Friday, December 28, 2012

நாலடியார் - பேச்சா ? குரைப்பா?


நாலடியார் - பேச்சா ? குரைப்பா?


கல்வி அறிவை பெறுவது என்பது நம் கலாசாரமாய் இருந்திருக்கிறது. நம் இலக்கியங்களில் எவ்வளவு தூரம் பின்னோக்கி போனாலும், கல்வி கற்றவர்கள் நம் நாட்டில் மிகவும் போற்றப் பட்டு இருக்கிறார்கள். செல்வம், படை பலம் எல்லாவற்றையும் விட கல்வி மிகவும் போற்றப் பட்டு இருக்கிறது. அது இன்றும் தொடர்வது இதம் அளிக்கும் செய்தி. 

இங்கே நாலடியார் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 

படிக்காத முட்டாள், படித்தவர்கள் மத்தியில் இருப்பதை பார்க்கிறோம். அரசியல் வாதிகள், பணம் படைத்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கினால், பணத்தினால் கற்றோர் நிறைந்த சபையில் இடம் பிடித்து விடுகிறார்கள். அப்படி இடம் பிடித்தாலும் பரவாயில்லை, எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி பேசவும் தொடங்கி விடுவார்கள். இது எப்படி இருக்கிறந்து என்றால், பெரிய சபையில் நாய் நுழைந்த மாதிரி. அது நுழைந்ததே தப்பு. சரி, நுழைந்து விட்டது. பேசாமலாவது இருக்கலாம் அல்லவா ? அதால் இருக்க முடியாது. அது பேசவும் ஆரம்பித்தால், அது எப்படி இருக்கும். நாயின் குரைப்பாகத்தான் இருக்கும். அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமா ? இனிமை இருக்குமா ? 

பாடல் 

பட்டினத்தார் - என் பூசையை எவ்வாறு கொள்வாய் ?


பட்டினத்தார் - என் பூசையை எவ்வாறு கொள்வாய் ?


கடவுளை வணங்க வேண்டும் என்று நினைக்கிறார் பட்டினத்தார். கண் ஒரு பக்கம், மனம் ஒரு பக்கம், நாக்கு ஒரு பக்கம் என்று அவரை பல பக்கங்களில் இழுத்துக் கொண்டு அலைகிறது. மனம் ஒரு நிலை பட மாட்டேன் என்கிறது. 

எல்லாம் துறந்த பட்டினத்தாருக்கு அந்த நிலை. 

சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க -  அறியாத
சடகசட மூட மட்டி 

என்று நோகிறார் அருணகிரி. அவன் திருவடி என்ற தாமரையில் மனதை அரை நிமிடம் கூட முறைப் படி தியானம் பண்ண முடியாத சட - கசட - மூட - மட்டி என்று தன்னை தானே நொந்து கொள்கிறார் அவர்.

பட்டினத்தாருக்கும் அருணகிரிக்கும் இந்த நிலை என்றால் நம்ம நிலை என்ன ?

பாடல்

Thursday, December 27, 2012

இராமாயணம் - உரு பெற்ற மன்மதன்


இராமாயணம் - உரு பெற்ற மன்மதன் 


இராமனைப் பார்த்த சூர்பனகை முதலில் அவன் மன்மதனோ என்று சந்தேகப் பட்டாள். "இருக்காது, மன்மதனுக்குத்தான் உருவம் இல்லையே...இவனுக்கு உருவம் இருக்கிறதே, எனவே இவன் மன்மதனாய் இருக்க முடியாது " என்று நினைத்தாள். இருந்தாலும் அவளுக்கு சந்தேகம் தீரவில்லை. ஒரு வேளை அந்த மன்மதன் நல்ல தவம் செய்து, சாப விமோசனம் பெற்று, அதன் மூலம் எல்லோரும் காணும் உருவத்தை பெற்றுவிட்டானோ என்று மீண்டும் நினைக்கிறாள். 

ஜொள்ளு யாரை விட்டு வைத்தது....

பாடல்

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்


பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்


இறைவனிடம் என்ன வேண்டலாம் ? நல்ல உடல் ஆரோக்கியம், கொஞ்சம் சொத்து, பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, வேலை, திருமணம் என்று இப்படி எதையாவது கேட்கலாம். 

இதை எல்லாம் விட்டு விட்டு காரைக்கால் அம்மையார் வேறு என்னனமோ கேட்கிறார்....

இறவாத அன்பு வேண்டுமாம்....எல்லா உயிர்களிடத்தும், எல்லா நேரத்திலும் இறவாத அன்பு வேண்டுமாம். உயிர் உள்ளது வளர்ந்து கொண்டே இருக்கும். இறந்தது வளராது. இறவாத அன்பு நாளும் வளரும். 

அதற்க்கு அடுத்து பிறவாமை வேண்டுமாம்....எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினால் அது நல்ல வினை தானே. அதன் காரணமாக ஒரு வேளை பிறவி வந்து விட்டால் ?

அப்படி பிறந்து விட்டால், இறைவன் திருவடி மறவாமை வேண்டுமாம்...

திருவடியையை மறவாமல் இருந்தால் மட்டும் போதாது, அந்த திருவடியின் கீழ் என்றும் இருக்கும் வரம் வேண்டும் என்று வேண்டினாராம். 

அவர் அப்படி வேண்டியதாக சேக்கிழார் பெருமான் சொல்கிறார், பெரிய புராணத்தில், பன்னிரண்டாம் திருமுறை.

பாடல் 

Wednesday, December 26, 2012

பிரபந்தம் - உன்னை மகனாய் பெற


பிரபந்தம் - உன்னை மகனாய் பெற 


வள்ளுவரை கேட்டால் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி (கடமை), இவனை மகனாகப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று மற்றவர்கள் சொல்லும் படி வாழ்வது என்பார். 

குலசேகர ஆழ்வார் ஒரு படி மேலே போகிறார். 

தசரதன், இராமனைப் பார்த்து கூறுகிறான்....இன்னும் வரும் பிறப்பில் எல்லாம் உன்னையே மகனாகப் பெரும் வரம் வேண்டும் என்று இராமனைப் பார்த்து உருகுகிறான். 

இராமன் நினைத்து இருந்தால், கானகம் போக மாட்டேன் என்று மறுத்து இருக்கலாம். சட்டப்படி அரசு அவனுக்கு வர வேண்டிய ஒன்று. அரசை பரதனுக்குத் தர தசரதனுக்கு ஒரு அதிகாரமும் கிடையாது. அது மனு தர்மமும் அல்ல. இராமன் மறுத்திருந்தால் யாரும் அவனைக் குறை சொல்ல முடியாது. 

தரசதன் சொன்ன வார்த்தை பொய் ஆகி விடக் கூடாதே என்ற ஒரே காரணத்திற்காக இராமன் கானகம் போனான். 

தசரதனுக்குத் தாங்க முடியவில்லை. தான் சொன்ன ஒரு வார்த்தையை மெய்யாக்க கானகம் போகிறானே தன் மகன் என்று அவன் மேல் பாசம் பொங்கி பொங்கி வருகிறது. "அப்பா, உன்னையே ஏழேழ் பிறவிக்கும் மகனாய் பெரும் வரம் வேண்டும் " என்று வேண்டுகிறான். 

பாடல்

இராமாயணம் - யாரோ , இவர் யாரோ ?


இராமாயணம் - யாரோ , இவர் யாரோ ?


சூர்பனகை இராமனைப் பார்க்கிறாள். அவன் அழகில் மயங்குகிறாள். ஜொள்ளு ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. 

யார் இவன் ? இவ்வளவு அழகாக இருக்கிறானே, இவன் மன்மதனோ ? இருக்காது, ஏனென்றால் மன்மதனுக்கு உருவம் கிடையட்து. இவனுக்கு உருவம் இருக்கிறதே. 

ஒரு வேளை இந்திரனை இருக்குமோ ? இல்லையே, இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் என்று சொல்வார்களே...இவனூக்கு அப்படி இல்லையே....

இல்லைனா அந்த சிவனை இருக்குமோ ? ம்ம்ஹும்....சிவனுக்கு மூணு கண்ணு இருக்குமே...இவனுக்கு இரண்டு தானே இருக்கு...

பிரம்மனை உந்தியில் உண்டாக்கிய திருமாலாய் இருக்குமோ...இல்லையே அவனுக்கு நான்கு கைகள் உண்டே...இவனுக்கு இரண்டு கைகள் தானே இருக்கு...

யாராய் இருக்கும் ?

பாடல் 

Tuesday, December 25, 2012

பெரிய புராணம் - உலகு எல்லாம் உணர்ந்து


பெரிய புராணம் - உலகு எல்லாம் உணர்ந்து 


பெரிய புராணத்தில் முதல் செய்யுள்.

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.


உலகில் உள்ளவர்கள் எல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன். நிலவு திகழும் கங்கை நீர் கொண்ட சடையை கொண்டவன். அளவு கடந்த ஜோதி வடிவானவன். அம்பலத்தில் ஆடுவான். சிலம்பு திகழும் மலர் போன்ற திருவடியை வணங்குவோம்.

சரி, இந்த பாட்டில் என்ன சிறப்பு ?