கம்ப இராமாயணம் - கைகேயின் பாதம்
தாமரை மலர் பார்த்து இருப்பீர்கள் தானே ? அது எப்படி இருக்கும் ? மெல்லிய சிவப்பு, மென்மையான மலர் இதழ்கள், பார்க்கும் போதே ஒரு புத்துணர்ச்சி தரும் ஒரு தோற்றம், காற்றில் அது அசையும் போது ஒரு சிலிர்ப்பு, நீரின் மேலேயே இருப்பதால் ஒரு ஜில்லிப்பு....
இது எல்லாம் தாமரை மலருக்கு எப்படி வந்தது தெரியுமா ?
கைகேயின் பாதம் அந்த மாதிரி இருந்ததாம்.
அந்த தாமரை மலர் தன் தண்டு என்னும் ஒற்றை காலில் தவம் இருந்ததாம், கைகேயின் பாதம் போல் தானும் ஆகவேண்டி.
இராமனுக்கு முடி சூட்ட முடிவு ஆகிவிட்டது. ஊரெலாம் ஒரே கோலாகலம். கைகேயி படுக்கையில் படுத்து இருக்கிறாள். கூனி வருகிறாள்.
கைகேயின் பாதம் தொட்டு எழுப்புகிறாள் கூனி
பாடல்