Thursday, September 13, 2012

கம்ப இராமாயணம் - உலக மாயை யாரால் விலகும்.


கம்ப இராமாயணம் - உலக மாயை யாரால் விலகும்.


இருட்டில் தெருவில் கிடக்கும் மாலை பாம்பு போலத் தெரியும்.
அது போல அஞ்ஞான இருட்டில் இருந்து நாம் காண்பது எல்லாம் வேறாகத் தெரியும்.

இந்த வேறாகத் தெரியும் மாயையை ஒருத்தரைப் பார்த்தால் விலகும்.

அவர் யாருன்னு கேட்டா, கையில் வில் ஏந்தி, இலங்கையில் சென்று சண்டை போட்டவர். 

அவரே  வேதங்களுக்கு எல்லாம் அந்தம் ஆனவர். வேதாந்தம் ஆனவர். 

Sunday, September 9, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணனுக்கு அஜீரணமா?


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணனுக்கு அஜீரணமா?


நாம சில நாள் கல்யாணம் போன்ற விழாக்களுக்கு சென்றால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டு அஜீரணத்தில் கஷ்டப் படுவோம்.

திருமால் ஏழு உலகங்களையும் ஒன்றாக உண்டார். 

அஜீரணம் வருமா இல்லையா ? எவ்வளவு மண்ணு, கல்லு, மலை, உப்புக் கடல்...அத்தனையும் உண்டால் வயறு என்ன ஆவது.

அந்த அஜீரணம் போகத்தான் மனிதனாக (கண்ணனாக) அவதாரம் எடுத்து, நிறைய வெண்ணையும் நெய்யும் உண்டானாம்.



உண்டா யுலகேழ் முன்னமே, உமிழ்ந்து மாயை யால்புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி
மண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ? மாயோனே

கொஞ்சம் சீர் பிரிப்போம் 

உண்டாய் உலகம் ஏழும் முன்னமே, உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி 
மண்தான் சோர்ந்த உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ ? மாயோனே

பொருள் 

உண்டாய் = உண்டாய்

உலகம் ஏழும் =  உலகம் ஏழும்

முன்னமே = முன்பு ஒரு நாள்

உமிழ்ந்து = பின் உமிழ்ந்தாய்

மாயையால் புக்கு = பின் மாயையில் புகுந்து

உண்டாய் வெண்ணெய் = உண்டாய் வெண்ணையை

சிறு மனிசர்  = அற்ப மனித உருவம் எடுத்து

உவலை யாக்கை = சருகு போன்ற இந்த உடலை எடுத்து (உவலை = சருகு)

நிலை எய்தி = இந்த நிலையை அடைந்து

மண்தான் சோர்ந்த உண்டேலும் = மண் உண்டு சோர்வடைந்து (சோகை 
அடைந்து)

மனிசர்க்கு ஆகும் = மனிதர்களுக்கு வரும்

பீர் சிறிதும் = நோய் சிறிதும்

அண்டா வண்ணம் = வரா வண்ணம்

மண் கரைய  = முன் உண்ட மண் கரைய

நெய் ஊண் மருந்தோ ? = நெய் உணவு மருந்தா ?

மாயோனே = மாயோனே


Friday, September 7, 2012

ஐங்குறுநூறு - அவன் தந்த நோய்


ஐங்குறுநூறு - அவன் தந்த நோய் 


அம்மா: என்னடி உடம்பு கிடம்பு சரி இல்லையா ? ஏன் ஒரு மாதிரி இருக்க ?

அவள்: இல்லையே, நான் நல்லாதான இருக்கேன்

அம்மா: என்ன நல்லா இருக்கியோ போ...சரியா சாப்டிறது இல்ல...தூக்கம் இல்ல...ஆளு நாளுக்கு நாள் மெலிஞ்சிக்கிட்டே போற...டாக்டர் கிட்ட கேட்டாலும் ஒண்ணும் இல்லேன்கிறார்...உன்னைய நாளைக்கு பூசாரிகிட்டதான் கூட்டிகிட்டு போய் மந்திரிச்சு தாயத்து வாங்கி கட்டணும்....

அப்ப அங்க வர்ற தோழி சொல்லுவாள் " உங்க அம்மாவுக்கு எங்க தெரிய போகுது இது காதல் நோய்..அவன் கிட்ட இருந்து வந்ததுனு சொல்லிறவா" .....

பாடல்:

கலிங்கத்துப் பரணி - பூவோடு உயிரையும் சொருகினாள்

கலிங்கத்துப் பரணி - பூவோடு உயிரையும் சொருகினாள்


அவனும் அவளும் எதிர் எதிர் வீடு. 

பார்த்தது உண்டு. பேசியதில்லை. 

இருவருக்குள்ளும் காதல் ஊடு பாவாய் ஓடி கொண்டிருக்கிறது. 

தினமும் காலையில் அவள் வீட்டு தோட்டத்தில் உள்ள ரோஜா செடியில் இருந்து ஒற்றை ரோஜாவை பறித்து தலையில் வைத்துக் கொள்வாள். 

வைக்கும் போது அவன் பார்க்கிறானா என்று ஓரக் கண்ணில் ஒரு பார்வை வேறு. உதட்டோரம் கசியும் ஒரு புன்னகை. 

அவள் பறித்து தலையில் சொருகியது ரோஜாவை மட்டுமா ? அவன் உயிரையும் தான். 


தனிப் பாடல் - தமிழுக்காக தலை கொடுத்த வள்ளல்


தனிப் பாடல் - தமிழுக்காக தலை கொடுத்த வள்ளல்


குமணன், அவன் தம்பியால் நாட்டை விட்டு விரட்டப் பட்டு காட்டில் இருக்கிறான். குமணனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசு அறிவித்து இருக்கிறான் அவன் பாசக்கார தம்பி.

அப்போது, குமணனிடம்  தன் வறுமையை சொல்கிறான் ஒரு புலவன். குமணனிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. யோசிக்கிறான். தன்னிடம் இல்லை என்று வந்தவனை எப்படி வெறும் கையோடு அனுப்பவுது என்று அவன் மனம் வருந்துகிறது. 

புலவனிடம் சொல்லுவான் "புலவரே, என் தம்பி என் தலைக்கு விலை வைத்து இருக்கிறான். என் தலையை வெட்டி கொண்டு போய் கொடுத்தால் உங்களுக்கு நல்ல சன்மானம் கிடைக்கும். என் தலையயை எடுத்துக் கொள்ளுங்கள்"என்று தலையும் தந்தான்....

பாடல் 

கலிங்கத்துப் பரணி - மலையில் ஆடி வரும் மயில்கள்


கலிங்கத்துப் பரணி - மலையில் ஆடி வரும் மயில்கள்


காதலன் போருக்கு சென்று திரும்பி வருகிறான்.

அவன் வருவான் வருவான் என்று காத்திருந்து சலித்துப் போனாள் அவள்.

கடைசியாக வந்து விட்டான். ஒரு புறம் அவனை காண வேண்டும் என்று ஆவல். 

மறு புறம் தன்னை காக்க வைத்ததால் வந்த கோவம். "நாம எவ்வளவு நாள் அவனைப் பார்க்காமல் கஷ்டப் பட்டோம்..அவனும் கொஞ்சம் படட்டும்"என்று கதவை திறக்காமல் ஊடல் கொள்கிறாள் காதலி.

அவளை சமாதனப் படுத்த காதலன் கொஞ்சுகிறான்

" நீ நடந்து வருவதே தேர் ஆடி ஆடி வருவது மாதிரி இருக்கு. உன் மார்பில் ஆடும் அந்த chain , அலை பாயும் உன் கண்...எல்லாம் பார்க்கும் போது மலையில் இருந்து ஆடி ஆடி இறங்கி வரும் மயில் போல் இருக்கிறாய் நீ "என்று அவளுக்கு ஐஸ் வைக்கிறான்...
  

Wednesday, September 5, 2012

முத்தொள்ளாயிரம் - அழகு திருடன்


 முத்தொள்ளாயிரம் - அழகு திருடன்


அவன் அந்த நாட்டின் தலைவன். அரசன். 

அந்த ஊரில் பெண்கள் எல்லாம் மிக அழகாக இருக்கிறார்கள். (ஜொள்ளு).

கொப்பும் குலையும், மப்பும் மந்தாரமுமாய் இருக்கிறார்கள். 

அவர்கள் ஒரு முறை அவனைப் பார்த்தால் போதும், காதல் வயப் பட்டு, சோறு தண்ணி இல்லாமல், தூக்கம் இல்லாமல் மெலிந்து துவண்டு பொலிவிழந்து போகிறார்கள். 

ஏதோ அவன் வந்து அவர்கள் அழகை கவர்ந்து கொண்டு போன மாதிரி இருக்கிறது. அவனைப் பார்த்த பின் அவர்கள் அழகு காணாமல் போய் விடுகிறது. அப்ப அவன் தான திருடிக் கொண்டு போய் இருக்க வேண்டும் ? 

அப்படி அழகை திருடி கொண்டு போகும் மன்னன் எப்படி ஒரு நல்ல செங்கோல் செலுத்தும் அரசனாக இருக்க முடியும் ?