலாட்டு பாடவில்லேயே என்று அவர் மனம் மிக வேதனை பட்டு இருக்கிறது. 

அவரே இராகவனுக்கு தாலாட்டு பாடினார். பத்து இனிமையான பாடல்கள்:

அதில் முதல் பாடல் .......

கம்ப இராமாயணம் - கை நடுங்கிய இராமன்


இராமயணத்தை படிக்கும் போது கம்பனுக்கு கும்பகர்ணன் மேல் ஒரு தனிப் பாசம் இருப்பதாகவே தோன்றுகிறது.

கும்பகர்ணனிடம் போரிட்டு அனுமன் விலகி சென்று விட்டான்.

இராமன் கும்பகர்ணனின் கை இரண்டையும் அறுத்தான், பின் கால் இரண்டையும் அறுத்தான்.

அப்போதும் கும்ப கர்ணன் மிக வீரமாக போரிடுகிறான். கையும் காலும் இல்லாமல் எப்படி போரிடுவது ?

வாயால்,பெரிய கற்களை கவ்வி, அதை நாக்கால் வேகமாக துப்பி வானர சேனைகளை வாட்டி வதைக்கிறான்.

அந்த வீரத்தை கண்டு இராமனின் கையும் நடுங்கியதாம். இதை விட கும்ப கர்ணனின் வீரத்திற்கு சிறப்பு சேர்க்க முடியுமா ?

இதோ அந்தப் பாடல்.....

Saturday, April 7, 2012

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணன் இராமனை சந்திக்கும் தருணம்

கும்ப கர்ணன் ஒரு இனிமையான பாத்திரம். அவனுக்கு நண்பர்கள் இருந்து இருப்பார்களா ? அவனுக்கு மனைவி உண்டா ? பிள்ளைகள் உண்டா ? தெரியவில்லை. ஆனால், ரொம்ப நல்லவன் மாதிரிதான் தோன்றுகிறது.

இராவணனாவது மாற்றான் மனைவியை கவர்ந்தான். கும்பகர்ணன் அப்படி எந்த தவறும் செய்யவில்லை. இராவணனுக்கு நல்லது எடுத்துச் சொன்னான். இடித்து கூட சொன்னான் (பேசுவது மானம், இடை பேணுவது காமம், கூசுவது மானிடரை). இராவணன் கேட்கவில்லை. அதற்காக விபீஷணன் மாதிரி இராவணனை விட்டுவிட்டு செல்லவில்லை.

கடைசி வரை போராடி உயிர் கொடுக்கிறான். "நான் இறந்த பிறகாவது சீதையையை விட்டு விடு " என்று கெஞ்சுகிறான், இராவணனிடம்.

ரொம்ப அன்பு உள்ளவனாக அவனை காண்பிக்கிறான் கம்பன். தவறே செய்தால் கூட, அண்ணனுக்காக உயிர் கொடுக்கிறான். அவனை திருத்த நினைக்கிறான். விபீஷணன் மேல் அளவு கந்த காதல் வைத்து இருக்குகிறான்.
விபீஷணனை இராவணனிடம் இருந்து காப்பாற்றும்படி இராமனிடம் வேண்டுகிறான். விபீஷணன், கும்ப கர்ணனை பார்க்க வந்த போது "ஏன் தனியா வந்த, சீக்கிரம் போய் விடு, இராவணனால் உனக்கு ஏதாவது ஆபத்து வந்து விடும் என்று ஆதங்கப் படுகிறான்".



யுத்த களம். முதன் முதலாக கும்ப கர்ணன் இராமனை பார்க்கிறான்.
என்ன சொல்லி இருப்பான் ?
மூன்று விஷயங்கள் சொல்கிறான் இராமனிடம்.....
அடுத்து வரும் blog - ல் பார்க்கலாம்

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் வீரம்

கும்பகர்ணன் பெரிய வீரன். பெரிய தைரியசாலி. பெரிய பராகிரமம் படைத்தவன்.
அவன் வீரத்தை, தைரியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் ? கம்பன் யோசிக்கிறான்.
இராமன் ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் (ஒக்க மாட, ஒக்க பான, ஒக்க பத்தினி). ஒரு வில்லுனா ? எல்லாரும் ஒரு வில்லு தான் வச்சு இருப்பாங்க ? அஞ்சாறு வில்லா தூக்கிட்டு போவாங்க. ஒரு வில்லுனா, ஒரு இலக்குக்கு ஒரு அம்பு தான். குறி தப்பவே தப்பாது. இராமன் அம்பு பட்டால், அம்பு பட்டவன் சாக வேண்டியது தான்.
தாடகைக்கு ஒரு அம்பு. வாலிக்கு ஒரு அம்பு. காரனுக்கு ஒரு அம்பு. பரசுராமனுக்கு ஒரு அம்பு. ஏழு மரா மரங்களை துழைத்தது ஒரு அம்பு. அவ்வளவு ஏன், இராவணனை கொன்றதும் ஒரே ஒரு அம்பு தான் (தடவியதோ ஒருவன் வாளி).
ஆனால் கும்பகர்ணனுக்கு மட்டும் ஒரு அம்பு பத்தவில்லை ? ஒண்ணு பத்தாட்டி ஒரு இரண்டு மூணு அம்பு விட்டு இருப்பாரா ....?

கந்தர் அநுபூதி - வள்ளியின் பின் சென்ற வேலன்

பசங்களுக்கு பொண்ணு மேல ஒரு "கிக்" வந்துருச்சுனா அந்த பொண்ணுங்க பின்னாலேயே சுத்துவாங்க.
அந்த பொண்ணு எங்க போனாலும் அது பின்னாடியே போக வேண்டியது.
இவன் வீடு எங்கேயோ இருக்கும், அந்த பொண்ணு வீடு வேற எங்கேயோ இருக்கும்.
அந்த பொண்ணுக்காக வழிய மாத்தி அவ வீட்டு வழியா போவானுங்க.
அவ நிக்கிற பஸ் ஸ்டாண்ட்ல போய் நிப்பாணுக.
லைப்ரரிக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு அந்த பொண்ணு வீட்டுல போய் தண்ணி கேக்குறது....
இப்படி நிறைய நடக்கும்ல ... நாம கேள்வி பட்டு இருக்கோம்ல...
இப்படி தான் முருகன் வள்ளி பின்னால சுத்தினாராம்...கந்தர் அனுபூதியில் அருணகிரி நாதர் சொல்கிறார்