Wednesday, November 28, 2012

சித்தர் பாடல்கள் - சலிப்பு


சித்தர் பாடல்கள் - சலிப்பு


பட்டினத்தார் பாடல்கள் நிலையாமையின் உச்சம். பாடல்களின் ஆற்றொழுக்கான நடை, ஒரு தரம் படித்தாலே மனதில் ஒட்டிக்கொள்ளும் அதன் எளிமை, வாழ்க்கை இவ்வளவுதானா, இதற்குத்தானா இத்தனை அடி தடி, சண்டை சச்சரவு என்று நம் ஆணவத்தின் தலையில் குட்டும் பாடல்கள்...

இருப்பையூரில் வாழும் சிவனே, நான் எத்தனை முறை தான் பிறப்பேன் ? என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள். ஒவ்வொரு பிறவியிலும் உண்மையை தேடி தேடி கால் சலித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் என் தலை எழுத்தை எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். போதுமப்பா...மீண்டும் ஒரு கருப்பையில் வரமால் என்னை காப்பாற்று....

பாடல் 

Tuesday, November 27, 2012

பிரபந்தம் - பல்லாண்டு


பிரபந்தம் - பல்லாண்டு 


இறைவனை எதற்கு வாழ்த்த வேண்டும் ? நாம் வாழ்த்தி அவனுக்கு என்ன ஆகப் போகிறது ? நாம் வாழ்த்தியா அவன் வாழப் போகிறான் ? பின் ஏன் பெரியவர்கள் எல்லோரும் அவனை வாழ்த்துகிறார்கள் ?

நமச்சிவாய வாழ்க என்று ஆரம்பிக்கிறார் மாணிக்க வாசகர் சிவ புராணத்தில்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்கிறார் சேக்கிழார் பெரிய புராணத்தில்

எதற்கு இறைவனை வாழ்த்த வேண்டும் ?

ஒரு மணி மாலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் உள்ள மணிகளை அசைக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மணியாக அசைக்கலாம் அல்லது அனைத்து மணிகளின் ஊடே செல்லும் அந்த நூலை அசைக்கலாம். நூலை அசைத்தால் மாலை அசைவதைப் போல, அனைத்து உயிர்களுக்குள்ளும் ஊடாடும் இறைவனை வாழ்த்தினால் அனைத்து உயிர்களையும் வாழ்த்தியது போலத்தான். 

இராமசாமி வாழ்க, குப்புசாமி வாழ்க, பீட்டர் வாழ்க, அக்பர் வாழ்க, மரம் வாழ்க, மீன் வாழ்க என்று சொல்லிக் கொண்டே போவதை விட , "நமச்சிவாய வாழ்க" என்று இரண்டு வார்த்தைகளில் சொல்லி வாழ்த்துவது எளிது. 

இன்னொரு குறிப்பு. 

நமக்கு யாரவது நன்மை செய்தால் நாம் அவர்களை வாழ்த்துவோம்....நல்லா இருக்கணும்..என்று வாழ்த்துவோம்...இறைவன் நமக்கு எவ்வளவோ தந்து இருக்கிறான்...அவனை வாழ்த்துவது தானே முறை...

பெரியாழ்வார்  வாழ்த்துகிறார்....திருமாலே நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார். பின்னும் பார்க்கிறார்...அவன் மார்பில் வாழும் லக்ஷ்மி தெரிகிறாள்...அவளையும் வாழ்த்துகிறார்...பின்னும் பார்க்கிறார் அவன் கையில் உள்ள சங்கும் சக்கரமும் தெரிகிறது...அவற்றையும் வாழ்த்துகிறார்...சரி அவன் வாழ வேண்டும், அவன் மனைவி, அவன் சங்கு, அவனுடைய சக்கரம் எல்லாம் வாழ்தியாகிவிட்டது...அவனுக்கும் தனக்கும் உள்ள பந்தம் பிரிந்து விடக் கூடாது...அந்த பந்தமும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்....

பாடல்

Monday, November 26, 2012

நல்வழி - இட்டு, உண்டு, இரும்


நல்வழி - இட்டு, உண்டு, இரும் 


அவ்வையார் எழுதிய இன்னொரு நூல் "நல் வழி". அதில் உள்ள பாடல்கள் பொதுவாக எல்லாம் விதிப்படி நடக்கும், நம்மால் ஆவது ஒன்றும் இல்லை, நடப்பது நடக்கட்டும் என்ற ரீதியில் இருக்கும். அதிலிருந்து சற்று வேறுபட்ட பாடல்களைப் பார்ப்போம்....

நாம் மிகுந்த அன்பு வைத்தவர்கள் யாரவது இறந்து விட்டால் நாம் மிக வருந்தி அழுவோம். எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்தவர் திரும்பி வரப் போவது இல்லை. அது மட்டும் அல்ல, நாமும் ஒரு நாள் அந்த வழியே போகத்தான் போகிறோம். அந்த நாள் வரும் வரை, வேண்டியவர்களுக்கு உணவளித்து, நீங்களும் உண்டு, அமைதியாய் இருங்கள்.....

பாடல் 

பிரபந்தம் - அவ்வளவு பெரிய வாயா ?


பிரபந்தம் - அவ்வளவு பெரிய வாயா ?


பொய்கை ஆழ்வாரின் முதல் திரு அந்தாதியில் சில பாசுரங்கள் ஆச்சரியமானவை. மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் இறைவனின் குணங்களைப் பாடும் பொழுது, இவர் மட்டும், இறைவனின் குணங்களை நம்பாதவர் மாதிரி, நீ உலகை அளந்தாயாமே ? அவ்வளவு பெரிய திருவடியா உனக்கு ? உலகை எல்லாம் உண்டாயாமே ? அவ்வளவு பெரிய வாயா உனக்கு ? நீ எப்போ அப்படி எல்லாம் செய்தாய் என்று எனக்குத் தெரியாது என்று கூறி சந்தேகப்படுவதுபோல்  புகழ்கிறார்...

இனிமையான சந்த நயம் மிக்க பாசுரங்கள்...

பாடல்

சிலப்பதிகாரம் - கண்ணகி முறையீடு


சிலப்பதிகாரம் - கண்ணகி முறையீடு


கண்ணகி, காப்பியம் முழுவதும் அமைதியாகத்தான் இருந்தாள். தன் கணவன் கொலையுண்டான் என்று அறிந்தவுடன் புயலாக புறப்படுகிறாள். 

ஒரு புது பெண்ணை பார்க்கிறோம். கோபம். ருத்திரம். ஞாயம் வேண்டி போராடும் குணம். வெடிப்புற பேசும் ஆற்றல். இத்தனை நாள் இவை எல்லாம் எங்கிருந்ததோ என்று வியக்க வைக்கும் மாறுதல்கள். 

கையில் சிலம்போடு பாண்டியன் அரண்மனை வாசல் அடைகிறாள். அவள் கோவம் வாயில் காப்போனிடம் இருந்து வெடிக்கிறது. 

" வாயில் காப்போனே, இந்த மாதிரி முறை தப்பிய மன்னனிடம் வேலை செய்யும் வாயில் காப்போனே, போய் சொல் உன் மன்னனிடம், பரல் கொண்ட சிலம்பை கையில் ஏந்திய படி, கணவனை இழந்த பெண் வாசலில் நிற்கிறாள் என்று போய் சொல் " 

என்று குமுறுகிறாள். 

பாடல் 

Thursday, November 22, 2012

சிலப்பதிகாரம் - கோவலனின் மன்னிப்பு


சிலப்பதிகாரம் - கோவலனின் மன்னிப்பு 


கண்ணகியை விட்டு விட்டு மாதவி பின் போனான் கோவலன். பொருள் எல்லாம் இழந்தான். பின் கண்ணகியிடம் வந்தான். புது வாழ்க்கை தொடங்க வேண்டி இருவரும் மதுரை நோக்கிச் செல்கிறார்கள்.

போகும் வழியில் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் ?

கண்ணகி என்ன நினைப்பாள் ? கோவலன் என்ன நினைப்பான் ?

கோவலன் கண்ணகியிடம் மன்னிப்பு கேட்டானா ? கண்ணகி அதற்க்கு என்ன மறுமொழி கூறினாள்? 

கோவலன் தவறு என்று உணர்ந்தான். "உனக்கு சிறுமை செய்தேன்" என்று ஒரே ஒரு வாக்கியம் சொல்கிறான். "மன்னித்துக் கொள்" என்று சொல்லவில்லை. வருந்துகிறேன் என்று சொல்லவில்லை. 

"நான் வா என்று சொன்னவுடன் வந்து விட்டாய், நீ தான் எவ்வளவு நல்லவள்" என்ற தொனியில் சொல்கிறான். 

வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென

பொருள் 

வறு மொழியாளரோடு = வறுமையான  மொழி பேசுபவர்கள், அர்த்தம் இல்லாமல் பேசுபவர்கள் 

வம்ப பரத்தரோடும் = வம்பு அளக்கும் பரத்தை தன்மை உள்ளவர்களிடமும்

குறுமொழி கோட்டி = சிறு சொற்கள் பேசி

நெடு நகைபுக்கு = பெரிய நகைப்புக்கு ஆட்பட்டு 

பொச்சாபுண்டு = மறதியும் கொண்டு 

பொருள் உரையாளர் = பொருள் பொதிந்த சொற்களை பேசும்  

நச்சுக் கொன்றேர்க்கு =நல்ல நெறிகளை கொன்றோர்க்கு

நன்னெறி உண்டோ ? = நல்ல கதி உண்டா (கிடையாது)

இரு முது குரவர் = வயதான பெற்றோர் (குரவர் = தலைவன், இங்கு பெற்றோர்)

ஏவலும் பிழைத்தேன் = அவர்கள் சொன்ன கட்டளைகளையும் தவறி 
நடந்தேன் (பெற்றோர் சொற்படி கேட்கவில்லை) 

சிறு முதுக் குறைவிக்கு = சிறு வயதான உனக்கும்

சிறுமையும் செய்தேன் = சிறுமை செய்தேன்

வழுவெனும் பாரேன் = தவறு என்றும் நினைக்கவில்லை 

மாநகர் மருங்கி ஈண்டு = நமது பெரிய நகரத்தை விட்டு நீங்கி

எழுக என எழுந்தாய் = என்னோடு வா என்று சொன்னவுடன் வந்து விட்டாய்

என் செய்தனை என  = எனக்காக நீ எவ்வளவு பெரிய காரியம் செய்தாய் 

கண்ணகி கோபக்காரிதான். மன்னனையே, சட்டையை பிடித்து உலுக்கி நீதி கேட்டவள் தான், தன் கோபத்தால் மதுரை மாநகரையே எரித்தவள் தான், துக்கமும், கோபமும் தாங்காமல் தன் மார்பில் ஒன்றை திருகி எறிந்தவள் தான்...

இருந்தாலும் கோவலனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. 

ஒரு வேளை கோவலன் மேல் இருந்த கோபத்தையெல்லாம் பாண்டியனிடமும், மதுரையிடமும் காட்டினாளோ  ? சேர்த்து வைத்திருந்த கோபம் எல்லாம் பொங்கி வந்து விட்டதோ ?


ஆத்திசூடி - ஐயம் இட்டு உண்


ஆத்திசூடி - ஐயம் இட்டு உண்


தானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது பற்றி தமிழ் இலக்கியம் குறிப்பாக பக்தி இலக்கியம் பக்கம் பக்கமாக சொல்கிறது. 

உடைந்த அரிசிக்கு நொய் அரிசி என்று பெயர். சமைக்க ருசியாக இருக்காது. வேண்டுமானால் கஞ்சி வைக்கலாம். சட்டென்று குழைந்து விடும். அந்த நொய் அரிசியில் ஒரு துணுக்காவது ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள் என்று கெஞ்சுகிறார் அருணகிரிநாதர். "நொயிர் பிள அளவேனும் பகிர்மின்கள் " என்று கூறுகிறார். 

(முழுப் பாடல் கீழே 

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

)

தானம் பற்றி சொல்லவந்த வள்ளுவர் 

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்த வற்றுள் எல்லாம் தலை 

என்றார்.

அதாவது நமக்கு கிடைத்த உணவை பகிர்ந்து உண்டு வாழுதல் சிறந்த அறம் என்றார். 

ஔவையார் அதை இன்னும் சுருக்கமாக சொல்ல vizhaikiraar. 

ஏழு  வார்த்தை  எல்லாம் அனாவசியம்  ... மூணே மூன்று வார்த்தையில் சொல்கிறார்.