Monday, July 23, 2012

திணைமாலை நூற்றைம்பது - பூச் சூடிய எருமை


திணைமாலை நூற்றைம்பது - பூச் சூடிய எருமை

குழந்தைக்கு பூச் சூடி பார்க்கலாம்...

பெண்கள் பூ சூடி பார்த்து இருக்கிறோம்.

எருமை மாடு பூச் சூடி வந்தால் எப்படி இருக்கும் ?

ஒரு பெரிய கரிய எருமை. நீர் நிறைந்த குட்டையை பார்த்தது. அதுக்கு ஒரே குஷி. "ங்கா...." என்று கத்திக்கொண்டு தண்ணிக்குள் பாய்ந்தது.

சுகமாக தண்ணீரில் கிடந்து ஓய்வு எடுத்தது. மாலை நேரம் வந்தது. வீட்டுக்கு கிளம்பியது. அது வெளியே வரும்போது அதன் மேல் கொஞ்சம் சேறு ஒட்டிக் கொண்டது.
இருக்காதா பின்ன...நாள் எல்லாம் குட்டைல கிடந்தா ? 

அந்த சேற்றின் மேல் ஒரு சில மீன்கள் ஒட்டிக் கொண்டு வந்தன. 

அந்த எருமையின் மேல் ஒரு தவளை ஏறி உட்கார்ந்து கொண்டு வந்தது.

கூடவே சில குவளை மலர்களும் ஒட்டிக்கொண்டு வந்தன. 

அடடா...என்ன ஒரு கண் கொள்ளா காட்சி....!

Friday, July 20, 2012

முத்தொள்ளாயிரம் - விழியில் விழுந்து இதயம் நுழைந்து


முத்தொள்ளாயிரம் - விழியில் விழுந்து இதயம் நுழைந்து


தோழி: "சரி, என்ன வெட்கம்...கொஞ்சம் நிமிந்து பாரு என்ன...அடடா...ரொம்ப தான் வெட்கப்படுறா"
அவள்: ம்ம்ம்ம் 
தோழி: சரி கண்ணை திற ... வெட்கப் படுற உன் கண்ண நான் பாக்கட்டும்
அவள்: ம்ம்ம்ம்
தோழி: அட இது என்ன புது ஸ்டைல்...முகத்த கையால மறைச்சிகிட்டு...சினிமா கதாநயாகி மாதிரி...
அவள்: கைய எடுக்க மாட்டேன்...எடுத்தா கண் வழியா என் நெஞ்சுக்குள் போன அவன் அதே மாதிரி வெளிய போயிருவான்...
தோழி: சரி தான் ... ரொம்ப தான் முத்தி போச்சு காதல் பைத்தியம்...இன்னைக்கே உங்க அம்மா கிட்ட சொல்லிற வேண்டியது தான்......

பாடல்: 

Thursday, July 19, 2012

இராமாயணம் - கேட்ட வரமும் கேட்காத வரமும்


இராமாயணம் - கேட்ட வரமும் கேட்காத வரமும்


ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது; ‘ எனப் புகன்று நின்றாள்;
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

அவள் கேட்டது இரண்டு வரங்கள்.

"என் மகன் அரசாள வேண்டும், சீதையின் துணைவன் வனம் ஆள்வது"

கேட்டது இரண்டு வரம். ஆனால் அவள் இராமனிடம் சொன்ன போது, இதில் இல்லாத மேலும் சிலவற்றை சேர்த்துக் கொள்கிறாள்....

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை


நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை


வீட்டில் காவலுக்கு நாய் வைத்து இருப்பவர்கள் "நாய் ஜாக்கிரதை" என்று போர்டு மாட்டி இருப்பார்கள்.

"இங்கு காவலுக்கு நாய் இருக்கிறது. பார்த்து வாருங்கள். ஜாக்கிரதையாய் இருங்கள்" என்று வருபவர்களை எச்சரிக்கை விடுவார்கள்.

பேருந்து நிலையம், புகை வண்டி நிலையம் போன்ற பொது இடங்களில் "பிக் பாக்கெட் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்து இருப்பார்கள். 

நம்மாழ்வார் அது மாதிரி "பெருமாள் ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை விடுகிறார்.

இந்த பெருமாள் இருக்கிறாரே அவரிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்.

உங்கள் மனதையும், உயிரையும் நீங்கள் அறியாமலே அவன் எடுத்துக் கொள்வான், சரியான கள்வன்.

மனதை திருடுவது மட்டும் அல்ல, திருடிய பின், அந்த இடத்தில் தன்னை இட்டு நிரப்பி விடுவான்.

உங்களுக்கு நீங்கள் இழந்தது கூட உங்களுக்குத் தெரியக் கூட தெரியாது....எனவே அவனிடம் ஜாக்கிரதையாய் இருங்கள். என்று அன்பாக எச்சரிக்கார்...

அந்தப் பாசுரம் 

இராமாயணம் - தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொல்லவில்லை


 இராமாயணம் - தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொல்லவில்லை


கைகேயி இரண்டு வரம் கேட்டாள். 

தசரதன் முதலில் இரண்டு வரத்தையும் தர மறுக்கிறான். 

கைகேயி பிடிவாதம் பிடிக்கிறாள். 

தசரதன் இறங்கி வருகிறான். "இரண்டாம் வரத்தை கேட்காதே, உன் மகன் பரதன் வேண்டுமானால் அரசாளட்டும், இராமன் காட்டுக்குப் போக வேண்டாம் " என்று கெஞ்சுகிறான்.

"மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
    மற ‘என்றான்."

கைகேயி மறுக்கிறாள். இரண்டு வரமும் வேண்டும் என்கிறாள்.

கடைசியில் தசரதன் "ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம்" என்கிறான். இவ்வரங்கள் என்று பன்மையில் சொல்லவில்லை. 

பின்னால், "என் சேய் காடாள" என்று சொல்கிறான். 

அதற்குப் பின் அவன் இறந்து போகிறான். அவன் இராமனை பார்க்கவே இல்லை.

கம்பனோ, வால்மீகியோ அந்த சந்திப்பை நடக்க விடவில்லை.

தசரதன் தன் வாயால் இராமனை கானகம் போகச் சொல்லவில்லை.

கைகேயிக்கும் தசரதனுக்கும் இடையே நடந்தது யாருக்கும் தெரியாது.

எனவே, தசரதன் இராமனை பார்த்து "நீ கானகம் போ" என்று சொல்லவில்லை.

தசரதன் அவன் மந்திரிகளிடமும் சொல்லவில்லை.

எனவே, இராமன் கானகம் போக வேண்டியது ஒரு அரசு ஆணை அல்ல.

கணவன் மனைவிக்கு இடையே நடந்த ஒரு உரையாடல்.

இராமனை, அவனிடமே, நேரடியாக,  கானகம் போகச் சொன்னது கைகேயிதான். தசரதன் அல்ல.

அதுவும் எப்படி சொல்கிறாள்...? ... வாங்கிய வரத்தோடு இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறாள்...

அது என்ன ? வாங்கிய வரம் ? வாங்காத வரம் ?



Wednesday, July 18, 2012

பழமொழி - விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்கலாமா ?


பழமொழி - விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்கலாமா ?


நாம் பொருள் செலவழித்து நிறைய விஷயங்களை பெறுகிறோம் - படிப்பு, புத்தகங்கள், சினிமா, club , வெளி இடங்களை சுற்றிப் பார்த்தல், தொலைக்காட்சி,  இத்யாதி, இத்யாதி....

இவற்றால் நமக்கு என்ன பலன்  ? இவை நமக்கு நன்மை தருமா ? அல்லது இவற்றால் நமக்கு தீமையா ? தீமை என்றால் அதை விடுவது அல்லவா புத்திசாலித்தனம்?

பொருள் கொடுத்து இருள் வாங்குவதை பற்றிப் பேசுகிறது இந்த பாடல்...

Monday, July 16, 2012

பழமொழி - சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க


பழமொழி - சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க


பெரிய பலன்களை அடைய வேண்டுமானால் சில சிறிய தியாகங்களை செய்யத்தான் வேண்டும்.

ஒன்றை இழக்காமல் இன்னொன்றைப் பெற முடியாது.

எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு

அதைத்தான் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பது என்று சொல்லுவார்கள். 

இந்த பிறவியில் நல்லன செய்து, ஏற்பவர்க்கு இட்டு, அவன் தாள் வணங்குதல் போன்ற சிறய "வினைகளை" செய்தால், வீடு பேறு, மோட்சம் பேன்ற பெரிய பலன்கள் கிடைக்கும் என்கிறது இந்த பழமொழிப் பாடல்

பாடல்: