Saturday, October 6, 2012

திருக் குற்றாலக் குறவஞ்சி - மன்மதனின் சேனை


திருக் குற்றாலக் குறவஞ்சி - மன்மதனின் சேனை


மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.

அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை வீரர்கள். 

அந்தப் பெண்கள். வில் போன்ற புருவத்தை வளைத்து, மீன் போன்ற கண்களில் வேல் போன்ற பார்வையை தீட்டி, தங்கள் கொலுசு என்ற பறை முழங்க சண்டைக்கு வருகிறார்கள். 

இனிமையான கற்பனை கொண்ட அந்தப் பாடல் 

அபிராமி அந்தாதி - நஞ்சை அமுது ஆக்கியவள்

அபிராமி அந்தாதி - நஞ்சை அமுது ஆக்கியவள்


நாம் சில சமயம் நல்லது நினைத்து செய்யும் காரியங்கள் வேறு விதமாக முடிந்து விடுவது உண்டு. 

அமுதம் வேண்டி தான் பாற்கடலை கடைந்தார்கள்.

அமுதோடு சேர்ந்து ஆலகால விஷமும் வந்தது.

என்ன செய்வது ?
நமக்கு அமுதம் வேண்டும், நஞ்சு வேண்டாம்.

பொருள்களும், உறவுகளும் வேண்டும்...அவற்றினால் வரும் துன்பம் வேண்டாம்.

ஐயோ, எனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டதே என்று மனிதன் இறைவனிடம் சென்று புலம்புகிறான்.

அவன் அளவற்ற அருளாளன்.

நஞ்சை எடுத்து விழுங்கி விட்டான்.

நம் துன்பங்களை எல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்.

அவன் மனைவி, அபிராமி, அவனை விடவும் அன்பு மிகுந்தவள். அவன் அருந்திய நஞ்சை அவன் தொண்டையில் நிறுத்தினாள். அந்த நஞ்சை அமுதமாக மாற்றினாள். 

"அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை" அவள்.

அவள் ரொம்ப அழகானவள்.

அழகு என்றால் இப்படி அப்படி அல்ல.

பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அபிராமி பட்டார் அவள் அழகில் வைத்த கண் எடுக்காமல், எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

அவளுடைய கண், புருவம், இதழ், கழுத்து என்று பார்த்துக் கொண்டே வந்தவர், அவளின் மார்பக அழகில் லயித்துப் போகிறார். காமம் கடந்த, காதல் கடந்த, அந்த அழகில் தன்னை மறந்து கரைகிறார்.

இந்த பெரிய மார்புகளை அந்த சிறிய இடை எப்படி தான் தாங்குகிறதோ என்று வருந்துகிறார். 

"...முலையாள் வருந்திய வஞ்சி மருங்குல்.." மருங்குல்  என்றால் இடை. 

அவள் உண்ணா முலை அம்மை. ஞான சம்பந்தருக்கு, ஞானப் பால், கிண்ணத்தில் கொடுத்தாள். அவளின் மார்பகங்கள் செப்புக் கலசத்தை கவிழ்த்து வைத்த மாதிரி இருக்கிறது. அவை ஒன்றோடு ஒன்று உரசுகின்றன. 

"..செப்பு உரை செய்யும் புணர் முலையாள் ..." 

அபிராமி பட்டர் எதையும் மறைக்க வில்லை. அவளின் கண்ணை மட்டும் பார்த்தேன், முகத்தை மட்டும் பார்த்தேன் என்று பொய் சொல்லவில்லை. அவர் அம்பிகையை அணு அணுவாக பார்த்து ரசிக்கிறார். அவளின் அழகில் தன்னை மறக்கிறார். 
 
அவள் எங்கே இருக்கிறாள் ? அவளுடைய விலாசம் ஏதாவது இருந்தால் ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரலாம். அவள் நம் மனத்தின் உள்ளே இருக்கிறாள். 

சிப்பியின் உள்ளே மறைந்திருக்கும் முத்து மணி போல், நம் மனத்தின் உள்ளே மறைந்திருக்கும் மணி அவள். மன + உள் + மணி = மனோன்மணி 

அவள் சுந்தரி - அழகானவள்.

அந்தரி - அந்தரத்தில் இருப்பவள். 

பாடல்

Friday, October 5, 2012

திணைமாலை நூற்றைம்பது - மனம் காத்தவள்


திணைமாலை நூற்றைம்பது - மனம் காத்தவள்


டேய், அவ என்ன அவ்வளவு அழகா ? ஏதோ இருக்கா. அதுக்காக இப்படி கிடந்து உருகிற...

போடா, உனக்குத் தெரியாது...அவளோட அழகு...

சரிப்பா, எங்களுக்குத் தெரியாது...நீ தான் சொல்லேன்...

சொல்றேன் கேளு...அவளோட புருவம் இருக்கே, அது நிலவில் இநருந்து இரண்டு கீற்றை வெட்டி எடுத்து வைத்தது மாதிரி இருக்கும். அவ பார்வை இருக்கே, வேல் மாதிரி, அவ்வளவு கூர்மை....

டேய்..உனக்கே இது ரொம்ப ஓவரா படல....

இல்லடா...அவ எங்கேயோ இருக்க வேண்டியவ...அவங்க வீட்டுல அவ அருமை தெரியாம அவளை பள்ளிகூடத்துக்குப் போ, கடைக்குப் போ, வயகாட்டுக்குப் போ என்று அந்த தேவதைய போட்டு வேலை வாங்குறாங்க...பாவம்டா அவ...

ஆனா ஒண்ணுடா, அப்படி அனுப்புனதுலையும் ஒரு நல்லது நடந்துருக்கு...அவளை வயலைப் பாத்துக்க அனுபிச்சாங்க, இப்ப அவ என் மனசப் பாத்துகிரா....

அபிராமி அந்தாதி - பாதம் எனும் வாசக் கமலம்


அபிராமி அந்தாதி - பாதம் எனும் வாசக் கமலம்


ஒரு நாள் அவன் திடீரென்று மயக்கத்தில் இருந்து விழித்துக் கொள்கிறான்.  

சுற்றிலும் பார்த்தால் கடல். 

ஒரே தண்ணீர். கரை காண முடியாத கடல் நடுவே தத்தளிக்கிறான்.

எந்த பக்கம் போவது என்று தெரியவில்லை.

பசி ஒரு புறம்.
சுட்டெரிக்கும் வெயில் ஒரு புறம்.

உப்பு கரிக்கும் கடல் நீர் மறு புறம்.

தாகம் வேறு வாட்டுகிறது.

தூக்கம் இல்லை.

பத்தா குறைக்கு அவனுக்கு கண் தெரியாது. கண் தெரிந்தாலே கரை காண முடியா கடல். கண் வேறு தெரியா விட்டால் என்ன எப்படி இருக்கும்.  

கடைசியில் ஒரு கட்டை கையில் தட்டுப் படுகிறது. அப்பாட, அதைப் பற்றிக் கொண்டு நீந்தி கரை சேர்ந்து விடலாம் என்று நினைக்கிறான் . அந்தோ, அந்த கட்டையும், ஒரே பாசி படிந்து இருக்கிறது. பிடிக்க பிடிக்க வழுக்கிக் கொண்டே போகிறது. 

என்ன செய்யலாம் என்று தவித்துக்கொண்டு இருக்கும் போது, அவள், அவள் தான் அபிராமி, அவன் மேல் பரிதாபப் பட்டு, அவளின் திருவடியையை நீட்டுகிறாள்.

அவன் அதை பிடித்துக் கொள்கிறான். உயிர் தந்த அந்த திருவடியையை தன் மேலை மேல் வைத்துக் கொண்டாடுகிறான். 

அந்தக் கடலிலும், அந்த நேரத்திலும், அந்த பாதத்தின் மென்மை அவனுக்குத் தெரிகிறது. அதன் சிவந்த நிறம். அதில் இருந்து வரும் இனிய வாசம்....அவளை நிமர்ந்து பார்க்கிறான். 

அவளின் அன்பு அவனை சிலிக்க வைக்கிறது. " உன் அன்பை நான் என்ன வென்று சொல்வேன் " என்று உருகுகிறான். 

பாடல் 
 

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே

பொருள்:

ஆசைக்கடலில் = ஆசை என்ற கடலில்

அகப்பட்டு = சிக்கிக் கொண்டு

அருளற்ற = அருள் ஏதும் இல்லாத

அந்தகன் = குருடன்

கைப் = குருடனின் கை

பாசத்தில் = இரண்டு அர்த்தம் சொல்லலாம். ஒன்று, பாசி படிந்த இடங்களை 

பிடித்து கரை ஏற நினைக்கிறான். முடிய வில்லை. இன்னொரு பொருள்,  
பொருள்கள்  மேல், உறவுகளின் மேல் பாசம். ஆசைக் கடல், அதன் நடுவில் 
பாசம் என்னும் கடல்.

அல்லற்பட = கஷ்டப் பட்டுக் கொண்டு 

இருந்தேனை = இருந்தவனை

நின் பாதம் என்னும் = உன்னுடைய திருவடிகள் என்ற 

வாசக் கமலம் = வாசமான தாமரை மலர்களை

தலை மேல் = என்னுடைய தலையின் மேல்

வலிய வைத்து = நீயே வலிய வந்து வைத்து

ஆண்டு கொண்ட = என்னை ஆண்டு கொண்ட 

நேசத்தை = உன்னுடைய அன்பை

என் சொல்லுகேன் = என்ன என்று சொல்வேன்

ஈசர் பாகத்து = ஈசனின் ஒரு பாகம் கொண்ட

நேரிழையே = சிறந்த அணிகலன்களை அணிந்தவளே

இந்த பாடலுக்கு பொருள் எழுதிய பெரியவர்கள், "அந்தகன் கை பாசத்திடை அல்லல் படும் வேளை" என்ற வரிக்கு அந்தகன் என்றால் எமன். அவனுடைய பாசக் கயிற்றில் கட்டப் பட்டு அல்லல் படும் நேரம் என்று பொருள் சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வைத்துக் கொள்ளுங்கள். 


தக்கயாக பரணி - புலவியா ? கலவியா ?


தக்கயாக பரணி - புலவியா ? கலவியா ?


தக்க யாக பரணி என்ற நூலை எழுதியவர் ஒட்டக் கூத்தர். 

கலிங்கத்துப் பரணி போல், இதிலும், கடை திறப்பு என்ற பகுதி உண்டு. 

கணவனோ, காதலனோ அவர்களின் மனைவியையோ, காதிலியையோ கெஞ்சி கூத்தாடி கதவை திறக்கச்  சொல்லும் பாடல்கள்.

காம நெடி கொஞ்சம் தூக்கலான பாடல்கள்.

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி வாழ்கையை, குறிப்பாக இல்லற வாழ்கையை அனுபவித்தார்கள் என்பதை விளக்கும் பாடல்கள்.

நீண்ட நாள் கழித்து கணவன் வருகிறான்.

அவனைக் காண வேண்டும் என்று, அவனைக் கட்டி அணைக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறாள் அவன் மனைவி.

அவன் வந்து விட்டான்.

ஓடிச்சென்று அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்.

அவனுக்கும் அவள் மேல் அவ்வளவு ஆசை.

இருவரும் ஒருவரை ஒருவர் ஈருடல் ஓர் உயிராய் இறுகத் தழுவி நின்றார்கள்.

அவர்கள் அப்படி உத்வேகத்துடன் கட்டி கொண்டு இருப்பது, காதலில் அணைந்துகொண்டது மாதிரியும் இருக்கிறது. ஆக்ரோஷமாய் இரண்டு எதிரிகள் ஒருவரை ஒருவர் மல் யுத்தத்தில் கட்டி பிடித்து சண்டை இடுவது போலவும் இருக்கிறது.

அப்படி கட்டி அணைக்கும் பெண்களே, கொஞ்சம் கதவை திறவுங்கள் என்று பாடுகிறான் கணவன்....

Thursday, October 4, 2012

தண்டலையார் சதகம் - தன் வலி, தனி வலி


தண்டலையார் சதகம் - தன் வலி தனி வலி 

சில பேருக்கு மற்றவர்கள் வலி தெரியாது. தங்கள் வலி மட்டும் தான் பெரிதாய் தெரியும். அப்படி பட்டவர்களின் பட்டியலை தருகிறது தண்டலையார் சதகம்.

நொந்தவர், பசித்தவர், விருந்தினர், விரகம் உள்ளவர், நோய் வாய் பட்டவர், எப்படி சவலைப் பிள்ளை தாயிடம் பால் அருந்தாமல் இருந்தால் அந்த தாயின் மார்பில் பால் கட்டி தாய் துன்பப் படுவதை அந்தக் குழந்தை அறியாதோ அது மாதிரி. 

மணிமேகலை - அறியாமலே கழிந்த இளமை


மணிமேகலை - அறியாமலே கழிந்த இளமை


கருத்து வேறுபாடு, இரசனை வேறுபாடு, சண்டை, சச்சரவு, உன் குடும்பம், என் குடும்பம் என்று கணவன் மனைவிக்கிடையே காலம் சென்று விடுகிறது. 

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதே இல்லை. புரிந்து கொள்ள நேரம் இருப்பதும்  இல்லை.

வாழ்க்கை மிக வேகமாக ஓடி விடுகிறது. பெற்றோரர்கள் மறைந்து விடுகிறார்கள். 

பிள்ளகைள் வேலை திருமணம் என்று பிரிந்து போய் விடுகிறார்கள். 

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் முதல் தடவை பார்ப்பது போல பார்க்கிறார்கள்.  

மாணவி சொல்கிறாள்....வாழ்கை பூராவும் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவே இல்லை. உனக்கு அறுபது வயது ஆகி விட்டது. என் கூந்தலும் முற்றும் நரைத்து விட்டது. நம் அழகு எல்லாம் போய் விட்டது. இளமையும் காமமும் எங்கே போய் விட்டன ? இருந்தாலும் உன்னை எனக்குப் பிடிக்கிறது. உனக்கும் என்னை பிடிக்கும் என்றே நினைக்கிறேன். இந்த ஜென்மம் இப்படியே போய் விட்டது. இன்னோர் பிறவி இருந்தால் மீண்டும் உன்னோடு சேரவே எனக்கு ஆசை.....