கம்ப இராமாயணம் - அக்னி பிரவேசம்
இராமாயணத்தில், அக்னி பிரவேசம் ரொம்பவும் சங்கடமான இடம்...வாலி வதை போல.
சீதையை காணாமல் இராமன் தவிக்கிறான், அழுது புலம்புகிறான், தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறான். பின் சண்டையிட்டு வென்ற பின் சீதை வருகிறாள்.
நீண்ட நாள் பிரிந்த தவிப்பு இருக்கும் தானே?
அவளிடம் அன்பாக "நீ எப்படி இருக்க, ரொம்ப கஷ்டப் பட்டியா...ரொம்ப மெலிஞ்சு போய்டியே..." என்று எல்லாம் கேட்பதை விட்டு விட்டு, காதில் கேட்க முடியாத சொற்களை அவள் முன் வீசுகிறான்
'ஊண்திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை;
முறைதிறம்பு அரக்கன் மாநகர் ஆண்டுறைந்து அடங்கினை;
அச்சம் தீர்த்து இவண் மீண்டது என்? நினைவு, :எனை
விரும்பும்" என்பதோ?'
ஊண்திறம் உவந்தனை = நல்ல இரசிச்சு சாப்பிட்ட (இராவணன் அரண்மனையில்). (ஊண் = உணவு; உவத்தல் = சந்தோசப் படுதல் )
ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை = உன் ஒழுக்கம் கெட்ட பின்னும், நீ இறக்கவில்லை
முறைதிறம்பு = முறை கெட்ட (திறம்புதல் = பிறழ்தல் )
அரக்கன் மாநகர் = அரக்கனின் பெரிய நகரமான (இலங்கையில் )
ஆண்டுறைந்து அடங்கினை = நீண்ட நாள் தங்கி settle ஆகிட்ட
(ஆண்டு = ரொம்ப நாள்; ஆண்ட்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவதில்லை )
அச்சம் தீர்த்து = (இப்ப ) ஒரு பயமும் இல்லாமல்
இவண் மீண்டது என்? = நீ எப்படி இங்கு வந்தாய் ?
நினைவு, எனை விரும்பும்" என்பதோ?' = நீ மனசுல நான் உன்னை இன்னமும் விரும்புவேன் என்று நினைத்துக் கொண்டாயா ?
பாவம் இல்ல சீதை ? பெண்ணுக்கு அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சோதனைதான்.