Wednesday, January 23, 2013

தேவாரம் - தாமரையின் கீழ் ஒளிந்து கொள்ளும் மீன்


தேவாரம் - தாமரையின் கீழ் ஒளிந்து கொள்ளும் மீன் 


திரு ஞானசம்பந்தர் மிக இளம் வயதிலேயே இறைவன் அருள் பெற்று பாடத் தொடங்கினார் 

திருவெண்காடு !

ஒரு சிறிய கிராமம். அமைதியான ஊர். ஊரின் நடுவே ஒரு கோவில். கோவிலுக்கு அருகே குளம். சில்லென்ற நீர் நிறைந்த குளம். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தாமரை மலர்கள் இருக்கின்றன. தாமரையோடு சேர்ந்து தாழை மலர்களும் அந்த குளத்தின் பக்கத்தில் இருக்கின்றன.  சூரிய ஒளி பட்டு அந்த தாழை மலர்கள் மெல்ல விரிகின்றன. அவை அப்படியே காற்றில் அசைகின்றன.  அப்படி அசையும் போது, அவற்றின்  நிழல் குளத்தில் விழுகிறது. அந்த குளத்தில் உள்ள மீன்கள் அங்கும் இங்கும் அலைகின்றன. 

இவ்வளவு தாங்க இருக்கு. நீங்களும் நானும் பார்த்தால், ஆஹா என்ன ஒரு இனிமையான இடம் என்று இரசித்து விட்டும் வருவோம்.

ஞான சம்பந்தர், இளம் ஞானி. பார்க்கிறார். 

அவருக்கு என்ன தோன்றுகிறது பாருங்கள்.  

மடல் விரியும் தாழை மலரின் நிழலை அந்த குளத்தில் உள்ள மீன்கள் பார்க்கின்றன. அந்த மீன்களுக்கு அந்த நிழல் ஏதோ அவைகளைப் பிடிக்க வரும் குருகு (ஒரு வித பறவை) போல் இருக்கிறது. அந்த குருகுக்கு பயந்து, அந்த மீன்கள்  தாமரை மலரின் அடியில் ஒளிந்து கொள்கின்றன. இதைப் பார்த்து அங்குள்ள கடல் முத்துகள் சிரிக்கின்றன. அப்படிப் பட்ட ஊர் திருவெண்காடு. 
 

பாடல் 
  
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.

பொருள்

Tuesday, January 22, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அடியார்க்கு அடியார்


இராமானுஜர் நூற்றந்தாதி - அடியார்க்கு அடியார் 


இந்த மனம் இருக்கிறதே, இது ஒரு விசித்தரமான ஒன்று. 

நம்முடைய மனம் தான். இருந்தும் நாம் சொல்வதை கேட்பது இல்லை. 

பார்க்காதே என்றால் பார்க்கும். தொடாதே என்றால் தொடும். இருப்பதை விட்டு விட்டு இல்லாததற்குப் பறக்கும். 

மனதை அடக்க வேண்டும் என்று நினைத்தால், அது நம்மை அடக்க முயற்சி செய்கிறது. 

மனம் நம்மை நல்ல வழியிலும் இழுத்துச் செல்லும், கெட்ட வழியிலும் இழுத்துச் செல்லலாம்.

மனதை வலு கட்டாயாமாக ஒரு வழியில் செலுத்தினால், நிச்சயம் அது நம் கட்டுபாட்டை மீறி எதிர் திசையில் ஓடும். 

அதை, அதன் வழியில் போய், கொஞ்சம் கொஞ்சமாக நம் வழிக்கு கொண்டு வர வேண்டும். 
 
அமுதனார் சொல்கிறார், 

என் மனமே, உன்னை நான் அடி பணிகிறேன். கெட்ட பசங்க சவகாசத்தை விடுத்து, இராமானுஜரின் மேல் அன்பு செய்யும் நல்லவர்களின் திருவடிக்கீழ் என்னை கொண்டு சேர்த்ததற்கு 

பாடல் 

பேரியல் நெஞ்சே ! அடிபணிந்தேனுன்னைப், பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப், பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமானுச முனிக்கன்பு செய்யும்
சீரியபேறுடையார், அடிக்கீழென்னைச் சேர்த்ததற்கே.

பொருள் 

Monday, January 21, 2013

அபிராமி அந்தாதி - மெல் அடியார், அடியார்


அபிராமி அந்தாதி - மெல் அடியார், அடியார்


பெற்ற பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்கா விட்டால் நாம் அவர்களை வெறுத்து ஒதுக்கி விடுவது இல்லை. எப்படியாவது அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று தான் நாம் முயற்சி செய்வோம். மானிடர்களான நமக்கே நம் குழந்தைகள் மேல் இவ்வளவு பாசம் இருந்தால், அபிராமிக்கு அவளுடைய பிள்ளைகளான நம் மீது எவ்வளவு பாசம் இருக்கும் ?

அவள் தான் எல்லாம் என்று தெரியும், அவளைத்தான் அடைய வேண்டும் என்று தெரிந்து இருந்தாலும், அவள் மேல் அன்பு செலுத்துவதை விட்டு விட்டு வேறு எதை எல்லாமோ செய்து கொண்டு இருக்கிறோம். இருந்தாலும், அவள் நம் மேல் கோபப்படாமல், நம் மேல் அன்பு செலுத்துகிறாள். அவளின் கருணைக்கு எல்லை ஏது ?


பாடல் 

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே 
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும் 
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும் 
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.

பொருள் 

வில்லி பாரதம் - கங்கா தேவியின் அழகு


வில்லி பாரதம் - கங்கா தேவியின் அழகு


தன்னை மணந்து கொள்ளும்படி கங்கையிடம் சந்துனு மகாராஜா வேண்டினான். அதற்க்கு கங்கை என்ன சொன்னாள்?

முதலில் அவளுக்கு வெட்கம் வந்தது. வெட்கத்தால் அவன் முகம் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். தலை கவிழ்ந்தாள் என்றால் என்னமோ லேசாக தலையயை சாய்த்தாள் என்று பொருள் அல்ல. அவள் நாடி வளைந்து உடலை தொடுகிறது.  ஆபரணங்கள்  பூண்ட அவளது மார்பகத்தை அவளே பார்க்கும் அளவுக்கு  தலை கவிழ்ந்தாள். அப்படி அவள் வெட்கப் பட்ட போது, அவளின் அழகு இன்னும் கூடியது.. வெட்கப் படும் போது பெண்கள் மேலும் அழகாகத் தோன்றுவது இயற்கை. அவள் உடல் மின்னியது. அவள் உடல் மேலும் மெருகேறியது.  அந்த நிலவே அவள் மேனியின் ஒளியைப் பெற்று பிரகாசித்ததை போல இருந்தது. 

வில்லி புத்துராரின் பாடல் 

நாணினளாமென நதிமடந்தையும்
பூணுறுமுலைமுகம் பொருந்தநோக்கினள்
சேணுறுதனதுமெய்த் தேசுபோனகை
வாணிலவெழச்சில வாய்மைகூறுவாள்.

பொருள் 

இராமாயணம் - உயிரின் ருசி


இராமாயணம் - உயிரின் ருசி 


இராவணன் ஆட்சிக்கு வந்தபின், அரக்கர்களின் உயிரை குடிக்க (அது என்ன திரவமா குடிக்க ?) எமன் அஞ்சினான். எங்கே அரக்கர்களின் உயிரை எடுத்தால், இராவணன் தன்  உயிரை எடுத்து விடுவானோ என்று அஞ்சி அரக்கர்களின் உயிரை எடுக்காமல் இருந்தான்.

விச்வாமித்ரனின் தூண்டுதலால், இராமன் தாடகை என்ற அரக்கியை கொன்றான். 

அன்று தான் கூற்றுவனும் நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு அரக்கர்களின் உயிரின் சுவையை சிறிது அறிந்தான்...பின்னால் பெரிய விருந்து அவனுக்கு வரக் காத்து இருக்கிறது....

பாடல்


வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப் போரில்,
கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது அன்றே.

பொருள்

Sunday, January 20, 2013

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்


குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 


அது ஒரு சின்ன கிராமம். ஒரு காலத்தில் இங்கு நிறைய மக்கள் இருந்தார்கள். ஊரில் திருவிழாக்கள், கூத்து என்று அந்த ஊர் எப்போதும் கல கல என்று மகிழ்ச்சியாக இருக்கும். 

ஆனா, இப்ப அப்படி இல்ல. மழை தண்ணி இல்லாததால, வெவசாயம் இல்ல. ஊரு சனம் எல்லாம் ஒவ்வொன்னா ஊரைக் காலி பண்ணிட்டு போயிருச்சு. 

ஊரே வெறிச்சோடி கிடக்கிறது. எல்லா வீடும் காலியா கிடக்கு. வீடு முற்றத்தில் அணில்கள் இறங்கி வந்து விளையாடி கொண்டு இருக்கின்றன. 

அப்படி ஒரு தனிமை போல் இருக்கிறது அவன் இல்லாத தனிமை. 

அணில்லாடும் முன்றில் என்ற குறுந்தொகை பாடல்.....



காதல ருழைய ராகப் பெரிதுவந்து 
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற  
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்  
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்  
புலப்பில் போலப் புல்லென் 
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.  

கொஞ்சம் சீர் பிரிப்போம் 

காதலர் உழையராக பெரிது உவந்து 
சாறு கொள் ஊரிற் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அந்த குடி சீறூர் 
மக்கள் போகிய அணில் ஆடும்  முன்றில் 
புல்லப்பு இல் போல  புல்லென்று 
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே 

பொருள் 

Saturday, January 19, 2013

இராமாயணம் - சிவந்த பாதங்கள்


இராமாயணம் - சிவந்த பாதங்கள்


உங்கள் வீட்டில் இருந்து பேருந்து நிலையமோ, புகை வண்டி நிலையமோ ஒரு ஐந்து  கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.

சாதரணமாக நடந்து போனால் சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம். அவ்வளவா கால் வலிக்காது.

அதையே முக்கால் மணி நேரத்தில் போய் சேர வேண்டும் என்றால், கொஞ்சம் வேகமாக நடக்க வேண்டும். மூச்சு வாங்கும். கொஞ்சம் வியர்க்கும்.

அதையே அரை மணி நேரத்தில் போய் சேர வேண்டும் என்றால், ஓட்டமும் நடையுமாக போக வேண்டும். கால் வலிக்கும். ரொம்ப மூச்சு வாங்கும். வியர்த்து கொட்டும்.

இன்னும் குறைத்து கால் மணி நேரத்தில் போக வேண்டும் என்றால், தலை தெறிக்க ஓட வேண்டும். காலுக்கு இரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும். கால் எல்லாம் சிவந்து விடும். இல்லையா ?

யோசித்துப் பாருங்கள், இந்த பூலோகம் முழுவதையும், அந்த வானுலகையும் இரண்டே அடியில் நடந்து கடப்பதாய் இருந்தால் எவ்வளவு வேகமாக செய்ய வேண்டும். கால் வலிக்காது அந்த புவி அளந்த பெருமாளுக்கு ? வைகுண்ட வாசனுக்கு ?

கம்பரின் பாடலைப் பாருங்கள் ....


"உரியது இந்திரற்கு இது’’ என்று.
   உலகம் ஈந்து போய்.
விரி திரைப் பாற்கடல்
   பள்ளி மேவினான்;
கரியவன். உலகு எலாம்
   கடந்த தாள் இணை
திருமகள் கரம் தொடச்
   சிவந்து காட்டிற்றே!


பொருள்