கலிங்கத்துப் பரணி - முத்தமிட எத்தனித்தபோது
பெண், ஆணை விட அதிகம் உணர்ச்சி வசப் படுகிறாளோ?
ஊடலும், கூடலும், கோபமும், புன்னகையும், காதலும், கண்ணீரும் மாறி மாறி சோப்புக் குமிழியின் நிறம் போல மாயா ஜாலம் காட்டும் கலிங்கத்துப் பரணி பாடல் இங்கே.
அவள் அவனோடு ஊடல் கொண்டு இருக்கிறாள்.
அவன் அவளை சமாதனப் படுத்துகிறான்.
அவள் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி வருகிறாள்.
அவனைப் பார்த்தால் அவளுக்குப் பாவமாய் இருக்கிறது. சரி போனால் போகிறது என்று ஊடலை விட்டு, அவனைப் பார்த்து ஒரு புன்னகை சிந்துகிறாள்.
அது போதாதா நம்ம ஆளுக்கு.
அவள் முகத்தை கையில் ஏந்தி முத்தம் தர முனைகிறான்.
அவன் தன் மேல் கொண்ட காதலை அவள் அறிகிறாள்.
அவளையும் அறியாமல் அவள் கண்ணில் நீர் சுரக்கிறது."ஏய், என்ன இது, அசடு மாதிரி அழுதுகிட்டு" என்று அவள் கண்ணீரை தன் விரலால் துடைக்கிறான்....