Monday, April 30, 2012

கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்


கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்



கம்பனின் வார்த்தை விளையாட்டுக்கு கீழ் வரும் பாடல் ஒரு உதாரணம்.

தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்.

கம்பனின் பாட்டு கொஞ்சுகிறது.

Sunday, April 29, 2012

கம்ப இராமாயணம் - ஓடி ஒளிந்த எமன்


கம்ப இராமாயணம் - ஓடி ஒளிந்த எமன்


கரிய பெரிய அரக்கியான தாடகையை கம்பன் வர்ணிக்கும் அழகே தனி.

அவள் ஒரு பெண்.

மாதரையும், தூதரையும் கொல்லுவது பாவம்.

க்ஷத்ரிய தர்மம் அல்ல. இராமன் தாடகை என்ற பெண்ணைக் கொன்றான் என்ற பழிச் சொல் அவன் மேல் வரக்கூடாது எனபதில் கம்பன் மிகக் கவனமாய் கவி புனைகிறான்.

படிப்பவர்களுக்கு தாடகை ஒரு பெண்ணே அல்ல என்ற எண்ணம் வர வேண்டும்.

அப்படி ஒரு எண்ணம் வந்து விட்டால், இராமன் மேல் பழி வராது.

அதை எப்படி செய்வது என்று கம்பன் சிந்திக்கிறான்...

இந்தப் பாடலை பாருங்கள்...என்ன கற்பனை, என்ன சொல் வளம், அதன் பின்னணியில் இருக்கும் கம்பனின் இராமனைப் பழியில் இருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் புரியும்.....

அற்புத திருவந்தாதி - காணாமலே காதல்


அற்புத திருவந்தாதி - காணாமலே காதல்


காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த அற்புத திருவந்தாதி.

நமக்கு வரப் போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்கும். 

பார்பதற்கு முன்னாலேயே நாம் அவர்கள் வசம் காதல் வயப் படுகிறோம். 

ஒரு வேளை அவர்களை நேரில் பார்த்து விட்டால், "அட, இந்த பொண்ணுக்காகத்தான் / ஆணுக்காகத்தான் இத்தனை நாளாய் கனவு கண்டு கொண்டு இருந்தேன்" என்று சட்டென்று காதல் பூ மலரும்.

இங்கே அப்படி இறைவன் மேல் காதல் கொண்ட காரைக் கால் அம்மையார் சொல்கிறார்

கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்


கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்


இருக்கப் போறதே கொஞ்ச நாள். அதில் படிக்க ஒதுக்கும் நேரம் மிக மிக அற்பமான நேரம். அதிலும் கவிதை படிக்க கிடைக்கும் நேரம் அரிதிலும் அரிது. அந்த சிறிய நேரத்திலாவது நல்ல கவிதை படியுங்கள் என்கிறார் அருணகிரி நாதர்....போகும் வழிக்கு புண்ணியம் தேடுங்கள் என்கிறார் இந்தப் பாடலில்....

Saturday, April 28, 2012

அற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகு


அற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகு

நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் காரைக்கால் அம்மையார். இவர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

இந்து மதம் பெண்களுக்கு துறவை அனுமதிக்கவில்லை. மணிமேகலை துறவு பூண்டாள், அவள் சமண சமயத்தை சார்ந்தவள்.

ஆண்டாள் கூட துறவறம் மேற்கொள்ளவில்லை. காரைக்கால் அம்மையார் திருமணம் செய்து கொண்டபின் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டார்.

அவர் எழுதிய பாடல்கள் பதினொன்றாம் திருமுறையில் உள்ளது. அதில், அற்புத திருவந்தாதியில் இருந்து ஒரு பாடல்....

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

கடைசிக் காலத்தில் எமன் வந்து தன்னை இழுத்துக்கொண்டு போகும் போது, நம்முடைய அம்மா, அப்பா, மனைவி, மக்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்து அழுவார்கள், அப்போது, முருகா, நீ எமனிடம் "பாத்துப்பா, இவர் நம்ம ஆளு, நமது அன்பன்" னு நீ வந்து சொல்லனும்னு அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகோள் வைக்கிறார் இந்தப் பாடலில்.....

குறுந்தொகை - அவன் பொய் சொல்ல மாட்டான்

குறுந்தொகை - அவன் பொய் சொல்ல மாட்டான்


சோலைகள் எல்லாம் பூத்து குலுங்குகின்றன. கார் காலம் வந்து விட்டதோ ? இருக்காது. அவன் போகும் போது என்ன சொல்லி விட்டுப் போனான் ? கார் காலத்தில் வந்து விடுவேன் அப்படினு தான சொன்னான் ? அவன் இன்னும் வரல...அதுனால இது கார்காலமா இருக்காது....