Friday, April 20, 2012

திருவாசகம் - விக்கினேன் வினையேன்


திருவாசகம் - விக்கினேன் வினையேன்


கிடைப்பது எல்லாமா அனுபவிக்க முடிகிறது?

சில சமயம் கிடைத்ததின் அருமை தெரியாமல் போய்விடுகிறது.

சில சமயம் கிடைத்ததை அனுபவிக்க நேரம் இல்லாமல் போய் விடுகிறது.

உடல் உபாதை சில சமயம் நம்மை அனுபவிக்க விடாது.

இந்த பிரச்சனை நமக்கு மட்டுமல்ல, மாணிக்க வாசகருக்கும் இருந்திருக்கிறது. 

இறைவன் அவருக்கு அமுதத்தை வழங்கினார். ஆஹா அமுதம் கிடைத்து விட்டது என்று அள்ளி அள்ளி விழுங்கினார். அது போய் தொண்டையில் அடைத்து கொண்டது. விக்கல் வந்தது. என்ன செய்ய ? இப்ப அமுதத்தை பருக முடியாது. 

அப்பவும் இறைவனே அவர் மேல் இரக்கப் பட்டு, அந்த விக்கல் போக இனிய தண்ணீர் தந்ததாய் அவரே சொல்கிறார் இந்தப் பாடலில்...

கம்ப இராமாயணம் - மனச் சிறையில் கரந்த காதல்



கம்ப இராமாயணம் - மனச் சிறையில் கரந்த காதல்


இராமனின் அம்பு பட்டு இராவணன் இறந்து கிடக்கிறான். உடல் எல்லாம் அம்பு.எவ்வளவு பெரிய ஆள் இராவணன். கூற்றையும் ஆடல் கொண்டவன்.

மண்டோதரி அவன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

அந்த புலம்பலையும் இலக்கியச் சுவையோடு தருகிறான் கம்பன்....

Thursday, April 19, 2012

திரு மந்திரம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

திரு மந்திரம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்



நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால், அது நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைப்போம்.

ஆனால், பெரியவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப்பார்கள்.


தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்


தனக்கு கிடைத்த மந்திரத்தை உலகுக்கு எல்லாம் வழங்கி இன்புற்றார் இராமானுஜர்.


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இந்தப் பாடலில் கூறுகிறார் திருமூலர்.



திரு அருட்பா - மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

திரு அருட்பா - மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே


'மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே ' இது ஏதோ வண்டிச் சக்கரம் படத்தில் பாலசுப்ரமணியம் பாடிய பாடல் மாதிரி இருக்கா ?

எழுதியவர் இராமலிங்க அடிகளார். படித்துப் பாருங்கள். எவ்வளவு அனுபவித்து எழுதி இருக்கிறார் என்று தெரியும்......

திரு அருட்பா - கல்லார்க்கும் கற்றவர்க்கும்

திரு அருட்பா - கல்லார்க்கும் கற்றவர்க்கும்

இறைவன் எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கிறான். படித்தவன், படிக்காதவன், வல்லவன், இளைத்தவன், தன்னை மதிப்பவன், தன்னை மதிக்காதவன் நல்லவன், பொல்லாதவன் என்று அனைத்திற்கும் சாட்சியாக நடுவில் நிற்கிறான்.

வள்ளலார் பாடுகிறார்....

Wednesday, April 18, 2012

கம்ப இராமாயணம் - இன்று போய் நாளை வா


கம்ப இராமாயணம் - இன்று போய் நாளை வா


யுத்தத்தில் நிராயுதபாணியாக நிற்கிறான் இராவணன்.

இராமன் நினைத்திருந்தால் அவனை கொன்றிருக்கலாம். அவனுக்கு அறிவுரை சொல்கிறான்.

அறத்தின் துணை இன்றி வெறும் படை பலத்தால் யாரும் வெல்ல முடியாது என்று பலப் பல அறிவுரைகள் கூறுகிறான்.

கடைசியில், "இதை எல்லாம் நீ கேட்கவில்லை என்றால், இன்று போய் போருக்கு நாளை வா" என்றான்...

Tuesday, April 17, 2012

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர


திரு நாவுக்கரசர் சைவ சமயத்திற்கு மாறியதால், சமணர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அவர்கள், அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு தாங்கொண்ணா துன்பங்களை தந்தனர்.

அதில் ஒன்று நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எரியச் செய்தது.

அப்படி கடலில் போட்டவுடன், அவர் இறைவனை நினைத்து உள்ளம் உருகி நமச்சிவாயப் பதிகம் பாடினார். 

அவரை கட்டியிருந்த கல் தெப்பமாய் மிதந்தது. அதில் ஏறி கரை சேர்ந்தார். 

இது நடந்தது கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினம் என்ற கடற்கரையில். 

இன்றும் அங்கு "கரையேற விட்ட குப்பம்" என்று ஒரு இடம் உண்டு. அப்பர் கரையேறிய இடம்.

நமச்சிவாய பதிகத்தில் முதல் பாடல்...


------------------------------------------------------------
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்நற்றுணை யாவது நமச்சி வாயவே.
---------------------------------------------------------------


பொருள்:




சொற்றுணை = சொல் + துணை = சொல்லுக்கு துணையான


வேதியன் = வேதங்களுக்கு தலைவனான 


சோதி = சோதி வடிவாய் உள்ளவன்


வானவன் = வானத்தில் உள்ளவன்


பொற்றுணைத் = பொன் போன்ற துணை உள்ள
திருந்தடி = திருவடி


பொருந்தக் கைதொழக் = மனமும், கையும் அவன் திருவடியில் பொருந்துமாறு கை தொழ

கற்றுணைப் பூட்டியோர் = கல்லைக் கட்டி


கடலிற் பாய்ச்சினும் = கடலில் தூக்கி போட்டாலும்

நற்றுணை யாவது = நல்ல துணையாவது


 நமச்சி வாயவே. = நமச்சிவாய என்ற அந்த நாமமே



கல்லை கட்டிப் போட்டாலும் அவன் நாமம் துணையாய் இருக்கும். அவ்வளவுதானா? எழுதியது நாவுக்கரசர்.

சற்று ஆழ்ந்து சிந்தித்தால் சில பொருள் விளங்கும்:

கடல் என்றால் இந்தப் பிறவி பெருங்கடல். 

இந்த பிறவி கடலை சும்மா நீந்தி கடப்பதே கடினம், இதில் கல்லை வேறு கட்டிக்கொண்டு எப்படி எப்படி நீந்துவது. 

கல்லுனா எது ? உறவுகள், பந்த பாசங்கள், ஆசைகள், கோபம், தாபம் போன்ற மன மாசுகள் ... இத்தனை கல்லை கட்டி கொண்டு இந்த பிறவிப் பெருங்கடலை எப்படி நீந்தி கரை சேருவது?

இறைவனின் திரு நாமம் இருந்தால், அந்த கற்கள் கூட தெப்பமாய் மாறி சுகமாக கரை சேர முடியும். 

எழுதியது நாவுக்கரசர் !