Friday, July 2, 2021

சிலப்பதிகாரம் - கள்வனோ, என் கணவன் ?

சிலப்பதிகாரம் - கள்வனோ, என் கணவன் ?


பாண்டிய மன்னனின் தவறான முடிவால், கோவலன் கொலையுண்டு போகிறான். 


அந்த துக்கச் செய்தியை ஆயர் குலப் பெண் ஒருத்தி கண்ணகியிடம் தெரிவிக்கிறாள். 


வாழ்க்கை பூராவும் மெளனமாக இருந்த அந்தப் பெண், புயல் என புறப்படுகிறாள். கண்ணகியின் கோபத்தின் உக்கிரத்தை வேறு எந்த காப்பியத்திலும் காண முடியாது. 


எத்தனையோ பலசாலிகள், அசுரர்கள், பெரும் வரம் பெற்ற சூரர்கள் என்று எவ்வளவோ பேரை பார்த்து இருக்கிறோம். யாருடைய கோபமும், அதன் வெளிப்பாடும் கண்ணகியின் கோபத்துக்கு உறை போடக் காணாது. 


கணவன் இறந்தான் என்ற செய்தியை கேட்டதும் எழுகிறாள். 


தன் கணவன் களவு செய்திருக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும். 


அவளுக்குத் தெரிந்தால் போதுமா? அது உண்மையாகி விடுமா?


அவள் கோபத்தின் வெளிப்பாடு, சூரியனை கூப்பிடுகிறாள். 


"ஏய் காய் கதிர் செல்வனே (சூரியனே), நீ சொல். என் கணவன் கள்வனா என்று" என்று சூரியனுக்கு உத்தரவு போடுகிறாள். 


சூரியன் தான் எல்லாவற்றையும் மேல் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறானே. அவனுகுத் தெரியாமல் ஒன்றும் இருக்க முடியாது. எனவே, சூரியனே, நீ சொல். என் கணவன் கள்வனா இல்லையா என்று கேட்கிறாள். 


பாடல் 


 காணிகா,

வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும்

ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்;

ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க;

பாய் திரை வேலிப் படு பொருள் நீ அறிதி,

காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’-


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post.html


(please click the above link to continue reading)


காணிகா = (ஆயர் குலப் பெண்களே) காண்பீர்களாக 


வாய்வதின் = வாய்த்த, தானாக நிகழும் தீய சகுனங்களை நீக்க 


வந்த = வந்த 


குரவையின் வந்து ஈண்டும் = இங்கு குரவைப் பாட்டினை பாடும் 


ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்; = ஆயர் குலப் பெண்களே எல்லோரும் கேளுங்கள் 


ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க; = ஆயர் குலப் பெண்களே எல்லோரும் கேளுங்கள் 


பாய் = பாய்ந்து 


திரை  = அலையால் 


வேலிப் = வேலி அமைந்த 


படு பொருள்  = இந்த உலகை 


நீ அறிதி, =  நீ அறிவாய் 


காய் கதிர்ச் செல்வனே! = சுடும் கதிர்களை உடைய செல்வனே 


கள்வனோ, என் கணவன்?’ = என் கணவன் கள்வனா? 


ஒரு பெண்ணின் சீற்றம் எப்படி இருக்கும் என்று இளங்கோ காட்டுகிறார். ஒரு பெண்ணுக்குள் இவ்வளவு கோபமா? 


அவளால் தாங்க முடியவில்லை. 


எதைப் பற்றியும் அவள் கவலைப் படவில்லை. 


தனி ஒரு பெண்ணாக நின்று ஊரையே எரிக்கிறாள். 


சீதையைப் போல், "என் சொல்லினால் சுடுவேன்" என்று சொல்வதோடு நிற்காமல் சுட்டுக் காட்டுகிறாள். மதுரையை சாம்பல் ஆக்குகிறாள். 


அவள் கோபக் கனலில் என்னென்ன எரிந்து சாம்பலானதோ? 


எவ்வளவோ இலக்கியங்கள் போய் இருக்கலாம், மருத்துவம், சாத்திரம், ஆகமங்கள்,  இசை நூல்கள், கட்டிடக் கலை சார்ந்த நூல்கள் என்று எண்ணற்ற நூல்கள், கலைஞர்கள் அதில் எரிந்து போய் இருக்கலாம். 


அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு முன்னால், இது எல்லாம் ஒரு துரும்பு என்று நம் இலக்கியமும், பண்பாடும், கலாச்சாரமும் ஏற்றுக் கொண்டு உள்ளது. 


அவளை தெய்வமாக இன்று வரை கொண்டாடுகிறோம். 


பெண்ணுக்கும், அவள் உணர்வுகளுக்கும் நாம் தரும் மதிப்பு அது. 


என்ன நடந்தது என்றால்.....



1 comment: