Saturday, June 2, 2012

கலிங்கத்துப் பரணி - முத்தமிட எத்தனித்தபோது


கலிங்கத்துப் பரணி - முத்தமிட எத்தனித்தபோது


பெண், ஆணை விட அதிகம் உணர்ச்சி வசப் படுகிறாளோ? 

ஊடலும், கூடலும், கோபமும், புன்னகையும், காதலும், கண்ணீரும் மாறி மாறி சோப்புக் குமிழியின் நிறம் போல மாயா ஜாலம் காட்டும் கலிங்கத்துப் பரணி பாடல் இங்கே.

அவள் அவனோடு ஊடல் கொண்டு இருக்கிறாள்.

அவன் அவளை சமாதனப் படுத்துகிறான்.

அவள் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி வருகிறாள்.

அவனைப் பார்த்தால் அவளுக்குப் பாவமாய் இருக்கிறது. சரி போனால் போகிறது என்று ஊடலை விட்டு, அவனைப் பார்த்து ஒரு புன்னகை சிந்துகிறாள்.

அது போதாதா நம்ம ஆளுக்கு.

அவள் முகத்தை கையில் ஏந்தி முத்தம் தர முனைகிறான்.

அவன் தன் மேல் கொண்ட காதலை அவள் அறிகிறாள்.

அவளையும் அறியாமல் அவள் கண்ணில் நீர் சுரக்கிறது."ஏய், என்ன இது, அசடு மாதிரி அழுதுகிட்டு" என்று அவள் கண்ணீரை தன் விரலால் துடைக்கிறான்....

முத்தொள்ளாயிரம் - ஊர் அறிந்த கனவு


முத்தொள்ளாயிரம் - ஊர் அறிந்த கனவு


அவளுக்கு அவன் மேல் அப்படி ஒரு காதல்.

இரவும் பகலும் அவன் நினைவாகவே இருக்கிறாள்.

அவள் கனவில் அவன் வருகிறான். 

இருவரும் கனவில் சந்தோஷமாக பேசி, சிரித்து மகிழ்ந்து இருக்கின்றனர்.

மறு நாள் காலை. அவளுடைய தோழிகள் அவளைப் பார்க்க வருகின்றனர்.

"என்னடி, ரொம்ப சந்தோஷமா இருக்காப்ல இருக்கு? என்ன விஷயம்?  வாயெல்லாம் பல்லா இருக்கு....நேத்து உன் ஆளு கனவுல வந்தானா ? ஏதாவது சில்மிஷம் பண்ணினானா? என்ன விஷயம் சொல்லு. " என்று அவளை கிண்டல் பண்ணினர்.

"என் கனவுல அவன் வந்ததது இவளுகளுக்கு எப்படி தெரியும்" என்று அவள் யோசிக்கிறாள்...

Friday, June 1, 2012

ஐந்திணை ஐம்பது - காதல் தாகம்


ஐந்திணை ஐம்பது - காதல் தாகம்


ஐந்திணை ஐம்பது

இந்த நூல் தமிழர்களின் அக வாழ்க்கையை பற்றி கூறும் நூல்.

எழுதியவர் மாறன் பொறையனார்.

நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்.

1700 வருடம் தாண்டி விட்டது.

கால நதியில் அடித்துச் செல்லப் படாமல் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டது.

மாறன் பொறையனார் நினைத்தாவது பார்த்திருப்பாரா, அவரின் பாடல்கள் இன்டர்நெட்-இல் உலாவும் என்று !

சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி கூறும் நூல்.

அவர்களின் ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள், காதல் இவற்றை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் பாடல்கள்.

அதிலிருந்து ஒரு பாடல்....

அதுவோ பாலை நிலம்.

சுட்டெரிக்கும் வெயில்.

நா வரளும் அனல் காற்று.

தப்பி வந்த இரண்டு மான்கள் தண்ணீருக்காக அலைந்து கொண்டு இருந்தன.

கடைசியில் ஒரு சின்ன சுனை கண்ணில் பட்டது.

அதில் இருந்ததோ கொஞ்சம் போல் தண்ணீர்.

இரண்டு மானுக்கும் பத்தாது.

ஒன்றை ஒன்று பார்த்து கொண்டன.

பெண் மான் சொன்னது, "நீ முதலில் குடி, பின் நான் குடிக்கிறேன்" என்று.

ஆண் மானும் அதையே சொன்னது.

யார் முதலில் குடிப்பது என்று அவர்களுக்குள் அன்புச் சண்டை.

கடைசியில் ஆண் மான் "சரி, நானே குடிக்கிறேன்" என்று நீரில் வாய் வைத்து "சர்" என்று உறிஞ்சியது.

ஆனால் உண்மையில் குடிக்கவில்லை. சப்த்தம் மட்டும் தான் செய்தது.

ஆண் மான் நீர் பருகி விட்டதாக எண்ணி, பெண் மானும் குடித்தது.

முதலில் ஆண் மானுக்கு கொடுத்ததால், பெண் மானுக்கு ஒரு சந்தோஷம்.

தான் குடிக்காமல், பெண் மானுக்கு கொடுத்ததில், ஆண் மானுக்கு சந்தோஷம்.

அந்தப் பாடலை படிப்பதில் நமக்கு சந்தோஷம்.

Thursday, May 31, 2012

ஐந்திணை ஐம்பது - காத்திருந்தவளை பார்த்திருந்தேன்


ஐந்திணை ஐம்பது - காத்திருந்தவளை பார்த்திருந்தேன்


யாராவது உங்கள் வரவுக்காக காத்து இருப்பார்களா?

அவர்கள் அப்படி உங்களுக்காக காத்திருப்பதை மறைந்து இருந்து இரசித்து இருக்கிறீர்களா?

அட, நம்மையும் கூட ஒரு ஜீவன் தேடுகிறதே என்று உள்ளம் சிலிர்த்ததுண்டா ?

அப்படி தன் காதலி தனக்காக காத்திருப்பதை காண விரும்பும் காதலனின் பாடல் இங்கே....

Wednesday, May 30, 2012

கம்ப இராமாயணம் - இராவணனை கொன்றது இராமன் அல்ல!


கம்ப இராமாயணம் - இராவணனை கொன்றது இராமன் அல்ல!


உலகம் எல்லாம் நினைத்து கொண்டு இருக்கிறது இராவணனை கொன்றது இராமன் என்று.

மண்டோதரி சொல்கிறாள், இராமன் அல்ல இராவணனை கொன்றது, மாரன் (மன்மதன்) என்று.

நாள் எல்லாம் அந்த மன்மதன் இராமன் மேல் மலர் கணை தொடுக்காமல் இருந்திருந்தால், இராவணன் சீதையின் மேல் இவ்வளவு காதல் கொண்டு இருக்க மாட்டான், அவனுக்கும் இந்த அழிவு வந்து இருக்காது என்கிறாள். 
மன்மதனின் கணையும், தேவர்களின் வரமும் இராவணனை கொன்றது என்கிறாள்.


'ஆர் அனார்உலகு இயற்கை அறிதக்கார்அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்துவிண் புக்கார்கண் புக்க வேழ வில்லால்,
நார நாள் மலர்க் கணையால்நாள் எல்லாம் தோள் எல்லாம்நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரேவரத்தினாலே!

ஆர் அனார், = யார் அது

உலகு இயற்கை = இந்த உலகத்தின் இயற்கையை

அறிதக்கார்? = அறிய தக்கவர் (யாரும் இல்லை)

அவை ஏழும் ஏழும் அஞ்சும் = அந்த ஈரேழு உலகும் அஞ்சும்

வீரனார் = வீரனான இராவணன்

உடல் துறந்து, = உடலை துறந்து, விட்டு விட்டு

விண் புக்கார் = வானகம் போனான்

கண் புக்க = கணுக்கள் உள்ள (கரும்பு)

வேழ வில்லால், = கரும்பு வில்லால்

நார நாள் மலர்க் கணையால் = மணம் வீசும் மலர்க் கணையால்

நாள் எல்லாம் = எப்போதும்

தோள் எல்லாம் நைய = தோள் வலிக்க வலிக்க

எய்யும் மாரனார் = எய்யும் மன்மதன்

தனி இலக்கை = இராவணன் மார்பில் அம்பு எய்யும் தைரியம் மன்மதன் ஒருவனுக்கு மட்டும் தான் இருந்தது. "தனி இலக்கு"
மனித்தனார் அழித்தனரே, = அந்த மார்பை, அந்த இலக்கை மனிதன் அழித்து விட்டானே

வரத்தினாலே = வரத்தினாலே (ஆற்றலாலே என்று சொல்லவில்லை.)

(Appeal: If you like this blog, please click g+1 button below to express your liking)

திருவாசகம் - அழுதால் உன்னைப் பெறலாமே


திருவாசகம் - அழுதால் உன்னைப் பெறலாமே

"நான் உண்மையானவன் அல்ல.

என் மனமும் சுத்தமானது அல்ல

என் அன்பு போலி அன்பு

இருந்தாலும், உன்னை நினைத்து மனம் உருகி அழுதால் நான் உன்னை அடைய முடியும், 

அதற்கும் நீ தான் அருள் புரிய வேண்டும்" என்று உருகுகிறார் மணி வாசகர்

கம்ப இராமாயணம் - ஓர் அம்பா இராவணனை கொன்றது?


கம்ப இராமாயணம் - ஓர் அம்பா இராவணனை கொன்றது?


மண்டோதரி புலம்புகிறாள். 

இராவணன் எப்பேர்பட்ட வீரன். 

அவனை ஓர் அம்பா கொல்ல முடியும்?

அவனை ஓர் மானிடன் கொல்ல முடியுமா ? 

ஒரு மானிடனுக்கு இவ்வளவு வீரமா ? 

என்று கேட்பதன் மூலம் அவ்வளவு இருக்காது என்று சொல்கிறாள்.