இராமானுஜர் நூற்றந்தாதி - அறியாமலே நிகழ்ந்தது
வாழ்க்கையில் சில பேரை பார்த்து இருப்பீர்கள்...என்ன சொன்னாலும் அதற்க்கு எதிர் மறையான ஒன்றை சொல்லுவதில் அவர்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம் இருக்கும்.
நான் இன்று முதல் உணவில் கட்டுப் பாடோடு இருக்கப் போகிறேன் என்று சொன்னால், "அது எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான், மீண்டும் பழைய உணவு முறைக்கு மாறிருவ பாரு " என்று சொல்வார்கள்.
இப்படி எதைச்சொன்னாலும் ஒரு முட்டு கட்டை போடுவது அவர்கள் இயல்பு.
கோவில், இறை வணக்கம் என்று சொன்னால் உடனே, சாமியாவாது, மண்ணாவது என்று சொல்லி விடுவார்கள்.
அவர்களை விட்டு விலகி இருப்பது நல்லது. அவர்கள் தாங்களும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் செய்ய vidaamal, ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
யாரை விலக்க வேண்டும் என்று சொல்லியாகி விட்டது.
யாரோடு சேர வேண்டும் ?
நாம் எதைச் செய்ய முயல்கிறோமோ, அதில் நாட்டம் உள்ளவர்கள், அதில் சாதனை புரிந்தவர்கள்...அப்படி பட்டவர்களோடு நாம் இருக்க வேண்டும். அவர்கள் சொல்லுவது ஏதாவது காதில் விழும், அவர்கள் செய்வதைப் பார்த்து நாமும் ஏதாவது கற்றுக் கொள்ளலாம்...
பாடல்
கள்ளார்பொழில் தென்னரங்கன் கமலப்பதங்கள் நெஞ்சில்
கொள்ளாமனிசரை நீங்கி குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாதவன்ப னிராமாநுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென்னெஞ்சு ஒன்றறியேனெனக்குற்ற பேரியல்வே.
சீர் பிரித்த பின்
கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பாதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிராண்டிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுஜன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாத என் நெஞ்சு ஒன்றறியேன் எனக்கு உற்ற பெரிய இயல்பே
பொருள்