Monday, August 13, 2012

இலக்கியத்தில் நகைச்சுவை - வால் எங்கே, வயிறு எங்கே ?


இலக்கியத்தில் நகைச்சுவை - வால் எங்கே, வயிறு எங்கே ?


கவி என்ற தமிழ் சொல்லுக்கு கவிஞர் என்றும், குரங்கு என்றும் இரண்டு அர்த்தம் உண்டு.

ராயர் சபையில் சில பேர் தங்களை "கவிகள்" என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர். அவர்களை பார்த்து காளமேகப் புலவர் கேட்கிறார் 

"நீங்கள் கவிகள் என்றால், உங்கள் வால் எங்கே, நீண்ட வயிறு எங்கே, முன்னால் இருக்கும் இரண்டு கால்கள் எங்கே, குழிந்த கண்கள் எங்கே..." என்று  கிண்டலாகக் கேட்கிறார்...



வால் எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன் இரண்டு
கால் எங்கே? உள்குழிந்த கண் எங்கே? சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்று இருந்தக்கால்

திருஅருட்பா - பாடவா, உன் பாடலை


திருஅருட்பா - பாடவா, உன் பாடலை 


எல்லோரும் சொல்கிறார்கள், நான் மிக இனிமையான பாடல்களை பாடுகிறேன் என்று.

அதை கேட்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. 

நானா பாடினேன் ? 

இறைவா, நீ என்பால் மகிழ்ந்து உன் அருளை என்மேல் சுரந்து, என் மூலம் இனிய பாடல்களையும், உயர்ந்த கருத்துகளையும் வெளி படுத்துகிறாய். 

அதை எல்லாம் இவர்கள் மறந்து விட்டார்கள்....

என்கிறார் வள்ளாலார்...

வில்லி பாரதம் - யார் அறிவார், ஆதி மூர்த்தி


வில்லி பாரதம் - யார் அறிவார், ஆதி மூர்த்தி


எல்லாம் அவன் செயல் என்று எல்லோரும் சொல்கிறோம்.
 நம்புரோமா ?

 நாம் தான் எல்லாம் செய்கிறோம் என்று நினைப்பு நமக்கு.

வனவாசம் முடிந்து, அஞ்ஞாத வாசமும் முடிந்து விட்டது. 

துரியோதனன் ஆட்சியை தருவதாய் இல்லை.

கிருஷ்ணன் தூது போவதாய் ஏற்பாடு. 

துரியோதனனிடம் என்ன கேட்க வேண்டும் என்று சர்ச்சை.

தர்மன் உட்பட எல்லோரும் ஒவ்வொன்று சொன்னார்கள்.

கடைசியில் சகாதேவன் முறை.

எல்லாம் கிருஷ்ணன் செயல் என்று உண்மையாக அறிந்தவன் அவன்தான்.

அவன் கிருஷ்ணனிடம் சொல்கிறான்....

"நீ தூது போனால் என்ன ? போகாவிட்டால் என்ன ?
துரியோதனன் நிலம் தந்தால் என்ன ? தராவிட்டால் என்ன ?
பாஞ்சாலி குழல் முடித்தால் என்ன ? முடியாவிட்டால் என்ன ?
என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு என்ன தெரியும்...எல்லாம் உனக்குத் தான் தெரியும்...தூது போவது என்று நீ முடிவு பண்ணி விட்டாய்...என்னிடம் ஏன் கேட்கிறாய்"

Sunday, August 12, 2012

நள வெண்பா - எரியம் இரவு


நள வெண்பா - எரியம் இரவு


அவள் தனித்து இருக்கிறாள். இரவு சுடுகிறது.

ஏன் என்று யோசிக்கிறாள்.

பகல் எல்லாம் இந்த சூரியன் இருக்கிறது. இராத்திரி எங்கே போகிறது ? இந்த இரவு சூரியனை விழுங்கி இருக்குமோ ? அதுனால தான் இப்படி இந்த இரவு கொதிக்கிறதோ?

இல்லைனா, என் மார்பில் இருந்து கிளம்பிய சூடு காரணமாய் இருக்குமோ ? 

ஒரு வேளை, இந்த நிலவு குளிர்ச்சிக்கு பதில் வெப்பத்தை தர ஆரம்பித்து விட்டதோ?

ஏன்னே தெரியலையே..இந்த இரவு இப்படி எரிகிறதே....

புற நானூறு - நாளாயினும் மாறாத விருந்தோம்பல்


புற நானூறு - நாளாயினும் மாறாத விருந்தோம்பல்


நாம் ஒரு வீட்டிற்கு விருந்தினராய் சென்றால், அவர்கள் உபசரிப்பு முதல் நாள் மாதிரி பின் வரும் நாட்களில் இருக்காது. 

நாள் ஆக ஆக உபசரிப்பின் அளவு குறைந்து கொண்டே வருவது இயற்கை.

அதுவும் நம்மோடு கூட நம் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டால் கேட்கவே வேண்டாம்.

ஆனால், அதியமான் அரண்மனையில் முதல் நாள் உபசரிப்பு எப்படி இருந்ததோ அப்படியே எல்லா நாளும் இருக்குமாம்.

நாள் ஆக ஆக, பரிசு வாங்க சென்ற புலவர்களுக்கோ கொஞ்சம் பயம்.

எங்கே உபசரிப்போடு அனுப்பிவிடுவானோ ? பரிசு ஒண்ணும் கிடைக்காதோ என்ற சந்தேகம் வருகிறது. 

ஔவையார் சொல்கிறார், "ஒண்ணும் பயப்படாதீங்க...யானை தன் தும்பிக்கையில் எடுத்த உணவு அதன் வாய்க்கு போவது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதி நீங்கள் அதியமானிடம் பரிசு பெறுவது..."

Saturday, August 11, 2012

அபிராமி அந்தாதி - நின் திருநாமங்கள் தோத்திரமே


அபிராமி அந்தாதி - நின் திருநாமங்கள் தோத்திரமே


எனக்கு என்ன தெரியும்?

சிவந்த உன் மலர் போன்ற திருவடியையை தவிர ஒன்றும் தெரியாது.

நான் பாடியாது எல்லாம் ஒரு ஒரு பாட்டா ?

இருந்தாலும், என் பாடல்களுக்கு நடுவில் அங்கங்கே உன் பெயரை இட்டு நிரப்பி இருப்பதால், அவையும் தோத்திரப் பாடல்கள் என்று பெயர் பெற்று விட்டன.

என்று 

எவ்வளவு அடக்கத்தோடு சொல்கிறார் அபிராமி பட்டர். 

குறுந்தொகை - பூ உதிரும் ஓசை


குறுந்தொகை - பூ உதிரும் ஓசை


அவளுக்குத் தூக்கம் வரவில்லை.

இரவெல்லாம் விழித்துக்கொண்டிருந்தாள்.

ஊரெல்லாம் தூங்கி விட்டது. 
எங்கும் நிசப்தம். 

அவன் இரவு வருவதாய் சொல்லி இருந்தான்.

அவள் மிக மிக உன்னிப்பாக அவன் வரும் காலடி சப்தம் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டு இருந்தாள். 

அவள் வீட்டுக்கு வெளியே சின்ன தோட்டம்.

அந்தத் தோட்டத்தில் உள்ள செடியில் இருந்து மலர் உதிர்கிறது.

அந்த சப்தம் கூட அவளுக்கு கேட்கிறது. 

அவ்வளவு ஆர்வம்.