Wednesday, December 12, 2012

இராமாயணம் - உபசரிக்கும் பண்பாடு


இராமாயணம் - உபசரிக்கும் பண்பாடு


நாம சில பேரோட வீட்டுக்குப் போனால் சாப்பாடு போட்டே கொன்று விடுவார்கள். இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க, இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க என்று அளவுக்கு அதிகமாக நம்மை உண்ண வைத்து ஒரு வழி பண்ணி விடுவார்கள்."எனக்கு சர்க்கரை வியாதி ... இனிப்பு ஆகாது" என்று சொன்னாலும் கேட்பது இல்லை. "ஒரு நாள் சாப்பிட்டால் ஒண்ணும் பண்ணாது...வேணும்னா ஒரு மாத்திரை அதிகமா போட்டுகோங்க " என்று உடம்புக்கு ஒத்துக் கொள்ளாததையும் உண்ண வைத்து விடுவார்கள். உண்ட பின் சிரமப் படுவது நாம் தான். 

குகன் மூலம் கம்பன் உபசரிக்கும் பண்பாடை காட்டுகிறான்....

Tuesday, December 11, 2012

இராமாயணம் - தாயினும் நல்லான் - ஏன் ?


இராமாயணம் - தாயினும் நல்லான் - ஏன் ?

இராமனை பார்க்க கானகத்திற்கு அவனுடைய தாய்மார்கள் வந்தார்கள், பரதன் வந்தான், முனிவர்கள் வந்தார்கள், அமைச்சர்கள் வந்தார்கள்....ஆனால் யாரும் இராமன் காட்டில் சாப்பாடுக்கு என்ன பண்ணுவான் என்று நினைத்து அவனுக்கு உணவு கொண்டு வரவில்லை. கொண்டு வந்ததாக கம்பன் எங்கும் கூறவில்லை. அவர்களுக்கு எப்படியாவது இராமனை மீண்டும் நாட்டுக்கு அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அவன் நேரத்திற்கு சாப்பிட்டானா என்ற கவலை இருக்க வில்லை. 

குகன் ஒருவன் தான், இராமனுக்கு பசிக்குமே என்று உணவு கொண்டு வந்தான். 

குழந்தையின் பசி அறிந்து உணவு ஊட்டும் தாய் போல, இராமனுக்கு பசிக்குமே என்று உணவு கொண்டு வந்தான்.....

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று மாணிக்க வாசகர் இறைவனைக் கூறினார். 

தாயை விட நம்மேல் அன்பு கொண்டவன் இறைவன் என்பது மணிவாசகர் வாக்கு.

தாயை விட நல்லவன் என்று குகனை இறைவனின் அளவுக்கு உயர்த்துகிறார் கம்பர். 

பாடல் 

Monday, December 10, 2012

இராமாயணம் - தாயின் நல்லான்

இராமாயணம் - தாயின் நல்லான் 


குகனைப் பற்றி ஒரு முழு புத்தகமே எழுதலாம். கம்பன் இழைத்து இழைத்து பண்ணுகிறான் இந்த பாத்திரத்தை. படிக்க படிக்க திகட்டாத பாத்திரப் படைப்பு. 

எந்த பாத்திரத்துக்கும் தராத ஒரு அடை மொழியையை குகனுக்குத் தருகிறான் கம்பன் "தாயின் நல்லான்". கண்ணை இமை போல் பார்த்துக் கொண்ட இலக்குவனுக்கு கூட அந்த அடை மொழியை கம்பன் தரவில்லை. பரதனுக்கு தரவில்லை. குகனுக்கு மட்டும் தந்தான் அந்த அடை மொழியையை. 

இலக்குவனும், பரதனும் இராமனின் உடன் பிறந்தவர்கள். அவர்கள் இராமன் மேல் அன்பு செலுத்தியதில் பெரிய ஆச்சரியம் இல்லை. முன்ன பின்ன அறியாத குகனின் அன்பு அளவிட முடியாதது. 

முதலில் பாடலைப் பார்ப்போம். 

குகன் இராமன் கங்கை கரையை அடைந்ததை அறிந்து அவனை காண வந்து இருக்கிறான், தன் பரிவாரங்களுடன்.....

இலக்குவன் அவனை வெளியில் நிறுத்தி விட்டு இராமனிடம் குகனின் வருகையையை அறிவிக்கச் செல்கிறான்...

பாடல்

Saturday, December 8, 2012

இராமாயணம் - தையல் கடலும், தைலக் கடலும்


இராமாயணம் - தையல் கடலும், தைலக் கடலும்


தசரதன் இறந்து போனான். அயோத்தியில் அவன் மகன்கள் யாரும் இல்லை. இராமனும் இலக்குவனும் கானகம் போய் விட்டார்கள். பரதனும் சத்ருக்கனனும் கேகய நாட்டில் இருந்தார்கள். பெரிய சக்கரவர்த்தி தான்...என்ன செய்ய விதி...சாகும் போது பிள்ளைகள் பக்கத்தில் இல்லை. 

பரதனும் சத்ருக்கனனும் வரும் வரை தசரதனின் உடலை பாதுகாத்து வைக்க வேண்டும். அவன் உடலை தைலத்தில் போட்டு வைத்தார்கள்...கோசலை, கைகேயி, சுமித்தரை என்ற பட்டத்து இராணிகளோடு அவனுக்கு பதினாயிரம் மனைவிகள்...தையல்  (பெண்கள் ) என்னும் கடலில் கிடந்தவனை தைலக் கடலில் இட்டு வைத்தார்கள். 

கம்பனின் சொல் விளையாட்டு....

பாடல் 

பட்டினத்தார் - கரை அறியா ஆற்றில்


பட்டினத்தார் - கரை அறியா ஆற்றில்


பூஜை, புனஸ்காரம், மந்திரம், ஜபம், வேண்டுதல் என்று எத்தனையோ காரியங்கள் செய்கிறோம் ? எல்லாம் எதற்க்காக என்று கூடத் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஆற்றில் விழுந்து விட்டோம். அடித்துச் செல்லப் படுகிறோம். இருந்தும் கரை எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்று பட்டினத்தார் நம்மைப் பார்த்து பரிதாபப் படுகிறார். 

இப்படி, எதற்காகச் செய்கிறோம் என்று அறியாமல் அலையும் மக்களைப் பார்த்து பாடுகிறார்....

பாடல்

Friday, December 7, 2012

கொன்றை வேந்தன் - முற்பகல் பிற்பகல்


கொன்றை வேந்தன் - முற்பகல் பிற்பகல் 


நாம் மற்றவர்களுக்கு ஒரு கெடுதலை காலையில் செய்தால், நமக்கு ஒரு கெடுதல் மாலையில் தானே வரும் என்கிறார் வள்ளுவர். 

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

பிறர்க்கு = மற்றவர்களுக்கு 
இன்னா = கெடுதல்
முற்பகல் = காலையில்
செய்யின் = (நாம் வலிய சென்று) செய்தால்
தமக்கு = நமக்கு 
இன்னா = கெடுதல்
பிற்பகல் = மாலையில் 
தாமே வரும் = யாரும் செய்யாவிட்டாலும், தானாகவே வந்து சேரும். 

கெடுதல் செய்தால் கெடுதல் வரும், சரி. 

நல்லது செய்தால், நல்லது வருமா ? ஏன் வள்ளுவர் கெடுதலை மட்டும் சொல்கிறார் ? நல்லது செய்தால் நல்லது வரும் என்றும் சொல்லி இருந்தால் நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம் அல்லவா ? சொல்லாமல் விட்டு விட்டார். திருக்குறளை படிப்பவன் என்ன நினைப்பான். கெட்டது செய்தால் கெட்டது வரும். சரி கெட்டது செய்ய வேண்டாம். நன்மை செய்தால் நன்மை வருமா என்று தெரியவில்லை. எதுக்கு கஷ்டப் பட்டு நன்மை செய்ய வேண்டும் என்றும் ஒன்றும் செய்யாமல் இருந்து விடலாம் அல்லவா ? 

பார்த்தாள் அவ்வை, இது சரிப் படாது. நன்மைக்கு நன்மை விளையும் என்று சேர்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். 

அப்படி சொல்லாவிட்டால் நாட்டில் ஒருத்தனும் நல்லது செய்யமாட்டான் என்று நினைத்தாள் .

ஏற்கனவே ஏழு வார்த்தைகள் ஆகி விட்டது. இதை சேர்க்கவும் வேண்டும், மொத்த வார்த்தகைளை குறைத்து நாலே நாலு வார்த்தையில் சொல்லவும் வேண்டும்...எப்படி ?

சொல்கிறாள் பாருங்கள்....

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

கணித சமன்பாடு போல் எழுதி விடலாம்

அவ்வளவு தான். 

நீங்கள் எதை செய்கிறீர்களோ அது உங்களுக்கு வந்து சேரும். அதுவும் உடனுக்குடன். 

செய்யின் என்றால் செயல்பாடு என்று பொருள். முனைந்து செய்ய வேண்டும்.

விளைதல் தானாக நிகழும். விதை போட்டு விட்டால் போதும். 

எந்த விதை போடுகிறோமோ, அந்த செடி விளையும். 

எவ்வளவு வார்த்தையில் நுட்பம்.... 

விதை ஒன்று போடுகிறோம். ஒரே ஒரு விதை மட்டுமா விளைந்து வருகிறது ? ஒரு ஆல  மர  விதையில் இருந்து ஒரு பெரிய ஆல  மரமே வருகிறது...கிளை, இல்லை, காய், கனி, அந்த கனியில்  ஆயிரம் ஆயிரம் விதைகள் வருகின்றன...எனவே நாம் நன்மை செய்தால் நன்மை ஒன்றுக்கு பத்தாக விளையும். தீமைக்கும் அதுவே விதி.


பட்டினத்தார் - பகலை இரவென்பார்


பட்டினத்தார் - பகலை இரவென்பார் 


படித்தால் புரிகிறது. ஆனால் உணர முடிவதில்லை. 

வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், தேவாரம், திருவாசகம், பிரபந்தம் என்று பெரிது பெரிதாய் புத்தகங்கள். கக்கத்தில் வைத்து தூக்கிக் கொண்டு போகலாம். மனம் அதை வாங்கி உண்மையை அறிந்து கொள்ள முடிவதில்லை. 

அது மட்டும் அல்ல, ஒரு சில புத்தகங்களை படித்துவிட்டு ஏதோ எல்லா உண்மையும் அறிந்தவர்கள் போல் அடித்துப் பேசும் ஆட்களைப் பார்த்து சொல்கிறார் பட்டினத்துப் பிள்ளை...பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியாத பாதகர்கள் என்று.....

அந்த திருவருட் பிரகாசம் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறது...பார்த்தால்தானே?...கவனம் எல்லாம் புத்தகத்திற்குள்.... 

பாடல்