கம்ப இராமாயணம் - மலர் தூவும் மரங்கள்
சீதை சித்ர கூடத்தில் நடந்து வருகிறாள்.
பசுமையான அடர்ந்த கானகம்.
ஈரம் நிறைந்த வழித்தடம்.
மாசில்லாத காற்று.
மரங்கள் எல்லாம் பூத்து குலுங்குகின்றன.
அந்த மலர்களில் வண்டுகள் தேன் எடுக்க வருகின்றன.
ஏற்கனவே பூவின் பாரம் தாங்காமல் வளைந்து நின்ற மரக் கிளைகள், வண்டும் அமர்ந்ததால் இன்னும் வளைந்தன.
தேன் எடுத்த பின், வண்டுகள் சட்டென்று பூவை விட்டு விலகுகின்றன.
அதனால், அந்த மரக் கிளைகள் பட்டென்று நிமிர்கின்றன.
அப்படி வேகமாக நிமிர்ந்ததால், அதில் உள்ள பூக்கள் கொஞ்சம் சிந்தின
அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கிறது என்றால்...
அந்த மரங்கள் சீதையை கண்டதும் அவள் பாதம் பணிந்து அவள் பாதத்தில் பூ தூவி வரவேற்றதை போல இருந்ததாம்....
அந்த கம்பனின் பாடல்...