Friday, October 26, 2012

கம்ப இராமாயணம் - கைகேயின் பாதம்

கம்ப இராமாயணம் - கைகேயின் பாதம்

தாமரை மலர் பார்த்து இருப்பீர்கள் தானே ? அது எப்படி இருக்கும் ? மெல்லிய சிவப்பு, மென்மையான மலர் இதழ்கள், பார்க்கும் போதே ஒரு புத்துணர்ச்சி தரும் ஒரு தோற்றம், காற்றில் அது அசையும் போது ஒரு சிலிர்ப்பு, நீரின் மேலேயே இருப்பதால் ஒரு ஜில்லிப்பு....

இது எல்லாம் தாமரை மலருக்கு எப்படி வந்தது தெரியுமா ?

கைகேயின் பாதம் அந்த மாதிரி இருந்ததாம். 

அந்த தாமரை மலர் தன் தண்டு என்னும் ஒற்றை காலில் தவம் இருந்ததாம், கைகேயின் பாதம் போல் தானும் ஆகவேண்டி.  

இராமனுக்கு முடி சூட்ட முடிவு ஆகிவிட்டது. ஊரெலாம் ஒரே கோலாகலம். கைகேயி படுக்கையில் படுத்து இருக்கிறாள். கூனி வருகிறாள். 

கைகேயின் பாதம் தொட்டு எழுப்புகிறாள் கூனி


பாடல்

Thursday, October 25, 2012

கம்ப இராமாயணம் - சீதையின் கானகப் பயணம்


கம்ப இராமாயணம் - சீதையின் கானகப் பயணம்

அது ஒரு jungle resort . நீங்கள் உங்கள் மனம் கவர்ந்தவளோடு வந்து இருக்கிறீர்கள். காலையில், இருவரும் சிற்றுண்டி உண்டு விட்டு, அப்படியே ஒரு நடை போகலாம் என்று கிளம்புகிறீர்கள். 

நீங்களும், அவளும் மட்டும். யாரும் இல்லாத கானகம். அவள் ஏதேதோ சொல்லிக்கொண்டே வருகிறாள். அவள் குரலைத் தவிர வேறு வேறு யார் குரலும் அக்கம் பக்கத்தில் இல்லை.   

"அட டா, எவ்வளவு இனிமையானவள் இவள். கண்ணு என்ன ஒரு அழகு. அவள் குரல் அதை விட அழகு" என்று அவளின் அழகை ரசிக்கிறீர்கள்.

ஈரித்த அடர்ந்த கானகம். ஒரு பக்கம் மூங்கில் நீண்டு வளர்ந்து இருக்கிறது. அதில் வண்டுகள் இட்ட துளையில் காற்று நுழைந்து இனிய புல்லாங்குழல் இசை பிறக்கிறது. உங்களவளின் குரல், அப்படி புல்லாங்குழலில்  இருந்து பிறக்கும் இசையும், நரம்புகளை கட்டி இசைக்கும் யாழ் போன்ற கருவிகளின் இசையும் போல் இனிமையாக இருக்கிறது.

அவளின் சமீபம் தேனைப் போல, சர்கரை பாகு போல் தித்திக்கிறது  உங்களுக்கு. அங்கே மரக் கிளைகளில் கிளிகள் கீச் கீச்சென்று சப்த்தம் உண்டாக்குகின்றன. அந்த கிளி மொழி உங்கள் காதலியின்  பேச்சு போல் இருக்கிறது. தூரத்தில், கிராமத்தில் உழவர்கள் தங்கள் வயலில் பூத்து இருந்த குவளை மலர்களை பறித்து வரப்போரம் போடுகிறார்கள். அந்த குவளை மலர், அவளின் கண் போல தோன்றுகிறது உங்களுக்கு.  

அப்படித்தான் இராமனுக்கு தோன்றியது, சீதையுடன் கானகம் போனபோது.
 
பாடல் 

Wednesday, October 24, 2012

திருவாசகம் - பைத்தியம் பிடிக்க

திருவாசகம் - பைத்தியம் பிடிக்க

நீங்கள் பைத்தியம் ஆனால் அதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்வீர்களா ? கிறுக்கு பிடிபதென்ன அவ்வளவு சிறந்த விஷயமா ?

உங்களை யாராவது மூச்சு முட்ட வெள்ளத்திற்குள் அமுக்கினால், நீங்கள் அவர்களுக்கு நன்றி சொல்வீர்களா ?

உங்களின் உறுதியான, தைரியாமான, கல்லை போல் கடினமான உள்ளத்தை யாராவது மாற்றி, மென்மையாகச் செய்தால், நீங்கள் அதற்கு நன்றி சொல்வீர்களா ?


மாணிக்க வாசகர் சொல்கிறார். 

பாடல் 

Tuesday, October 23, 2012

திருச் சதகம் - நான் அறிஞனா அறிவிலியா ?


திருச் சதகம் - நான் அறிஞனா அறிவிலியா ?


பக்த கோடிகள், இறைவனை நம்பாதவர்களை விட புத்திசாலிகளா ?

இறைவனை தேடுவதும் அவனை அடைவதும் ஒரு அறிவான செயலா ? இறை அருள் பெற்ற பின் ஒருவன் முன்பிருந்ததை விட அறிவு அதிகம் பெற்றதாக கூற முடியுமா ? இறை அருள் பெறாதவர்கள் அறிவில் குறைந்தவர்களா ? 

இந்த குழப்பம் மாணிக்க வாசகருக்கும் இருக்கிறது. இறைவனிடமே கேட்கிறார். "உன் அருள் பெறுவதற்கு முன் நான் அறிவற்றவனாக இருந்தேன் என்று எனக்கு தெரியும்.. ஆனால், உன் அருள் பெற்ற பின், என் அறிவு கூடி விட்டதா?"  என்று 


 பாடல்:


அறிவ னேஅமு தேயடி நாயினேன்
அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்டது ஆண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅருள் ஈசனே.

சீர் பிரித்த பின் 

அறிவனே அமுதே அடி நாயினேன்
அறிவனாகக் கொண்டோ எனை ஆண்டது
அறிவிலாமை அன்றே கண்டது ஆண்ட நாள்
அறிவனோ அல்லனோ அரு ஈசனே 

பொருள் 

அறிவனே = அறிவில் சிறந்தவனே

அமுதே = அமுதம் போன்றவனே

அடி நாயினேன் = நாயையை போன்ற அடிமையான நான்

அறிவனாகக் கொண்டோ = என்னை அறிவுடையவனாக ஆக்குவதற்கோ

எனை ஆண்டது = எனை ஆண்டு கொண்டது ?

அறிவிலாமை = (நான்)அறிவு இல்லாமை இருந்தது

அன்றே கண்டது = அன்றே நான் கண்டு கொண்டது

ஆண்ட நாள் = நீ என்னை ஆண்டு கொண்ட நாள் முதல் 

அறிவனோ = நான் எதையும் அறிந்தவனா ?

அல்லனோ = இல்லை அறிவில்லாதவனோ ?

அரு ஈசனே  = நான் அதை தெரிந்து கொள்ள அருள் புரிவாய் ஈசனே 

Monday, October 22, 2012

திருச்சதகம் - கரை காணாக் கடல்


திருச்சதகம் - கரை காணாக் கடல் 


பிறவியை பெரிய கடல் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 

கடல், அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது. நமக்கு என்ன என்று நாம் இருப்போம். 

மாணிக்க வாசகர் அந்த பிறவி பெருங்கடலை நம் மனதில் தைக்கும்படி உணர்த்துகிறார். 

பெரிய கடல். அந்த கடல் நடுவே (கரையோரம் அல்ல) நீங்கள் தனியாக மாட்டிக் கொண்டு தத்தளிகிறீர்கள். அலை உங்களை போட்டு புரட்டி எடுக்கிறது. புயல் காற்று ஒரு புறம் ஊசி போல் துளைக்கிறது. சற்று தூரத்தில் சில சுறா மீன்கள் நீந்திக் கொண்டு இருக்கின்றன. எப்படி கரை சேர்வது என்று தவித்துக் கொண்டு இருக்கும் போது, ஒரு மரத்துண்டு கிடைக்கிறது பற்றிக்கொள்ள. உங்கள் அருகே வந்து ஒரு மாலுமி கரை இருக்கும் இடத்தை காட்டுகிறார்.  உங்களுக்கு எப்படி இருக்கும் ?

பிறவி என்ற பெருங்கடல்.

துன்பம் என்ற அலை அடித்துக்கொண்டே இருக்கிறது

பெண்கள் மேல் கொண்ட மோகம் என்ற புயல் காற்று அலைகழிக்கிறது

ஆசை என்ற சுறாமீன் விழுங்க வருகிறது

அஞ்செழுத்து தான் தெப்பம்

கரை காட்டியது அவன் அருள்

பாடல் 

அபிராமி - வளைக் கை


அபிராமி - வளைக் கை


அவளோட கை ரொம்ப அழகா இருக்கும். அதிலும் வளையல் குலுங்கும் அந்த கையை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

எனக்கு சில சமயம் பயமா இருக்கும், மனம் சஞ்சலமா இருக்கும். அவ கிட்ட போய் அமர்ந்து கொள்வேன். அவள் என் கையையை எடுத்து அவள் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, " என்ன கவலை உனக்கு ? என் கிட்ட சொல்ல கூடாதா ? நான் இருக்கேன்ல, பயப்படாதே " என்பாள். 

அப்படியே அவள் தோளில் சாய்ந்து கொள்வேன். அவள் என் தோளில் தட்டி கொடுப்பாள்...எல்லாம் சரியாகிவிடும், கவலைப் படாதே என்பதைப் போல் இருக்கும். 

அவள் குரலே கேட்பதற்கு அவ்வளவு சுகம். பேசும் போது, சிரிக்கும் போது அவ்வளவு இனிமை. அவளிடம் இருந்து இசை வரவில்லை. அவளே இசை வடிவானவள். வீணை இருக்கிறது. அதில் நரம்பு இருக்கிறது. அதில் இசை எங்கு இருக்கிறது என்று கேட்டால் காட்ட முடியாது. அந்த கருவிக்குள்தான் இருக்கிறது. ஆனால் காட்ட முடியாது. அப்படிப்பட்ட இசை போன்றவள். அவளை அனுபவிக்க முடியும். அறிய முடியாது. 

இந்த உடலுக்குள் உயிர் குடியிருக்க வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருக்கும். அப்புறம் போய் விடும். உயிரை விட உடலுக்கு மனசு இல்லை. கிடந்து மறுகும். கவலைப் படும். அப்ப அவ வந்து, ஏன் கவலைப் படுற, நான் இருக்கேன்ல என்று அந்த நேரத்திலும் ஒரு ஆறுதல் தருவாள். 

பாடல்:

Sunday, October 21, 2012

அபிராமி அந்தாதி - மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதாவள்


அபிராமி அந்தாதி - மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதாவள்

அவள் எப்படி இருப்பாள் ? கறுப்பா ? சிவப்பா ? உயராமா ? குள்ளமா ?

அவளை எப்படி சொல்லப் போனாலும் சரியாக வர மாட்டேன் என்கிறது. அவள் வார்த்தைகளுக்குள் வரதாவள். அவளின் பேரழகு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

சரி வார்தையையை விட்டு விட்டு வார்த்தை இல்லாமல் நினைத்துப் பாப்போம் என்றால் அந்த நினைவையும் தாண்டி அவள் நிற்கிறாள். அவளை எப்படி தான் நினைப்பது ?

அப்படி கூட சொல்ல முடியாது. அவளைப் பற்றி உங்களுக்கு என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாதே தவிர எனக்கு அவளைத் தெரியும். அவளை நான் பார்த்து இருக்கிறேன். என் கண்ணால் பார்த்து இருக்கிறேன். உங்களுக்குச் சொன்னால் புரியாது. உங்கள் கற்பனைக்கு அவள் எட்ட மாட்டாள். 

அவளின் கணவன் காமத்தை கடந்தவன். காமனை எரித்தவன். அப்பேர்பட்டவனை, காமம் கடந்த அவன் விரதத்தை இந்த உலகமே பழிக்கும் படி அவனின் ஒரு பாகத்தை எடுத்துகொண்டு ஆள்பவள் நீ.. அவ்வளவு அன்யோன்யம்.
 
பாடல்