Showing posts with label பெரிய புராணம். Show all posts
Showing posts with label பெரிய புராணம். Show all posts

Friday, March 15, 2013

பெரிய புராணம் - இரண்டு இருள்


பெரிய புராணம் - இரண்டு இருள் 


இருட்டு. கும்மிருட்டு.  எதிரில் இருப்பது கூட தெரியவில்லை. கண் திறந்து தான் இருக்கிறது. இருந்தாலும் பார்க்க முடியவில்லை. தட்டு தடுமாறி, தொட்டு, தடவி ஒரு மாதிரி என்ன என்ன எங்கே இருக்கிறது என்று நாம் அறிந்து கொள்ள முயல்கிறோம். கண்  ஒளி இல்லாதவர்கள் உலகை அறிந்து கொள்வது இல்லையா ?

வெளியே உள்ள இருள் மற்ற பொருள்களை நம் பார்வையில் இருந்து மறைக்கும். ஆனால், அது நம்மை நாம் உணர்வதை தடுக்காது. எந்த இருளிலும் நாம் நம்மை அறிந்து கொள்ள முடியும்....


உள்ளுக்குள்ளே ஒரு இருள் இருக்கிறது. அக இருள். அந்த இருள், உலகை மட்டும் அல்ல நம்மை நாமே அறிந்து கொள்ளவதை மறைக்கும்.

புற இருள் நம்மை சார்ந்தது அல்ல. அந்த இருள் வரும் போகும். ஆனால், இந்த அக இருள் இருக்கிறதே அதை நாமே உருவாக்குகிறோம், அது நம்மை சார்ந்தே வாழ்கிறது, நம்மை சார்ந்தே வளர்கிறது.

அதை அறியாமை இருள் என்று சொல்லலாம், ஆணவ இருள் என்று சொல்லலாம்...வேறு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்...இந்த அக இருள் உங்களால் உருவாகி, உங்களை சார்ந்து நின்று உங்களால் நாளும் நாளும் வளர்கிறது.

இந்த இருளை யார் போக்க முடியும் ? உங்களுக்குத் தெரியாது நீங்கள் இருளில் இருக்கிறீர்கள் என்று....இருளே சுகம், இருளே நிரந்தரம் என்று இருகிறீர்கள்....வெளியில் இருந்து யாராவது ஒரு விளக்கை கொண்டு வந்தால்  அன்றி இந்த அக இருளில் இருந்து விடுபட முடியாது....

அந்த விளக்குதான் இந்த திரு தொண்டர் புராணம் என்ற அடியார்களின் வரலாறு கூறும் நூல் என்கிறார் தெய்வப் புலவர் சேக்கிழார் ...


பாடல்


இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள் 
 தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற  
 பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற  
 செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்


பொருள்



Thursday, March 14, 2013

பெரிய புராணம் - ஒரு அறிமுகம்

பெரிய புராணம் - ஒரு அறிமுகம் 


அறுபத்து மூன்று நாயன்மார்களை பற்றி பாடல்களின் தொகுப்பு பெரிய புராணம். எழுதியவர் தெய்வப் புலவர் சேக்கிழார்.

கம்ப இராமாயணம் போல் படிக்க அவ்வளவு எளிதானது அல்ல என்றாலும் தீந்தமிழால் எதற்கும் குறைவானது அல்ல இந்த நூல்.

சேக்கிழார் ஒவ்வொரு பாடலையும் மிக மிக நுணுக்காமாக பாடி இருக்கிறார்.

சிவ புராணம், கந்த புராணம் என்று பதினெட்டு புராணங்கள் உண்டு என்றாலும் அவை எல்லாம் "பெரிய" புராணம் என்ற அடை மொழியை பெறவில்லை.

அடியார்களை பற்றி கூறும் இந்த புராணம் மட்டும்தான் பெரிய என்ற அடை மொழியை பெற்றது.

ஏன் ?

அடியார்கள் மனத்தில் ஆண்டவன் இருப்பான். ஆண்டவன் மனத்தில் அடியார் இருக்க மாட்டார்

அடியாரை தொழும் போது ஆண்டவனையும் சேர்த்துத் தொழுவதனால், அடியார் புராணம் பெரிய புராணம் என்று பெயர் பெற்றது.

அடியார் மனதில் ஆண்டவன் இருப்பான் என்று நான் சொல்லவில்லை....


என் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

என்று மாணிக்க வாசகர் சொல்லுகிறார்.


இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று அறிந்து கொள்ள அல்ல

அடியவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்று அறிந்து கொள்ள அல்ல...

தமிழின் சுவைக்காக, தெய்வப் புலவர் சேக்கிழாரின் தமிழ் பாடல்களுக்காக பெரிய புராணம் படிக்கலாம்.

மிக மிக நுணக்கமான பாடல்கள்.

இதில் வரும் முதல் பாடலான "உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன் " என்ற பாடலுக்கு இராமலிங்க அடிகளார் மூன்று நாட்கள் அர்த்தம் விரித்துச் சொன்னாராம்.  ஒரு பாடலில் அவ்வளவு அர்த்தச் செறிவு.

எவ்வளவு தான் அடியார்களின் புகழை கூடிச் சொன்னாலும் அது அதிகாமாகாது என்று ஆரம்பிக்கிறார் சேக்கிழார்..... 

 அளவிலாத பெருமையராகிய

 அளவிலா  அடியார் புகழ் கூறுகேன்  
 அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்  
 அளவிலாசை துரைப்ப அறைகுவேன்.

பெரிய புராணத்தில் எனக்கு பிடித்த பாடல்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்....அவை  உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் ....





Tuesday, March 5, 2013

பெரிய புராணம் - இடையறாப் பேரன்பு



பெரிய புராணம் - இடையறாப் பேரன்பு 


நம்மிடம் அன்பு உள்ளவர்களிடம், நாம் அன்பு செய்பவர்களிடம் கூட நாம் சில சமயம் கோவம் கொள்ள நேரிடலாம். அன்பு செலுத்துவது தடை படலாம்.

அன்பு என்பது பலன் எதிர் பாராமல் கொடுப்பது. மழை போல். நாம் என்ன பதிலுக்கு செய்வோம் என்று மழை பெய்கிறது ?

கோவில். அற்புதமான இடம். கூட்டம் இல்லை என்றால், அதன் புராதனம், அதன் காலம் காலமாய் கட்டி காத்து வந்த இருளும், அமானுஷ்யமான நெடியும்...

எப்பவாவது கோவிலுக்குப் போகும் போது ... சற்று நேரம் யோசித்துப் பாருங்கள்...அந்த கோவிலில் மாணிக்க வாசகரும் அப்பரும், எத்தனையோ ஆழ்வார்களும் , ஆச்சாரியர்களும் வந்து நடந்த இடம் என்று. அவர்கள் நடந்த அதே இடத்தில் நீங்களும் நடக்கிறீர்கள். அவர்கள் நின்ற அதே இடத்தில் நீங்களும் நிற்கிறீர்கள்.

யார் அறிவார், நீங்களே கூட முன் ஜன்மத்தில்அதே இடத்தில் நின்றிருக்கலாம்..நடந்து இருக்கலாம்...யாரோ உங்கள் முன்னோர் அந்த கோவிலின் பிரகாரங்களில்தன் சந்ததி, அதாவது நன்றாக வாழ, மகிழ்ச்சிய்காக வாழ கண்ணீர் மல்கி பிரார்த்தித்து இருக்கலாம்.

எனவே கோவில்களை பராமரிப்பது நம் கடமை..இறை உணர்வு இல்லாவிட்டாலும். வேளுக்குடி போன்ற பெரியவர்கள் கோவில் பராமரிப்பை பற்றி மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லி கொண்டிருக்கிறார்கள்

அழகு. இளமை அழகு. அதிலும் பெண்கள் இளைமையில் மிக அழகாக இருப்பார்கள். இயற்கை கொடுத்த நன்கொடை.

முதுமையிலும் அழகாக இருக்க முடியுமா ? வெகு சிலரே முதுமையில் அழகாக இருக்கிறார்கள்.

என்ன ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமால் ஏதேதோ சொல்லிக்கொண்டே போகிறேனா ?

திருநாவுக்கரசரை பற்றி சேக்கிழார் சொல்லும் பாடல்


இடையறாப் பேரன்பும் மழைவாரும்
            இணைவிழியும் உழவாரத்தின்
        படையறாத் திருக்கரமும் சிவபெருமான்
            திருவடிக்கே பதித்த நெஞ்சும்
        நடையறாப் பெருந்துறவும் வாகீசப்
            பெருந்தகைதன் ஞானப்பாடல்
        தொடையறாச் செவ்வாயும் சிவவேடப்
            பொலிவழகும் துதித்து வாழ்வாம்


பொருள்



இடையறாப் பேரன்பும் = இடை விடாத பேரன்பு. ஒரு நிமிடம் கூட அன்பு மாறாத மனம்.

மழைவாரும்  இணைவிழியும் = மழை போல் கருணை பொழியும் இரண்டு விழிகளும்


உழவாரத்தின் படையறாத் திருக்கரமும் = உழவாரம் என்பது சின்ன மண் வெட்டி போன்ற சாதனம். கோவிலில் பிரகாரத்தில் உள்ள கல்லையும், முள்ளையும் எடுத்து ஓரமாகப் போட உதவும் சாதனம். எப்போதும் அவர் கையில் அந்த சாதனம் இருக்கும். கோவில் பராமரிப்பில் எப்போதும் ஈடுபட்டு இருப்பார் என்பது பொருள்.


சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும் = சிவா பெருமானின் திருவடிகளில் பதிந்த நெஞ்சம்

நடையறாப் பெருந்துறவும் = நடை நிற்காத பெரும் துறவு. அது என்ன நடை விடாத துறவு. துறவிகள் ஒரு நாளுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கி இருக்கக் கூடாது என்பது விதி. ரொம்ப நாள் இருந்தால், அந்த ஊரின் மேல், அங்குள்ள மக்கள் மேல் ஒரு பற்று வந்து விடும்.

பேய் போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் 
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி 
சேய் போல் இருப்பர் கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!

என்பார் பட்டினத்தார். பேய்க்கு ஒரு இடம் உண்டா. அது பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும்.

மடம் கட்டி, சொத்து குவித்து, அதை வரவு செலவு பார்த்து,...இது எல்லாம் துறவிக்கு அடையாளம் அல்ல


வாகீசப் பெருந்தகை = வாகீசர் என்பது திருநாவுக்கரசரின் இயற் பெயர்

தன் ஞானப்பாடல் = ஞானம் செறிந்த பாடல்கள்

தொடையறாச் செவ்வாயும் = யாப்பு இலக்கணம் மாறாத பாடல்கள் பொழியும் அவரின் செவ்வாயும்

சிவவேடப் பொலிவழகும் = சிவச் சின்னங்கள் தரித்த அவரின் பொலிகின்ற அழகையும்


துதித்து வாழ்வாம் = துதித்து வாழ்வோம்

தெய்வப் புலவர் சேக்கிழார் எழுதியப் பாடல்.

சொல்லச் சொல்ல தித்திக்கும்.


Thursday, December 27, 2012

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்


பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்


இறைவனிடம் என்ன வேண்டலாம் ? நல்ல உடல் ஆரோக்கியம், கொஞ்சம் சொத்து, பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, வேலை, திருமணம் என்று இப்படி எதையாவது கேட்கலாம். 

இதை எல்லாம் விட்டு விட்டு காரைக்கால் அம்மையார் வேறு என்னனமோ கேட்கிறார்....

இறவாத அன்பு வேண்டுமாம்....எல்லா உயிர்களிடத்தும், எல்லா நேரத்திலும் இறவாத அன்பு வேண்டுமாம். உயிர் உள்ளது வளர்ந்து கொண்டே இருக்கும். இறந்தது வளராது. இறவாத அன்பு நாளும் வளரும். 

அதற்க்கு அடுத்து பிறவாமை வேண்டுமாம்....எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினால் அது நல்ல வினை தானே. அதன் காரணமாக ஒரு வேளை பிறவி வந்து விட்டால் ?

அப்படி பிறந்து விட்டால், இறைவன் திருவடி மறவாமை வேண்டுமாம்...

திருவடியையை மறவாமல் இருந்தால் மட்டும் போதாது, அந்த திருவடியின் கீழ் என்றும் இருக்கும் வரம் வேண்டும் என்று வேண்டினாராம். 

அவர் அப்படி வேண்டியதாக சேக்கிழார் பெருமான் சொல்கிறார், பெரிய புராணத்தில், பன்னிரண்டாம் திருமுறை.

பாடல் 

Tuesday, December 25, 2012

பெரிய புராணம் - உலகு எல்லாம் உணர்ந்து


பெரிய புராணம் - உலகு எல்லாம் உணர்ந்து 


பெரிய புராணத்தில் முதல் செய்யுள்.

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.


உலகில் உள்ளவர்கள் எல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன். நிலவு திகழும் கங்கை நீர் கொண்ட சடையை கொண்டவன். அளவு கடந்த ஜோதி வடிவானவன். அம்பலத்தில் ஆடுவான். சிலம்பு திகழும் மலர் போன்ற திருவடியை வணங்குவோம்.

சரி, இந்த பாட்டில் என்ன சிறப்பு ? 

Tuesday, December 18, 2012

பெரிய புராணம் - அன்பினால் வணங்கினார்


பெரிய புராணம் - அன்பினால் வணங்கினார்



ஒரு நாள் இறைவன் பக்தன் முன் தோன்றி, "பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம், உனக்கு என்ன வேண்டுமோ கேள்" என்றான்.

பக்தன்: ஒண்ணும் வேண்டாம் இறைவா 

இறைவன்: என்ன, ஒண்ணும் வேண்டாமா ?

பக்தன்: ஆம், ஒண்ணும் வேண்டாம். 

இறைவன்: உனக்கு எவ்வளவு செல்வம் வேண்டுமானாலும் தருகிறேன்...கேள் 

பக்தன்: தங்கமும், வைர வைடூரிய செல்வங்களும், வீடு கட்டும் ஓடும் ஒண்ணு தான் எனக்கு. அதெல்லாம் வேண்டாம் இறைவா. 

இறைவன்: ஹ்ம்ம்...சரி அதை விடு, உனக்கு சொர்க்கம் வேண்டுமா...தருகிறேன். 

பக்தன்: அதுவும் வேண்டாம்

இறைவன்: ஒண்ணுமே வேண்டாம் என்றால், பின்ன எதற்க்காக என்னை வணங்குகிறாய்?

பக்தன்: ஓ...அதுவா...எனக்கு உன் மேல் அன்பு, காதல்....உன்னை வணங்கனும் போல இருந்தது...மத்தபடி எனக்கு ஒண்ணும் வேண்டாம்....

பாடல்: 

Friday, August 31, 2012

பெரிய புராணம் - பிறவாமையும் மறவாமையும்


பெரிய புராணம் - பிறவாமையும் மறவாமையும்


காரைக்கால் அம்மையார் இறைவனிடம் வேண்டுகிறார்.

நாமா இருந்தால் இறைவனிடம் என்ன கேட்போம் ?

சொத்து, சுகம், நல்ல மனைவி/கணவன், ஆரோக்கியமான பிள்ளைகள், பதவி என்று கேட்போம். பக்தி maangal முக்தி, வீடு பேறு என்று கேட்பார்கள். 

காரைக்கால் அம்மையார் கேட்கிறார்...

இறவாத அன்பு வேண்டும் என்று முதலில் கேட்கிறார்.
அப்புறம், பிறவாமை
அப்புறம், மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை 
கடைசியில், இறைவா உன் திருவடிக்கீழ் இருக்கும் முக்தி வேண்டும் என்று கேட்கிறார்.

Thursday, August 30, 2012

பெரிய புராணம் - முதல் பாடல்

பெரிய புராணம் - முதல் பாடல்

நீங்கள் எப்பவாவது கவிதை எழுத நினைத்ததுண்டா?

ஏதேதோ எழுத வேண்டும் என்று தோன்றும்...இதை எழுதலாமா, அதை எழுதலாமா ? இப்படி எழுதலாமா ? அப்படி எழுதலாமா ? என்று மனம் கிடந்து அலை பாயும்...ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது.

பெரிய பெரிய ஞானிகளுக்கே இந்த கஷ்டம் இருந்திருக்கிறது. 

இறைவனே நேரில் வந்து முதல் அடி எடுத்து தந்து இருக்கிறான்...

அருணகிரி நாதருக்கு "முத்தை தரு" என்று முதல் அடி எடுத்துத் தந்தான்.

குமர குருபரருக்கு "திகடசக்கரம்"என்று எடுத்துக் கொடுத்தான் முருகன். 

சேக்கிழாரும் முதல் அடி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். 

இறைவனே "உலகெல்லாம்" என்று அடி எடுத்துக் கொடுத்தான்.

சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தின் முதல் பாடல்  

Wednesday, May 23, 2012

பெரிய புராணம் - ஆண் அடங்கும் இடம்


பெரிய புராணம் - ஆண் அடங்கும் இடம்

பனிக்காலம் காதலின் காலமோ ?

மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்று கண்ணன் சொன்னது அதனால் தானோ?

துணை தேடும் காலம்.

காதலில் ஆண்டாள் கற்கண்டாய் உருகியதும் இந்த மார்கழிப் பனியில் தான்.


இங்கு அந்த குளிர் காலத்தில் வீடுகளில் என்ன நடக்கிறதென்று கூறுகிறார் சேக்கிழார்....

பனி பொழிகிறது. 

சூரியனும் வெளியே வரவில்லை.

தூரத்தில் மலைகள் எல்லாம் பனிப் போர்வை போத்தி இருக்கின்றன.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.

வெளியே போக யாருக்கு மனம் வரும்.

வீடுகளில் உள்ள மாடங்களில் பெண் புறாவும் ஆண் புறாவும் ஒன்றை ஒன்று தழுவி ஒடுங்கி ஒன்றாய் இருக்கின்றன.

வீட்டின் உள்ளே தங்கள் துணைவிகளோடு ஆண்கள் ஒன்றாய் இருந்தனர்.

சேக்கிழாரின் தமிழுக்கு உரை எழுதினால் அதன் இனிமை கெட்டு விடும் போல இருக்கிறது...அவ்வளவு இனிமையான பாடல்.
  

நீடியவப் பதிகளெலா நிரைமாடத்திறைகடொறும்
பேடையுடன் பவளக்காற் புறவொடுங்கப்பித்திகையின்
தோடலர்மென் குழன்மடவார் துணைக்கலச வெம்முலையுள்
ஆடவர்தம் பணைத்தோளு மணிமார்பு மடங்குவன.

சீர் பிரித்த பின்:

நீடிய அப் பதிகள் எல்லாம் நிரைமாடத்து, இறைகள் தொறும்
பேடையுடன் பவளக் கால் புறா ஒடுங்கபித்திகையின்
தோடு அலர் மென் குழல் மடவார் துணைக் கலச வெம் முலையுள் 
ஆடவர் தம் பணைத் தோளும் மணி மார்பும் அடங்குவன


நீடிய = நீண்ட

அப் பதிகள் = அந்த ஊரில், அந்த இடத்தில் (எந்த இடம் என்றால் முந்தைய இரண்டு BLOG களைப் பாருங்கள்)

எல்லாம் = எல்லா இடத்தும்

நிரைமாடத்து, = நிறைந்த மாடங்களில்

இறைகள் தொறும்= இறை என்றால் கூண்டு மாதிரி ஒரு இடம் (இறப்பு என்று சொல்வது வழக்கம்)

பேடையுடன் = பெண் புறாவுடன்

பவளக் கால் = பவளம் போல் சிவந்த கால்களை உடைய

புறா ஒடுங்க = ஆண் புறா ஒடுங்க

பித்திகையின் = செண்பகம் போன்ற ஒரு வகை மலர்

தோடு அலர் = இதழ் மலரும்

மென் குழல் = மென்மையான குழலை கொண்ட

மடவார் = பெண்கள்

துணைக் கலச = இரண்டு கலசங்கள் ஒன்றாய் சேர்த்து வைத்தார் போன்ற

வெம் முலையுள் =

ஆடவர் தம் = ஆண்களின்

பணைத் தோளும் = பனை போன்ற கடினமான தோள்களும்

மணி மார்பும் = மணி போல ஒளி வீசும் மார்பும்

அடங்குவன = அடங்கின

பனியில் எது எல்லாம் அடங்கும் ?




Monday, May 21, 2012

பெரிய புராணம் - குளிரடிக்குதே


பெரிய புராணம் - குளிரடிக்குதே

சேக்கிழார் குளிர் பற்றி ஏன் இவ்வளவு சொல்கிறார் என்று அடுத்த blog இல் பார்க்கலாம்...

அதற்கு முன், எலும்புவரை எட்டிப் பாயும் குளிர் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்...

பயங்கர குளிர் காலம்.

நாள் எல்லாம் வாடைக் காற்று வீசிக் கொண்டு இருக்கிறது.

சோலைகளில் உள்ள செடி கொடிகளும் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

சூரியன் கூட குளிரில் நடுங்கி அப்பப்ப வருவதும் போவதுமாய் இருக்கிறான் என்றால் எவ்வளவு குளிர் என்று பார்த்துகொள்ளுங்கள்.

சேக்கிழார் ஏதோ Aarctic , Antaractic range க்கு build up தருகிறார்...தமிழ் நாட்டில் அடிக்கும் குளிருக்கு...

வாடை காற்று வீசும் அந்த பாடல்....
   

பெரிய புராணம் - பனியில் நனைந்த மலை மகள்


பெரிய புராணம் - பனியில் நனைந்த மலை மகள் 

தமிழ் இலக்கியத்தில் வர்ணைகள் என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி கட்டுரையே எழுதலாம்.

பெரிய புராணத்தில் சேக்கிழார் பனி விழும் மலைகளை பற்றி வர்ணிக்கிறார்.

படித்துப் பாருங்கள், காதோரம் குளிர் அடிக்கும்....

Saturday, May 19, 2012

பெரிய புராணம் - ஒரு சூரியன் போதுமா ?


பெரிய புராணம் - ஒரு சூரியன் போதுமா ?

பெரிய புராணம்,

பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடல்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையை பற்றியது.

இதை ஒரு வரலாற்று நூல் என்றே கூறலாம்.

ஏனென்றால் நாயன்மார்கள் கற்பனை கதா பாத்திரங்கள் அல்ல. 
உண்மையாக வாழ்ந்த மனிதர்கள்.

பெரிய புராணம் பன்னிரண்டாவது திருமுறை என்று அழைக்கப் படுகிறது.

படிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும்.

கம்ப இராமாயணம் போல் அவ்வளவு எளிமை அல்ல.

இருப்பினும், மிக இனிமையான பாடல்களை கொண்டது.

அதி காலை நேரம்.

கீழ் வானம் சிவக்கிறது.

வானெங்கும் பறவைகள்.

குளிர் பிரியா காற்று காதோரம் இரகசியம் பேசிச் செல்லும்.

மெல்லிய வானம்.

துல்லிய மேகம்.

பனியில் நனைந்த மலர்கள் மலரும் நேரம்.

அப்படி ஒரு கிராமத்தில், அந்த அதி காலை வேளையில் நடந்து போகிறீர்கள்.

அங்கங்கே குளங்கள் தென்படுகின்றன. அந்த குளங்களில் நிறைய தாமரை மலர்கள் பூத்து இருக்கின்றன.

அதை பார்க்கும் போது ஓராயிரம் சூரியன்கள் தரையில் உதித்த மாதிரி இருக்கிறது.

அந்த ஊர், திரு ஞான சம்பந்தர் பிறந்த சீர்காழி.

படிக்கும் போது மனதுக்குள் மழை அடிக்கும் அந்தப் பெரிய புராணப் பாடல்...