கலித்தொகை - தாயின் மன நிலை
இலக்கியங்கள் கடவுள்களையும், மன்னர்களையும், வீர சாகசம் புரிந்தவர்கையும் பேசிய அளவுக்கு சாதாரண மனிதர்களைப் பேசுவது இல்லை.
அவர்களின் கவலை, ஆசைகள், கனவுகள் இவற்றைப் பற்றி பெரிதாக எதுவும் பேசப் படுவது இல்லை.
தமிழில் கலித்தொகை சற்று வித்தியாசமான ஒரு இலக்கியம்.
இது சாதாரண மனிதர்களைப் பற்றி, அவர்கள் வாழ்ந்த வாழ்கையைப் பற்றி, அவர்களின் வாழ்கை சிக்கல்களைப் பற்றி பேசுகிறது.
அவள் ஒரு பெண்ணின் தாய்.
அந்தப் பெண்ணோ, அவள் காதலனோடு சென்று விட்டாள்.
ஒரு வேளை தந்தையும், உறவினர்களும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையோ என்னவோ.
என்ன இருந்தாலும் பெற்ற மனம் அல்லவா ?
அந்தத் தாய், தன் மகளை தேடித் போகிறாள்.
அவள் எப்படி இருக்கிறாளோ, என்ன ஆனாளோ என்று கவலையோடு தேடுகிறாள்.
எதிரில் ஒரு புலவர் வருகிறார். அவர், அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்.
பயபடாதே, உன் மகள் ஒரு நல்ல ஆண் மகனைத் தேர்ந்தெடுத்து அவனோடு கற்பு நெறியில் சென்று இருக்கிறாள். கவலைப் படாதே என்று.
உன் மகள் என்னைக்கு இருந்தாலும் உன்னை விட்டு போக வேண்டியவள் தானே ?
மலையில் பிறந்தது என்பதற்காக சந்தனத்தை யாரும் அரைத்து மலைக்கு பூசுவது இல்லை.
கடலில் பிறந்தது என்பதற்காக முத்தை யாரும் எடுத்து மாலையாய் கோர்த்து கடலுக்கே அணிவிப்பது இல்லை.
யாழில் இருந்து இசை பிறந்தாலும், அந்த இசை யாழுக்கு சொந்தமில்லை
அது போல
உன் மகள் உன்னிடம் இருந்து வந்தாலும், அவள் உனக்கு சொந்தமில்லை.
அவள் ஒரு நல்ல துணையை தான் தேடித் போயிருக்கிறாள். ஒன்றும் கவலைப் படாதே என்று அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்.