திருவாசகம் - நெஞ்சம் உருகாதால்
ஒரு புரியாத பொருளை, அறியாத பொருளை புரியவைக்க ஒரு தெரிந்த பொருளை, அறிந்த பொருளை சுட்டிக்காட்டி அது இது போல இருக்கும் என்று சொல்லி விளங்க வைக்கலாம்.
அம்மாவும், சகோதரியும் போய் பெண் பார்த்துவிட்டு வருவார்கள்...பையன் கேட்பான்..."அம்மா, பொண்ணு எப்படி இருக்கானு"
அம்மா: நல்லாத்தான் இருக்கா ?
அவன்: நல்லா இருக்கானா எப்படி இருக்கா ? கருப்பா சிவப்பா ? என்ன நிறம் ?
அம்மா: ம்ம்ம்ம்...வந்து...கறுப்பு நு சொல்ல முடியாது, அதுக்காக சிவப்பும் இல்ல...ஒரு புது நிறம்டா ...
அவன்: உயரமா ? குள்ளமா ?
அம்மா: ரொம்ப உயரமும் இல்ல, குள்ளமும் இல்ல...
அவன்: என்னமா...இப்படி போட்டு படுத்துற....யாரு மாதிரி இருப்பான்னு சொல்லு ?
அம்மா: என்னத்த சொல்றது...நம்ம அக்கம் பக்கத்துல யாரு மாதிரியும் இல்ல....அடுத்த வாரம் நீ தான் பாக்க போறியே...அப்ப பாத்துக்கோ ....
என்று சொல்லிவிட்டு போய் விடுவாள்....
இந்த பொண்ணுக்கே இந்த பாடு என்றால்....இறைவனை எதை காட்டி அவன் இப்படி இருப்பான் என்று சொல்லுவது ?
இப்படி எதை காட்டியும் சுட்ட முடியாமல் இருப்பதைத் தான் "சுட்டறுத்தல்" என்று சொல்லுவார்கள்.
இறைவன் நீங்கள் அறிந்த எது மாதிரியும் இருக்க மாட்டான்....அவனுக்கு உதாரணம் சொல்ல முடியாது...
சுட்டறுத்தல் என்பதன் கீழ் மாணிக்க வாசகர் அருளிய ஒரு பாடல்
பாடல்
வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மேல் ஆகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாம்
கண்ணிணையும் மரமாந்தீ வினையி னேற்கே.
பொருள்