Thursday, June 7, 2012

கம்ப இராமாயணம் - உங்களுக்கு நிச்சயம் நரகம் இல்லை !


கம்ப இராமாயணம் - உங்களுக்கு நிச்சயம் நரகம் இல்லை !


இராமாயணத்தில் ஒரே ஒரு கதையை படித்தோர், உரைத்தோர், உரைத்ததை கேட்டோர், இது நல்லா இருக்கு அப்படின்னு சொன்னவர்கள் எல்லோரும் நரகம் போக மாட்டார்கள்.

உங்களுக்கு நிச்சயம் நரகம் இல்லை.....:)


திருக்குறள் - வாழ்வது எப்போது ?


திருக்குறள் - வாழ்வது எப்போது ?


எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருப்பது அல்ல வாழ்கை.

வாழ்கை என்பது வாழ்வது.

நிறைய பேருக்கு பணம் சம்பாதிக்கத் தெரியும். அதை நல்ல வழியில் செலவழிக்கத் தெரியாது. நாளைக்கு வேண்டும் நாளைக்கு வேண்டும் என்று சேர்த்து வைத்துக் கொண்டே இருப்பார்க்கள்.

மனைவி மக்கள் எல்லோரும் இருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து செலவழிக்க நேரம் இருக்காது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடுவார்கள்.

நல்ல புத்தகம், நல்ல இசை, நல்ல நண்பர்கள், (நல்ல blog !) இவற்றிற்கெல்லாம் நேரம் இருக்காது. ஏதோ கற்ப கோடி ஆண்டு வாழப் போவது போல் எதிர் கால கற்பனையில் நிகழ் காலத்தை வீணடித்துக் கொண்டு இருப்பார்கள்.

அவர்களை வள்ளுவர் வாழத் தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.

 

நாலடியார் - பெண்ணே உன்னை வணங்குகிறேன்


நாலடியார் - பெண்ணே உன்னை வணங்குகிறேன்


ஒரு தாய் தனியே இருந்து யோசிக்கிறாள். 

அவளுடைய மகள் காதலனோடு சென்று விட்டாள்.

அவளோ செல்வச் சீமாட்டி. பணக்கார வீட்டுப் பெண்.

காதலன் ஒரு ஏழை பையன். எப்படி எல்லாம் செல்லமாய் வளர்ந்த பெண் இப்ப அந்த வீட்டில் போய் எப்படி எல்லாம் துன்பப் படப் போகிறாளோ என்று தவிக்கிறாள். 

"அந்த பெண் சின்னவளாக இருக்கும் போது ஒரு நாள், காலில் மருந்தாணி இட, அந்த மருதாணி குழம்பை பஞ்சில் தொட்டு தொட்டு வைத்தேன், அது கூட வலிக்கிறது "பைய , பைய" என்று காலை இழுத்துக் கொண்டாள். இப்ப அந்த காட்டில் கல்லிலும் முள்ளிலும் எப்படி தான் நடந்து போவாளோ" என்று எண்ணி எண்ணி சோகத்தில் ஆழ்கிறாள்.


Wednesday, June 6, 2012

கம்ப இராமாயணம் - அவதாரம் என்றால் என்ன ?


கம்ப இராமாயணம் - அவதாரம் என்றால் என்ன ?

அவதாரம் என்றால் இறங்கி வருவது என்று பொருள். 

இறை நமக்காக இறங்கி வருவது அவதாரம்.

நம்மால் மேலே போக முடியாது. நம்மை ஏற்றி விட அவன் இறங்கி வர வேண்டும்.

இராமாயணம் பாடப் புகுந்த கம்பர், இராமனை இரு கை வேழம் என்கிறார் . 

ஏன் ? 

யானையின் குணம், தன் காலைப் பிடித்தவர்களை தலைக்கு மேல் தூக்கி விடுவது.

பாற்கடல் விட்டு இந்த மனித குலம் உய்ய மண் மீது வந்தது அந்த மன். 

எனவே இராமனை பற்றி சொல்ல வந்த கம்பர் "இரு கை வேழம்" என்றார்

இராமன் வந்ததின் நோக்கம் நம்மை மேலேற்றி விடுவது. எனவே "வேழம்"....

திருக்குறள் - கயமை


திருக்குறள் - கயமை

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

கயமை என்ற அதிகாரத்தில் வரும் குறள்.

கயவர்களை, வள்ளுவர் மனிதரில் கூட சேர்க்க தயாராய் இல்லை. அவர்களை "கீழ்" என்கிறார். அவர்களை அஹ்ரினையாக மாற்றி விட்டார், ஒரே சொல்லில்.

இந்த "கீழ்"கள் தீயோருக்கும் கீழானதுகள்.

இந்த "கீழ்"களுக்கு ஒரு வலிமை உண்டு. "வற்றாகும் கீழ்" என்கிறார் வள்ளுவர். வற்றல் = வலிமை. 

என்ன வலிமைனா, மற்றவர்களை குறை சொல்லி அவர்களை துன்பபடுத்தி, அதில் இன்பம் காண்பது.

வடு என்றால் காயம் ஆரிய பின்னும் மறையாமல் இருக்கும் தழும்பு.

"தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு"

"வடுகாண" இந்த கீழ் இருக்கிறதே அது வடு காண வலிமை பெற்றது.

பொறாமை வேறு, கீழ்மை வேறு. பொறாமை கொள்வதருக்கு மற்றவர்கள் வீடு, வாசல் என்று சொத்து பத்தோட இருக்கணும். 

கீழுக்கு அது எல்லாம் வேண்டாம். மற்றவர்கள் உடுப்பதையும் உண்பதையும் பார்த்தால் போதும், அவர்களை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி வடு காண தயாராகி விடும்.

எனவே இந்த கீழ்கள் பொறாமை கொண்டவர்களை விட கீழானவர்கள். அப்படி உடுத்தும் துணி பட்டு பீதாம்பரமாய் இருக்க வேண்டும் என்று இல்லை, உண்ணும் உணவு விருந்தாக இருக்க வேண்டும் என்று இல்லை, மற்றவர்கள் உடுப்பதையும் உண்பதையும் பார்த்தால் போதும்...கயமை தலைப் பட தொடங்கிவிடும்.


"காணின்" என்கிறார் வள்ளுவர். பார்த்தாலே போதும். மற்றவர்கள் உடுத்தும் உடையும், உண்ணும் உணவும் அவர்கள் சொந்தமாக இருக்க வேண்டும் என்று இல்லை...மற்றவர்கள் உடுத்துவதையும், உணபதையும் பார்த்தாலே போதும், வடு காண கிளம்பிவிடும் கீழ்.


எவ்வளவு யோசித்து எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

இன்னும் யோசித்தால் மேலும் கூட அர்த்தம் தோன்றும்.







நாலடியார் - உப்பு போட்ட காதல்


நாலடியார் - உப்பு போட்ட காதல்

நாலடியார் என்ற நூலிலும் காமத்துப் பால் உண்டு.

(ஹை...ஜாலி)

என் காதலியையை கட்டி அணைக்காவிடில் அவள் உடம்பில் பசலை நிறம் வந்து விடும்.

அதுக்காக எப்ப பார்த்தாலும் கட்டி அணைத்து கொண்டே இருக்க முடியுமா ?

ஊடல் இல்லாத காமம் உப்பில்லாத பண்டம் போல. காதலுக்கு சுவை சேர்பதே ஊடல் தானே.

காதலில் ஊடி, பின் கூடுவது ஒரு சிறந்த technique ஆகும்.


கம்ப இராமாயணம் - மெய் சிலிர்த்த பூமி


கம்ப இராமாயணம் - மெய் சிலிர்த்த பூமி


இராமன் நடந்து வருவதை சூர்பனகை பார்க்கிறாள். அவன் பாதம் பட்டு பூ மகள் உடல் சிலிர்க்கிறாள். அவளுக்கு உடல் எல்லாம் புல்லரிக்கிறது. பூமியின் மேல் உள்ள புற்கள் எல்லாம் சிலிர்த்து நிற்கின்றன. அது பூ மகள் உடல் சிலிர்த்ததை போல் இருக்கிறது என்று நினைக்கிறாள்.