Wednesday, August 22, 2012

கம்ப இராமயாணம் - பிழைகள்?


கம்ப இராமயாணம் - பிழைகள்?


நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.

இந்த பாட்டில் என்ன பிழைகள் இருக்க முடியும் ?

நாடிய பொருள் கை கூடும் என்று சொல்லி விட்டால் அதில் ஞானம் , புகழ் எல்லாம் அடங்கும். ஞானமும் புகழும் உண்டாம் என்று அவற்றை மீண்டும் சொல்வது, "கூறியது கூறல்"என்ற பிழை. திருப்பி திருப்பி சொல்ற நீ.....

வேரியன் கமலை நோக்கு - தேன் இல்லாத தாமரையே கிடையாது என்பதால் இது தேவையற்ற அடை மொழி. 

நீடிய வரக்கர் சேனை - அரக்கர் சேனை அழிந்தது என்று கூறுவது சிறந்தது அல்ல. அரக்கர்கள் அழிந்தார்கள் என்று சொல்வது சிறப்பு. சேனை போனால் என்ன, இன்னொரு சேனை உண்டாக்கினால் போகுது ....

நீறுபட் டழிய - அமங்கல சொற்களை கூறுவது இலக்கிய மரபு அல்ல அதிலும் குறிப்பாக இறைவனை பற்றி புகழும் போது அமங்கல சொற்களை கூறுவது தவறு. 

தோள் வலி கூறுவோற்கே - இராமனுக்கு பல விசேஷ குணங்கள் உள்ளபோது , தோள் வலியை மட்டும் கூறுவது அவன் சிறப்பை குறைப்பது ஆகும்

இப்படி பலப் பல குற்றம் கண்டோர் உண்டு. 

குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருந்து இருக்கிறார்கள்....


நாலாயிர திவ்ய பிரபந்தம் - தழுவினால் உருகுமோ ?


நாலாயிர திவ்ய பிரபந்தம் - தழுவினால் உருகுமோ ?


வெண்கலம், இரும்பு போன்ற உலோகத்தில் பாத்திரம் செய்ய, முதலில் ஒரு mould செய்வார்கள். 

முதலில் அந்த பாத்திரம் மாதிரி களி மண்ணில் ஒரு வடிவம் செய்வார்கள்.

அந்த வடிவத்தின் மேல் மெழுகை ஊற்றுவார்கள்.

அந்த மெழுகின் மேல் மீண்டும் களி மண்ணை பூசுவார்கள்.

நன்றாக, காய்ந்த பின், இரண்டு களிமண்ணுக்கு இடையே உள்ள மெழுகை 

உருக்கி வெளியே கொண்டு வந்து விடுவார்கள்.

மெழுகு இருந்த இடம் வெற்றிடமாய் இருக்கும்.

அந்த வெற்றிடத்தில், உருகிய உலோக குழம்பை ஊற்றுவார்கள்....

பின், அந்த களி மண்ணை தண்ணீர் விட்டு கரைத்து விடுவார்கள்....

அருமையான உலோக பாண்டம் கிடைத்து விடும். 
 
இந்த சட்டி பானை செய்வதற்கும், நாலாயிர திவ்ய பிரபந்தத்திர்க்கும் என்ன சம்பந்தம்....?

ஆண்டாள், மழை மேகத்தை பார்த்து கூறுகிறாள்...

அந்த வேங்கடத்து அழகன் என்னைத் தழுவி என் உள்ளம் புகுந்து என் உள்ளிருந்த அழுக்கை எல்லாம் நீக்கி விட்டான்....மழையே நீ என் மேல் பொழிந்து என் வெளி அழுக்கை எல்லாம் நீக்குவாயா என்று கேட்கிறாள்...அவன் என்னோடு கலந்து நிற்பதால், உள் அழுக்கும் வெளி அழுக்கும் போன பின் நானும் அவனும் ஒன்றாய் கலந்து நிற்ப்போம்...

படித்துப் பாருங்கள்...மழைச் சாரல் உங்களை நனைக்கும், மனம் மெல்ல உருகும், கரையும்...

Tuesday, August 21, 2012

கம்ப இராமாயணம் - இராம நாமம்


கம்ப இராமாயணம் - இராம நாமம்


இராம நாமம் எவ்வளவு சிறந்தது ? அதை கூறுவோருக்கு என்ன என்ன பலன் கிடைக்கும் ?

கம்பர் சொல்கிறார்...

Monday, August 20, 2012

இராமானுஜர் நூற்றந்தாதி - பன்னப் பணித்த இராமானுசன்


இராமானுஜர் நூற்றந்தாதி - பன்னப் பணித்த இராமானுசன்


திருவரங்கத்து அமுதனார் எழுதியது இராமனுசர் நூற்று அந்தாதி.

பாடல்களை படிக்கும் போது, ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் மேல் இத்தனை மதிப்பும் மரியாதையும் தோன்றுமா என்று வியப்பு தோன்றுகிறது. 
இன்னோர் ஆச்சரியம் சில வரிகள் திருவாசகத்தில் இருந்து நேரே வந்த மாதிரி இருப்பது.

தனிப் பாடல் - சொல்லின் செல்வி


தனிப் பாடல் - சொல்லின் செல்வி


காதலித்தது ஒரு பெண்ணை. மணந்தது இன்னொருத்தியை. 
அவன் காதலியோ மிக மிக அழகானவள். மனைவி அவ்வளவு அழகில்லை.
அவளை நினைத்து ஏங்குகிறான் காதலன்....

தனிப் பாடல் - நெஞ்சை விட்டு போகாதவள்


தனிப் பாடல் - நெஞ்சை விட்டு போகாதவள் 


அவர்கள் காதலர்கள். இன்னும் பேசிக் கொள்ளவில்லை. எல்லாம் கண் ஜாடை தான்.

அவள் போகும் இடம் எல்லாம் அவனும் போகிறான். அவள் கண் படும்படி நிற்கிறான்.
 
அவளுக்குத் தெரியாமல் இல்லை. அவள் மனத்திலும் அவன் மேல் சினாதாய் ஒரு காதல் துளிர் விடுகிறது. 

ஒரு நாள் அவள் கோவிலுக்குப் போகிறாள். அவனும் வழக்கம் போல் அவளை தொடர்ந்து போகிறான்.
 
கோவில் வாசல் வந்து விட்டது.

அவனுக்கு கண் காட்டுகிறாள்....""இங்கேயே இரு, வந்து விடுகிறேன்" என்று கண் ஜாடை காட்டி விட்டுப் போகிறாள்.

அவள் கண்ணை விட்டுப் போய் விட்டாள்...நெஞ்சை விட்டுப் போகவில்லை....
 

Saturday, August 18, 2012

நள வெண்பா - பெண்மை அரசு


நள வெண்பா - பெண்மை அரசு 


பெண்மை அரசாளுகிறது. 

ரத, கஜ, துரக, பதாதி என்ற நால் வகை படை இருப்பது போல அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால் வகை படைகளோடு,

தன்னுடைய ஐந்து புலன்களும் அமைச்சர்கள் போல் வழி நடத்த,

காலில் அணிந்த கொலுசே முரசாக ஒலிக்க (அவள் வருவதை அறிவிக்கும்),

பத்தாதற்கு அவளுடைய கண்ணே வேல் படையாகவும், வாள் படையாகவும், 

அவள் நிலவு போன்ற முகமே வெண் கொற்ற குடையாகவும் 

அவள் ஆட்சி செய்கிறாள்...