Saturday, October 20, 2012

அபிராமி அந்தாதி - மனம் நெகிழ வைக்கும்


அபிராமி அந்தாதி - மனம் நெகிழ வைக்கும்

அபிராமி அந்தாதியில் பல இடங்களில் அபிராமி பட்டர் அபிராமியின் மார்பகங்களை குறித்துப் பாடுகிறார். என்னடா இது ஒரு பக்தி பாடலில், ஒரு இறைவியையை பற்றி இப்படி கூறலாமா என்று பலர் நினைக்கலாம்.

ஒரு குழந்தை இந்த உலகில் வந்தவுடன், அது இயற்கையாக தேடுவது அதனுடைய தாயின் மார்புகளை தான். தாய் தன் உதிரத்தை பாலாக்கி தன் குழதைக்குத் தருகிறாள். குழந்தை உயிர் வாழ, அது வளர, அதை நோயில் இருந்து பாதுகாக்க தாய் பால் உதவுகிறது. தாய் பால் உணவு மட்டும் அல்ல, அது தாயின் அன்பு, காதல், பாசம், வாஞ்சை, அவளின் அரவணைப்பு எல்லாம் அந்த குழந்தைக்கு கிடைக்கிறது. 

கஷ்டம் வரும் போது எல்லாம் நாம் தாயை தான் நினைக்கிறோம். துன்பம், கஷ்டம் வரும்போது "ஐயோ, அம்மா" என்று அவளை நினைக்கிறோம். சுகம் வரும்போது தந்தையை நினைக்கிறோம் ("அப்பாட " ) என்கிறோம்.

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன் 
அருள் நினைந்தே அழும் குழவி அது போல் ஆனேனே 

என்று உருகும் பிரபந்தம்.

ஒரு குழந்தை தாயின் மார்பை பார்பதை போல் பட்டர் அபிராமியையை பார்க்கிறார். உலகுக்கு எல்லாம் அமுது ஊட்டுபவள் அல்லவா அவள். 

பாடல்: 

Thursday, October 18, 2012

கம்ப இராமாயணம் - பசையற்ற பாலை


கம்ப இராமாயணம் - பசையற்ற பாலை நிலம்


இராமனும், இலக்குவனும், விச்வாமித்ரனும் பாலை நிலம் வழியே செல்கிறார்கள். வறண்ட பூமி. ஈரப் பதம் எள்ளளவும் இல்லை. 

கொஞ்சம் கூட ஈரம் இல்லை, பசை இல்லை என்று சொல்ல வேண்டும். அதற்க்கு எதை உதாரணமாய் காட்டலாம் என்று கம்பன் நினைக்கிறான்.

பற்றற்ற ஞானிகளின் மனமும், விலை மகளிரின் மனமும் எப்படி இருக்குமோ, அது போல் பசை அற்று இருந்தது என்கிறான் கம்பன். 

அது என்ன பசை ?  

பசை என்ன செய்யும். இரண்டு பொருட்களை ஒன்றொன்று ஒட்டச் செய்யும். பிணைக்கும். ஒன்றோடு ஒன்றாக பிணைக்கும். 

ஈர நிலம் தாவரங்களை நிலத்தோடு பிணைக்கிறது. உயிர் வாழ வழி வகுத்து மக்களையும், விலங்குகளையும் ஓரிடத்தில் ஒன்று படுத்துகிறது. 

பாலை நிலத்தில் ஈரம் இல்லை. செடி கொடிகள் இல்லை. உயிர்கள் இல்லை. தனந் தனியே ஒரு வித பற்றும் இல்லாமல் கிடக்கிறது. எதோடும் ஒட்டாமல் தானே தனியே இருக்கிறது.

ஞானிகள் எதோடும் யாரோடும் ஒட்டுவதில்லை. இறை சிந்தனை, முக்தி என்று சிந்தித்து இருப்பார்கள். இந்த உலகோடு அவர்களுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. 

விலை மகளிரும் அப்படித்தான். அன்போடு , நட்போடு இருப்பதை போல் அவர்கள் பழகினாலும், அவர்களுக்கு யார் மேலும் ஒட்டும் உறவும் கிடையாது. 

பாடல் 

Wednesday, October 17, 2012

அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை


அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை


இறைவன் மேல் பயம் கொள்வது ஒரு நிலை. பக்தி செய்வது மற்றொரு நிலை. நன்றி செலுத்துவது இன்னும் ஒரு நிலை. அன்பு செலுத்துவது உன்னத நிலை.

எனக்கும் அவளுக்கும் இடையே உயர்வு தாழ்வு இல்லை. உயர்வு தாழ்வு இருந்தால் பயம் வரும். பக்தி வரும். 

அவள் தந்து நான் பெற்றால் நன்றி வரும். எங்களுக்குள் அப்படி எந்த பேதமும் கிடையாது. 

அன்பு ஒன்றே எங்களுக்குள்.

அவளின் அழகு அப்பேற்பட்டது. பார்த்தவுடன் அன்பு தானாகவே வரும். அவளின் தோற்றம் என்னை அவள் மேல் அன்பு செய்ய வைத்தது. அது ஒண்ணும் நான் முயன்று செய்ததில்லை. அவள் வந்தால். அன்பு பிறந்தது. 

அவளைப் பார்த்த பின், காலமே நின்று போனமாதிரி இருக்கு. எது பகல், எது இரவு, எது என்ன கிழமை, எது என்ன பருவம் ஒன்றும் தெரியவில்லை. எந்நேரமும் அவள் நினைப்பே தான். "இனி எண்ணுதற்கு சமயங்களும் இல்லை".

இந்த மனித பிறவி பெற்றதின் பலன் அவளைப் பார்த்தது, அவள் மேல் அன்பு வைத்தது. முக்தி இதுதான். சொர்க்கம் இதுதான். வீடு பேறு இதுதான். இனி சென்று பிறப்பது ஒன்று இல்லை. இனி என்னை கருவில் சுமக்க ஒரு தாயும் இல்லை. நான் அவளுள் அடங்கி விட்டேன். இனி வேறு எங்கு போய் பிறப்பது. 

இது தான் அந்தம். இது தான் முடிவு. அவள் தான் எல்லாம்.

அவளைப் பார்த்த பின் மற்ற பெண்களை பார்த்தால் ஒண்ணுமே தோன்ற மாட்டேன் என்கிறது. அவளை கடந்து என்ன இருக்கிறது ?  மற்ற பெண்கள் மேல் இருந்த ஆசை எல்லாம் அமைதி பெற்று விட்டது. அடங்கவில்லை, அமைதி ஆகி விட்டது. அடங்கினால், அடக்கினால் ஒரு வேளை மீண்டும் எழலாம். எது அமைதி. சலனம் அற்ற மனம். மற்ற பெண்களை பார்த்தால் ஒரு சலனமும் மனதில் எழவில்லை. மனம் நிர்மலாமாய் இருக்கிறது. தெளிந்த நீர் பரப்பு போல. 

பாடல்

Tuesday, October 16, 2012

நள வெண்பா - நீண்ட இரவு


நள வெண்பா - நீண்ட இரவு


இந்த இரவு ஏன் இப்படி நீண்டு கொண்டே போகிறது. எவ்வளவு நேரம் ஆகிறது பொழுது விடிய. நகரவே மாட்டேன் என்கிறதே இந்த இரவு. இந்த சேவல் கோழிகளுக்கு எல்லாம் என்ன ஆகிவிட்டது ? ஏன் அவை கொக்கரிக்க மாட்டேன் என்கிறது. இந்த இரவு விடியவே விடியாதா ? இந்த கடல் ஏன் இப்படி அலை அடித்துக்கொண்டே இருக்கிறது. தூங்கவே தூங்காதா ? இந்த நிலவு ஏன் இப்படி வெயிலாய் காய்கிறது ? ஏன்  இப்படி சுடுகிறது ? இந்த சூட்டில் என் உடலே உருகி விடும் போல் இருக்கிறதே...என்று புலம்புகிறாள் தமயந்தி...காதல் பிரிவு அவளை வாட்டுகிறது ....


பாடல் 

நாச்சியார் திருமொழி - அவன் என்னை நேசிக்க


நாச்சியார் திருமொழி - அவன் என்னை நேசிக்க


கடவுளை நாம் விரும்பினால் போதுமா ? அவன் நம்மை விரும்ப வேண்டாமா ?

நாம் பூஜை, புனஸ்காரம், பஜனை, வேண்டுதல், அர்ச்சனை என்று எல்லாம் செய்கிறோம்.

நம்மால் முடிந்தது அவ்வளவு தான். 

ஆண்டாள் ஒரு படி மேலே போகிறாள். 

மன்மதனே, அந்த கண்ணன் என் மேல் காதல் கொள்ளும்படி அவன் மேல் மலர் கணை தொடு என்று மன்மதனை வேண்டுகிறாள். காதல் வயப் பட்டவர்கள், தங்கள் காதலன் பெயரையோ அல்லது காதலியின் பெயரையோ தங்கள் கைகளில் எழுதி மகிழ்வார்கள். அந்த பெயருக்கு முத்தம் தருவார்கள். காதலன் அல்லது காதலியின் பெயரை எழுதுவது, பார்ப்பது என்பது ஒரு சுகமான விஷயம். ஆண்டாள் சொல்கிறாள், " என் மேல் கடல் வண்ணனின் பெயரை எழுதி, உன் மலர்கனையோடு என்னையும் அவன் மேல் எய்" . 

காதலின் உச்ச கட்டம். 

காதல் கனியும் அந்தப் பாடல்:

Monday, October 15, 2012

அக நானூறு - அவள் வருவாளா ?


அக நானூறு - அவள் வருவாளா ?


அவன்: அவ வருவாளாடா ? 

தோழன் : நிச்சயம் வருவா. 

அவன்: எப்படிடா சொல்ற ? ஒரு வேளை வரட்டா ? என் கிட்ட என்ன இருக்கு ? நான் அவளை சந்தோஷமா வச்சுக்க முடியுமா ? என் கூட வந்தா அவ கஷ்டத்தான் படப் போறா. எனக்கு என்னவோ அவ வர மாட்டான்னு தான் தோணுது. 

தோழன்: டேய், உன்கிட்ட பணம் காசு இல்லாம இருக்கலாம்...ஆனா அவளுக்கு கொடுக்க நீ எவ்வளவு அன்பு வச்சிருக்க...உன்னை விட அவளை யாரும் இந்த உலகத்தில அதிகமா நேசிக்க முடியாது...


அது ஒரு வறண்ட கிராமம். தண்ணியே இல்லை. ஊருக்கு வெளியே ஒரு ஆறு இருக்கிறது. அதில் எப்ப தண்ணி வந்தது என்று யாருக்கும் தெரியாது. அந்த ஆற்றுப் படுகையை தோண்டினால் கொஞ்சம் போல ஊத்துத் தண்ணி வரும். தாகம் கொண்டு ஒரு ஆண் யானையும் பெண் யானையும் அந்த பக்கமா வருகின்றன. இருக்கும் நீரோ கொஞ்சம். வெயில் சுட்டு எரிக்கிறது. 

அந்த ஆண் யானை அந்த தண்ணீரை எடுத்து பெண் யானையின் மேல் தெளித்து அதன் சூட்டை தணிக்கிறது. மீதம் இருக்கும் கலங்கிய சேற்று நீரை தன் மேல் வாரி இறைத்துக் கொள்கிறது.  பின் இரண்டும் நடந்து செல்கின்றன. ஒதுங்க நிழல் இல்லை. மரத்தில் உள்ள இலைகள் எல்லாம் உதிர்ந்து விட்டன. அந்த மரத்தின் மொட்டை கிளைகள் தரும் நிழலில் அந்த ஆண் யானை ஒதுங்குகின்றது. 

இன்னும் கொஞ்ச தூரம் போனால், அங்கே சில கிராம வாசிகள் நடந்து போய் கொண்டு இருக்கிறார்கள். பனை ஓலையில் செய்த குடையையை அவர்கள் வைத்து இருக்கிறார்கள். காற்று வேகமாக அடிக்கிறது.  அந்த காற்று, குடையில் மோதி ஒரு வித சத்தத்தை எழுப்புகிறது. அந்த சத்தம் தன்னுடைய பெண் மானின் சத்தம் என்று நினைத்து அதை தேடி ஆண் மான் காட்டுக்குள் ஓடுகிறது. 

எங்கு பார்த்தாலும் வறட்சியின் கோர தாண்டவம். கடினமான வாழ்க்கை. இருந்தாலும் காதல் அங்கே இழை ஓடிக்கொண்டிருக்கிறது. 

பாடல்

நாம்நகை யுடையம் நெஞ்சே கடுந்தெறல் 
வேனில் நீடிய வானுயர் வழிநாள்
வறுமை கூரிய மண்ணீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச்
சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச்
சொரிபுறம் உரிஞிய நெறியயல் மராஅத்து
அல்குறு வரிநிழல் அசைஇ நம்மொடு
தான்வரும் என்ப தடமென் தோளி
உறுகண் மழவர் உருள்கீண் டிட்ட
ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடைக்
கனைவிசைக் கடுவளி யெடுத்தலின் துணைசெத்து
வெருளேறு பயிரும் ஆங்கண்
கருமுக முசுவின் கானத் தானே.


நாம் நகை யுடையம் - நாம் மகிழ்ச்சியோடு புன்னகை பூத்தோம்

கடுதெறல் = மிகுந்த வரட்சியான

வேனில் = கோடைக் காலம்

நீடிய வான் உயர் வழி - இந்த சாலையோ ஒரு முடிவு இல்லாமல் ஏதோ 
வானத்திர்க்கே போவது மாதிரி போய் கொண்டே இருக்கிறது

நாள் வறுமை கூரிய - ஒவ்வொரு நாளும் வறுமை மிக (இங்கே தண்ணீர் 
என்ற செல்வம் குறைந்து கொண்டே போக என்று அர்த்தம்), 

மண்நீர்ச் = மண் நிறைந்த நீர் உள்ள 

சிறுகுளத் = சிறிய குளத்தில் (சேறு நிறைந்த ஒரு குட்டை)

தொடுகுழி = பள்ளம் பறித்து வைத்த ஒரு சின்ன குழியில்

மருங்கில் -  உள்ளே  

துவ்வாக் கலங்கல் - அருந்த முடியாத கலங்கிய நீரால்

கன்று உடை = கன்றை உடைய

மடப்பிடிக் = பெண் யானை

கயந்தலை மண்ணி -  அதன் தலையில் நீரை ஊற்றி (கழுவி) , 

சேறுகொண்டு ஆடிய = மீதியுள்ள சேற்றை மேலே பூசிக் கொண்டு ஆடிக் கொண்டு

வேறுபடு = நிறம் வேறு பட்ட

வயக் களிறு - வலிமையான ஆண் யானை 
 
செங் கோல் = சிவந்த காம்பினை உடைய

வால்இணர் = மலர் கொத்துகளை

தயங்கத் தீண்டி - தயக்கத்துடன் தும்பிக்கையால் பற்றி 

சொரிபுறம் = தன் முதுகை

உரிஞிய -  உறாய்துக்   கொண்டு 

நெறி = வழியில்

அயல்= பக்கத்தில் உள்ள (ரோட்டோரம்_

மராஅத்து -  வெண்மையான கடம்ப மரத்தின் 
 
அல்குறு = சுருங்கிய

வரி நிழல் = வரி வரியாக விழும் நிழல் (இலை இல்லாத மரத்தின் நிழல்)

அசைஇ - அசைந்து இருந்து  

நம்மொடு = நம்முடன்

தடமென் = அழகிய மென்மையான

தோளி வரும் என்ப  - தோளினை உடைய அவள் வருவாள் என்று இருப்போம்

நம்முடன் பெரிய மென்மை வாய்ந்த தோளை யுடைய தலைவி வரும் என்பர், 

உறுகண் = செல்கின்ற வழி

மழவர் = மழவர்களின் 

உருள் கீண்டிட்ட- வழித்தடம் உண்டாக்கிட, 

ஆறுசெல் மாக்கள் -  வழியே செல்லும்  மக்கள்  

சோறு பொதி = சோற்று மூட்டை போல பெரிதாக உள்ள  

வெண்குடை -  வெண்மையான பனை ஓலை குடை  

கனைவிசை = மிகுந்த விசையுடன்

கடுவளி = வேகமாக வீசும் காற்று

எடுத்தலின் - தூக்கும்   போது

துணை செத்து - தனது பிணையின் குரல் என்று எண்ணி  

வெருள் ஏறு -  அஞ்சிய மான் 

பயிரும் ஆங்கண் -  அந்த துணை இருக்கும் இடங்களை  


கருமுக = கரிய முகத்தை உள்ள

முசுவின் = முசுக்கள் உள்ள 

கானத்தான் -  காட்டில் 


.


அபிராமி அந்தாதி - ஞாபகம் இல்லாமல் எனக்கு அருள் செய்து விட்டாய்


அபிராமி அந்தாதி - ஞாபகம் இல்லாமல் எனக்கு அருள் செய்து விட்டாய்


நீங்கள் ஒரு பெண்ண மேல் காதல் கொள்கிறீர்கள். அந்த பொண்ணு ரொம்ப அழகு. அவளின் அன்புக்காக உருகுகிறீர்கள். அவள் உங்களை பார்த்து ஒரு முறை புன்முறுவல் பூக்க மாட்டாளா என்று தவம் இருக்கிறீர்கள். 

நீங்கள் அவளை விடாமல் காதலிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

ஒரு நாள் அவள் உங்களைப் பார்த்து ஒரு புன்னகை சிந்துகிறாள். உங்களிடம் வந்து அவளும் உங்களை விரும்புவதாகச் சொல்லி செல்கிறாள். 

எப்படி இருக்கும் உங்களுக்கு ? எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும் ? 

நான் என்ன செய்து விட்டேன் ? என்ன ஆச்சு அவளுக்கு ? திடீர்னு வந்து அவளும் என்னை காதலிப்பதாக சொல்கிறாளே ? ஒருவேளை ஞாபக மறதியா வேறு யாரிடமோ சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்லி விட்டு போகிறாளோ ? என்று உங்கள் மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.  ஒவ்வொரு அணுவிலும் சந்தோஷம் கொப்பளிக்கிறது. இவ்வளவு சந்தோசத்தை எப்படி தாங்கப் போகிறீர்கள் ? 

இறை அருளும் அப்படித்தான். அபிராமி பட்டருக்கு அபிராமியின் அருள் கிடைத்தது.  அவரால் நம்ப முடியவில்லை. நான் என்ன செய்து விட்டேன், எனக்கு எப்படி அவளின் அருள் கிடைத்தது. ஒரு வேளை, அபிராமி ஞாபகம் இல்லாமல் எனக்கு அருள் தந்து விட்டாளோ ? அவளின் அருள் மட்டும் அல்ல, அவளை அறியும் அறிவையும் தந்தாள். 

புலம்புகிறார்...தாயே, மலை மகளே, திருமாலின் தங்கச்சியே...என்று உருகுகிறார்.....

பாடல்