Monday, June 4, 2012

குறுந்தொகை - வராட்டாலும் பரவாயில்லை...


குறுந்தொகை - வராட்டாலும் பரவாயில்லை...


அவன் இருக்கும் இடம் என் ஊரை விட்டு ரொம்ப தள்ளி இருக்கிறது.

என்னை பார்க்க அடிக்கடி வருவான்.

என் மேல் அவனுக்கு அவ்வளவு அன்பு.

அவன் வரும் வழியோ சரியான சாலை வசதி இல்லாத, மலை பாங்கான இடம்.

அங்கே மரத்திற்கு மரம் குரங்குகள் தாவிக் கொண்டு இருக்கும்.

ஒரு நாள் அப்படித்தான்,தாவும் போது, ஒரு ஆண் குரங்கு கை தவறி கீழே விழுந்து இறந்து விட்டது.

அதன் பிரிவை தாங்காத பெண் குரங்கு, முழுதும் வளராத தன் குட்டியையை அதன் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தானும் அந்த மலையில் இருந்து கீழு விழுந்து உயிரை விட்டுவிட்டது.

குரங்குக்கும் கை தவறும் ஆபத்தான இடம் அவன் வரும் வழி.

அது மட்டும் அல்ல, குரங்குகள் கூட தங்கள் ஜோடிகளிடம் அபரிமிதமான அன்பை செலுத்தும் ஊர் அவன் ஊர்.

அவன் வரவில்லை என்றால் அவனை தேடுகிறது.

வரவேண்டும் என்றால், இவ்வளவு ஆபத்தை கடந்து வர வேண்டுமே ?

அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விட்டால். அதுக்கு அவன் வராமலேயே இருப்பது நல்லது.

இப்படி அந்த குறுந்தொகை காதலியின் மனம் கிடந்து அலை பாய்கிறது.


திருக்குறள் - கொல்லாததும், சொல்லாததும்


திருக்குறள் - கொல்லாததும், சொல்லாததும்

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை 
சொல்லா நலத்தது சால்பு.

சான்றான்மை என்ற அதிகாரத்தில் வரும் குறள்.

சான்றாண்மை என்றால் உயர்ந்த குணங்களை அடைந்து பின் அதில் இருந்து வழுவாமல் இருப்பது.

ஒருவன் சான்றோனாக வாழ வேண்டும் என்றால், அதற்கு ஒரு பட்டியலை தருகிறார் வள்ளுவர். அதில் உள்ளது எல்லாம் முடியாவிட்டாலும், கொல்லாமை மற்றும் பிறர் தீமை சொல்லாமை எந்த இரண்டையாவது கடை பிடியுங்கள் என்கிறார்.

நோன்பு என்றால் விரதம் என்று கொள்ளலாம்.

நோன்பு என்பது ஒன்றை அடைய வேண்டி செய்வது. அடைந்த பின், நோன்பு முடிந்து விடும். சபரி மலைக்கு மாலை போடுவது மாதிரி. மலைக்கு போய் வந்தபின் நோன்பு, கார்த்திகை விரதம் முடிந்து விடும்.

ஏகாதசி விரதம். கார்த்திகை சோமவார விரதம்....மாதிரி.

சால்பு என்பது எப்போதும் கடைப்பிடித்து வாழ்வது. திருடாமல் இருப்பது, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது மாதிரி. எப்போதும் கடை பிடித்து வாழ்வது. 

சான்றாமை என்பது பிற உயிரை கொல்லா நோன்பும், பிறர் தீமை சொல்லா சால்பும் உடையது.

நோன்பை விட சால்பு உயர்ந்தது.

ஒரு உயிரை கொல்வது தீமைதான். அதை விட தீமையானது மற்றவர்களின் கெட்ட குணங்களை, தீமைகளை வெளியே சொல்வது என்கிறார் வள்ளுவர். எனவே தான் கொல்லாததை நோன்பு என்றும், சொல்லாததை சால்பு என்றும் சொல்கிறார்.

கொல்வதற்கு ஆயுதம் வேண்டும். ஆயுதம் இல்லாத சமயம் கொல்லாமல் இருக்க முடியும். ஆனால் மற்றவர்களைப் பற்றி பேசுவது அப்படி அல்ல. நாக்கு மட்டும் போதும்.

கொல்வதற்கு, கொல்லப்படுபவன் நேரில் இருக்க வேண்டும். பிறரை பற்றி பேச, பேசப்படும் ஆள் நேரில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், வள்ளுவர் "நலத்தது" என்கிறார். 

அது என்ன நலத்தது ?

நல்லது என்று சொல்லவில்லை. நல்லவைகளோடு சேர்ந்தது என்கிறார்.

சான்றோன் என பெயர் எடுத்த யாரும், பிறர் தீமைகளை வெளியே சொல்ல மாட்டார்கள். 

ஏழே ஏழு வார்த்தை. எவ்வளவு அர்த்த செறிவு.

இன்னும் யோசித்தால், மேலும் அர்த்தம் தோன்றும் என்று நினைக்கிறேன்....


கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம்


கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம்


சூர்பனகை இராமனை முதன் முதலாகப் பார்க்கிறாள்.

அங்கே கம்பன் சூர்பனகை வாயிலாக இராமனின் சிறப்புகளை பாடுகிறான்.

இராமனின் வடிவழகை நோக்கினாள்.

சிறந்த உருவம்.

ஆனால் தவ வேடம்.

இந்த இராமன் தவம் செய்ய - அந்த தவம், என்ன தவம் செய்ததோ என்று வியக்கிறாள்.

கம்ப இராமாயணம் - பொங்குதே புன்னகை


கம்ப இராமாயணம் - பொங்குதே புன்னகை 


இராமனும் சீதையும் கோதாவரிக் கரையில் வசிக்கிறார்கள். 

"சான்றோர் கவி என கிடந்த கோதாவரி" என்பான் கம்பன்.

யாரும் அற்ற அடர்ந்த வனம். கரை புரண்டு ஓடும் கோதாவரி. கரையின் இருபக்கமும் ஓங்கி உயர்ந்த மரங்கள்.

அந்த மரங்களின் நிழால் குளிர்ந்து விளங்கும் ஆற்றங்கரை.

இராமனும், சீதையும் தனிமையில்.

அந்த கோதாவரி ஆற்றில் நீர் அருந்த சில அன்னப் பறவைகள் வருகின்றன.

அவற்றின் நடையையை இராமன் பார்க்கிறான்.

அதை, சீதையின் நடையோடு ஒப்பிட்டு ஒரு புன்னகை சிந்தினான்.

அதே ஆற்றில் நீர் அருந்த யானைகள் வருகின்றன. நீர் அருந்திச் செல்லும் ஆண் யானையை சீதை பார்க்கிறாள்.

இராமனின் நடையை நினைத்துப் பார்க்கிறாள். என்றும் இல்லாமல் அன்று புதியதாய் ஒரு புன்னகை சிந்தினாள்.


காதல் இரசம் சொட்டும் கம்பனின் அந்தப் பாடல்....

Sunday, June 3, 2012

கம்ப இராமாயணம் - இராவணன் என்ற கலைஞன்


கம்ப இராமாயணம் - இராவணன் என்ற கலைஞன்


இராவணனைப் போன்ற ஒரு கலைஞனை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.

இராமனின் அம்பு பட்டு, உடல் எல்லாம் புண்ணாகி அரண்மனை வருகிறான்.

அவன் பாட்டனிடம் இராமனின் வில்லாற்றலை விவரிக்கிறான்...எப்படி ?

"இராமனின் வில்லில் இருந்து அம்புகள் புறப்பட்டு வந்தன ... எப்படி தெரியுமா ?

நல்ல கவிஞர்களின் நாவில் இருந்து வரும் சிறப்பான சொற்களைப் போல.

அது மட்டுமா? அந்த சொற்கள் சேர்ந்து ஒரு இலக்கண ஒழுங்கோடு (தொடை) இருப்பதைப் போல அந்த அம்புகள் ஒன்றன் பின் ஒன்றாய் ஒரு ஒழுங்கோடு வந்தன.

சிறந்த சொல்லும், இலக்கணமும் இருந்து விட்டால் போதுமா ? நல்ல இசை நயம் வேண்டாமா ? இசையோடு கூடிய, இலக்கண வரைமுறையில் வந்த பொருள் செறிந்த கவிஞனின் சொற்களை போல இராமனின் அம்புகள் வந்தன என்று தன்னை துன்புறுத்திய அம்புகளை கூட கவி நயத்தோடு இரசித்த இராவணன் எப்பேர்பட்ட கலைஞன்"

அந்தப் பாடல்.....

நள வெண்பா - சூடான நிலா


நள வெண்பா - சூடான நிலா 


காதலனை காணாமல் தவிக்கும் காதலிக்கு நிலவு குளிராது, சுடும் என்று நிறைய படித்து இருக்கிறோம்.

நளவெண்பா பாடிய புகழேந்தி புலவர் ஒரு படி மேலே போகிறார்.

அந்த கொதிக்கும் நிலாவினால், வானம் கொப்புளம் கொண்டது...அந்த கொப்புளம் தான் நட்சத்திரங்கள் என்று கூறுகிறார்.

என்ன ஒரு அருமையான கற்பனை.

இலக்கியத்தில் நகைச்சுவை - நீரும் மோரும்


இலக்கியத்தில் நகைச்சுவை - நீரும் மோரும்


தமிழ் இல்லக்கியத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை. நகைச்சுவை, கிண்டல், நையாண்டி, நக்கல் என்று எல்லாம் நிறைந்து கிடக்கிறது.

நகைச்சுவையில் காளமேகம் முதல் இடம் வகிக்கிறார். சிலேடை, கிண்டல் எல்லாம் அவருக்கு கைவந்த கலை.

ஒரு முறை அவர் ஒரு ஆயர் பெண்ணிடம் மோர் கேட்டார். அந்த மோரில், மோரை விட தண்ணீர் அதிகம் இருந்தது. அந்தக் காலத்திலேயே கலப்படம் அவ்வளவு இருந்திருக்கிறது !

அந்த மோரை பார்த்து பாடுகிறார்...

"வானத்தில் இருக்கும் போது மேகம் என்று பெயர் பெற்றாய்,
மண்ணில் வந்த பின் நீர் என்று பேர் பெற்றாய்,
ஆய்ச்சியர் கையில் வந்த பின், மோர் என்று பெயர் பெற்றாய்
இப்படி மூன்று பெயர் உனக்கு"

என்று தண்ணியான அந்த மோரை பற்றிப் பாடுகிறார்.