பிரபந்தம் - இந்த சொத்து எல்லாம் யாருடையது ?
வேதங்களை படித்து அறிந்து கொள்வது மிகக் கடினமான காரியம். முதலில் அதற்க்கு சமஸ்க்ரிதம் தெரிய வேண்டும். அந்த மொழியின் உச்சரிப்பு புரிய வேண்டும். வேதங்கள் எழுதப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட சமஸ்க்ரித சொற்களுக்கு அர்த்தம் புரிய வேண்டும். கால வழக்கில் ஒரே வார்த்தை வேறு அர்த்தம் பெறுவதும் உண்டு. ஆத்மா என்ற சொல்லுக்கு ஐம்பத்து ஆறு அர்த்தங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். எது சரியான அர்த்தம் என்பதில் குழப்பம் வரலாம். வேதம் ஓத சில வரைமுறைகள், கட்டுப்பாடுகள், உண்டு.
நமக்கு அந்த பிரச்சனை எல்லாம் இல்லை. வேதத்தின் சாரத்தை தமிழில் வடித்து மிக மிக இனிமையாக தந்து இருக்கிறார்கள். முன்னூறே பாசுரத்தில்.
பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்ற மூன்று ஆழ்வார்கள் நூறு பாசுரம் எழுதி இருக்கிறார்கள். மொத்தம் முந்நூறு பாசுரம்.
இதை தமிழ் வேதம் என்று பெரியவர்கள் கூறுவார்கள்
தேமதுர தமிழில் படிக்க படிக்க திகட்டாத பாடல்கள்.
பொய்கை ஆழவார் எழுதிய நூறு பாடல்கள் முதல் திருவந்தாதி என்று அழைக்கப்படுகிறது. அதில் இருந்து சில பாசுரங்களை பார்ப்போம்.
நாம் சொத்து சேர்த்து வைக்கிறோம். மனை, வீடு, தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் என்று சேர்த்து வைக்கிறோம். இவை எல்லாம் நம்மது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
நமக்கு முன்னால் இவற்றை எல்லாம் யார் யாரோ வைத்து இருந்தார்கள். நமக்கு பின்னால் இது யார் யாரிடமோ இருக்கப் போகிறது. இந்த பிரபஞ்சத்தின் கால அளவை வைத்து பார்க்கும் போது, நாம் இவற்றை வைத்து இருக்கும் கால அளவு ஒரு சிறு நேரத்துளி. அவ்வளவு தான். கொஞ்ச நேரம் வைத்து இருக்க இந்த சண்டை, சச்சரவு, அடி தடி, கோபம், தாபம், எல்லாம்.
இந்த சொத்துகளை இதற்க்கு முன்னால் நம் தந்தை, அதற்க்கு முன்னால் நம் தத்தா வைத்து இருந்திருக்கலாம். அல்லது நாம் யாரிடம் இருந்து வாங்கினோமோ அவர்களின் தந்தை அல்லது பாட்டன் வைத்து இருந்து இருக்கலாம்.
பொய்கை ஆழ்வார் மேலும் ஆழமாக நம்மை சிந்திக்கச் சொல்கிறார்.
இந்த உலகம் முழுவதும் அவன் உருவாகினான்.
சரி, அவன் உருவாக்கினால் என்ன. ஒரு தொழிற்ச்சாலையில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டால் அது அந்த தொழிற்ச்சாலையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு சொந்தம் இல்லையே என்று வாதிடலாம்.
அவன் உருவாகியது மட்டும் அல்ல, அவன் அதை பிரளய காலத்தில் தன் வயிற்றில் வைத்து காப்பாற்றினான்.
காப்பாற்றியது மட்டும் அல்ல மீண்டும் நாம் அனுபவிக்க அதை நமக்குத் தந்தான்.
இது அவனிடம் இருந்து வந்தது. மீண்டும் அவனிடம் போகும். இடையில் மிக மிக சிறிது காலம் நீங்கள் அதை வைத்து இருக்கிறீர்கள்.
பாடல்