Saturday, May 12, 2012

கலித்தொகை - தாயின் மன நிலை


கலித்தொகை - தாயின் மன நிலை

இலக்கியங்கள் கடவுள்களையும், மன்னர்களையும், வீர சாகசம் புரிந்தவர்கையும் பேசிய அளவுக்கு சாதாரண மனிதர்களைப் பேசுவது இல்லை.

அவர்களின் கவலை, ஆசைகள், கனவுகள் இவற்றைப் பற்றி பெரிதாக எதுவும் பேசப் படுவது இல்லை.

தமிழில் கலித்தொகை சற்று வித்தியாசமான ஒரு இலக்கியம்.

இது சாதாரண மனிதர்களைப் பற்றி, அவர்கள் வாழ்ந்த வாழ்கையைப் பற்றி, அவர்களின் வாழ்கை சிக்கல்களைப் பற்றி பேசுகிறது.

அவள் ஒரு பெண்ணின் தாய்.

அந்தப் பெண்ணோ, அவள் காதலனோடு சென்று விட்டாள்.

ஒரு வேளை தந்தையும், உறவினர்களும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையோ என்னவோ.

என்ன இருந்தாலும் பெற்ற மனம் அல்லவா ?

அந்தத் தாய், தன் மகளை தேடித் போகிறாள்.

அவள் எப்படி இருக்கிறாளோ, என்ன ஆனாளோ என்று கவலையோடு தேடுகிறாள்.

எதிரில் ஒரு புலவர் வருகிறார். அவர், அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்.

பயபடாதே, உன் மகள் ஒரு நல்ல ஆண் மகனைத் தேர்ந்தெடுத்து அவனோடு கற்பு நெறியில் சென்று இருக்கிறாள். கவலைப் படாதே என்று.


உன் மகள் என்னைக்கு இருந்தாலும் உன்னை விட்டு போக வேண்டியவள் தானே ?

மலையில் பிறந்தது என்பதற்காக சந்தனத்தை யாரும் அரைத்து மலைக்கு பூசுவது இல்லை.

கடலில் பிறந்தது என்பதற்காக முத்தை யாரும் எடுத்து மாலையாய் கோர்த்து கடலுக்கே அணிவிப்பது இல்லை.

யாழில் இருந்து இசை பிறந்தாலும், அந்த இசை யாழுக்கு சொந்தமில்லை 
அது போல

உன் மகள் உன்னிடம் இருந்து வந்தாலும், அவள் உனக்கு சொந்தமில்லை.

அவள் ஒரு நல்ல துணையை தான் தேடித் போயிருக்கிறாள். ஒன்றும் கவலைப் படாதே என்று அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்.

Friday, May 11, 2012

கம்ப இராமாயணம் - அகலிகை தவறு செய்தாளா ?


கம்ப இராமாயணம் - அகலிகை தவறு செய்தாளா ?


காமமும் காதலும் மறை பொருளாகவே இருந்து வந்திருக்கிறது.

ஒரு பெண் தன் காதலை, காமத்தை வெளிப்படையாக சொல்ல முடிவதில்லை.

அப்படி சொல்ல முயன்ற பெண்களை இந்த சமுதாயம் சந்தேகக் கண் கொண்டு தான் பார்த்து வந்திருக்கிறது.

இராமாயணத்தில் அகலிகை அறிந்தே தவறு செய்தாளா? அல்லது அவள் அறியாமல் நடந்ததா ?

இராமாயணத்தில் இருந்து இது சம்பந்தப் பாடல்களை பின்னிருந்து முன்னாக தருகிறேன்.

நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்....

குறுந்தொகை - காணமல் போன காதலன்


குறுந்தொகை - காணமல் போன காதலன்



அவள், அவளுடைய காதலனை சில நாட்கள் காணாமல் வருந்துகிறாள்.

சங்க காலம் என்பது இப்ப உள்ளது மாதிரியா ?

செல் போன், லேன்ட் லைன், இ- மெயில் எல்லாம் இல்லாத காலம்.

ஒரு வேளை அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்று அஞ்சுகிறாள்.

இல்ல, தன்னை மறந்து வேறு யாருடனோ சென்றிருப்பானோ என்று சந்தேகம் கொள்கிறாள்.

தன் பயத்தை, சந்தேகத்தை தன் தோழியிடம் சொல்லுகிறாள்.

தோழி ரொம்ப practical and bold . ஒண்ணும் பயப்படாதடி, எங்க போயிருவான் உன் ஆளு...

தரைய கீறி பூமிக்குள்ளா போயிருவானா, இல்ல வானத்துல ஏறி பரந்துருவானா, இல்ல தண்ணி மேல நடந்து எங்காவது போயிருவானா ? ஊர் ஊரா, வீடு வீடு போய் தேடி கண்டு பிடிச்சு கொண்டு வர்றேன் பாரு என்று அவளுக்கு ஆறுதல் சொல்லுகிறாள் தோழி...


அந்த குறுந்தொகைப் பாடல்...



Thursday, May 10, 2012

கம்ப இராமாயணம் - இராமனின் வளர்ப்பு தந்தை


கம்ப இராமாயணம் - இராமனின் வளர்ப்பு தந்தை


விஸ்வாமித்திரன் இராமனை ஜனகனிடம் அறிமுகப் படுத்துகிறான்.

இராமனின் குலம், கோத்திரம், அவன் மூதாதையர்கள் என்று எல்லாம் சொல்லிக்கொண்டு வந்து, இவன் தசரதனின் மகன் என்று சொல்லி நிறுத்துகிறான்.

விச்வாமித்ரனுக்கு ஒரு சந்தேகம்.

தசரதனோ அறுபதினாயிரம் மனைவிகளை உடையவன்.

அவன் மகன் இவன் என்றால், இவன் எத்தனை ஆயிரம் மனைவிகளை மணப்பானோ என்று ஜனகனுக்கு சந்தேகம் வந்து விட்டால் ?

அப்படி ஒரு சந்தேகம் வந்தால், சீதையை இராமனுக்கு மணம் முடித்துத் தர மாட்டான் என்று நினைத்து,

விசவாமித்திரன் சொல்வான் "தசரதன் இவனுக்கு பேருக்குத் தான் தந்தை, இவனுக்கு (இராமனுக்கு) உபநயனம் செய்வித்து, மறை ஓதி, வளர்த்தது எல்லாம் வசிட்டன் தான்" என்று.


வசிட்டனுக்கு ஒரே ஒரு மனைவி அருந்ததி.

இந்த இராமன் வசிட்டனைப் போல் ஒரே மனைவியுடன் இருப்பான் என்று
ஜனகனுக்கு சூசகமாக சொல்கிறான்.

அந்த நுட்பமான பாடல் வரிகள் இதோ இங்கே

Wednesday, May 9, 2012

குறுந்தொகை - ஆணுக்கு வெட்கம் வருமா ?


குறுந்தொகை - ஆணுக்கு வெட்கம் வருமா ?


அந்த காலத்தில் ஒரு ஆண் மகன் ஒரு பெண்ணை விரும்பி அவர்கள் திருமணத்திற்கு தடை வந்தால் ஆண்மகன் மடலேறுவது என்று ஒரு வழக்கம் உண்டு.

மடலேறுதல் என்றால் என்ன ?

பனை ஓலையில் ஒரு குதிரை செய்து, அதில் ஏறி உட்கார்ந்து கொண்டு, தன் படத்தையும், அந்த பெண்ணின் படத்தையும் வரைந்து அந்த படத்தை எடுத்துகொண்டு 
அந்த பொம்மை குதிரையின் மேல் ஏறிக் கொண்டு, அந்த பெண்ணின் வீட்டுக்கு முன்னால் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டியது.

ஊரில் எல்லாருக்கும் இந்த பையன் அந்த பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்து விடும். 

அந்த பெண்ணை வேறு யார் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் அந்த ஊரில் ?

எப்படி நம்ம ஆளு technique ? 

வேற வழி இல்லாமல் பெண்ணை பெற்றவர்கள் அந்த பையனுக்கே கல்யாணம் செய்து கொடுத்து விடுவார்கள். 

நம்ம ஆளுங்க கில்லாடிங்க.

இங்க குறுந்தொகையில் இவர் என்ன நினைக்கிறார் பாருங்கள்...

அப்படி எல்லாம் செஞ்சு இந்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால், 
நாளைக்கு ஊருக்குள்ள என்ன பேசுவாங்க ?

"இந்தா போறான்ல, அந்த தங்கமான பொண்ணோட புருஷன் இவன் தான், அவளை கட்டிக்க, அந்த காலத்ல என்ன கூத்து அடிச்சான் தெரியுமா" 
என்று சொல்வார்கள், அதை கேட்கும் போது எனக்கு வெட்கம் வரும் என்று தலைவர் இப்பவே வெட்கப் படுகிறார்...

அந்த ரௌசு விடும் பாடல்...


அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்
பெறுகதில் லம்ம யானே பெற்றாங்
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவ னிவனெனப்
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே   

அந்த காலத்ல இப்ப உள்ள மாதிரி பேப்பர் பேனா எல்லாம் கிடையாது. 

ஓலை சுவடியில எழுதணும். 

ஓலை சுவடி ரொம்ப கிடைக்காது. 

எனவே சொல்ல வேண்டியத சுருக்கமா சொல்ல வேண்டிய நிர்பந்தம். 

நம்ம, கொஞ்சம் பாடலை தளர்த்தி பதம் பிரித்தால் எளிதாகப் புரியும்


Tuesday, May 8, 2012

வில்லி பாரதம் - ஜொள்ளு திலகம்


வில்லி பாரதம் - ஜொள்ளு திலகம்


பாண்டியன் மகள் சித்ராங்கதையயை பார்த்து அர்ஜுனன் விட்ட ஜொள்ளு....


கம்ப இராமாயணம் - இனி துன்பம் இல்லை


கம்ப இராமாயணம் - இனி துன்பம் இல்லை


இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது. 

சூரியன் வந்த பின், இருள் இருந்த இடம் தெரிவதில்லை. 

அது போல

இராமா, 

இதுவரை எப்படியோ தெரியாது, 

ஆனால் நீ வந்த பின், இந்த உலகில் துன்பம் என்று ஒன்று இருக்க முடியாது என்கிறான் விஸ்வாமித்திரன்.

எங்கே ?

இராமன் பாதத் துளி பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்ற இடத்தில்.
மிக மிக அருமையான பாடல், ஆழமான பாடலும் கூட....