Tuesday, June 19, 2012

தேவாரம் - சொர்க்கம் இருப்பது இங்கே


தேவாரம் - சொர்க்கம் இருப்பது இங்கே


சொர்க்கம் எங்கே இருக்கிறது ? மேலே எங்கேயோ இருக்கிறதா ? அது வேறு உலகமா ?

ஒரு சமயம் நாவுக்கரசர் கைலாய மலைக்கு செல்ல விரும்பினார்.

நடந்தே சென்றார். வயதான காலத்தில் அவரால் முடியவில்லை.

சோர்ந்து விழுந்து விட்டார்.

அப்போது, ஒரு அடியவர் அவரிடம் "ஐயா, நீங்க ஏன் இப்படி கஷ்டப் படுகிறீர்கள்...இதோ இந்த குளத்தில் நீராடி வாருங்கள், உங்களுக்கு கைலாயத்தை நான் காட்டுகிறேன் என்றார்.

நாவுக்கரசரும் அந்த குளத்தில் மூழ்கி எழுந்தார். மூழ்கியது வட நாட்டில் ஏதோ ஒரு இடம்.

எழுந்தது திருவையாறு என்ற இடத்தில்.

நாவுக்கரசருக்கு மிகுந்த ஆச்சரியம்.

எப்படி ஒரு சுவடும் இல்லாமல் இங்கு வந்தோம் என்று.

குளத்தை விட்டு வெளியே வந்து பார்க்கிறார்.

அங்கே எல்லா உயிர்களும் ஆணும் பெண்ணுமாய் வருவதை பார்த்தார். 

அவருக்குள் ஏதோ நிகழ்ந்தது.

அனைத்தும் இறைவனும் இறைவியும் போல அவருக்கு தோன்றியது. 

இதுவரை காணாத ஒன்றை கண்டதாக அவரே கூறுகிறார்.

தேவாரத்தில், இந்த பத்து பாடல்கள் மிக முக்கியமான பாடல்களாக கருதப்படுகிறது. 

அதில் இருந்து ஒரு பாடல்

ஆசாரக் கோவை - எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது


ஆசாரக் கோவை - எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது


எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது என்று ஆசாரக் கோவை ஒரு பட்டியல் தருகிறது.

கேட்பார்கள் என்றால், நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம்....:)

சகலகலாவல்லி மாலை - ஒரு அறிமுகம்

சகலகலாவல்லி மாலை - ஒரு அறிமுகம்

குமர குருபரர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.

மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மதுரை கலம்பகம், நான் மணிமாலை, செய்யுட்கோவை, மும்மணிக் கோவை போன்ற சிறந்த நூல்களை எழுதியுள்ளார்.

அவர் எழுதிய சகலகலாவல்லி மாலை, சரஸ்வதியை பற்றி எழுதியது. 

மிக மிக எளிய தமிழில் எழுதப்பட்ட சுகமான பாடல்கள்.

Monday, June 18, 2012

ஆசாரக் கோவை - சாப்பிடும் முறை


ஆசாரக் கோவை - சாப்பிடும் முறை


உணவு பற்றி ஆசாரக் கோவை நிறையவே சொல்கிறது. அதில் முதல் பாடல் 

Request to the readers of this blog

A Request to the readers of this blog...

Please make this more interactive.

Post your views, comments, inputs. It will make the blog more lively and interesting.

Thanks

கம்ப இராமாயணம் - எல்லாரும் என்னையே கேளுங்க, அவனை கேக்காதீங்க...


கம்ப இராமாயணம் - எல்லாரும் என்னையே கேளுங்க, அவனை கேக்காதீங்க...


அசோக வனத்தில் தனிமையில் சீதை இருக்கிறாள்.

இரவு நேரம். 

சற்று யோசித்துப் பாருங்கள். 

செல்லமாய் வளர்ந்த சகரவர்த்தியின் மகள். இராமனுக்கு வாழ்க்கைப் பட்டு, தசரதனுக்கு மருமகளாக வந்தாள்.

இராமன் முடி சூட்டப் போகிறான். பட்டத்து இராணியாக வேண்டியவள், "நின் பிரிவினும் சுடுமோ அந்த கானகம்" என்று அவன் பின்னால் கானகம் சென்றாள்.

இராவணனால் கடத்தப்பட்டாள். 

அந்த அசோக வனத்தில், இரவு நேரத்தில், நிலவை பார்க்கிறாள். 

"ஏய், அறிவு இல்லாத நிலவே, நகராமல் நிற்கும் இரவே, குறையாத இருளே, எல்லோரும் என்னையே சொல்லுங்க.
என்னை விட்டு தனியா இருக்கானே, அந்த இராமன், அவன் கிட்ட ஒண்ணும் கேக்க மாட்டீங்களா ?" என்று இரவோடும், நிலவோடும் சண்டை பிடிக்கிறாள்.

சரஸ்வதி அந்தாதி - துயரம் வராது


சரஸ்வதி அந்தாதி - துயரம் வராது

துயரம் நம் மனத்தில் இருக்க இடம் வேண்டும் அல்லவா ?

மனம் எல்லாம் அந்த கலைவாணியை நிறைத்து வைத்து விட்டால், துயர் எங்கிருந்து வரும்?