Friday, August 17, 2012

ஆதிநாதன் வளமடல் - யார் கடவுள்?


ஆதிநாதன் வளமடல் - யார் கடவுள்?


ஆதிநாதன் வளமடல் என்ற நூல் ஜெயங்கொண்டார் என்ற புலவரால் எழுதப்பட்டது. கலிங்கத்துப் பரணி எழுதிய அதே ஜெயங்கொண்டார்தான்.

மிக மிக இனிமையான பாடல்களை கொண்டது. கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் காதல் எல்லாம் கலந்தது. 

அதில் இருந்து ஒரு பாடல்...

காதல் வயப்பட்டர்வர்களுக்கு, தங்கள் காதலனையோ, காதலியையோ பார்க்க வேண்டும், அவர்களோடு பேச வேண்டும் என்ற ஆவல் இருக்கத்தான் செய்யும். நேரில் பார்க்க முடியாவிட்டால் phone , sms , chat என்று எப்படியாவது தொடர்பு கொள்ளத் துடிப்பார்கள். அந்த காலத்தில் இது எல்லாம் இல்லை. மேகத்தையும், புறாவையும், நிலவையும் தூது விட்டு கொண்டு இருந்தார்கள். 

அப்படி தூது விடுபவர்களுக்கு, யார் தூது கொண்டு செல்கிறார்களோ அவர்கள் தான் கடவுள் மாதிரி தெரிவார்கள். 

Thursday, August 16, 2012

வில்லி பாரதம் - விரல் எனும் சாளரம்


வில்லி பாரதம் - விரல் எனும் சாளரம்


அவளுக்கு அவன் மேல் மிகுந்த காதல். அவனை பார்க்க வேண்டும் என்று தீராத ஆசை.

பார்க்கவும் வெட்கம். 

அவள், அவனை பார்க்கும் போது, அவளை வேறு யாரவது பார்த்து விட்டால் ?...ஐயோ எவ்வளவு வெட்கக்கேடு என்று உள்ளாடும் பயம்..

அவனை பார்க்கும் போது கையால் தன் முகத்தை மூடிக் கொள்வாள்...பின்னும் ஆசை யாரை விட்டது ?

தன் விரல்களை மெல்ல விலக்கி, விரலிடுக்கின் வழியே அவனைப் பார்ப்பாள். 
அது ஏதோ ஜன்னல் (சாளரம்) கம்பிகளின் பின்னே இருந்து "சைட்"அடிப்பது மாதிரி இருக்கிறது....
 

Wednesday, August 15, 2012

அபிராமி அந்தாதி - துடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம்


அபிராமி அந்தாதி - துடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம்


நம் நெஞ்சம்தான் எத்தனை அழுக்குகளை கொண்டு இருக்கிறது. ஆணவம், பொறாமை, பயம், அறியாமை என்று எத்தனை எத்தனையோ அழுக்கு. 

பிள்ளைகள் அழுக்காய் இருந்தால் எந்த தாய் தான் பொறுப்பாள் ? தன குழந்தை குளித்து சுத்தமாக அழகாக இருக்க வேண்டும் என்று தானே எந்த தாயும் விரும்புவாள். 

அபிராமியும், நம் நெஞ்சத்து அழுக்கை எல்லாம் தன் அருள் என்ற வெள்ளத்தால் கழுவி சுத்தம் செய்கிறாள்.

பிரபஞ்சம் என்னும் சேற்றை கழிய வழி விட்டவா என்பார் அருணகிரி 

இந்த பிறவி, பாவ புண்ணியம் என்ற இரு வினையால் மீண்டும் மீண்டும் நாம் அறியாமலேயே நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. தெரியாமலேயே நடப்பதால், இது "வஞ்சப் பிறவி". அபிராமி இந்த பிறவி சக்கரத்தை உடைக்கிறாள்.

நம் மனம் கல் போன்றது. எளிதில் இளகாது. மற்றவர்கள் துன்பத்தை கண்டு உருகுகின்றதா? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுகிறதா ? இல்லையே. 

பிறர் துன்பம் கண்டு உருகும் இளகிய மனதை அபிராமி தருகிறாள்.  அவள் திருவடி நம் மனதில் படிய வேண்டுமானால், மனம் கல் போல இருந்தால் எப்படி முடியும். வைரத்தை தங்கத்தில் பொருத்த வேண்டுமானால், தங்கத்தை கொஞ்சம் இளக்க வேண்டும். உருகிய தங்கத்தில்தான் வைரத்தை பதிக்க முடியும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரி

வஞ்சப் பிறவியை உடைத்து, நெகிழ்ந்து உருகும் மனதை கொடுத்து, அந்த மனதில் உள்ள அழுக்கை எல்லாம் தன் அருளால் கழுவிய அவளின் கருணையை என்ன என்று சொல்லுவது

கம்ப இராமாயணம் - உறையிட்ட தயிர் என பரந்த காதல்


கம்ப இராமாயணம் - உறையிட்ட தயிர் என பரந்த காதல்


இராமனை பார்த்த பின், சீதையை காதல் நோய் வாட்டுகிறது.

காதல், கண் வழி நுழைந்து உடல் எங்கும் பரவி நோய் செய்கிறது.

அது எப்படி என்றால்

பாலில் ஒரு துளி தயிரை உரை விட்டால் எப்படி அது எப்படி அந்த பால் முழுவதும் பரவி, அந்த பாலை எப்படி அடியோடு மாற்றி விடுகிறதோ அது போல.

தயிர் பரவுவது மட்டும் அல்ல...பாலின் குணத்தை மாற்றி விடுகிறது. அது 
போல் காதலும் மனதில் துளி விழுந்தாலும் நம்மை அடியோடு மாற்றி விடுகிறது.

அந்த அருமையான பாடல்...

Monday, August 13, 2012

இலக்கியத்தில் நகைச்சுவை - வால் எங்கே, வயிறு எங்கே ?


இலக்கியத்தில் நகைச்சுவை - வால் எங்கே, வயிறு எங்கே ?


கவி என்ற தமிழ் சொல்லுக்கு கவிஞர் என்றும், குரங்கு என்றும் இரண்டு அர்த்தம் உண்டு.

ராயர் சபையில் சில பேர் தங்களை "கவிகள்" என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர். அவர்களை பார்த்து காளமேகப் புலவர் கேட்கிறார் 

"நீங்கள் கவிகள் என்றால், உங்கள் வால் எங்கே, நீண்ட வயிறு எங்கே, முன்னால் இருக்கும் இரண்டு கால்கள் எங்கே, குழிந்த கண்கள் எங்கே..." என்று  கிண்டலாகக் கேட்கிறார்...



வால் எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன் இரண்டு
கால் எங்கே? உள்குழிந்த கண் எங்கே? சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்று இருந்தக்கால்

திருஅருட்பா - பாடவா, உன் பாடலை


திருஅருட்பா - பாடவா, உன் பாடலை 


எல்லோரும் சொல்கிறார்கள், நான் மிக இனிமையான பாடல்களை பாடுகிறேன் என்று.

அதை கேட்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. 

நானா பாடினேன் ? 

இறைவா, நீ என்பால் மகிழ்ந்து உன் அருளை என்மேல் சுரந்து, என் மூலம் இனிய பாடல்களையும், உயர்ந்த கருத்துகளையும் வெளி படுத்துகிறாய். 

அதை எல்லாம் இவர்கள் மறந்து விட்டார்கள்....

என்கிறார் வள்ளாலார்...

வில்லி பாரதம் - யார் அறிவார், ஆதி மூர்த்தி


வில்லி பாரதம் - யார் அறிவார், ஆதி மூர்த்தி


எல்லாம் அவன் செயல் என்று எல்லோரும் சொல்கிறோம்.
 நம்புரோமா ?

 நாம் தான் எல்லாம் செய்கிறோம் என்று நினைப்பு நமக்கு.

வனவாசம் முடிந்து, அஞ்ஞாத வாசமும் முடிந்து விட்டது. 

துரியோதனன் ஆட்சியை தருவதாய் இல்லை.

கிருஷ்ணன் தூது போவதாய் ஏற்பாடு. 

துரியோதனனிடம் என்ன கேட்க வேண்டும் என்று சர்ச்சை.

தர்மன் உட்பட எல்லோரும் ஒவ்வொன்று சொன்னார்கள்.

கடைசியில் சகாதேவன் முறை.

எல்லாம் கிருஷ்ணன் செயல் என்று உண்மையாக அறிந்தவன் அவன்தான்.

அவன் கிருஷ்ணனிடம் சொல்கிறான்....

"நீ தூது போனால் என்ன ? போகாவிட்டால் என்ன ?
துரியோதனன் நிலம் தந்தால் என்ன ? தராவிட்டால் என்ன ?
பாஞ்சாலி குழல் முடித்தால் என்ன ? முடியாவிட்டால் என்ன ?
என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு என்ன தெரியும்...எல்லாம் உனக்குத் தான் தெரியும்...தூது போவது என்று நீ முடிவு பண்ணி விட்டாய்...என்னிடம் ஏன் கேட்கிறாய்"