Friday, April 13, 2012

கம்ப இராமாயணம் - சீதை கேட்ட வரம்


கம்ப இராமாயணம் - சீதை கேட்ட வரம்


அசோகவனத்தில் அனுமன் சீதையை கண்டான். அப்போது, அனுமன் மூலம் சீதை இராமனிடம் ஒரு வரம் கேட்கிறாள்.

நான் ஒரு வேளை இந்த அசோகவனத்திலேயே இறந்து விட்டால், மீண்டும் பிறந்து வந்து இராமனின் திரு மேனியை தீண்டும் வரம் சீதை தொழுது வேண்டினாள் என்று இராமனிடம் சொல்லுவாய் என்றாள்.


இராமன் திருமேனி எப்படி பட்டது?....சீதையே சொல்லுகிறாள்....

கம்ப இராமாயணம் - இலங்கை வர்ணனை




வருணனை என்பது சற்று கடினமான காரியம்.

வாசகன் எளிதாக skip பண்ணக்கூடிய இடம் வருணனை. அதையும் தாண்டி, வாசகனை, அந்த வருணனையை படிக்க, இரசிக்க வைக்க வேண்டும் என்றால் ரொம்ப மெனக்கடனும்.

அதுவும், ஒரு ஊரைப் பற்றி வருணனை என்றால் இன்னும் கஷ்டம்.

ஒரு அழாகான பெண், அல்லது ஆண் என்றால் படிப்பவர்களுக்கு ஒரு ஆர்வம் இயற்கையாக இருக்கும்.

ஊரை பற்றி என்ன எழுத முடியும் ?


கம்பன் வர்ணிக்கும் ஒவ்வொரு இடமும் அத்தனை அருமை. அடடா என்று நம் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கும் இடங்கள்.

கம்பனின் வருணனைகள் என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம்.


அனுமன் முதன் முதாலாய் இலங்கைக்குள் நுழைகிறான். இலங்கை எப்படி இருக்கிறது ?


மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் என்று நாம் எழுதுவோம். கம்பன் என்ன சொல்கிறான்.

Thursday, April 12, 2012

கம்ப இராமயாணம் - இறைவனும் பக்தனும்





இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு மிக நுணுக்கமானது.

அதை அருகில் இருப்பவர்கள் கூட அறிந்து கொள்ள முடியாது. 

பக்தன் இறைவனை அறிவான்.

இறைவன் பக்தனை அறிவான்.

இதை பக்தன் வெளியே சொன்னாலும் மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

பக்தனை விடுங்கள். இறைவனே சொன்னாலும் புரியாது.
 
இராமயணத்தில் ஒரு இடம். அனுமன் இராமனைப் பார்க்கிறான். அனுமனுக்கு இராமன் யார் என்று தெரிகிறது. இராமனுக்கும் அனுமனைப் புரிகிறது. ஆனால் அவர்கள் இடையே இருந்த லக்ஷ்மணனுக்கு அங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை.

அந்த இடம்.....

கம்ப இராமாயணம் - வாலியின் சகோதர பாசம் - 2






வாலிக்குத் தெரியும் than தம்பி சுக்ரீவனைப் பற்றி. தண்ணி அடித்துவிட்டு oruvelai ஏதாவது தவறு செய்தாலும் செய்வான், அப்படி செய்தால், எங்கே இராமன் சுக்ரீவன் மேல் kopap பட்டு அவனை தண்டித்து விடுவானோ என்று பயந்து, சுக்ரீவன் மேல் உள்ள வாஞ்சையால் இராமனிடம் ஒரு வரம் கேட்கிறான். அது என்ன வரம் ...?

கம்ப இராமாயணம் - வாலியின் சகோதர பாசம்

காப்பியம் எங்கும் சகோதர பாசத்தை முன் எடுத்து வைக்கிறான் கம்பன். லக்ஷ்மணன், பரதன், குகன், வாலி, சுக்ரீவன், விபீஷணன், கும்ப கர்ணன் என்று அனைத்து இடங்களிலும் கம்பன் சகோதர பாசத்தை முன் மொழிகிறான். 


அப்படி சகோதர பாசத்தை கம்பன் உருக்கமாக காட்டும் ஒரு இடம்.....




கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் அழகுணர்ச்சி

கும்ப கர்ணனுக்கு அழகு உணர்ச்சி இருக்குமா ?


தன்னை ஒரு அழகான ஆண் என்று அவன் நினைத்து இருப்பானா ?

தன் உருவத்தின் மேல் அவனுக்கு ஒரு பெருமை இருந்து இருக்குமா ?
 
 
கம்பன் காட்டுகிறான்....
 

Wednesday, April 11, 2012

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் சகோதரப் பாசம்




கும்ப கர்ணனின் பாத்திரம் சகோதர பாசத்தின் உச்சம். 

ஒருபுறம் இராவணனை காக்க எவ்வளவோ சொல்லி பார்க்கிறான். இராவணன் கேட்பதாய் இல்லை. அவனுக்காக யுத்தம் செய்து உயிர் தருகிறான். 

மறுபுறம் இன்னொரு சகோதரனான விபீஷணன் மேல் அளவு கடந்த காதல். 

சாகும் தருவாயிலும், விபீஷணன் நன்றாக இருக்கவேண்டும் என்று கவல்கிறான். 


இரண்டு கையும் இரண்டு காலையும் இழந்து, மூக்கும் காதும் அறுபட்டு கிடக்கிறான் கும்பகர்ணன். இராமனிடம் இரண்டு வரம் வேண்டுகிறான்.
 
முதல் வரம், விபீஷணனை காக்கவேண்டி
 
--------------------------------------------------------------
தம்பி என நினைந்துஇரங்கித் தவிரான் அத்தகவு இல்லான்,
நம்பி! இவன்தனைக் காணின் கொல்லும்இறை நல்கானால்;
உம்பியைத்தான்உன்னைத்தான் அனுமனைத்தான்ஒரு பொழுதும்
எம்பி பிரியானாக அருளுதியான் வேண்டினேன்.
-----------------------------------------------------------
 
தம்பி என நினைந்து = விபீஷணனை தம்பி என்று நினைத்து
 
இரங்கித் = இரக்கம் கொண்டு
 
தவிரான் அத்தகவு இல்லான் = உயிரோடு விடமாட்டான் அந்த நல்ல குணம் இல்லாதாவன் (இராவணன்)
 
நம்பி! இவன்தனைக் காணின் கொல்லும் = நல்லவனான இவனைப் பார்த்தால் கொன்றுவிடுவான்
 
இறை நல்கானால் = அவன் அப்படி இவன் மேல் இரக்கம் காட்டா விட்டால்
 
உம்பியைத்தான் = உன் தம்பியாகிய லக்ஷ்மணனைத்தான்
 
உன்னைத்தான் = உன்னைத்தான்
 
அனுமனைத்தான் = அனுமனைத்தான்
 
ஒரு பொழுதும் = எப்போதும்
 
எம்பி பிரியானாக = என் தம்பியாகிய விபீஷணன் பிரியாமல் இருக்க
 
அருளுதி = அருள் தருவாய் என
 
யான் வேண்டினேன் = நான் உன்னை வேண்டினேன்
 
இது கும்பகர்ணன் கேட்ட முதல் வரம். உயிர் போய் கொண்டு இருக்கிறது. கை, கால், மூக்கு, காது இழந்து ஒண்ணும் செய்ய இயலாமல் கிடக்கிறான். அப்ப அவன் கேட்ட வரம், விபீஷணனை பார்த்துக் கொள் என்று.

என்ன ஒரு சகோதரப் பாசம்