Wednesday, September 17, 2014

இராமாயணம் - இராமன் ஏன் மறைந்து நின்று கொன்றான் ?

இராமாயணம் - இராமன் ஏன் மறைந்து நின்று கொன்றான் ?



மறைந்து இருந்து கொல்வது யுத்த தர்மம் அல்ல என்று இராமனுக்குத் தெரியாதா ? தெரியும்.

வாலியை மறைந்து இருந்துதான் கொல்ல வேண்டுமா ? வேற வழி இல்லையா ?

இருந்தது . ஏவு கூர் வாளி என்று வாலியே சொல்கிறான். இருந்த இடத்தில் இருந்து அம்பை ஏவி இராமனால் வாலியை கொன்றிருக்க முடியும். அப்படித்தான் காகாசுரனை கொன்றான். அம்பு கூட இல்லை, ஒரு புல்லினால்.

பின் அதுவும் காரணம் இல்லை.

ஏன் மறைந்து இருந்து கொன்றான் என்ற கேள்வியை கொஞ்சம் மாத்தி கேட்டுப் பார்ப்போம் ?

மறைந்து இருந்து கொல்லாமல் நேரடியாக வந்து கொன்றிருந்தால் என்ன நடந்திருக்கும் ?

வாலி இறந்திருப்பான். சுக்ரீவன் முடி புனைந்திருப்பான்.  எல்லாம் நடந்திருக்கும்....ஆனால் நமக்கு சில அருமையான பாடங்கள் கிடைத்திருக்காது.

1. நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், ஒரே ஒரு தவறு செய்தாலும் போதும், காலம் காலமாக , யுகம் யுகமாக உலகம் அதை வைத்து நம்மை பழித்து சொல்லிக்  கொண்டே இருக்கும்.  இராமன் எவ்வளவோ நல்லது செய்தான்....நல்ல குணங்களின் உறைவிடமாய் இருந்தான், இருந்தும் ஒரே ஒரு தவறு...இன்றளவும் உலகம் அவனை அந்த ஒரு தவறுக்காக மன்னிக்கத் தயாராக இல்லை. ஆயிரம் தவறு செய்தவன் கூட "அது எப்படி இராமன் மறைந்து இருந்து அம்பு விடலாம் " என்று சட்டையைப் பிடித்து கேட்காத குறையாக கேட்க்கிறான்.  எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், எவ்வளவு நல்லது செய்தாலும், ஒரு தவறு அனைத்தையும் மாற்றி விடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது முதல் பாடம்.

இந்த அறிய பாடத்தை நமக்கு உணர்த்த இராமன் பழி ஏற்று நமக்கு சொல்லித் தந்த பாடம். எனக்கே இந்த கதி என்றால், உனக்கு என்ன ஆகும் என்று நினைத்துப் பார் என்று சொல்லாமல் சொன்ன பாடம்.

வாலியை நேரடியாக கொன்றிருந்தால் இந்த பாடம் கிடைத்திருக்காது.


2. பிறன் பழிக்காக நாண வேண்டும். மற்றவர்களின் தவறுகளை தேடி கண்டு பிடித்து குறை கூறி அதில் நாம் மகிழ்கிறோம். மனைவியின் உணவில் உப்பு கூட, உப்பு குறைச்சல் என்று அவளை குத்தி கிழிக்கிறோம், கணவன் ஏதாவது ஒன்றை மறந்து விட்டால் "உங்களுக்கு என்ன தான் ஞாபகம் இருந்தது இது ஞாபகம் இருக்க " என்று அவனை குறை சொல்கிறோம். பிள்ளைகளை, நண்பர்களை, உடன் வேலை செய்பவர்களை என்று எங்கு போனாலும் பிறரைப் பற்றி குறை சொல்வதிலேயே காலம் போகிறது நமக்கு. அதை விடுத்து, மற்றவர்களின் குறைக்காக நாம் நாணம் கொண்டால், இந்த உலகம் மிக மிக இனிமையாக இருக்கும்.

இது இரண்டாவது பாடம்.

வாலியை நேரடியாக கொன்றிருந்தால் இந்த பாடம் கிடைத்திருக்காது.

3. மன்னிக்கப் பழகுங்கள். சுக்ரீவன் வாலியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். வாலி மன்னிக்கவில்லை. சுக்ரீவனை அடித்து துரத்தி விட்டு, அவன் மனைவியை பிடித்து வைத்துக் கொண்டான்.  கூடப் பிறந்த தமயனிடம் அன்பு பாராட்டவில்லை.

என்பிலதனை வெயில் போலக் காயுமே
அன்பிலதனை அறம்

அன்பு இல்லாதவர்களை அறம் காயும்.

இராமன் நேரடியாக போராடி இருந்தால் வாலி இராமனிடம் அடைக்கலம் கேட்டிருப்பான். இதை இலக்குவன் சொல்கிறான்.  அப்படி அடைக்கலம் கேட்டிருந்தால்  அவன் மன்னிக்கப் பட்டிருப்பான். அவன் தண்டிக்கப் பட்டிருக்க மாட்டான்.

அறம் பிறழ்ந்த வாழ்க்கை தண்டிக்கப் பட்டது.

இராமன் நேராகப் போராடி இருந்தால் இது நடந்திருக்காது.


இது மூன்றாவது பாடம்.

4. இராமனை வழி நடத்தியது எது ? கவந்தனும், சவரியும் சுக்ரீவனோடு உறவு கொள் என்று இராமனை வழி நடத்தினார்கள். ஒருவர் கூட வாலியோடு உறவு கொள் என்று சொல்லவில்லை.  இராமன் சுக்ரீவனை கண்டான், அவன் சோகக் கதையைக் கேட்டான், மனம் நெகிழ்தான், உனக்கு உதவி செய்கிறேன்,  தாரமொடு தலைமையும் தருவேன் என்று உறுதி சொல்கிறான்.

விதி இராமனை நடத்தி செல்கிறது.  அறம் அவனை நடத்திச்  செல்கிறது.

வாலியை  அழித்தது.இராவணனை அழித்தது. மாரீசனை அழித்தது. கும்ப கர்ணனை அழித்தது.

அறம் தவறியவர்களை அறம் தண்டிக்கிறது.

தண்டனை தரும்போது நேரில் நின்று சண்டையிட்டு அந்த தண்டனையை தர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தண்டனை கிடைத்தது. இராமன் ஒரு கருவி.

வாலி சுக்ரீவனை மன்னித்து இருந்தால், சுக்ரீவனின் மனைவியை கவராமல் இருந்திருந்தால் இராமன் வாலியை அழித்து இருக்க மாட்டான். பழி வாலியின் பேரில்.

இது நான்காவது பாடம்.

5. நம் துன்பங்களுக்கு நாம் தான் காரணம். நமக்கு துன்பம் வரும்போது எல்லாம்  நாம் உலகில் உள்ள அனைவரையும் குறை சொல்கிறோம். ஆழ்ந்து சிந்தித்தால் நம் வலிகளுக்கும், துன்பங்களுக்கும் நாமே காரணம் என்று அறிவோம்.


முதலில் தான் இவ்வாறு மறைந்து இருந்து கொல்லப் பட்டதற்கு காரணம் இராமனின் அதர்ம யுத்தம் என்றே வாலி கருதினான். பின், அவன் உணர்ந்து கொண்டான்.

"ஆவி போம் வேளை வந்து அறிவு அருளினாய் " என்று அவனே இராமனிடம் கூறுகிறான்.

ஒரு வேளை இராமன் நேரடியாக போர் செய்து வாலியைக் கொன்றிருந்தால் வாலி இதை உணர்ந்திருக்க மாட்டான். ஏதோ, அவன் வீரம் இராமனின் வீரத்தை விட   குறைந்தது. அதனால் இராமன் வென்று விட்டான் என்று தான் நினைத்திருப்பான். தான் செய்த தவறு அவனுக்கு தெரிந்திருக்காது. இப்போது அவன் சிந்திக்கிறான். ஏன் இராமன் இப்படிச் செய்தான் என்று. தனக்கு அளிக்கப் பட்ட தண்டனை என்று அறிகிறான். எதற்கு தண்டனை என்று சிந்திக்கிறான்....அறிவு பிறக்கிறது.

இராமன் நேரடியாக யுத்தம் செய்திருந்தால் இந்த பாடம் கிடைத்திருக்காது.



6. கடைசியாக....

ஒரு ஆசிரியர் வேதியல் பாடம் நடத்தி கொண்டிருந்தார். இரண்டு வெவ்வேறு அமிலங்களை  கலந்தால் என்ன விளைவு நிகழும் என்று கலந்து காட்டிக் கொண்டிருந்தார்.

மாணவர்கள் பார்த்து புரிந்து கொண்டார்கள்.

அது இன்னும் ஆழமாக புரிய வேண்டும் என்பதற்காக ஆசிரியர் சொன்னார்


"மாணவர்களே முதல் அமிலத்தையும், இரண்டாவது அமிலத்தையும் சேர்த்தால்  நமக்கு இந்த ஒரு குறிப்பிட்ட வேதியல் பொருள் கிடைக்கும். மாறாக, நீங்கள் முதாலவது அமிலத்தையும், மூன்றாவது அமிலத்தையும்  கலந்தால்   என்ன்ன ஆகும் தெரியுமா, என்று கலந்தார் , படாரென்று வெடித்து சிதறியது. பார்த்தீர்களா, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மாத்தி கலந்தால்  வெடித்து  கண்ணுக்கும், தோலுக்கும் ஆபத்து விளைவிக்கும் " என்று கூறினார்.

இப்போது மாணவர்கள் மிக எச்சரிக்கையாக இருப்பார்கள். அந்த தவறை அவர்கள்  கனவிலும் செய்ய மாட்டார்கள்.


அப்படி கலந்த ஆசிரியருக்கு அது தவறு என்று தெரியாமல் இல்லை. மாணவர்கள்  மனதில் ஆழமாக பதிய வேண்டும் என்பதற்காக அப்படி செய்து  காட்டினார்.

அது போல, இராமன் செய்து காட்டிய பாடம் இது.

தவறு செய்யாதீர்கள் என்று சொன்னால் அவ்வளவாகப் மண்டையில் ஏறாது.

தானே தவறு செய்து, பார்த்தீர்களா, எத்தனை காலம் ஆகிவிட்டது இந்த குறை , பழி என்னை விட்டுப் போகவில்லை. எனவே நீங்களும் இது போல செய்து விடாதீர்கள்  என்று இராமன் கற்றுத் தந்த பாடம்.


பிள்ளையின் உடல் சரியாக வேண்டுமே என்று தாய் மருந்து உண்பதைப் போல, நாம் நல்லபடி வாழ வேண்டுமே என்று இராமன் உண்ட மருந்து இது.

பெரியவர்களின் செயல்களை விமர்சிப்பதை விடுத்து, அதில் என்ன அர்த்தம் இருக்கிறது,அதில் என்ன பாடம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள முயல வேண்டும்.

முயல்வோம்.


சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 3

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 3


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம் 

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து" 

நேசம் என்றால்  அன்பு.    

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது. 

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார். 

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன். 

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர். 

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது. 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர். 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி  
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். 

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது. 

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது. 

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது. 

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது. 

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது. 

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது. 

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்  

"அளவு இல்லாப் பெம்மானே " என்று. 

 (மேலும் சிந்திப்போம் )
===============================பாகம் 3 ==================================

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!


ஓர்தல் என்றால் ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல் என்று பொருள். 


 மலையாளத்தில் "ஓர்மை" என்று ஒரு சொல் உண்டு. நினைவு , ஞாபகம் என்ற  அர்த்தத்தில். 

ஓராதார் உள்ளத்து - ஆராயாமல், சிந்திக்காமல் இருப்பவர்கள் உள்ளத்தில் ஒளிக்கும்  ஒளியானே. 


அது என்ன ஒளிக்கும் ஒளி ?

ஒளியை, வெளிச்சத்தை யாராலும் ஒளித்து வைக்க முடியாது. அது எங்கும்  இருக்கிறது.

இறைவனைப் பற்றி சிந்திக்காதவர்கள் மனதிலும் அவன் இருக்கிறான். ஆனால்  ஒளிந்து இருக்கிறான். வெளிப் படாமல் இருக்கிறான். 

எப்படி என்றால் ....

விறகில் தீயினன் பாலில் படு நெய்போல் 
மறைய நின்றுளான் மாமணிச் சோதியன் 
உறவு கோல் நாட்டி உணர்வு கயிற்றினால் 
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே என்று நாவுக்கரசர் கூறியது போல. 

விறகினுள் தீயைப்  போலவும்,பாலினுள் நெய்யைப்  போலவும், மணியின் உள்ளே உள்ள   ஒளி போலவும் மறைந்து   .நிற்கிறான் .அவன். 

விறகை கடைந்தால் ஜோதி வெளிப் படும். 

தயிரைக் கடைந்தால் நெய் வெளிப்படும் 

மணியை பட்டை தீட்டினால் ஒளி வெளிப்படும் 

அது போல இறை சிந்தனை இருந்தால் இறைவன் வெளிப்படுவான். 

இங்கே சற்று நிறுத்தி ஆழமாக சிந்திப்போம்.


இறை சிந்தனை என்று தான்  கூறுகிறார்.

இறைவன் இல்லை என்று சொல்லும் நாத்திகமும் இறை சிந்தனை பற்றித்தான்.  இல்லை என்று சொல்பவனும் இறைவனை பற்றி சிந்திக்கிறான். இறைவன் யார்,  அவன் எப்படி இருக்க  முடியும்,நமக்கு ஒரு சாட்சியும் இல்லையே, அவன் இருக்கிறானா, இல்லையா என்று அவனும் சிந்திக்கிறான். அந்த சிந்தனையின் முடிவில் அவனுக்கும் அந்த இறை சக்தி வெளிப் படலாம். எனவே தான் சைவ சிந்தாந்தம் நாத்திகத்தையும் தன்னுள் கொண்டு இருக்கிறது.  இறைவன் இல்லை என்று சொல்லுபவனும் சைவ மதத்தைச் சார்ந்தவன் தான்.   

"நம்பாதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே" என்று மணிவாசகர் சொல்லவில்லை. 

நம்பச் சொல்லவில்லை. சிந்திக்கச் சொல்கிறார். 

அந்த இறை சக்தி எல்லோர் மனத்திலும் இருக்கிறது. சிலரிடம் மறைந்து கிடக்கிறது, சிலரிடம் வெளிப்பட்டு இருக்கிறது. 

ஓராதார் உள்ளத்தும் அது இருக்கிறது. ஆனால் மறைந்து இருக்கிறது. 

ஒரு அரிக்கேன் விளக்கு இருக்கிறது. உள்ளே சுடர் எரிகிறது. வெளியே உள்ள கண்ணாடில்   கரி படிந்து  இருக்கிறது. வெளிச்சம் வெளியே  தெரியாது.

கரியை சுத்தமாக துடைத்தால் வெளிச்சம் பளீரென்று வெளிப்படும். 

அந்த கரி தான்  ஆணவம்,கன்மம் மாயை என்ற அழுக்குகள் (மும்மலம்) என்று சொல்லுவார்கள். 

அழுக்கை நீக்கினால் ஜோதி சுடர் விட்டு வெளிச்சம் தரும். 

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 


இப்படி ஒவ்வொரு வரிக்குள்ளும் மிக மிக ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டது சிவ புராணம். 

வாசித்துக் கொண்டே போவதற்கு அல்ல. நீண்ட சிந்தனைக்கு உகந்தது சிவ புராணம். 

மேலும் சிந்திப்போம் 




Tuesday, September 16, 2014

இராமாயணம் - இராமன் முடி சூடுதல்

இராமாயணம் - இராமன் முடி சூடுதல் 


எல்லோரும் அறிந்த பாடல்தான்.

அரியணை அனுமன் தாங்க,
    அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
    இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
    வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுேளார் கொடுக்க வாங்கி
    வசிட்டனே புனைந்தான் மௌலி.

பொருள்

அரியணை அனுமன் தாங்க, = அரியணையை அனுமன் தாங்கிக் கொள்ள

அங்கதன் உடைவாள் ஏந்த, = அங்கதன் உடை வாளை ஏந்த

பரதன் வெண்குடை கவிக்க, = பரதன் வெண் கொற்றக் குடை பிடிக்க

இருவரும் கவரி வீச = இலக்குவனும், சத்ருக்னனும் கவரி வீச

விரைசெறி குழலி ஓங்க  = மலர் சூடிய குழலைக் கொண்ட அவள் பெருமிதம் கொள்ள

வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் = திரு வெண்ணையூர் சடையனின்

மரபுேளார் கொடுக்க வாங்கி = முன்னோர் கொடுக்க , அதை வாங்கி

வசிட்டனே புனைந்தான் மௌலி. = வசிட்டன் முடி சூட்டினான்

மேலோட்டமான பொருள் இதுதான்.


சற்று ஆழமாக சிந்திப்போம் 

1. வசிட்டனே புனைந்தான் மௌலி - அது என்ன வசிட்டனே என்று ஒரு ஏகாரம் ? வசிட்டன் புனைந்தான் மௌலி என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ? முதலில் பதினான்கு   ஆண்டுகளுக்கு முன்பும் வசிட்டன் தான் முடி சூட்டுவதாய் இருந்தது.  அன்று நடக்கவில்லை. இன்றும் அவனே புனைந்தான் என்று  ஒரு அழுத்தம். 


2. அது எல்லாம் சரி, யார் முடி புனைந்தார்கள் ? கம்பர் அதை சொல்ல வில்லை.  இராமனுக்கு முடி சூட்டினான் என்று சொல்லி இருக்கலாம். சொல்ல வில்லை.  முடி சூட்டிக் கொண்டது அறம் , வாய்மை, நேர்மை, ஒழுக்கம்...தனி மனிதனுக்கு  சூட்டப் பட்ட முடி அல்ல அது என்பதால் முடி யாருக்கு சூட்டினான்  என்பதை விட்டு விடுகிறான் கம்பன். 


3. எடுத்த எடுப்பில் அரியணை அனுமன் தாங்க என்று அனுமனை சிறப்பிக்கிறான் ? முதலில் பரதனை சொல்லி இருக்கலாம், அல்லது பதினான்கு ஆண்டுகள்  கூடவே வந்து கைங்கர்யம் செய்த   இலக்குவனை  சொல்லி  இருக்கலாம், இல்லை சீதையாவது சொல்லி இருக்கலாம். அனுமனை  முன்னிறுத்த காரணம் என்ன ? அனுமன், இராமனை காத்தான்,  தற்கொலை  செய்ய இருந்த சீதையின் உயிரை காத்தான், நந்தி கிராமத்தில் உயிர் விட  இருந்த பரதனின் உயிரை காத்தான், போரில் அடிபட்டு உயிர் போகும் தருவாயில்   இருந்த இலக்குவநனின் உயிரைக் காத்தான். இப்படி எல்லோர் உயிரையும்  காத்த அனுமனுக்கு  முதல் இடம் தருகிறான் கம்பன். 


4. அரசனுக்கு மூன்று அடையாளங்கள் - செங்கோல், வெண் கொற்றக் குடை, உடை வாள் . உடை வாள் என்பது அரசின் சின்னம். குறியீடாக அங்கதனுக்கு அரசை  கொடுத்தேன் என்று சொல்லாமல் சொன்ன வாக்கு அது. "அங்கதன் உடை வாள் ஏந்த "

5. அனுமனும், அங்கதனும் இராமனுக்கு காட்டில் கிடைத்த உறவுகள்.  கானகம்  போனதிலும் நன்மை இரண்டு நல்லவர்களின் அறிமுகம் கிடைத்தது. 


விவேக சிந்தாமணி - தேவை இல்லாதது

விவேக சிந்தாமணி - தேவை இல்லாதது 


எல்லோரும் ஒரு கால கட்டத்தில் தேவை இல்லாதவர்களாகப் போய் விடுகிறோம்.

நம்மிடம் இருந்து ஏதாவது பலன் கிடைக்கும் வரை தான் உலகம் நம்மை வேண்டும்,  விரும்பும்.அதற்குப் பின், தூக்கிப் போட்டு  விடும்.

எப்படி எல்லாம் என் பின்னால் சுற்றினார்கள், இப்போது ஒரு நாதியும் இல்லை எனக்கு என்று சொல்லும் ஒரு காலம் எல்லோருக்கும் வரும். அப்போது வருத்தப் படக் கூடாது என்று இப்போதே நம்மை தயார் படுத்துகிறது விவேக சிந்தாமணி.

பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி விட்டால் பெற்றோரின் சொல்லை கேட்க  .மாட்டார்கள்.  வயதானால் மனைவி கணவனை மதிக்க மாட்டாள். எல்லா வித்தையும் கற்ற பின்னால் சீடன் ஆசிரியனை மதிக்க  மாட்டான். நோய் குணமாகி விட்டால் நோயாளி மருத்துவனை மதிக்க மாட்டான்.

இது உலக இயற்கை. உலகம்  சுயநலமானது. நம்மால் உபயோகம் இருக்கும் வரைதான் உலகம் நம்மை  மதிக்கும். அது தகப்பனாக இருந்தாலும்  சரி, கணவனாக இருந்தாலும் சரி, ஆசிரியனாக இருந்தாலும் சரி, மருத்துவனாக இருந்தாலும் சரி....எல்லோருக்கும் இதே கதிதான்.

இவர்கள் தான் உலகம் என்று உடல் பொருள் ஆவி அனைத்தையும்   அவர்களுக்காக   செலவிடுவது உசிதமா ?

பாடல்


பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான் 
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள் 
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான் 
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்

(பண்டிதர் , இங்கே மருத்துவர் )

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 2

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 2


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம் 

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து" 

நேசம் என்றால்  அன்பு.    

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது. 

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார். 

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன். 

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர். 

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது. 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர். 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி  
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். 

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது. 

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது. 

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது. 

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது. 

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது. 

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது. 

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்  

"அளவு இல்லாப் பெம்மானே " என்று. 

 (மேலும் சிந்திப்போம் )


Monday, September 15, 2014

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 1

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 1 


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்

சிந்திப்போம் 

விவேக சிந்தாமணி - செவிக்கு கண் உரைத்த செய்தி

விவேக சிந்தாமணி - செவிக்கு கண் உரைத்த செய்தி 


(கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும். மற்றவர்கள் தயவு செய்து இதைப் படிக்க  வேண்டாம். பெண்ணின் உடல் அழகை வர்ணிக்கும் பாடல். கொஞ்சம் அதிகப்  படியாகவே. வெளிப்படையான வர்ணனைகளில் முகம் சுளிப்பவர்கள் படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்)



அவளின் தொப்புளில் இருந்து கீழே செல்லும் வழியில் மெல்லிய கரிய முடி, கீழே செல்லச் செல்ல அடர்ந்து கருப்பாக உள்ளது. அது ஏதோ கரிய நாகம் படம் எடுத்து ஆடுவது போல இருக்கிறது. அந்த நாகம் கீழே இருந்து அவளின் முகத்தை பார்த்தது. அந்த முகம் நிலவு போல இருந்தது. நிலவைக் கண்டு நாகம் படம் எடுத்து ஆடியது.

ஆனால், அந்த நிலவை இரண்டு மலைக் குன்றுகள் மறைத்தன. உடனே அந்த கரு நாகம், அந்த தடையை அவளுடைய கண்களிடம் சொல்லியது. அந்த கண் நீண்டு காதுவரைப் போய் அந்த செய்தியை காதிடம் சொன்னது.

பாடல்

உந்தியின் சுழியின் கீழ் சேருரோமமாம் கரியநாகம் 
சந்திரன் எனவே எண்ணித் தையலாள் முகத்தை நோக்க 
மந்திர கிரிகள் விம்மி வழிமறித் திடுதல் கண்டு 
சிந்துரக் கயற் கண்ணோடிச் செவிதனக்கு உரைத்ததம்மா

பொருள்

உந்தியின்  = வயிற்றின்

சுழியின் = தொப்புளில்

கீழ் = கீழே

சேருரோமமாம் = சேருகின்ற ரோமங்கள்

கரியநாகம் = கரிய நாகம் படம் விரித்து ஆடுவதைப் போல இருக்கிறது

சந்திரன் எனவே = சந்திரன் என்று

எண்ணித் = நினைத்து

தையலாள் முகத்தை நோக்க = அந்த பெண்ணின் முகத்தை நோக்க

மந்திர கிரிகள் = மந்திரம் போன்ற இரண்டு மலைகள்

விம்மி = விம்மி

வழிமறித் திடுதல் கண்டு = பார்க்கும் வழியை மறைப்பது கண்டு

சிந்துரக்  = சிவந்த

கயற் = மீன் போன்ற

கண்ணோடிச்  = கண்ணோடு சொல்ல. அது

செவிதனக்கு உரைத்ததம்மா = செவியிடம் சொன்னது