தேவாரம் - தாமரையின் கீழ் ஒளிந்து கொள்ளும் மீன்
திரு ஞானசம்பந்தர் மிக இளம் வயதிலேயே இறைவன் அருள் பெற்று பாடத் தொடங்கினார்
திருவெண்காடு !
ஒரு சிறிய கிராமம். அமைதியான ஊர். ஊரின் நடுவே ஒரு கோவில். கோவிலுக்கு அருகே குளம். சில்லென்ற நீர் நிறைந்த குளம். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தாமரை மலர்கள் இருக்கின்றன. தாமரையோடு சேர்ந்து தாழை மலர்களும் அந்த குளத்தின் பக்கத்தில் இருக்கின்றன. சூரிய ஒளி பட்டு அந்த தாழை மலர்கள் மெல்ல விரிகின்றன. அவை அப்படியே காற்றில் அசைகின்றன. அப்படி அசையும் போது, அவற்றின் நிழல் குளத்தில் விழுகிறது. அந்த குளத்தில் உள்ள மீன்கள் அங்கும் இங்கும் அலைகின்றன.
இவ்வளவு தாங்க இருக்கு. நீங்களும் நானும் பார்த்தால், ஆஹா என்ன ஒரு இனிமையான இடம் என்று இரசித்து விட்டும் வருவோம்.
ஞான சம்பந்தர், இளம் ஞானி. பார்க்கிறார்.
அவருக்கு என்ன தோன்றுகிறது பாருங்கள்.
மடல் விரியும் தாழை மலரின் நிழலை அந்த குளத்தில் உள்ள மீன்கள் பார்க்கின்றன. அந்த மீன்களுக்கு அந்த நிழல் ஏதோ அவைகளைப் பிடிக்க வரும் குருகு (ஒரு வித பறவை) போல் இருக்கிறது. அந்த குருகுக்கு பயந்து, அந்த மீன்கள் தாமரை மலரின் அடியில் ஒளிந்து கொள்கின்றன. இதைப் பார்த்து அங்குள்ள கடல் முத்துகள் சிரிக்கின்றன. அப்படிப் பட்ட ஊர் திருவெண்காடு.
பாடல்
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.
பொருள்