Sunday, September 23, 2012

நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை


நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை


எருமை.

மந்த புத்தி மகிஷம்.

வெயில் என்றாலும் விலகாது.

மழை வந்தாலும் மயங்காது.

என் வழி தனி வழி என்று அதன் வழி செல்லும்.

அவந்தி நாட்டில் அப்படி ஒரு எருமை. 

அதற்கு ஒரு நாள் ரொம்ப பசி. மாட்டிற்கும் யானைக்கும் உடல் எல்லாம் வயிறு தானே.

எதை தின்னலாம் என்று சுற்றிலும் பார்த்தது. எதிரிலே ஒரு குளம். அதிலே 
ஒரு குவளை மலர்.

அந்த மலரை பறித்து உண்ணலாம் என்று குளத்தில் இறங்கி மலரை வாயில் கவ்வியது.

அப்போது அந்த மலரில் இருந்த வண்டுகள் வெளியே தப்பி வந்து ரீங்காரமிட்டன.

அந்த இசையில் மயங்கி மலரை உண்ணாமல் விட்டது அந்த எருமை.

அப்படி எருமைக்குக் கூட இசை ஞானம் இருக்கும் ஊர் அவந்தி.

அந்த நாட்டின் தலைவன் இந்த மன்னன்...பெரிய யானையின் வலிமையையை கொண்டவன் இவன் என்று அவந்தி நாட்டின் மன்னனை தமயந்திக்கு அறிமுகப் படுத்துகிறாள் அவளுடைய தோழி...

பாடல் 

கம்ப இராமாயணம் - மின்னலோடு வருகின்ற மேகம்


கம்ப இராமாயணம் - மின்னலோடு வருகின்ற மேகம்


இராமன் கருமை நிறம். "மையோ, மரகதமோ, மழை முகிலோ" என்பான் கம்பன்.

சீதை மின்னல் போல் இருப்பாள். மின்னல் போல் இடை. மின்னல் போல் நிறம். மின்னல் போல் மெலிந்த வளைந்த உடல் அழகு.

இராமனும் சீதையும் நடந்து வரும் போது மேகத்தோடு சேர்ந்து மின்னல் வருவது போல் இருந்ததாம்....

பாடல்:

Thursday, September 20, 2012

தேவாரம் - மலரும் காதல்


தேவாரம் - மலரும் காதல் 


பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல் என்றெல்லாம் கேட்டு இருப்பீர்கள்...சில திரைப் படங்கள் கூட வந்து இருக்கின்றன.

இதற்கெல்லாம் முன்னோடி நாவுக்கரசர். 

அவள், அவனைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறாள். "அவன் பேரு என்னடி"என்று அவளுடைய நண்பிகளிடம் கேட்டு தெரிந்து கொள்கிறாள்.

"அவன் எப்படி இருப்பான், கருப்பா சிவப்பா, உயரமா, குள்ளமா" என்று அவனைப் பற்றி மேலும் விசாரிக்கிறாள்.

" அவன் இருக்கும் ஊரு, சொந்த ஊரு" எல்லாம் கேட்டு அறிந்து கொள்கிறாள்

கொஞ்சம் கொஞ்சமாய் அவன் மேல் காதல் வயப்படுகிறாள் 

அவள் சொந்த வீடே அவளுக்கு அந்நியமானது.

அப்பா அம்மா கூட யாரோ மூன்றாம் மனிதர்கள் போல நீங்கிப் போனார்கள்

அவளுடைய பழக்க வழக்கங்கள் மாறின. எந்நேரமும்  அவன் நினைப்பு தான். 

தன்னை தானே மறந்தாள்.

தன் பெயரையே மறந்தாள்

அவனுக்கே எல்லாம் என்று ஆனாள்

Monday, September 17, 2012

கம்ப இராமாயணம் - மலர் தூவும் மரங்கள்


கம்ப இராமாயணம் - மலர் தூவும் மரங்கள்


சீதை சித்ர கூடத்தில் நடந்து வருகிறாள்.

பசுமையான அடர்ந்த கானகம்.

ஈரம் நிறைந்த வழித்தடம்.

மாசில்லாத காற்று.

மரங்கள் எல்லாம் பூத்து குலுங்குகின்றன.

அந்த மலர்களில் வண்டுகள் தேன் எடுக்க வருகின்றன.

ஏற்கனவே பூவின் பாரம் தாங்காமல் வளைந்து நின்ற மரக் கிளைகள், வண்டும் அமர்ந்ததால் இன்னும் வளைந்தன.

தேன் எடுத்த பின், வண்டுகள் சட்டென்று பூவை விட்டு விலகுகின்றன.

அதனால், அந்த மரக் கிளைகள் பட்டென்று நிமிர்கின்றன.

அப்படி வேகமாக நிமிர்ந்ததால், அதில் உள்ள பூக்கள் கொஞ்சம் சிந்தின

அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கிறது என்றால்...

அந்த மரங்கள் சீதையை கண்டதும் அவள் பாதம் பணிந்து அவள் பாதத்தில் பூ தூவி வரவேற்றதை போல இருந்ததாம்....

அந்த கம்பனின் பாடல்...

  

Sunday, September 16, 2012

திருச்சந்த விருத்தம் - இறைவன் இருப்பிடம்


திருச்சந்த விருத்தம் - இறைவன் இருப்பிடம்


இறைவன் இத்தனையும் படைத்தான் என்றால் அவன் எங்கு இருந்து கொண்டு படைத்தான் ? அந்த இடம் அவனுக்கு முன்னாலேயே இருந்ததா ? அந்த இடத்தை யார் படைத்தது ? இதை எல்லாம் நாம் அறிந்து கொள்ள முடியுமா ? 

மனித அறிவின் எல்லைகளுக்கு அப்பால் சில விஷயங்கள் இருக்கின்றன என்கிறார் திருமழிசை பிரான்.

அவர் எழுதிய திரு சந்த விருத்தம் சந்த லயம் நிறைந்த பாடல்களை கொண்டது. 
 

Saturday, September 15, 2012

குற்றாலக் குறவஞ்சி - அவை அடக்கம்


குற்றாலக் குறவஞ்சி - அவை அடக்கம்


பூவோடு சேர்ந்த நாரும் மனம் பெரும் என்பார்கள்.

மாலை அழகாகத்தான் இருக்கிறது. அழகான பூக்கள், அதில் இருந்து வரும் மனம், அதன் நிறம் எல்லாம் அழகுதான். ஆனால் அதன் நடுவில் இருக்கும் நாருக்கு ஒரு மனமும் இல்லை, அழகும் இல்லை. இருந்தாலும் நாம் அந்த நாரை வெறுப்பது இல்லை. 

அது போல, என் பாடல்கள் நார் போல இருந்தாலும், அவை அந்த குற்றாலத்து உறையும் ஈசனைப் பற்றி பாடுவதால், அந்த ஈசன் மலராய் இருந்து, என் பாடல்களுக்கு மணம் சேர்க்கிறான் என்கிறார் திரிகூட ராசப்ப கவி ராயர்....

ஐங்குறு நூறு - Extra Marital Relationship


ஐங்குறு நூறு - Extra Marital Relationship


Extra marital relationship - இதற்கு தமிழ் என்ன என்று தெரியவில்லை. திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு என்று சொல்லலாமா ?

அவன் தன்னுடைய மனைவியை விட்டு விலகி வேறு ஒரு பெண்ணுடன் வாழுகிறான். ஒரு நாள், மனைவியை வழியில் எங்கோ பார்த்து விடுகிறான். அவர்கள் பேசுகிறார்கள். 

இந்த விஷயம் எப்படியோ அந்த "மற்ற" பெண்ணின் காதுக்கு சென்று விடுகிறது. அவளுக்குப் புரிந்து விட்டது. இனிமேல் அவன் அவளோடு இருக்க மாட்டான் , அவன் மனைவியை தேடி போய் விடுவான் என்று...அவளே சொல்லுகிறாள்...

கொக்கின் குஞ்சு, கூட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் லேசாக சப்தம் போடும். ஆனால் அந்த சப்தம் வயல் எல்லாம் கேட்கும். எல்லோரும் புரிந்து கொள்வார்கள் இந்த கொக்கு குஞ்சு இனிமேல் இந்த கூட்டில் இருக்காது என்று. அது போல் நீயும் போய் உன் மனைவியுடன் சந்தோஷமாய் இரு

பாடல்