இராமாயணம் - முறிந்த வில்கள்
ஜனகன் வில்லை கொண்டு வந்து வைத்து விட்டான். அதை வளைத்து நான் ஏற்றுபவர்களுக்குத் தான் சீதை. விஸ்வாமித்திரன் வில்லைப் பார்த்தான், இராமனைப் பார்த்தான். விச்வாமித்ரனின் மனதில் உள்ளதை எல்லாம் இராமன் அறிந்தான் என்று கம்பன் சொல்லுவான்.
அந்த இடம் தொடங்கி இராமன் வில்லை நான் ஏற்றும்வரை கம்பன் காட்டுவது அற்புதமான ஒரு அதிவேக சினிமா காட்சி போல இருக்கும். காமிரா அங்கும் இங்கும் அலைகிறது. அங்கங்கே உள்ளவர்கள் பேசுவது. அங்குள்ள மக்களின் மன நிலை...அத்தனையும் கம்பன் படம் பிடிக்கிறான்....ஏதோ அவன் அந்த கூட்டத்தில் , அந்த மக்கள் மத்தியில் இருந்து கேட்ட மாதிரியும் பார்த்த மாதிரியும்...அவ்வளவு துல்லியமாக படம் பிடிக்கிறான்.
அதை படிக்கும் போது நீங்களும் அங்கே இருப்பதை போல் உணர்வீர்கள்.
முதல் பாடல்
அரங்கம் நிறைந்து இருக்கிறது. இராமன் எழுந்து நிற்கிறான். அங்குள்ள பெண்கள் எல்லாம் அவன் அழகில் மயங்குகிறார்கள். இராமன் அந்த வில்லை முறிக்கும் முன் மன்மதன் ஆயிரம் வில்லை முறித்தானம் . அங்குள்ள பெண்களின் மேல் மலர் அம்புகளை எறிந்து எறிந்து அவன் விற்கள் முறிந்து கொண்டே இருந்ததாம்.
பாடல்
தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம்.
சேயிழை மங்கையர் சிந்தைதொறு எய்யா.
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான்.
பொருள்