Wednesday, June 6, 2012

கம்ப இராமாயணம் - அவதாரம் என்றால் என்ன ?


கம்ப இராமாயணம் - அவதாரம் என்றால் என்ன ?

அவதாரம் என்றால் இறங்கி வருவது என்று பொருள். 

இறை நமக்காக இறங்கி வருவது அவதாரம்.

நம்மால் மேலே போக முடியாது. நம்மை ஏற்றி விட அவன் இறங்கி வர வேண்டும்.

இராமாயணம் பாடப் புகுந்த கம்பர், இராமனை இரு கை வேழம் என்கிறார் . 

ஏன் ? 

யானையின் குணம், தன் காலைப் பிடித்தவர்களை தலைக்கு மேல் தூக்கி விடுவது.

பாற்கடல் விட்டு இந்த மனித குலம் உய்ய மண் மீது வந்தது அந்த மன். 

எனவே இராமனை பற்றி சொல்ல வந்த கம்பர் "இரு கை வேழம்" என்றார்

இராமன் வந்ததின் நோக்கம் நம்மை மேலேற்றி விடுவது. எனவே "வேழம்"....

திருக்குறள் - கயமை


திருக்குறள் - கயமை

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

கயமை என்ற அதிகாரத்தில் வரும் குறள்.

கயவர்களை, வள்ளுவர் மனிதரில் கூட சேர்க்க தயாராய் இல்லை. அவர்களை "கீழ்" என்கிறார். அவர்களை அஹ்ரினையாக மாற்றி விட்டார், ஒரே சொல்லில்.

இந்த "கீழ்"கள் தீயோருக்கும் கீழானதுகள்.

இந்த "கீழ்"களுக்கு ஒரு வலிமை உண்டு. "வற்றாகும் கீழ்" என்கிறார் வள்ளுவர். வற்றல் = வலிமை. 

என்ன வலிமைனா, மற்றவர்களை குறை சொல்லி அவர்களை துன்பபடுத்தி, அதில் இன்பம் காண்பது.

வடு என்றால் காயம் ஆரிய பின்னும் மறையாமல் இருக்கும் தழும்பு.

"தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு"

"வடுகாண" இந்த கீழ் இருக்கிறதே அது வடு காண வலிமை பெற்றது.

பொறாமை வேறு, கீழ்மை வேறு. பொறாமை கொள்வதருக்கு மற்றவர்கள் வீடு, வாசல் என்று சொத்து பத்தோட இருக்கணும். 

கீழுக்கு அது எல்லாம் வேண்டாம். மற்றவர்கள் உடுப்பதையும் உண்பதையும் பார்த்தால் போதும், அவர்களை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி வடு காண தயாராகி விடும்.

எனவே இந்த கீழ்கள் பொறாமை கொண்டவர்களை விட கீழானவர்கள். அப்படி உடுத்தும் துணி பட்டு பீதாம்பரமாய் இருக்க வேண்டும் என்று இல்லை, உண்ணும் உணவு விருந்தாக இருக்க வேண்டும் என்று இல்லை, மற்றவர்கள் உடுப்பதையும் உண்பதையும் பார்த்தால் போதும்...கயமை தலைப் பட தொடங்கிவிடும்.


"காணின்" என்கிறார் வள்ளுவர். பார்த்தாலே போதும். மற்றவர்கள் உடுத்தும் உடையும், உண்ணும் உணவும் அவர்கள் சொந்தமாக இருக்க வேண்டும் என்று இல்லை...மற்றவர்கள் உடுத்துவதையும், உணபதையும் பார்த்தாலே போதும், வடு காண கிளம்பிவிடும் கீழ்.


எவ்வளவு யோசித்து எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

இன்னும் யோசித்தால் மேலும் கூட அர்த்தம் தோன்றும்.







நாலடியார் - உப்பு போட்ட காதல்


நாலடியார் - உப்பு போட்ட காதல்

நாலடியார் என்ற நூலிலும் காமத்துப் பால் உண்டு.

(ஹை...ஜாலி)

என் காதலியையை கட்டி அணைக்காவிடில் அவள் உடம்பில் பசலை நிறம் வந்து விடும்.

அதுக்காக எப்ப பார்த்தாலும் கட்டி அணைத்து கொண்டே இருக்க முடியுமா ?

ஊடல் இல்லாத காமம் உப்பில்லாத பண்டம் போல. காதலுக்கு சுவை சேர்பதே ஊடல் தானே.

காதலில் ஊடி, பின் கூடுவது ஒரு சிறந்த technique ஆகும்.


கம்ப இராமாயணம் - மெய் சிலிர்த்த பூமி


கம்ப இராமாயணம் - மெய் சிலிர்த்த பூமி


இராமன் நடந்து வருவதை சூர்பனகை பார்க்கிறாள். அவன் பாதம் பட்டு பூ மகள் உடல் சிலிர்க்கிறாள். அவளுக்கு உடல் எல்லாம் புல்லரிக்கிறது. பூமியின் மேல் உள்ள புற்கள் எல்லாம் சிலிர்த்து நிற்கின்றன. அது பூ மகள் உடல் சிலிர்த்ததை போல் இருக்கிறது என்று நினைக்கிறாள். 

விவேக சிந்தாமணி - சொல்லக் கூடாதது


விவேக சிந்தாமணி - சொல்லக் கூடாதது 

எது எல்லாம் வெளியே சொல்லக் கூடாது என்று விவேக சிந்தாமணி பட்டியல் தருகிறது.

Tuesday, June 5, 2012

விவேக சிந்தாமணி - தெருவில் நின்ற தேவதை


விவேக சிந்தாமணி - தெருவில் நின்ற தேவதை


பேருந்து நிலையத்தில் அவளுக்காக காத்திருக்கும் நேரம்.
இப்ப வந்துருவா.

அதோ தூரத்தில் வருவது அவ மாதிரி தான் இருக்கு.

அவளே தான்.

நெருங்கி வர வர இதயத் துடிப்பு எகிறுகிறது.

அந்த கரிய நீண்ட குழல், மயில் போன்ற சாயல், குழந்தை போல் களங்கமில்லா முகம்...

கையெடுத்து கும்பிடலாம்....தெய்வம் நேரில் வந்த மாதிரி இருக்கிறது....

விவேக சிந்தாமணியின் 107 ஆவது பாடல்....

Monday, June 4, 2012

விவேக சிந்தாமணி - பெண்களை நம்பாதே


விவேக சிந்தாமணி - பெண்களை நம்பாதே


தமிழ் இலக்கியம் ஆண் சார்ந்ததாகவே இருந்து வந்து இருக்கிறது.

மனைவியை சந்தேகித்த இராமனை இந்த நாடு கடவுள் என்றே போற்றுகிறது.

விலை மகள் பின்னால் போய், சொத்தை எல்லாம் அளித்த கோவலனை கோவிக்காமல் ஏற்றுக் கொண்ட கண்ணகியை கற்ப்புக்கு அரசி என்று கொண்டாடுகிறது தமிழ் கூறும் நல் உலகம்.

மனைவியை வைத்து சூதாடிய யுதிஷ்டிரன், தர்ம ராஜா

மனைவியை விற்ற அரிச்சந்திரன், சக்ரவர்த்தி

நாடு கானகத்தில் மனைவியின் சேலை தலைப்பை திருடிக்கொண்டு அவளை தவிக்க விட்டு சென்ற நளன், மகாராஜா

கவி பாட பாரதி, குனிந்து கும்மி அடிக்க நாங்கள் என்று பெண்கள் குரல் கொடுத்தாலும், ஆணாதிக்கம்தான் ஆல மரமாய் விரிந்து கிடக்கிறது தமிழ் இலக்கியம் எங்கும்.

பெண்களை தெய்வம் என்று போற்றிக் கொண்டே, அவர்களை கீழே தள்ளி எட்டி உதைக்கிறது இந்த சமூகம்....

விவேக சிந்தாமணி, பெண்களைப் பற்றி பேசுகிறது இங்கே....