Wednesday, June 6, 2012

திருக்குறள் - கயமை


திருக்குறள் - கயமை

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

கயமை என்ற அதிகாரத்தில் வரும் குறள்.

கயவர்களை, வள்ளுவர் மனிதரில் கூட சேர்க்க தயாராய் இல்லை. அவர்களை "கீழ்" என்கிறார். அவர்களை அஹ்ரினையாக மாற்றி விட்டார், ஒரே சொல்லில்.

இந்த "கீழ்"கள் தீயோருக்கும் கீழானதுகள்.

இந்த "கீழ்"களுக்கு ஒரு வலிமை உண்டு. "வற்றாகும் கீழ்" என்கிறார் வள்ளுவர். வற்றல் = வலிமை. 

என்ன வலிமைனா, மற்றவர்களை குறை சொல்லி அவர்களை துன்பபடுத்தி, அதில் இன்பம் காண்பது.

வடு என்றால் காயம் ஆரிய பின்னும் மறையாமல் இருக்கும் தழும்பு.

"தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு"

"வடுகாண" இந்த கீழ் இருக்கிறதே அது வடு காண வலிமை பெற்றது.

பொறாமை வேறு, கீழ்மை வேறு. பொறாமை கொள்வதருக்கு மற்றவர்கள் வீடு, வாசல் என்று சொத்து பத்தோட இருக்கணும். 

கீழுக்கு அது எல்லாம் வேண்டாம். மற்றவர்கள் உடுப்பதையும் உண்பதையும் பார்த்தால் போதும், அவர்களை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி வடு காண தயாராகி விடும்.

எனவே இந்த கீழ்கள் பொறாமை கொண்டவர்களை விட கீழானவர்கள். அப்படி உடுத்தும் துணி பட்டு பீதாம்பரமாய் இருக்க வேண்டும் என்று இல்லை, உண்ணும் உணவு விருந்தாக இருக்க வேண்டும் என்று இல்லை, மற்றவர்கள் உடுப்பதையும் உண்பதையும் பார்த்தால் போதும்...கயமை தலைப் பட தொடங்கிவிடும்.


"காணின்" என்கிறார் வள்ளுவர். பார்த்தாலே போதும். மற்றவர்கள் உடுத்தும் உடையும், உண்ணும் உணவும் அவர்கள் சொந்தமாக இருக்க வேண்டும் என்று இல்லை...மற்றவர்கள் உடுத்துவதையும், உணபதையும் பார்த்தாலே போதும், வடு காண கிளம்பிவிடும் கீழ்.


எவ்வளவு யோசித்து எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

இன்னும் யோசித்தால் மேலும் கூட அர்த்தம் தோன்றும்.







1 comment: