Monday, September 17, 2012

கம்ப இராமாயணம் - மலர் தூவும் மரங்கள்


கம்ப இராமாயணம் - மலர் தூவும் மரங்கள்


சீதை சித்ர கூடத்தில் நடந்து வருகிறாள்.

பசுமையான அடர்ந்த கானகம்.

ஈரம் நிறைந்த வழித்தடம்.

மாசில்லாத காற்று.

மரங்கள் எல்லாம் பூத்து குலுங்குகின்றன.

அந்த மலர்களில் வண்டுகள் தேன் எடுக்க வருகின்றன.

ஏற்கனவே பூவின் பாரம் தாங்காமல் வளைந்து நின்ற மரக் கிளைகள், வண்டும் அமர்ந்ததால் இன்னும் வளைந்தன.

தேன் எடுத்த பின், வண்டுகள் சட்டென்று பூவை விட்டு விலகுகின்றன.

அதனால், அந்த மரக் கிளைகள் பட்டென்று நிமிர்கின்றன.

அப்படி வேகமாக நிமிர்ந்ததால், அதில் உள்ள பூக்கள் கொஞ்சம் சிந்தின

அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கிறது என்றால்...

அந்த மரங்கள் சீதையை கண்டதும் அவள் பாதம் பணிந்து அவள் பாதத்தில் பூ தூவி வரவேற்றதை போல இருந்ததாம்....

அந்த கம்பனின் பாடல்...

  

Sunday, September 16, 2012

திருச்சந்த விருத்தம் - இறைவன் இருப்பிடம்


திருச்சந்த விருத்தம் - இறைவன் இருப்பிடம்


இறைவன் இத்தனையும் படைத்தான் என்றால் அவன் எங்கு இருந்து கொண்டு படைத்தான் ? அந்த இடம் அவனுக்கு முன்னாலேயே இருந்ததா ? அந்த இடத்தை யார் படைத்தது ? இதை எல்லாம் நாம் அறிந்து கொள்ள முடியுமா ? 

மனித அறிவின் எல்லைகளுக்கு அப்பால் சில விஷயங்கள் இருக்கின்றன என்கிறார் திருமழிசை பிரான்.

அவர் எழுதிய திரு சந்த விருத்தம் சந்த லயம் நிறைந்த பாடல்களை கொண்டது. 
 

Saturday, September 15, 2012

குற்றாலக் குறவஞ்சி - அவை அடக்கம்


குற்றாலக் குறவஞ்சி - அவை அடக்கம்


பூவோடு சேர்ந்த நாரும் மனம் பெரும் என்பார்கள்.

மாலை அழகாகத்தான் இருக்கிறது. அழகான பூக்கள், அதில் இருந்து வரும் மனம், அதன் நிறம் எல்லாம் அழகுதான். ஆனால் அதன் நடுவில் இருக்கும் நாருக்கு ஒரு மனமும் இல்லை, அழகும் இல்லை. இருந்தாலும் நாம் அந்த நாரை வெறுப்பது இல்லை. 

அது போல, என் பாடல்கள் நார் போல இருந்தாலும், அவை அந்த குற்றாலத்து உறையும் ஈசனைப் பற்றி பாடுவதால், அந்த ஈசன் மலராய் இருந்து, என் பாடல்களுக்கு மணம் சேர்க்கிறான் என்கிறார் திரிகூட ராசப்ப கவி ராயர்....

ஐங்குறு நூறு - Extra Marital Relationship


ஐங்குறு நூறு - Extra Marital Relationship


Extra marital relationship - இதற்கு தமிழ் என்ன என்று தெரியவில்லை. திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு என்று சொல்லலாமா ?

அவன் தன்னுடைய மனைவியை விட்டு விலகி வேறு ஒரு பெண்ணுடன் வாழுகிறான். ஒரு நாள், மனைவியை வழியில் எங்கோ பார்த்து விடுகிறான். அவர்கள் பேசுகிறார்கள். 

இந்த விஷயம் எப்படியோ அந்த "மற்ற" பெண்ணின் காதுக்கு சென்று விடுகிறது. அவளுக்குப் புரிந்து விட்டது. இனிமேல் அவன் அவளோடு இருக்க மாட்டான் , அவன் மனைவியை தேடி போய் விடுவான் என்று...அவளே சொல்லுகிறாள்...

கொக்கின் குஞ்சு, கூட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் லேசாக சப்தம் போடும். ஆனால் அந்த சப்தம் வயல் எல்லாம் கேட்கும். எல்லோரும் புரிந்து கொள்வார்கள் இந்த கொக்கு குஞ்சு இனிமேல் இந்த கூட்டில் இருக்காது என்று. அது போல் நீயும் போய் உன் மனைவியுடன் சந்தோஷமாய் இரு

பாடல் 

Thursday, September 13, 2012

கம்ப இராமாயணம் - உலக மாயை யாரால் விலகும்.


கம்ப இராமாயணம் - உலக மாயை யாரால் விலகும்.


இருட்டில் தெருவில் கிடக்கும் மாலை பாம்பு போலத் தெரியும்.
அது போல அஞ்ஞான இருட்டில் இருந்து நாம் காண்பது எல்லாம் வேறாகத் தெரியும்.

இந்த வேறாகத் தெரியும் மாயையை ஒருத்தரைப் பார்த்தால் விலகும்.

அவர் யாருன்னு கேட்டா, கையில் வில் ஏந்தி, இலங்கையில் சென்று சண்டை போட்டவர். 

அவரே  வேதங்களுக்கு எல்லாம் அந்தம் ஆனவர். வேதாந்தம் ஆனவர். 

Sunday, September 9, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணனுக்கு அஜீரணமா?


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணனுக்கு அஜீரணமா?


நாம சில நாள் கல்யாணம் போன்ற விழாக்களுக்கு சென்றால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டு அஜீரணத்தில் கஷ்டப் படுவோம்.

திருமால் ஏழு உலகங்களையும் ஒன்றாக உண்டார். 

அஜீரணம் வருமா இல்லையா ? எவ்வளவு மண்ணு, கல்லு, மலை, உப்புக் கடல்...அத்தனையும் உண்டால் வயறு என்ன ஆவது.

அந்த அஜீரணம் போகத்தான் மனிதனாக (கண்ணனாக) அவதாரம் எடுத்து, நிறைய வெண்ணையும் நெய்யும் உண்டானாம்.



உண்டா யுலகேழ் முன்னமே, உமிழ்ந்து மாயை யால்புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி
மண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ? மாயோனே

கொஞ்சம் சீர் பிரிப்போம் 

உண்டாய் உலகம் ஏழும் முன்னமே, உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி 
மண்தான் சோர்ந்த உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ ? மாயோனே

பொருள் 

உண்டாய் = உண்டாய்

உலகம் ஏழும் =  உலகம் ஏழும்

முன்னமே = முன்பு ஒரு நாள்

உமிழ்ந்து = பின் உமிழ்ந்தாய்

மாயையால் புக்கு = பின் மாயையில் புகுந்து

உண்டாய் வெண்ணெய் = உண்டாய் வெண்ணையை

சிறு மனிசர்  = அற்ப மனித உருவம் எடுத்து

உவலை யாக்கை = சருகு போன்ற இந்த உடலை எடுத்து (உவலை = சருகு)

நிலை எய்தி = இந்த நிலையை அடைந்து

மண்தான் சோர்ந்த உண்டேலும் = மண் உண்டு சோர்வடைந்து (சோகை 
அடைந்து)

மனிசர்க்கு ஆகும் = மனிதர்களுக்கு வரும்

பீர் சிறிதும் = நோய் சிறிதும்

அண்டா வண்ணம் = வரா வண்ணம்

மண் கரைய  = முன் உண்ட மண் கரைய

நெய் ஊண் மருந்தோ ? = நெய் உணவு மருந்தா ?

மாயோனே = மாயோனே


Friday, September 7, 2012

ஐங்குறுநூறு - அவன் தந்த நோய்


ஐங்குறுநூறு - அவன் தந்த நோய் 


அம்மா: என்னடி உடம்பு கிடம்பு சரி இல்லையா ? ஏன் ஒரு மாதிரி இருக்க ?

அவள்: இல்லையே, நான் நல்லாதான இருக்கேன்

அம்மா: என்ன நல்லா இருக்கியோ போ...சரியா சாப்டிறது இல்ல...தூக்கம் இல்ல...ஆளு நாளுக்கு நாள் மெலிஞ்சிக்கிட்டே போற...டாக்டர் கிட்ட கேட்டாலும் ஒண்ணும் இல்லேன்கிறார்...உன்னைய நாளைக்கு பூசாரிகிட்டதான் கூட்டிகிட்டு போய் மந்திரிச்சு தாயத்து வாங்கி கட்டணும்....

அப்ப அங்க வர்ற தோழி சொல்லுவாள் " உங்க அம்மாவுக்கு எங்க தெரிய போகுது இது காதல் நோய்..அவன் கிட்ட இருந்து வந்ததுனு சொல்லிறவா" .....

பாடல்: