குறுந்தொகை - வராட்டாலும் பரவாயில்லை...
அவன் இருக்கும் இடம் என் ஊரை விட்டு ரொம்ப தள்ளி இருக்கிறது.
என்னை பார்க்க அடிக்கடி வருவான்.
என் மேல் அவனுக்கு அவ்வளவு அன்பு.
அவன் வரும் வழியோ சரியான சாலை வசதி இல்லாத, மலை பாங்கான இடம்.
அங்கே மரத்திற்கு மரம் குரங்குகள் தாவிக் கொண்டு இருக்கும்.
ஒரு நாள் அப்படித்தான்,தாவும் போது, ஒரு ஆண் குரங்கு கை தவறி கீழே விழுந்து இறந்து விட்டது.
அதன் பிரிவை தாங்காத பெண் குரங்கு, முழுதும் வளராத தன் குட்டியையை அதன் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தானும் அந்த மலையில் இருந்து கீழு விழுந்து உயிரை விட்டுவிட்டது.
குரங்குக்கும் கை தவறும் ஆபத்தான இடம் அவன் வரும் வழி.
அது மட்டும் அல்ல, குரங்குகள் கூட தங்கள் ஜோடிகளிடம் அபரிமிதமான அன்பை செலுத்தும் ஊர் அவன் ஊர்.
அவன் வரவில்லை என்றால் அவனை தேடுகிறது.
வரவேண்டும் என்றால், இவ்வளவு ஆபத்தை கடந்து வர வேண்டுமே ?
அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விட்டால். அதுக்கு அவன் வராமலேயே இருப்பது நல்லது.
இப்படி அந்த குறுந்தொகை காதலியின் மனம் கிடந்து அலை பாய்கிறது.