Monday, May 28, 2012

திருக்குறள் - என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்


திருக்குறள் - என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்


அவள்: என்ன, இன்னைக்கு என்னவோ புதுசா பாக்கிற மாதிரி பாக்கிற என்னை

அவன்:உன் கண்ணு இருக்கேஅதை இன்னைக்கு எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம்...அவ்வளவு அழகு...

அவள்: அவ்வளவுனா எவ்வளவு ?

அவன்: ம்ம்ம்.உன் கண்ணு ஐஸ்வர்யா ராய் கண்ணு மாதிரி so beautiful...

அவள்: (சற்று கோபத்துடன்) நீ ஐஸ்வர்யா ராய் கண்ணை பாத்து இருக்கியா ?

அவன்:நேர்ல இல்லஇந்த சினிமா மாத இதழ்ல வருதே...அதுல பார்த்தது தான் ...

அவள்:அப்ப நீஇந்த பொண்ணுங்க படத்தை எல்லாம் பார்த்து ஜொள்ளு விடுற...அப்படி தான ?

அவன்: அப்படி இல்ல...சும்மா அப்படி இப்படி புரட்டும் போது கண்ணுல படும் போது பாக்குறது தான் ....


அவள்: இல்லநீ வேணும்னே தேடிப் போய் பாக்குற ... என் கண்ணுல எல்லாம் அது பட மாட்டேங்குதே.. உன் கண்ணுல மட்டும் எப்படி படும்... ஏன்னா நீ அதைத் தேடிப் போய் பாக்குற...உனக்கு வர வர என்னை பிடிக்கலஅது தான் மத்த பொண்ணுங்க படத்தை எல்லாம் பாக்குற..



அவன்: சரி இனிமேல் அந்த மாதிரி புத்தகத்தையே பாக்கல போதுமா...?


அவள்: ம்ம்ம்ம்...


அவன்: அதை கொஞ்சம் சிரிச்சிகிட்டு தான் சொல்லேன் ...


அவள்: ம்ம்ம்.. போய் ஐஸ்வர்யா ராய் கிட்ட சொல்லுஅவ ஈ நு பல்லை காட்டிட்டு சொல்லுவா...


 நினைத்திருந்து நோக்கினும் காயும், ‘அனைத்துநீர்
 யாருள்ளி நோக்கினீர்’ என்று.

நினைத்திருந்து =அவளையே நினைத்து
நோக்கினும் = பார்த்தாலும்
காயும் = சண்டை பிடிக்கும்
அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர்’ என்று.= யாரை நினைத்து நீ என்னை இப்படி பார்க்கிறாய் என்று (யாருள்ளி = யார் + உள்ளி . உள்ளி = நினைத்து)

நான் அவளின் அங்க அழகை இரசித்தாலும், "என் அழகை வேறு ஒரு பெண்ணின் அழகோடு ஒப்பிட்டுத் தானே நீ இரசிக்கிறாய் (நினைத்திருந்து), இப்படி ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு பெண் (அனைத்துநீர்) என்றால், எத்தனை பெண்களை நீ நினைத்து கொண்டு என்னை இரசிக்கிறாய்" என்று என் மேல் கோவப் படுவாள்.


(Appeal to the reader: If you like this blog, please click the g+1 button below this blog to express your liking and recommendation. It is just a click. That is all needed, that too, if you like the blog. Thanks)

Sunday, May 27, 2012

கம்ப இராமாயணம் - நைந்த தம்பிகள்


கம்ப இராமாயணம் - நைந்த தம்பிகள்


பதினாலு வருடங்கள் இராமனோடு காடு மேடு எல்லாம் அலைந்து, உறங்காமல் கண் விழித்து நைந்து போய் நந்தி கிராமம் வருகிறான் இலக்குவன்


அங்கே, பதினாலு வருடம் இராமன் பாதுகைகளை வைத்து, தவ வேடம் பூண்டு, உடலும் உள்ளமும் உருகி நைந்து போய் இருக்கிறான் பரதன்.

எதிர் வந்த இலக்குவனை பரதன் வரவேற்கிறான்.

ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கண்ணீர் விட்டனர். 

சுற்றி இருந்த மக்கள் எல்லாம், இதில் அதிகம் நைந்தது யார் என்று வருத்ததோடு பார்த்தனர்.

அந்த மனதை உருக்கும் பாடல்....

ஐங்குறுநூறு - காலையில் வந்த மாலைப் பொழுது.



ஐங்குறுநூறு - காலையில் வந்த மாலைப் பொழுது.


காதலனை பிரிந்து இருக்கிறாள்.

பிரிவு அவளை வாட்டுகிறது.

மாலை வருகிறது.

ரொம்ப கஷ்டப் பட்டு மாலை பொழுது சென்றது.

பின் இரவு.

மறு நாள் காலை வந்தது.

மதியம் வரவேண்டும்.

மதியம் வரவில்லை , மாலை வந்து விட்டது.

அவள் அந்த மாலைப் பொழுதிடம் கோவிக்கிறாள்.

"என்ன, அதுக்குள்ள வந்துட்ட. இப்ப தான போன...அதுக்குள்ள வந்துட்ட...
ஹும்ம்..உன்னை யார் கேக்குறது..." 

கம்ப இராமாயணம் - ஜொள்ளு விடும் பெண்கள்

கம்ப இராமாயணம் - ஜொள்ளு விடும் பெண்கள்



இராமன் மிதிலை வீதியில் நடந்து வருகிறான்.


அங்குள்ள பெண்கள் எல்லாம் அவன் அழகில் மயங்கி அவம் மேல் மையல் கொள்கின்றனர்


  
மன்மதனும் தன் மலர் அம்புகளை எய்த வண்ணம் இருக்கிறான்.

அம்பு எய்து எய்து அவன் அம்புராத் துணியில் உள்ள அம்பு எல்லாம் தீர்ந்து விட்டது 

பாவம் அவனும் தான் என்ன செய்வான்.அம்பு இல்லாமல் நிராயுத பாணியாய் நிற்கிறான் வேற என்ன செய்வது என்று

தெரியாமல் கையை அவனுடைய வாளின் மேல் வைத்தானாம்....




கம்பரின் அந்த அருமையான கவிதை..  




Saturday, May 26, 2012

முத்தொள்ளாயிரம் - கூடிழந்த சிலந்தி


முத்தொள்ளாயிரம் - கூடிழந்த சிலந்தி


காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் பாரதி.

மீன் பிடிக்கும் வலையையை கொலை கருவியாகப் பார்த்தார் வள்ளலார்.

கவிஞர்கள் என்றுமே உயிர்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள்.

முத்தொள்ளாயிரம் என்ற சங்க இலக்கியத்தில், கூடு இழந்த சிலந்தியைப் பற்றி இங்கு ஒரு கவிஞர் கவல்கிறார்.

இலங்கை வேல் கிள்ளி என்று ஒரு அரசன். அவன் பிறந்தது ரேவதி நட்சத்திரத்தில் 

அவன் பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது.

ஒரே பாட்டும்,கூத்தும் ஊரே விழாக் கோலம் பூண்டு இருக்கிறது.

கவிஞர் பார்க்கிறார். இவ்வளவு கோலா கலம் என்றால் வீடு எல்லாம் வெள்ளை அடிப்பார்கள் தானே?

அதற்கு முன்னால் ஒட்டடை அடிப்பார்கள்..அப்ப அந்த சிலந்தி அதன் வீட்டினை இழக்குமே என்று கவலைப் படுகிறார். 


அந்தணர் ஆவொடு பொன் பெற்றார்நாவலர்
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் -எந்தை
இலங்கிலைவேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ?
சிலம்பி தன் கூடிழந்தவாறு

அந்தணர் = அந்தணர்கள்

ஆவொடு = பசு மாடு மற்றும்

பொன் பெற்றார் = பொன் பர்சில்களைப் பெற்றுச் சென்றனர்

நாவலர் = எழுத்தாளர்கள்/புலவர்கள்

மந்தரம் போல் = மந்திர மலையை போல

மாண்ட களிறு ஊர்ந்தார் = பெரிய யானையை பரிசாகப் பெற்று அதன்

மேல் ஊர்ந்து சென்றனர்

எந்தை = எம்முடைய தந்தை

இலங்கிலைவேல் கிள்ளி = இலங்கிலைவேல் கிள்ளி

இரேவதி நாள் என்னோ? = பிறந்த ரேவதி நட்சத்திரமான இன்று

சிலம்பி = சிலந்தி

தன் கூடிழந்தவாறு = தன்னுடைய கூட்டினை இழந்தது

இது அந்த சிலந்திக்கு மட்டுமா பாடிய பாடல்.

உலகில் எத்தனையோ சந்தோஷங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு இதயம் ஏதோ ஒரு சோகத்தில் அழது கொண்டுதான் இருக்கும்.

அந்த உயிர் தான் இந்த பாடலில் வரும் சிலந்தியோ ?

கம்ப இராமாயணம் - பார்வை எனும் விஷம்


கம்ப இராமாயணம் - பார்வை எனும் விஷம்


மனிதன் எல்லா இன்பத்தையும் தனியாக அனுபவிக்க முடியும், காதலும் கலவியும் தவிர.

காதலுக்கு இன்னொரு உயிர் வேண்டும்.

என் சந்தோஷத்திற்கு என்னை விட நீ முக்கியம் என்று ஒருவன்/ள் ஒத்துக்கொள்ளும் இடம் காதல்.

இராவணன் காதலுக்கு ரொம்ப ஏங்கி இருப்பானோ ?

அவனுக்கு வேண்டியது எல்லாம் கிடைத்தது, அவன் வீரத்திற்கு பயந்து 
அவன் வேண்டி கிடைக்காதது, ஜானகியின் காதல்.


போரில் இராவணன் இறந்த பின், விபீஷணன் அவன் மேல் விழுந்து அழுகிறான்...

எந்த விஷமும், உண்டால் தான் உயிரைப் பறிக்கும்.

ஆனால், இந்த சீதை என்ற விஷமோ கண்ணில் பார்த்த மாத்திரத்திலேயே உன் உயிரை பறித்து விட்டதே என்று புலம்புகிறான்.



உண்ணாதே உயிர்உண்ணாது ஒருநஞ்சு சனகி என்னும் பெருநஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்நீயும் களப்பட்டாயே
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்றினித்தான் எண்ணுதியோ எண்ணில் ஆற்றல்
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்தம் பிரளயமே அமரர் கூற்றே

உண்ணாதே = சாப்பிடாமல்

உயிர்உண்ணாது = உயிரை எடுக்காது

ஒருநஞ்சு = எந்த நஞ்சும்

சனகி என்னும் = ஜானகி என்ற

பெருநஞ்சு = பெரிய நெஞ்சு

உன்னைக் = உன்னை

கண்ணாலே நோக்கவே = கண்ணால் பார்த்த மாத்திரத்தில்

போக்கியதே உயிர் = உன் உயிரை போக்கி விட்டதே

நீயும் = நீயும்

களப்பட்டாயே = களத்தில் இறந்து பட்டாயே

எண்ணாதேன் = சிந்திக்கத் தெரியாதவன் (என்று நீ சொல்லிய)

எண்ணிய சொல் = நான் சிந்தித்து சொல்லிய சொல்லை

இன்றினித்தான் = இன்று இனிதான்

எண்ணுதியோ = எண்ணப் போகிறாயோ?

எண்ணில் ஆற்றல் = எண்ணிலாத ஆற்றல் (கொண்ட)

அண்ணாவோ அண்ணாவோ = அண்ணனே அண்ணனே

அசுரர்கள் தம் பிரளயமே = அசுரர்களின் பிரளயம் போல உள்ளவனே

அமரர் கூற்றே = அமரர்களின் (தேவர்களின்) எமனே


கம்ப இராமாயணம் - இறப்பிலும் ஓர் கம்பீரம்


கம்ப இராமாயணம் - இறப்பிலும் ஓர் கம்பீரம்


சாக யாருக்குத்தான் பிடிக்கும்? சிரித்துக் கொண்டே யாராவது இறந்திருக்கிறார்களா?

வாழ்க்கை என்பதே சாவோடு கொண்ட ஒரு தொடர் போராட்டாம் தானோ?

"சாமாறே விரைகின்றேன்" என்றார் மணி வாசகர்.

அருணகிரி நாதர் முதல் பாரதியார் வரை காலனை கண்டு பயந்திருக்கிறார்கள்.

"காலா, நீ கிட்டே வா, உன்னை எட்டி உதைக்கிறேன்" என்று அவர்கள் சொன்னாலும், அந்த பயம் தெரியாமல் இல்லை.

பட்டினத்தார் கூட இறப்புக்கு அப்புறம் என்ன ஆகுமோ என்று ரொம்ப வாழும் போது கவலைப் பட்டிருக்கிறார்.


இராமாயணத்தில் இராவணன் இறந்து கிடக்கிறான்.

இறந்த அவன் உடலை கம்பன் வர்ணிக்கும் அழகே அழகு.

சாவை கூட இவ்வளவு கவித்துவமாக சொல்ல முடியுமா ?

இறந்து கிடக்கும் அவன் முகம் உயிரோடு இருந்ததை விட மூன்று மடங்கு பொலிவாய் இருந்ததாம்.