Monday, October 19, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இடர் யார் படுவார் ?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - இடர் யார் படுவார் ?


துன்பத்தை சுமக்க யார் தான் விரும்பவார்கள். ஒருவரும் விரும்ப மாட்டார்கள். அப்படியென்றால், துன்பம் வந்தால் என்ன செய்வது? அதை தூக்கி சுமக்கத்தானே வேண்டி இருக்கிறது. வேண்டாம் என்றால் அது நம்மை விட்டு விட்டு ஓடி விடுமா? 

ஒரு வேளை, அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட வழி இருந்தால்? 

உடனே அதைச் செய்து, துன்பத்தில் இருந்து விடுபட முயல்வோம் அல்லவா?

அப்படி ஒரு வழி இருக்கிறது என்கிறார் பொய்கை ஆழ்வார். 

முன்பு ஒரு முறை, ஒரு யானையை ஒரு முதலை பிடித்துக் கொண்டது. அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட, அந்த யானை திருமாலை கூப்பிட்டது. அவரும் வந்து அதன் இடர் களைந்தார். யானைக்கே உதவி செய்தார் என்றால் நமக்கு செய்யமாட்டாரா?


பாடல் 


இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்

தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடை

பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,

கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_53.html

click the above link to continue reading


இடரார் படுவார்? = இடர் (துன்பம்) யார் படுவார் ?

எழு நெஞ்சே = விழித்து எழு என் நெஞ்சே 

வேழம் = யானை 

தொடர்வான் = தொடர்ந்து வந்து 

கொடுமுதலை = கொடுமையான முத்தலையை 

சூழ்ந்த = நெருங்கி வந்து  கொன்ற 

 படமுடை = பெரிய படம் உடைய 

பைந்நாகப் பள்ளியான் = நாகத்தை படுக்கையாக கொண்டவன் 

பாதமே கைதொழுதும், = பாதத்தை கை தொழுது 

கொய்ந் = கொய்த 

நாகப் பூம் = நாகலிங்க பூவின் 

போது  = மொட்டை 

கொண்டு = கொண்டு 


இடர் யார் படுவார்? வேற வேலை இல்லை?




No comments:

Post a Comment